search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "release"

    • மேலும் தற்போது நான் நடிக்கும் 'கருடன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.
    • இந்த படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ளது.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.

    இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் தேசிங்கு ராஜா, ஜீவா,வேதாளம், ஜில்லா உள்ளிட்ட படங்கள் வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து கதாநாயகனாக நடித்தும் வெற்றி பெற்றார்.மேலும் 'விடுதலை' படத்தில் ஹிட் ஆனது. கடும் உடற்பயிற்சி செய்து 'சிக்ஸ் பேக்' உடலில் போலீஸ் கான்ஸ்டபிள் குமரேசனாக நடித்தார்.

    இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது.இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில், மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி கூறியதாவது :-

    விடுதலை- 2 படத்தில் என்னுடைய படப்பிடிப்புக்கான காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால், இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டி உள்ளது. படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் தற்போது நான் நடிக்கும் 'கருடன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.

    'விடுதலை- 2' படத்திற்கு முன்னதாக 'கருடன்' படம் ரிலீஸ் ஆகி விடும். விடுதலை- 2 படம் போலவே 'கருடன்' படமும் ஒரு நல்ல படமாகும். இந்த படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ளது.

    தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு என்னை யாரும் அழைக்க வில்லை.படம் நடிப்பில் நான் 'பிஸி' ஆக இருக்கிறேன்''.என தெரிவித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
    • தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டி ருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி தன் பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப்படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீ சார் வெளியிட்டுள்ளனர்.

    போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணியன் பாலச்சந்தர் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை யினர் புகைப் படத்தை அடிப்படையாகக் கொண்டு 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    மேலும் புகைப்படத்தில் உள்ள நபர்களை யாரேனும் பார்த்தால் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர்
    • OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது

    ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் 'பிரேமலு'. காதல்,காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

    இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

    தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இன்று வெளியாகியுள்ளது பிரேமலு படம். இந்நிலையில் உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது. மலையாளத்தில் குறும்படமாக வெளியான 'யூத்புல் லவ் ஸ்டோரி,' தற்போது தெலுங்கிலும் 'டப்' செய்யப்பட்டு மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. 




     

    இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர். இதன் மூலம் பிரேமலு படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் செய்து வருகிறது. நாயகி மமிதா பைஜு தற்போது பேசும் பொருளாகி விட்டார். 

    இத்தனை அம்சங்களுடன் 'பிரேமலு' படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராக உள்ளது. பிரபல OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. மார்ச் 29-ந் தேதி முதல் OTT-யில்  இப்படம் வெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

     

    • இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
    • ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார்.

    மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிக்க, இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது. ரிலீஸ் என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.

    சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாக இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி தெரிவித்துள்ளார்.

     


    இந்த படத்தில் ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜெ லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.

    இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    • குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம்.
    • ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் கட்டண சேவா டிக்கெட்டுகளுக்கான மே மாத டிக்கெட்கள் இன்று காலை வெளியிடப்பட்டன.

    இதில் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கலுக்கு ஆன்லைன் பதிவு 21-ந் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.

    அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதிப அலங்கர சேவைகளுக்கான டிக்கெட்டுகள் பிப்ரவரி 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் மே மாத டிக்கெட்கள் வருகிற 22-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    மே மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    மே மாதத்திற்கான. அங்கப்பிரதட்சணம் இலவச டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.

    மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வருகிற 23-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.

    மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

    • ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கை நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். 23-ந்தேதி அதிகாலை அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜசக் (வயது 47), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (43) ஆகியோருக்கு சொந்த மான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படலில் இருந்து ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (34), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

    அவர்கள் அங்குள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். எல்லை தாண்டியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் 6 பேரையும் விடுதலை செய்ய நீதிபதி கஜநிதி பாலன் உத்தரவிட்டார். மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கை நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து விரைவில் விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவல் சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அரியலூர் வாக்காளர் பட்டியலில் 5.07 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்
    • பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்திற்கென சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

    அரியலூர்,

    அரியலூர்மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், ஒருங்கிணை ந்த வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

    அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 1,27,477 ஆண் வாக்காளர்களும், 1,27,345 பெண் வாக்காளர்களும், 04 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,54,826 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தொகுதியில் 1,26,057 ஆண் வாக்காளர்களும், 1,26,535 பெண் வாக்காளர்களும், 07 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,52,599 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,07,425 ஆகும்.

