search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ruby Manokaran MLA"

    • நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் என்கிற திட்டத்தை தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் செயல்படுத்தி வருகிறார்.
    • இனிவரும் நாட்களில் நடைபெறும் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிகளில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் என்கிற திட்டத்தை தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் செயல்படுத்தி வருகிறார்.

    2-ம் கட்டம்

    ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி வாரியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தொகுதி மக்களுடன் அவர் தங்கி, அவர்களுடன் உணவருந்தி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு, நிவர்த்தி செய்து கொடுத்து வருகிறார்.

    இதுவரையில், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

    தற்போது, 2-ம் கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வருகிற டிசம்பர் முதல் வாரத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இட்டமொழியில் 2-ம் கட்டமாக மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    அதைத்தொடர்ந்து, தொகுதியில் உள்ள பிற இடங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.

    இதுகுறித்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளருமான ரூபி மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:

    கிராமப்புறங்களை அதிகம் கொண்ட நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதுமே நான் பயணித்துக் கொண்டிருந்தாலும், பொதுமக்களுடன் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இன்னும் நெருங்கிப் பழக, இந்தத் திட்டம் உதவுகிறது.

    பொதுமக்கள் தங்கள் ஊரில் உள்ள குறைகள் மற்றும் தேவைகளை இந்த நிகழ்ச்சியின் போது மனுக்களாகத் தந்தால், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிறைவேற்றிக் கொடுக்கிறேன். பொதுமக்கள் அனைவரும் இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

    மேலும், இனிவரும் நாட்களில் நடைபெறும் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிகளில், எங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    வருகிற டிசம்பர் முதல் வாரத்தில் இட்டமொழியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறவும் அழைக்கின்றேன்.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • ராஜீவ்காந்தியின் சிலையை சிலர் உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள்.
    • சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம், தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பூதப்பாண்டி அருகே அருமநல்லூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் உருவச்சிலை சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

    மிகுந்த போற்றுதலுக்கு உரிய தலைவர் ராஜீவ்காந்தி. இந்த நாட்டுக்காகவே வாழ்ந்தவர். நம்முடைய தமிழ் மண்ணில்தான் உயிர் துறந்தார்.

    அப்படிப்பட்டவரின் உருவ சிலையை சிலர், தீய எண்ணத்தோடு, உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத செயல். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    அமரர் ராஜீவ்காந்தியின் உருவ சிலையை சேதப்படுத்தியவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறுபட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.
    • ஆண்டு முழுவதும் குடும்பத்தினருக்காக உழைப்பவர்களுக்கு பண்டிகைகள் அவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறுபட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அதுபோல தீபாவளிப் பண்டிகையும் இந்தியாவில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், அறியாமையின் மீதான அறிவையும் குறிக்கிறது. தீபாவளி அன்று நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்து அலங்காரம் செய்வது, புத்தாடைகள் அணிவது நம் மனதிற்கு ஒரு மகிழ்ச்சியையும், குடும்பத்தினருடனும், உறவினருடனும் நம் அன்பையும் பாசத்தையும் புதுப்பித்து கொள்ள நல்வாய்ப்பாக உள்ளது.

    ஆண்டு முழுவதும் குடும்பத்தினருக்காக உழைப்பவர்களுக்கு இது போன்ற பண்டிகைகள் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். மேலும் இந்நாளில் அக்கம், பக்கத்தினருடன் அன்பையும், மரியாதையை யும், வலுவான பிணைப்பு களையும் குறிக்கும் வகையில், பரிசுப்பரிமாற்றங்கள் மற்றும் இனிப்புகளையும், பலகாரங்களையும் பரிமாறிக் கொண்டு வருகிறோம்.

    நம் வாழ்வில் இருள் நீங்கி ஒளி உண்டாகுவதை குறிக்கும் விதமாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காற்று மாசுபா டுகளை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பது என்பது நம் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கும் சூழ்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணமாக பசுமை பட்டாசுகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

    தீபாவளி என்பது வெறும் பண்டிகை அல்ல. இது நம் கலாச்சாரத்தோடும், பாரம்பரியத்தோடும் பின்னி பிணைந்துள்ளது. இந்நன்னாளில் அனைவரது இல்லத்தில் இன்பமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும் பொங்கி, உங்களது ஆசைகளும், கனவுகளும் நிறைவேற இந்த நாள் இனிய நாளாக அமைய என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான வேல்துரை நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
    • மரணமடைந்த வேல்துரையின் சொந்த ஊரான கங்கனான்குளத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான வேல்துரை நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

