search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbed"

    • கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
    • போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென ராஜேஷ்கண்ணா கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    இதை பார்த்த ரவுண்டானா பகுதியில் நின்றிருந்த சேலம் மாநகர துணை கமிஷனரின் (தெற்கு) அதிவிரைவு படை போலீசார் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அந்த வாலிபரை கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான ரவுண்டானா பகுதியில் காலை நேரத்தில் போலீ சார் சிறுவனை விரட்டி சென்று பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தொழில்போட்டி காரணமாக வியாபாரியை சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 43). இவர் மினி வாகனம் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். வேடசந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தண்ணீர் நிறுவனத்திற்கும் இடையே தொழிற் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஜெயராமன் தண்ணீர் வண்டியுடன் லைனுக்கு சென்றார். கேதையறும்பு அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து எங்கள் பகுதியில் தண்ணீர் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஜெயராமனை சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். இதனையடுத்து காயமடைந்த ஜெயராமனை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் வாலிபரை மிரட்டி நகையை பறித்து சென்றவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்க ரையை சேர்ந்தவர் மாரிமுத்து (32). இவர் தனது குழந்தைக்கு பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், ராஜேஸ், சவுந்தர் ஆகியோர் குடிபோதையில் அவரை வழிமறித்து பணம் கேட்டனர்.

    அதற்கு மாரி முத்து பணம் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தனர்.

    மேலும் இதுகுறித்து யாரிட மும் தெரிவிக்கக் கூடாது. மீறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதில் காயமடைந்த மாரி முத்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா குற்றவாளியை காட்டி கொடுத்தது
    • வேலை பார்த்த நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர்

    கோவை, 

    கோவை அருகே உள்ள அன்னூரை சேர்ந்தவர் மோகனபிரியா (வயது 34). இவர் குன்னத்தூராம் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் காசாளரான ஆனந்தி என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 7.30 மணி அளவில் இவர் நிறுவனத்தில் வரவு, செலவுகளை பார்த்து வீட்டு மீதி இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கபோர்டில் வைத்து விட்டு சென்றார்.

    நள்ளிரவு நிறுவனத்தில் ஷட்டைரை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் யாரோ கபோர்டில் இருந்த பணத்தை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் நிறுவனத்தை திறக்க வந்த எலக்ட்ரிசீயன், ஷட்டர் உடைக்கப்பட்டு கபோர்டில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து நிறுவன மேலாளர் மோகன பிரியாவிற்கு தகவல் தெரிவித்தார்.அவர் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதே நிறுவனத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு காவலாளியாக வேலைக்கு சேர்ந்த கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த மனோஜ் (28) என்பவர் பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை பார்த்த நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற காவலாளியை தேடி வருகின்றனர்.

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரமணியின் கழுத்தில் இருந்த 2¾ பவுன் செயினை யாரோ திருடியது தெரியவந்தது.
    • பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பீளமேடு,

    திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் ரமணி(வயது56).

    இவர் சம்பவத்தன்று திருப்பூரில் இருந்து சொந்த வேலை காரணமாக கோவை பீளமேடு வந்தார். பிளமேடு பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும், ரமணி பஸ்சை விட்டு கீழே இறங்கினார்.

    அப்போது தனது கழுத்தில் இருந்த செயின் மாயமாகி இருந்தது.கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரமணியின் கழுத்தில் இருந்த 2¾ பவுன் செயினை யாரோ திருடியது தெரியவந்தது. இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊட்டியை சேர்ந்தவர் சாம்(19). இவர் டிப்ளமோ படித்து விட்டு, கோவை காந்திபுரத்தில் தங்கி ரெயில் நிலைய பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.இவர் தனது பயன்பாட்டிற்காக மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். அதனை தான் தங்கியிருக்கும் லாட்ஜ் அருகே நிறுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போய் விட்டது. இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முன்கதவு பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பு உடைய பொருட்களை அள்ளி சென்றனர்
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 44). இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். அப்போது மர்ம நபர்கள் முன்கதவு பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பு உடைய 6 கிலோ வெள்ளி மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து தப்பி சென்றனர். அடுத்த நாள் காலை சம்பத் கடைக்கு வந்தார். அப்போது முன்கதவு பூட்டு உடைந்து கிடப்பதும், கடைக்குள் இருந்த மேற்கண்ட பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது தொடர்பாக சம்பத் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்டது.
    • அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பானுகோபன்(வயது36). கட்டிட காண்டிரக்டரான இவர், சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச் சென்றான். இதுகுறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய்(27) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை தெற்குவாசல் போலீசார் சம்பவத்தன்று மகால் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மகால் 4-வது தெருவில் காளவாசலை சேர்ந்த பாண்டி மகன் நாகேந்திரன்(19) என்பவர் வாளுடன் சுற்றித்திரிந்தார். அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சாந்தி காசி கோவிலுக்கு யாத்திரைக்காக சென்று இருந்தார்.
    • இது குறித்து சாந்தி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை சாய்பாபா காலனி அருகே வேலாண்டி பாளையம் கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சாந்தி(வயது50).