    மாவட்ட கலெக்டர் ஆனி மேரி சொர்ணா இது குறித்து கூறும்போது:-

    18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்க ப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம்.

    மேலும், சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கான விண்ணப்பிக்க அனைத்து வாக்கு ச்சாவடி மையங்க ளில் 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூரில் ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது
    • தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமையில் வெளியிடப்பட்டது

     பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் எமெர்ஜிங் இன்னோவேடிவ் ரிசெர்ச் இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமை தாங்கினார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் முன்னிலை வகித்தார். இந்த புத்தக வெளியீட்டு விழாவி ல் வேந்தர் பேசியதாவது:- எமெர்ஜிங் இன்னோவேடிவ் ரிசெர்ச் இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த புத்தகத்தை வெளி யிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி யும் பெருமையும் அடைகி றேன். நமது கல்லூரி அதிவேகமாக மாறிவரும் நவீன உலகத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை வளர்த்து, அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. பல புதிய படைப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும், உயர்ந்த நோக்கில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது உருவாகியுள்ள இந்த புத்தகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு மிக சிறந்த சான்றாகும்.

    இந்த புத்தகமானது அறிவியல்,பொறியியல், தொழில்நுட்பம், மற்றும் மேலாண்மை துறைகளின் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். இந்தத் தொகுப்பில் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த பங்களிப்புகள் அனைத்தும் நம்முடைய தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும குடும்பத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள். நம்முடைய ஆசிரியர்கள் கல்வியாளர்களாக மட்டுமல்லாமல், அந்தந்த துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி புதிய படைப்புகளை உருவாக்குவதில், அவர்களுக்கு உள்ள அசைக்க முடியாத ஈடுபாட்டை, இந்த புத்தகம் பிரதிபலிக்கிறது.

    இந்நூலில் உள்ள ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்த தலைமை பதிப்பாசிரியர்கள் இளங்கோவன், சிவராமன், இணை பதிப்பாசிரியர்கள் அன்பு, கார்த்திகேயன், விசாலாட்சி மற்றும் தொழில்நுட்ப பதிப்பாசிரியர்கள் அருண் பிரசாத், சுரேஷ்குமார், நிரஞ்சனி ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். இந்த புத்தகத்தை சிறந்த முறையில் பிரசுரித்த ட்ருலைன் பப்ளிஷர் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், புலமுதல்வர் (அகாடெமிக்) அன்பரசன், புலமுதல்வர் (ஆராய்ச்சி) சிவராமன், புலமுதல்வர் (பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு) சண்முகசுந்தரம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
    • மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச்சாவடிகள், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 334 வாக்குச் சாவடிகள், சிவகங்கை தொகுதியில் 351 வாக்குச் சாவடிகள், மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதி யில் 323 வாக்குச்சாவடிகள் ஆக மொத்தம் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை மற்றும் தேவகோட்டை, சிவகங்கை மாவட்ட அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வட்டாட்சியர்கள் வாக்குச்சாவடி சீரமைப்பு தொடர்பாக பரிந்து ரைகளை தெரிவித்தனர்.

    மேலும் வாக்குச்சாவடி திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆட்சே பனைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்குப்பதிவு அலுவலருக்கு எழுத்துப் பூர்வமாக மனு அளிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மறுசீரமைப்பு செய்யும் முன் வாக்குச்சாவடி மையங்களை தணிக்கை செய்து வருகிற 29-ந் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சி யர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச் சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), சோ.பால்துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேலம், நாமக்கல் மாவட்ட பட்டதாரிகள் எழுதிய பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு முடிவு வெளியீடு மதிப்பெண் அட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
    சேலம்:

    இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை  பட்டதாரி  பயோடெக்னாலஜி திறன் தேர்வு (GAT - B) மற்றும்  பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET) - 2022  அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கணினி வழி முறையில்  இந்தியா முழுவதும் 56 நகரங்களில் 23.04.2022 அன்று  தேர்வு நடத்தியது.  