    அதனை அறிந்ததும் தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தற்போதைய செகந்திராபாத் பாராளு மன்ற தொகுதியின் பொறுப் பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொரு ளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரு மான ரூபி மனோகரன் எம்.எல்..ஏ. உடனடியாக நெல்லை திரும்பினார். மரணமடைந்த வேல்து ரையின் சொந்த ஊரான கங்கனான்குளத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    அப்போது ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், பாளையங்கோட்டை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், களக்காடு கிழக்கு வட்டார பொறுப்பாளர் பானு, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியம்மாள், கவுன்சிலர் மரிய சாந்தி, முன்னாள் ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் வசந்தா, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, காங்கிரஸ் நிர்வா கிகள் சித்திரைவேல், ஆனந்த ராஜன், தாழைகுளம் ராஜன், நந்தகோபால், பிலியன்ஸ், ஸ்ரீதேவி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

    • வடக்கு மீனவன் குளத்தில் பயணிகள் நிழற்குடை பழுதடைந்த காரணமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
    • புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    நெல்லை:

    களக்காடு ஊராட்சி ஒன்றியம் கள்ளி குளம் ஊராட்சி வடக்கு மீனவன் குளத்தில் அன்னை தெரேசா உயர்நிலை பள்ளி முன்பு இருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்த காரணமாக இடித்து அப்புறப் படுத்தப்பட்டது.

    அந்த இடத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தருமாறு அந்த பகுதி மக்கள் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்க ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பா ளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர் செல்லப்பாண்டி, கள்ளிகுளம் ஊராட்சி மன்ற துணை தலைவி முத்து லெட்சுமி, களக்காடு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சைமன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன் காங்கிரஸ் நிர்வாகிகள் ராணி, ஸ்ரீதேவி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை ராவணன் போல சித்தரித்து பா.ஜனதா அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு சித்திரம் நேற்று வெளியிடப்பட்டது.
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் களக்காடு நகராட்சியில் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை ராவணன் போல சித்தரித்து பா.ஜனதா அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு சித்திரம் நேற்று வெளி யிடப்பட்டது.

    அதனை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் களக்காடு நகராட்சியில் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதில் பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ராகுல்காந்தி, மோடி அரசின் பொய் பிம்பத்தை உடைத்து விட்டார். மோடிக்கும் அதா னிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டார்?

    அதற்காக பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டது. அதன் பிறகு ராகுல் காந்தி யின் எம்.பி. பதவி பறிக்கப் பட்டது. எதையாவது செய்து ராகுல் காந்தியை பேச விடாமல் தடுக்கலாம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

    ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து ராகுல் காந்தியின் மீது மிகப்பெரிய பயத்தில் பா.ஜனதாவினர் உள்ளார்கள்.

    கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம், மணிப்பூர் பாலியல் வன்கொடுமை இது போன்ற செயல்களை எல்லாம் செய்தவர்கள் தங்களை ராமராகவும், சுதந்திரம் பெற்ற முதல் இந்தியாவை கட்டமைத்த காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் ராவ ணனாக சித்தரிப்பது ஒரு கேலிக்கூத்து.

    பா.ஜனதாவினர் மத அரசியல் செய்ய நினைக் கிறார்கள். ராகுல் காந்தி இந்துக்களின் எதிரி என்று சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ராகுல் காந்தி எல்லா கோவிலுக்கும் செல்கிறார். எல்லா மதத்தி னரையும் சந்திக்கிறார்.

    இது போன்ற பொய் பித்தலாட்டமான கேலிச்சித்திரங்களை இந்திய மக்கள் நம்பமாட்டார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பா.ஜனதா அரசு தோற்று ராகுல் காந்தி பிரதமராக வருவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர்கள் சந்திரசேகரன், செல்ல பாண்டி, கக்கன், ராஜ கோபால், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், களக்காடு மத்திய வட்டார தலைவர் காளப்பெருமாள், களக்காடு நகராட்சி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஷேக், நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், கவுன்சிலர் சிம்சன் துரை,

    மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, ஜவஹர் பால் மன்ஞ் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா, களக்காடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விபின், கட்சி நிர்வாகிகள் வில்சன், தங்கராஜ், முத்துராமலிங்கம், காமராஜ், அன்வர், பிரியா முருகன், லதா சிம்சன், ஸ்ரீதேவி, அருள், பாலன், பெருமாள், முருகன், பாஸ்கர், பாஸ்கரன், வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • களக்காடு வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி களக்காடு அருணா மகாலில் நடைபெற்றது.
    • வளைகாப்பு நிகழ்ச்சியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.

