search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "respect"

    • நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    விஜயகாந்த் மரணம் அடைந்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் அவரது நினைவிடத்தில் தினமும் பொதுமக்களும் தே.மு.தி.க. தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விலை உயர்ந்த மாலைகளை வாங்கி வைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அதனை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

    இதன் மூலம் விஜயகாந்த் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொடர்ச்சியாக பொதுமக்கள் நேரில் வந்து விஜயாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது எங்களுக்கு நெகழ்ச்சியாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதுதான் தற்போது வெளிப்பட்டு வருவதாகவும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வதாக பெரியவர்கள் கூறுகிறார்கள்.
    • நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும், திருத்தேரோட்டம் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.

    சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் ரதம் பிடிக்கும் போது போலீஸ் நிலையம் சென்று அழைத்து வருவது. அதேபோல் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.

    இந்த பழக்கம் பல நீண்ட வருடங்களாக உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியா மரியாதை தொடர்வாதக பெரியவர்கள் கூறுகிறார்கள். இன்னும் இந்த மரியாதை மாறாமல் தொடர்ந்தது.

    இதில் சென்னிமலை இன்ஸ்பெக்டராக புதியதாக பொறுப்பேற்றுள்ள செந்தில்பிரபு நான் பல இடங்களில் பணியாற்றி உள்ளேன். இங்கு இந்த நடைமுறையும், மரியாதையும் மிகவும் புதுமையாக உள்ளது. மிகுந்த மன நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. கோவில் நிர்வாகத்திற்கும், தேரோட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான முருகபக்தர்களுக்கும் என்றும் நான் தொண்டு செய்ய சென்னிமலை முருகன் அருள்புரிய வேண்டும் என்றார்.

    • பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
    • காங்கிரஸ் சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 134-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள அவரது சிலைக்கு தஞ்சை மாவட்ட (தெற்கு) காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமநாத துளசியய்யா வாண்டையார் மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புக்களை வழங்கினார்.

    முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயண சாமி, மாவட்ட ஊடகப்பிரி வுத்தலைவர் பிரபு மண்கொண்டார், மாநகர மாவட்ட துணைத்தலைவர் செந்தில் நா.பழனிவேல், சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா.வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், கலைஇலக்கிய பிரிவுத்தலைவர் கலைச்செல்வன், ஐ.என்டி.யூ.சி. மணிவாசகம், 7-வது வார்டு செயலாளர் பாபுஜீ, வெங்கட், ராஜூ, வீணை கார்த்திக், சரவணன், மாரியம்மன் கோவில் ராமமூர்த்தி, பின்னையூர் ரவிச்சந்திரன், ரஞ்சித், ரவி, முகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்டத்தின் 35 ஊராட்சிகளிலும், கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
    • ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் 35 ஊராட்சிகளிலும், கிராமசபா கூட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் கல்லட்டி சமுதாய கூடத்தில் நடந்தது.

    ஊராட்சி தலைவர் டி.டி. சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் சதிஷ் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கிராமசபை கூட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஆன்லைனில் வரி செலுத்துவது, துாய்மை பாரத இயக்கம், தேசிய வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஊட்டியில் நடைபெறும் மெகா வேலைவாயப்பு முகாமில் உல்லத்தி ஊராட்சியில் இருந்து பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும் கல்லட்டி சதுக்கம்- சோலடா இடையே ஆத்திக்கல் சாலை வரை நெடுஞ்சாலை பாராமரிப்பு பணிக்க ஒப்படைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • ஐ.ஜே.கே. சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு மாலை அணிவித்தார்.

    மதுரை

    முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஐ.ஜே.கே. கட்சி சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கலந்து கொண்டு மாலை அணிவித்தார்.

    மாநில அமைப்பு செய லாளரும், மதுரை மாநகர் மாவட்ட தலைவ ருமான அன்னை இருதய ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன், மகளிரணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், மாநில போராட்டக்குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், மாநில விளம்பரப்பிரிவு செய லாளர் முத்தமிழ் செல்வன், மாநில துணை தலைவர்கள் நெல்லை ஜீவா, இளவரசி, ஆனந்த முருகன்,

    மாநில இளைஞரணி துணை தலைவர் சுரேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் துரை பாண்டியன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் காசின், கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, திண்டுக் கல் கிழக்கு மாவட்ட தலை வர் ரஞ்சித்குமார், மாநில தகவல் தொழில்நுட்ப ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன், மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டி, பொரு ளாளர் முத்துராஜா, மாநில மகளிரணி துணை செயலா ளர் சகிலாபுரோஸ், மாநகர் மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான்பெனடிக், மாவட் அமைப்பு செயலாளர் அமிர்தகிருஷ்ணன், தென் மண்டல அமைப்பு செய லாளர் வினோத்குமார்,

    மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் பிரபுராஜன், மாநில இளைஞரணி இணை செயலாளர் மோகன்குமார், மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ராபின்சன், வடக்கு மாவட்ட பொருளாளர் சூசை அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
    • தேவர் கீதம் எனும் பெயரில் தேவர் ஜெயந்திக் கான புதிய பாடலை சே. கருணாஸ் வெளியிட்டார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும் பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் நடந்த குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சே.கருணாஸ் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்வில் தொழிலதிபர் கரிகாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுச்செயலாளர் தாமோதரன் கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் முத்து ராமலிங்கம், துணைப் பொதுச் செயலாளர் பெரு மாள், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோகுல கிருஷ்ணன்,

    மாநில மகளிர் அணி தலைவர் சத்யாகரிகாலன், தொழிற்சங்க பிரிவு செயலாளர் காமராஜ்தேவர், ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் சுந்தரபாண்டியன், ராமநாதபுரம் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், ராமநாதபுரம் அமைப்பாளர் பொன்.முத்துராமலிங்கம்,

    ராமநாதபுரம் கிழக்கு ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, ராமநாதபுரம் மாவட்டத் துணைச் செயலா ளர் மேற்கு பசும்பொன் சௌந்தர், ராமநாதபுரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சிவ சங்கர்மேத்தா, ராமநாதபுரம் மாணவரணி செயலாளர் ஆகாஷ்சேதுபதி, கமுதி ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார், மாவட்டச் செயலாளர்கள் ராமு, மணி, தென்றல், தர்மா, முருகன், மணி, செல் வகுமார், மஞ்சு, வெள்ளைச் சாமி, ரமேஷ், சாமி உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர் நிர்வாகிகள் பங்கேற் றனர். தேவர் கீதம் எனும் பெயரில் தேவர் ஜெயந்திக் கான புதிய பாடலை சே. கருணாஸ் வெளியிட்டார்.

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அன்புமணி ராமதாஸ் மரியாதை செலுத்தினார்.
    • பா.ம.க.வினர் பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு அளித்து வரவேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இந்த வருடம் முதன்முறையாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி ராமதாஸ் வருகை தந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு வருகை தந்த பாட்டாளி மக்கள் தலைவர் அன்புமணி ராம தாசுக்கு ராமநாதபுரம் எல் லையில் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமையில் பா.ம. க.வினர் பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு அளித்து வர வேற்றனர்.

    கவுரவத் தலைவர் கோ.க.மணி, சட்டமன்ற உறுப்பி னரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.மூர்த்தி, மாநில பொருளாளர் கவி ஞர் திலக பாமா, சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் வக்கீல் பாலு,

    வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி, ஊட கப் பிரிவு செயலாளர் இயக் குனர் கார்த்திக், தலைவர் நேர்முக உதவியாளர் ஜெய சீலன், சொல்லின் செல்வன் ஆகியோர் மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.கே.தேவர் ராஜா, திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் உமா நாத், பசுமைத்தாயகத்தின் மாநில துணைச்செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் அன்புமணி ராமதாசுடன் சென்று மரியாதை செலுத்தி னர்.

    மதுரையில் இருந்து ராம நாதபுரம் நோக்கி வரும் பொழுது நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் வந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வரவேற்புக்கு 25 வாகனங்கள் சென்றது.பசும்பொன் நோக்கி செல் லும் பொழுது நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அன்புமணி ராமதாஸ் வருகை பசும்பொன் வருகை யையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட எல்லையான மருச்சுக்கட்டியில் இருந்து பசும்பொன் வரை பா.ம.க. கொடிகள் மற்றும் தோரணங்கள் கிழக்கு மாவட்ட பா.ம.க நிர்வாகி களால் கட்டப்பட்டிருந்தது.