     சமூக இடைவெளியை கடைபிடித்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு  தேர்வுகள் நடத்தப்பட்டன.

    பட்டதாரி பயோடெக்னாலஜி திறன் தேர்வுக்கு (GAT-B) 6359 பெண்களும், 3219 ஆண்களும்  என மொத்தம் 9578 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5722 பெண்கள்,  2955 ஆண்கள் என  8677 பேர் தேர்வு எழுதினர்.

    இதேபோல்  பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET)  எழுத பெண்கள்- 9448, ஆண்கள்- 4251 என 13699 பேர்  பதிவு செய்தனர். இதில் பெண்கள்- 8013,  ஆண்கள்- 3758 என மொத்தம் 11771 பேர் தேர்வு எழுதினார்கள். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

    இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் தேர்வில் எடுத்த  மதிப்பெண்கள்  தேசிய தேர்வு முகமை இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண், பாஸ்வேர்டு கொடுத்து  பார்க்கலாம்.  மேலும் ரேங்க் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தேர்ச்சி பெற்றவர்கள்  மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையில்  முதுகலை படிப்பில் சேர அட்மிஷன் வழங்கப்படுகிறது. இதைத்தவிர   பயோடெக்னாலஜி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பங்கேற்று ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பயோடெக்னாலஜி ஆராய்ச்சியைத் தொடர உதவிகளும் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    நடப்பு கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு தேதி அட்டவணை வெளியீடு சேலம், நாமக்கல்லில் திரளானோர் எழுதுகின்றனர்.
    சேலம்:

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகள், தனியார் இன்ஸ்டிடியூட்டுகள் பல  செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் தொடக்கக் கல்வி பட்டய படிப்பில் சேர்ந்து ஏராளமான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். 

    இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.  முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு தேர்வு நடைபெற உள்ள ேததி அட்டவணைகள் தமிழ்நாடு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டுள்ளது. 

    முதலாம் ஆண்டு தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி (திங்கட்கிழமை) முடிவடைகிறது.  2-ம் ஆண்டு தேர்வு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி தொடங்கி  26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. இந்த  தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
    மத்திய அரசு மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகம் சார்பில் நடைபெற உள்ள பேஸ்-2 முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
    சேலம்:

    இந்திய அரசின் மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.சி.) சார்பில் தொழில் நுட்பம் சாராத மல்டி டாஸ்கிங் ஊழியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இதன் முதற்கட்ட பேஸ்-1 தேர்வு சமீபத்தில் கம்ப்யூட்டர் வழியாக  நடந்து முடிந்தது.  

     இதற்காக சேலம் சிவதாபுரம்  உள்பட பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற ஏராளமான இளம்பெண்கள், இளை ஞர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக  இந்த தேர்வு நடைபெற்றது. 

    இதனைத் தொடர்ந்து பேஸ்-1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில்  விண்ணப்பதாரர்கள்  எடுத்த  மதிப்பெண் அவர்களுடைய பதிவு எண், வரிசை எண்களுடன் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு பிரிவுக்கும் கட்- அப் மதிப்பெண் எவ்வளவு ? என அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஹால்டிக்கெட் வெளியீடு இந்த நிலையில் பேஸ்-1 முதன்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு  பேஸ்-2 முதன்மை தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட் இ.எஸ்.ஐ.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்த இணையதளத்தில் பதிவு எண் அல்லது வரிசை எண் மற்றும் கடவுச் சொல் கொடுத்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்த மாதம் 5-ந்தேதி வரை மட்டுமே ஹல்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும்.
    ×