    நெல்லை:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் களக்காடு வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி களக்காடு அருணா மகாலில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான நாங்குநேரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பிரிய தர்ஷினி, முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ் செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர்கள் சந்திர சேகரன், செல்லபாண்டி, கக்கன், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், தி.மு.க. நகர செயலாளர் மணி சூரியன், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், களக்காடு வடக்கு வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் பால்பாண்டி, நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, கவுன்சிலர்கள் மீகா கண்ணன், வனிதா காமராஜ், படலையார் குளம் பஞ்சாயத்து தலைவர் முருகன், சீவலப்பேரி பஞ்சா யத்து தலைவர் அய்யம்மாள், மகளிர் அணி வட்டார தலைவி பிரியா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் டேனியல், வில்சன் , தங்கராஜ், வேலம்மாள், லதா மற்றும் குழந்தை நல பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர்.
    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி, ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி சரியாக இல்லாத காரணத்தால் கழிப்பறை வசதி செய்து தருமாறு பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனிடம் கோரிக்கை வைத்தனர்.

    அவர்களது கோரிக்கையையேற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டது. அதனை பள்ளி மாணவி களின் பயன்பாட்டிற்காக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்த வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சந்திரசேகர், செல்லப்பாண்டி, கக்கன், பேரூராட்சி தலைவர் தஸ்லிமா அயூப்கான், ஏர்வாடி நகர காங்கிரஸ் தலைவர் ரீமா பைசல், தி.மு.க. நகர செயலாளர் அயூப்கான்,களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கனகராஜ், பாளை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கணே சன், வார்டு கவுன்சிலர்கள் அலிமா, ஜன்னத், மீரா சாகிப், தஸ்லிமா முகைதீன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்வர் சரீப், ஏர்வாடி காங்கிரஸ் நகர பொருளாளர் பொன் ராஜ், நகர துணை தலைவர் சாகுல் ஹமீது, காங்கிரஸ் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கல்பத்து, காங்கிரஸ் கமிட்டி நிர்வா கிகள் பீர், அப்பாஸ், சினான், ஜாபர் அமானு ல்லா, ஷேக், அப்துல் ரகுமான், மீரான் டேனியல், முத்துராமலிங்கம், சுதா, ஜெயந்தி, லதா மற்றும்

    காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சி தோழமைகள் மற்றும் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சிறிய மலை பெய்தாலும் காட்டாற்று வெள்ளம் இங்கு வந்து விடுகிறது.
    • தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும்.

    நெல்லை:

    திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் எம். எல். ஏ. ராகுல்காந்தி, பிரதமராக வேண்டி மலை அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக சென்று சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய மலை அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்வார்கள்.

    அவர்களுடன் இணைந்து நானும் ராகுல்காந்தி 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக வேண்டி சாமி தரிசனம் செய்தேன்.

    பாதயாத்திரையாக செல்லும் போது பொதுமக்களில் பலர் இந்த பாதையில் 1 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

    திடீரென்று சிறிய மலை பெய்தாலும் காட்டாற்று வெள்ளம் இங்கு வந்து விடுகிறது. அந்த சமயத்தில் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தவர்கள் அதில் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் மலை அடிவாரத்தில் இருந்து கோவில் வரை 3 இடங்களில் உள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதுகுறித்து நான் அரசிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட பொது செயலாளர் நம்பித்துரை, மாவட்ட துணைத் தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, திருக்குறுங்குடி காங்கிரஸ் நகர தலைவர் ராசாத்தி, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, ஜவஹர் பால் மன்ஞ் மாநில ஒருங்கி ணைப்பாளர் எம். எம்.ராஜா, காங்கிரஸ் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சுவாமிநாதன்பிள்ளை, உடையார், தங்கராஜ், தி.மு.க. நிர்வாகிகள் சுரேஷ், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருக்குறுங்குடி கைகாட்டி சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.
    • பெரிய குளத்தில் மராமத்து பணிகளை மேற்கொண்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

    நெல்லை:

    திருக்குறுங்குடி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமையில் திருக்குறுங்குடியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    பயணிகள் நிழற்குடை

    சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஏற்கனவே திருக்குறுங்குடி கைகாட்டி சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதேபோல் அரசு மருத்துவமனை அருகிலும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும்.