    ராமநாதபுரத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமையில் அமைப்புச் செயலாளர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா, திருப்புல் லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான், பசுமை தாய கத்தின் மாநில துணைச்செய லாளர் பொறியாளர் கர்ண மஹாராஜா, மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராசிக், ராமநாத புரம் நகரச் செயலாளர் பாலா,

    மண்டபம் ஒன்றிய செய லாளர் வெங்கடேஷ், கீழக் கரை நகர செயலாளர் லோகநாதன், திருப்புல் லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் ஐ.பி.கணேசன், நகர துணை செயலாளர் கார்த்திக், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட சிறு பான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம், மாணவர் சங்க செயலாளர் சந்தோசம்,

    மாவட்ட மாணவர் சங்க அமைப்பாளர் கபில்தேவ், கடலாடி ஒன்றிய செயலா ளர் இருளாண்டி, ராமநா தபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் முகமது ஷரீப் உட்பட ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் திரளாக கலந்து கொண்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பளித்து தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    • தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தப்பட்டது.
    • தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. சார்பில் சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் ஒன்றிய செயலா ளர்கள் தன்ராஜ் பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், ஒன் றிய பொருளாளர் சுந்தர், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், ஒன்றிய இளை ஞரணி சந்தனகருப்பு, மாணவரணி யோகேஷ், பொறியாளர் அணி ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி செயலாளர் சக்கரபாணி தலைமையில் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், ஒன்றிய செய லாளர் கண்ணதாசன், ஒன்றிய தலைவர் திருப்பதி, கல்லணை மூக்கையா, பொருளாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் சுப்பா ராயலு தலைமையில் செயற் குழு உறுப்பினர் ஜெயமணி, முன்னாள் வட்டார தலை வர் மலைக்கனி ஆகி யோர் முன்னிலையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பாரதிய ஜனதா கட்சி சார்ப்பில் மண்டல் தலை வர்கள் சுபாஷ், தங்கதுரை தலைமையில் மாவட்ட பொது செயலாளர் கோவிந்த மூர்த்தி, முன்னி லையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள சிலைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து அன்ன தானத்தை தொடங்கி வைத்த அவர் நரிக்குடி அருகே உள்ள என்.முக்குளம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மருது பாண்டியர்கள் படத்துக்கு மாலை அணிவித்தார். அப்போது கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறுகையில், எடப் பாடி பழனிசாமி ஆட்சியில் தான் தியாகிகளுக்கு மரி யாதை செலுத்தப்பட்டது.

    அவர் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தியாகிகள் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும். மேலும் மருதுசகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தில் மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதேபோல் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக அதன் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் மற்றும் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனுமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன ஆகியோர் தலைமையில் மருதுபாண்டி யர்கள் சிலைக ளுக்கு மாலையணிவித்து மரியா தை செலுத்தப்பட்டது. அப்போது வாரிசு தாரர்க ளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படு மென அவர்கள் தெரி வித்தனர்.

    இந்த குருபூஜை விழாவில் முன்னாள் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம், அண்ணா தொழிற்சங்க மாநில போக்குவரத்து பிரிவு துணை செயலாளர் பி.வி.வீரேசன்,நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் சரளா தேவி போஸ்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பள்ளப் பட்டி முருகன்,கூட்டுறவு சங்க தலைவர்களான நாயனேந்தல் மனோகரன், பனைக்குடி ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் இந்த விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.

    • மருதுபாண்டியர் நினைவிடத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ் மரியாதை செலுத்தினர்.
    • வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பரமக்குடி

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் 222-வது குருபூஜையையொட்டி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் அவர்கள் வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் மேற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கார்த்தி, கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் பாலாஜி, மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், துணைச் செயலாளர் பசும்பொன் சௌந்தர், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.ராமு உட்பட சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் சுதந்திர போராளி குயிலிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • சிவகங்கை நகர செயலாளர் ராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சுதந்திர போராட்ட பெண் போராளி குயிலியின் வீரத்தை போற்றும் வகையில் சிவகங்கை பையூர் பழமலை பகுதியில் வேலு நாச்சியார் நினைவிடத்தில் குயிலி நினைவு ஸ்தூபிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை யில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் குயிலி நினைவிட ஸ்தூபி யில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப் பட்டது. இதில் சிவகங்கை நகர செயலாளர் ராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், குணசேகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், பழனிச்சாமி, சிவாஜி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வமணி, சிவசிவஸ்ரீதர், ஜெயபிரகாஷ் சோனைரவி, கல்லல் செந்தில்குமார், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன், காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், மற்றும் மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து,தேவராஜ், பில்லூர் ராமசாமி, நகர் துணை செயலாளர் மோகன்,மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட பாசறை பொருளாளர் சரவணன், அமைப்பு சார அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாண வரணி அன்பு,சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் என ஏராளமான நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

    மதுரை

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அ.தி.மு.க. நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    ஓ.பி.எஸ்.அணி மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கண்ணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்ட துணைச் செய லாளர் சுசிலா பாண்டி, லதாபாண்டி, தொகுதி செயலாளர் ரகுராமன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சரவணன், ஐ.டி.விங் திருப்பதி, பகுதி, வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×