search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Relocation"

    • அரியலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அதிரடி

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,

    அரியலூர் மாவட்டம் அரியலூர் வருவாய் வட்டாட்சியர் கண்ணன், ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியராகவும், அரியலூர் மாவட்ட கலெக்டர் நிலம் எடுக்கும்பிரிவு நேர்முக உதவியாளர் ஆனந்தவேல் அரியலூர்வருவாய் வட்டாட்சியராகவும், உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சியர் துரை அரியலூர்தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியராகவும் அரியலூர்தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியர் முத்துலெட்சுமி அரியலூண மாவட்ட கலெக்டர் நேர்முகஉத வியாளர்(நிலஎடுக்கும் பிரிவு) வட்டாட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டு உளளனர்.

    இதே போல ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியர் வேலுமணி, செந்துறை வருவாய் வட்டாட்சியராகவும், ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியர் கலிலுர்ரகுமான் உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சி யராவும் மாவட்ட கலெக்டர் அலுவலக உசூர் தலைமை உதவியாளர் செல்வம் உடையார்பாளையம் வட்ட வழங்கல் அலுவலராகவும் ஆண்டிமடம் வட்ட வழங்கல் அலுவலர் ராஜகோபால் ஆண்டிமடம் தேர்தல்பிரிவு துணைவட்டா ட்சியராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும், ஆண்டிமடம் தேர்தல் பிரிவு துணைவட்டாட்சியர் அய்யப்பன் மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணைவட்டாட்சி யராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணைவட்டாட்சியர் பழனிவேல் அரியலூர்வட்டவழங்கல் அலுவலராகவும், செந்துறை வட்டவழங்கல் அலுவலர் பாஸ்கர் கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், அரியலூர்கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் இளவரசு செந்துறை வட்டவழங்கல் அலுவலராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • காந்திநகர் தபால் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
    • வளையங்காடு பஸ் ஸ்டாப் அருகில், நம்பர், 14, சாய்பாபா நகர், வளையங்காடு என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர், ஆக.2-

    குமார்நகர் தபால் நிலையம், நிர்வாக காரணங்களுக்காக, காந்திநகர் தபால் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

    தற்போது, இடமாற்றம் செய்யப்பட்டு, வளையங்காடு பஸ் ஸ்டாப் அருகில், நம்பர், 14, சாய்பாபா நகர், வளையங்காடு என்ற முகவரியில் இன்று (2ம் தேதி) முதல் செயல்படும். புதிய முகவரியில் மக்கள் தபால் சேவையை பெறலாம்.

    என திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    • சேலம் கடை வீதியில் வ.உ.சி பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக பூ மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் கடை வீதியில் வ.உ.சி பூ மார்க்கெட் செயல் பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக பூ மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    இதனால் போஸ் மைதானத்தில் பூ மார்க்கெட் மற்றும் பல்பொருள் அங்காடி, காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. வ.உ.சி மார்க்கெட் கட்டு மான பணிகள் முடிவடைந்த தால் விரைவில் பூ மார்க்

    கொட் அங்கு மாற்றப்பட உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 11-ந் தேதி ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையொட்டி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே போஸ் மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பூ கடைகளை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இதன்படி, போஸ் மைதா னத்தில் உள்ள தற்காலிக கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்று வதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபார நல சங்க நிர்வாகி ஆறுமுகம் தலைமையில் வியாபாரிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் அதிகாரியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கடைகளை அகற்ற அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சிய ராகவும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
    • 3 துணை கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணி யன், திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சிய ராகவும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், நாமக்கல் மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவி யாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். அதேபோல, நாமக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையர் செல்வி, திருப்பூர் மாவட்ட தனித்துணை கலெக்டராக வும் (சமூக பாதுகாப்புத் திட்டம்), கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (நிலம்) பால கிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நடேசன், கோவை மாவட்ட மேலாளராக (சில்லரை விற்பனை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு (தெற்கு) மாற்றப்பட்டுள்ளார்.

    • உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.
    • மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    ஈரோடு அரசு மருத்துவமனை பின்புறம் அம்மா உணவகம் கடந்த 7 ஆண்டுகளாக ஈரோடு மாநகராட்சி சார்பில் இயங்கி வந்தது. இங்கு அரசு மருத்துவமனை நோயாளிகள், அவரது உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.

    குறைந்த விலையில் நிறைவான சாப்பாடு கிடைப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் அரசு மருத்துவமனை பின்புற பகுதியில் பல கோடி மதிப்பில் பல்துறை மருத்துவமனை மைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    இந்நிலையில் இந்த பணிக்காக இடம் தேவைப்பட்டதால் அம்மா உணவக கட்டிடத்தை இடிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மாநகராட்சி இடம் முறையாக அனுமதி பெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மா உணவக கட்டிடம் இடிக்கப்பட்டது.

    இதனையடுத்து தற்போது தற்காலிகமாக அரசு மருத்துவமனை மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது.

    இந்த இடத்தையும் விரைவில் காலி செய்யுமாறு மருத்துமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து அம்மா உணவகத்திற்கு வேறு இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    • நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் 11-ந் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
    • இந்த நிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு பகுதியைச் சேர்ந்த நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் 11-ந் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். இதைத்தொ டர்ந்து அப்பகுதியில் 2 பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    அதையடுத்து, வெல்ல ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடிசைக்கு தீ வைப்பு, வீடுகளுக்கு தீ வைப்பு, டிராக்டர்கள் எரிப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு என, அடுத்தடுத்து தொடர் சம்பவங்கள் அப்பகுதியில் நடைபெற்றதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், கடந்த, 14-ந் தேதி, அதிகாலை சரளைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில் தூங்கி கொண்டிருந்த தொழிலா ளர்கள் 4 பேர் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

    அதில், படுகாயம் அடைந்த 4 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    அதையடுத்து, அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரவி, பர மத்தி போலீஸ் நிலை யத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, சேலம் சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் (பொ) வழங்கி உள்ளார்.

    • ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
    • அதன்படி நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வருகிற 8-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வருகிற 8-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

    ெதாடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தமிழ்-12, ஆங்கிலம்-3, கணிதம்-13, அறிவியல் -17, மறறும் சமூக அறிவியல் -4 பணியிடங்கள் என 49 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் 5, தருமபுரி மாவட்டத்தில் 45, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுபோல் உபரியாக கண்டறி யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகிற 17-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலியாக உள்ள பணியிடங்களுக்கும், கூடுதல் தேவையுள்ள இடங்க ளுக்கும் பணிமூப்பு அடிப்ப டையில் கலந்தாய்வு நடத்தப்ப டும். மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு வருகிற 20-ந்தேதி நடைபெ றும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பல்லடத்துக்கு மாற்றப்பட்டார்.
    • பல்லடத்தில் பணிபுரிந்து வரும் ராஜவேல் அவிநாசி சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பல்லடத்துக்கு மாற்றப்பட்டார். அவிநாசி போலீஸ் உட்கோட்டத்துக்கு உட்பட்ட அவிநாசி ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி. இவர், பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் கிரைம் இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக, பல்லடத்தில் பணிபுரிந்து வரும் ராஜவேல் அவிநாசி சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • வார்டு உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் கலந்து கொண்டனர்.
    • அனைவரும் கிராமத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் உறுதிமொழி ஏற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள சீரங்ககவுண்டன் பாளையத்தில் உள்ள அரசமர மைதானத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பரமசிவம் , வார்டு உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணி குழு சார்பாக வக்கீல் ராஜசேகரன் , கிராம நிர்வாக அலுவலர் , விவசாயத்துறை சுகாதாரத் துறை அதிகாரிகளும் உள்ளாட்சி அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் இடுவாய் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியோடு இணைத்தால் தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை இழப்பும் பொருளாதார பாதிப்பும் ஏற்படும் என்ற காரணத்தாலும், உள்ளாட்சிப் பணிகள் விரைந்து நடைபெறுவதில் தாமதம் ஏற்படும் என்கிற காரணத்தாலும் இடுவாய் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியோடு இணைக்க கூடாது .

    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமும் ஒன்றிய அரசும் இணைந்து வழங்கி வந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மானியத்தில் வீடு கட்டும் திட்டம் (இரண்டு லட்சத்து 10 ஆயிரம் மானியம் ) கடந்த ஓராண்டாக செயல்படுவதில்லை. எனவே உடனடியாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட 12 மணி நேரம் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்ற சட்ட திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொழிலாளர் தினமான மே தினத்தன்று முதலமைச்சர் அந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற்றதற்கு இந்த கிராம சபை மூலம் ஏகமனதாக அவருக்கு நன்றி தெரிவிப்பது.

    இடுவாயில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கடந்த பல வருடங்களாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் போராட்டம் நடத்தியும் கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த அரசு மதுபான கடையில் மது விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது மதுபான கடை அகற்றாததால் ஊராட்சி தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் கருத்து தெரிவித்தனர்.

    ஊராட்சித் தலைவர் அதற்கு விளக்கம் அளித்து பேசும் போது, மதுபான கடையை வைக்கலாமா வேண்டாமா என்ற அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு இல்லை . ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவித்து போராட மட்டுமே அதிகாரம் உள்ளது. அதை இடைவிடாது செய்து வருவதாக விளக்கம் அளித்தார்.பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொது மக்களின் கோரிக்கை மனுக்களை ஊராட்சி தலைவர் பெற்றுக் கொண்டார். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.அனைவரும் கிராமத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் உறுதிமொழி ஏற்றனர்.

    • திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
    • ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.04.2023 அன்று காலை 10.30 மணிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

    • திருமங்கலம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை எதிர்த்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • சிந்துபட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி கிரா மத்தில் 1914 -ம் ஆண்டு முதல் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் அருகில் உள்ள தும்மக்குண்டு, காங்கே யநத்தம், நக்கலகோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவ லகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. தாலுகா வாரியாக பத்திர பதிவு அலுவலகம் பிரிக்கப்படும் சூழ்நிலையில் சிந்து பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்த திருமங்கலம் தாலுகாவுக்கு காங்கேயநத்தம், நக்க லக்கோட்டை, பன்னீர் குண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, சென்ன ம்பட்டி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்கள் திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதுவரை செயல்பட்டு வந்த சிந்துபட்டி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல ம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    இதனால் சிந்துபட்டி, உடையாம்பட்டி, கட்ட தேவன்பட்டி, தும்மக்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பத்திர பதிவு செய்வதற்கு செல்ல ம்பட்டிக்கு செல்ல வேண்டும்.

    இந்த நடைமுறைக்கு மேற்கண்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்லம்பட்டிக்கு இட மாற்றம் செய்வதால் பொது மக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும், சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்து கடந்த வாரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்துபட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • துங்கபுரம் மின் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • உதவி செயற்பொறியாளர் தகவல்

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட துங்கபுரம் பிரிவு அலுவலகம் செந்துறை ரோடு, துங்கபுரத்தில் உள்ள கதவு எண் 2/331 என்ற கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது துங்கபுரம் பிரிவு அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக செந்துறை ரோடு, துங்கபுரம் ஸ்ரீ கல்பனா கோவில் நிலத்தின் முன்புறம் அமைந்துள்ள கதவு எண் 2/66 பி என்ற கட்டிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு நாளை (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளது என்று குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்."

    ×