    இவரது மகன் விக்னேஷ் (26). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாந்தி அவரது வீட்டில் அலமாரியில் தங்க நகைகள் வாங்கி வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று அவர் காசி கோவிலுக்கு யாத்திரைக்காக சென்று இருந்தார். பின்னர் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு திரும்பினார்.

    அப்போது அவரது வீட்டில் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 27 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகையை அவரது மகன் விக்னேஷ் தான் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்மநபர் உள்ளே நுழைந்துள்ளார்.
    • மராத்தாள் மகன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 44). கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    வெள்ளியங்கிரி தனது 68 வயது தாய் மாராத்தாள் என்பவரை தன்னுடன் வைத்து கவனித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். மாராத்தாள் தனியாக ஒரு அறையில் படுத்து இருந்தார். நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை அவருக்கு தெரியாமல் கழற்றி தப்பிச் சென்றனர்.

    மறுநாள் செயின் மாயமானது கண்டு மராத்தாள் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து தனது மகனிடம் தெரிவித்தார். அவர் வீட்டை ஆய்வு செய்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் கிடத்த 5 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    • மகேஷ்வரன், ஆட்டோ டிரைவரிடம், ஏன் ஆட்டோவை வேகமாக ஓட்டினாய் என கேட்டார்.
    • பையில் வைத்திருந்த ரூ.11,300 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

    கோவை,

    கோவை கணபதி அருகே விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 43). இவர் ரேஸ்கோர்சில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று, இவர் கணபதி பாரதி நகரில் உள்ள வார சந்தையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர், எதிர்பாரபத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 45 வயது பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை கண்ட மகேஷ்வரன், ஆட்டோ டிரைவரிடம், ஏன் ஆட்டோவை வேகமாக ஓட்டி வந்தாய் என கேட்டார். இதில் கோபம் அடைந்த ஆட்டோ டிரைவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து ஆட்டோ டிரைவர், 4 பேர் கும்பலுடன் அங்கு சென்றார். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை ஆட்டோவில் கடத்தி சென்று மணியகாரம்பாளையம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே கணபதிக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து 5 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர்.

    பின்னர் அவர் பையில் வைத்திருந்த ரூ.11,300 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதயைடுத்து மகேஷ்வரன் நண்பரின் உதவியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    பின்னர் இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்தில் காரில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை, பணம் பறித்தனர்.
    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த களங்காணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தாயி (வயது 77).

    இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 35 வயது மதிக்கத்தக்க பெண், கந்தாயியிடம் முகவரி கேட்டு பேச்சு கொடுத்தார். 

    அப்போது அந்த பெண், நான் ஏற்கனவே உங்களை பார்த்த போது, நீங்கள் நகை அணிந்திருந்தீர்கள், அதைப் போலவே நானும் செய்ய வேண்டும். எனவே அந்த நகையை காண்பியுங்கள் என கேட்டுள்ளார்.
     
    இதையடுத்து கந்தாயி, வீட்டிற்குள் அந்த பெண்ணை அழைத்து சென்று, அலமாரியில் வைத்திருந்த நகையை எடுத்து, அந்த பெண்ணிடம் காண்பித்தார்.

    பின்னர் இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் தண்ணீர் கேட்டதால், வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த கந்தாயி, அந்த பெண் அங்கு இல்லாததால் திடுக்கிட்டார். 

    பின்னர், வீட்டிற்குள் சென்று அலமாரியில் பார்த்த போது, அங்கு வைத்திருந்த 4½ பவுன் செயின் மற்றும்  35 ஆயிரம் பணத்தை அந்த பெண் திருடிச்சென்றது தெரிந்தது.

    இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் மற்றும் நகையை திருடிச்சென்ற பெண் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் டெம்போ டிரைவரை மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
    சேலம்:

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் 5 பேர் நேற்றிரவு ஒகேனக்கல்லுக்கு காரில் புறப்பட்டனர். அந்த கார் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
    அப் போது முன்னால் சென்று கொண்டிருந்த டெம்போ கார் மீது உரசியதாக கூறி அதனை வழி மறித்தனர். 

    பின்னர் காரில் இருந்த 5 பேர் கும்பல் டெம்போ டிரைவரிடம் ரூ.10 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறிய நிலையில் அவரிடம் இருந்து 1000 ரூபாயை பறித்து விட்டு சேலம் நோக்கி காரில் வந்தனர்.

    இதனையறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தெரிவித்தனர். சீலநாயக்கன்பட்டியில் காரை போலிசார் மறித்த போது கார் அங்கிருந்த மின்னல் வேகத்தில் பெங்களுரு சாலையில் சென்றது. இதையடுத்து போலீசார் காரை துரத்தி சென்றனர். 

    மேலும் மைக்கிலும் அறிவித்து ரோந்து போலீசாரை உசார்படுத்தினர்.  ஆனால் அதற்குள்  கார் குரங்குசாவடியை தாண்டி சென்றது. பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு சந்திற்குள்  காரை  ஒதுக்கி நிறுத்தி வைத்தனர். அததனை கவனித்த ரோந்து போலீசார் போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர். 

    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காரை மடக்கி பிடித்து காருக்குள்  இருந்த 5 பேரையும் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் புதுச்சத்திரம்  போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×