    மேலும் திருக்குறுங்குடி பெரிய குளத்தில் மராமத்து பணிகளை மேற்கொண்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் விரைந்து மராமத்து பணி, சாலைத்தெரு பழைய அன்னதான சத்திரத்தில் திருமண மண்டபம், திருப்பாற்கடல் நம்பிகோவில் எதிர்புறம் அரசு ஆற்று புறம்போக்கு நிலத்தில் ரேஷன் கடை மற்றும் திருமேலசாலைத்தெரு கைகாட்டி முன்னாள் பயணியர் விடுதி அருகே மின்வாரிய அலுவலகம் மற்றும் கால்நடை மருத்துவமனை அமைத்தல் போன்ற பணிகளை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் செயல் அலுவலர் உமா, இளநிலை பொறியாளர் பரமசிவன், பண்டக சாலை தலைவர் கணேசன், திருக்குறுங்குடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் இசக்கியம்மாள், திருக்குறுங்குடி காங்கிரஸ் நகர தலைவர் ராசாத்தி, திருக்குறுங்குடி நகர செயலாளர் கசமுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் சாமிநாதன், தி.மு.க. நிர்வாகி மாடசாமி, சமூக ஆர்வலர் ராமசுப்பிரமணியம், வார்டு கவுன்சிலர்கள் உள்பட காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதனைதொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அங்குள்ள தலைமை மருத்துவரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களின் தேவைக்காக 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணியில் இருக்கும் விதமாக கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்த அரசுக்கு கோரிக்கை வைப்பதாக அப்போது எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

    • களக்காட்டில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நடைபயணம் மேற்கொண்டார்.
    • பா.ஜனதா ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என ரூபி மனோகரன் கூறினார்.

    களக்காடு:

    ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து அதன் நினைவாக களக்காட்டில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நடைபயணம் மேற்கொண்டார்.

    களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வில் நடைபயணம் தொடங்கிய அவர் சுப்பிரமணியபுரம், ஊச்சிகுளம் விலக்கு, புதூர், பெல்ஜியம், களக்காடு பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் வழியாக 12 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று களக்காடு காந்தி சிலை அருகே நடைபயணத்தை நிறைவு செய்தார்.

    அதன் பின் பொதுக் கூட்டம் நடந்தது. முன்னதாக நடைபயணத்தின் போது ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது,

    'ராகுல் காந்தி மக்களை நேசிக்கும் தலைவர், அவருக்கு பதவி, புகழ் மீது ஆசை கிடையாது. அவரது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை உலகமே பாராட்டியது. நாட்டில் சாதி, மதத்தின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது. நாடு பின்னோக்கி செல்கிறது. ஏழைகள், இன்னமும் ஏழைகளாகவே உள்ளனர்.

    பணக்காரர்கள், பணக்காரர்களாகவே உள்ளனர். விலைவாசி உயர்வை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. பா.ஜ.க.வினர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்து வருகிறது. பா.ஜனதா ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுகின்றனர்.

    இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. இங்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார். இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், மலையடி புதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ் உள்பட ஆயிரக்க ணக்கானோர் சென்றனர். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முன்னதாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று நாங்குநேரியில் இருந்து களக்காடு காந்தி சிலை வரை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

    காங்கிரசார் நடைபயணம்

    நாங்குநேரி கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்லூரி முன்பிருந்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தொடங்கிய நடைபயணத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் த.காமராஜ், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர்கள் செல்லப்பாண்டி, சந்திரசேகர், பொதுச்செயலாளர் நம்பித்துரை உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்று நடைபயணம் சென்றனர்.

    • வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு, நாங்குநேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து இந்த நடைபயணம் தொடங்குகிறது.
    • நாங்குநேரியில் தொடங்கும் இந்த நடை பயணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில் உள்ள காந்தி சிலை அருகில் நிறைவு பெறுகிறது.

    நெல்லை:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கடந்த 2022-ம் ஆண்டு, இந்திய ஒற்றுமை யாத்திரையை குமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டார்.

    இம்மாதம் 7-ந் தேதி, அந்த நடைபயணம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி, நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக விழிப்புணர்வு பிரசார இயக்கமும், நடை பயணமும் மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் கேட்டுக்கொண்டனர்.

    இதையொட்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில், மாபெரும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

    வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு, நாங்குநேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து இந்த நடைபயணம் தொடங்குகிறது.

    நாங்குநேரியில் தொடங்கும் இந்த நடை பயணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில் உள்ள காந்தி சிலை அருகில் நிறைவு பெறுகிறது.

    தொடர்ந்து, இரவு 8 மணிக்கு, அங்கு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    எங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைமை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ராகுல்காந்தி எம்.பி. கடந்த ஆண்டு மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரையின் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, அந்த வெற்றி யாத்திரை தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், மத்திய பாரதீய ஜனதா அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்கும் வகையிலும் விழிப்புணர்வு பிரசார இயக்க நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம்.

    நாங்குநேரியில் தொடங்கி களக்காடு காந்தி சிலை முன்பு நிறைவு பெறும் இந்த நடைபயணத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள இருக்கி றார்கள்.

    இவ்வாறு ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    ×