search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rate"

    • நெல்லை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
    • மல்லிகைப்பூ கிலோ ரூ. 700-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    மழைப்பொழிவு, பூக்களின் வரத்து குறைவு உள்ளிட்டவைகளின் காரணமாகவும், தொடர் முகூர்த்த தினங்கள் காரணமாகவும் நெல்லை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ சீசன் இல்லாத காரணத்தினாலும், மழை பொழிவு அதிகரிப்பதன் காரணமாகவும் இன்று ஒரு கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது.

    அதேபோல் மல்லிகைப்பூ கிலோ ரூ. 700-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரோஜா பூக்கள் கட்டு ரூ.100-க்கும், கேந்தி கிலோ ரூ.50-க்கும், வாடாமல்லி கிலோ ரூ.40-க்கும், சம்பங்கி கிலோ 80-க்கும் விற்பனை ஆகிறது. வில்வ இலை கட்டு ரூ. 150-க்கும், துளசி கட்டு ரூ. 5-க்கும், பச்சை கட்டு ரூ.5 என்ற விலையில் விற்பனையானது.

    • பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது இதன் நோக்கம்.
    • பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி ஆணையர் பிரதான் பாபு தலைமையில், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பெண் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு, பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது, பாலின சமத்துவத்தை உறுதிபடுத்துவது, பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது என பெண்களுக்கான கோட்பாடுகளை நிலைநாட்டவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்வதே பிரசாரத்தின் நோக்கமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் மேலாளர் சிற்றரசு, கணக்காளர் முத்து மீனாட்சி, நகர்மன்ற தலைவர் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், கவுன்சிலர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஈரோட்டில் பிளஸ் - 2 பொதுத் தேர்வில் 95.72 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.11 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இதில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற துறைகளை ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் தேர்ச்சி விகிதம் உள்ளது.

    இதுகுறித்து பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் தேர்வு நடந்த 5 பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஆசனூர்-74 சதவீதம், பர்கூர்-80 சதவீதம், கெத்தேசால்-75 சதவீதம், தலமலை-44 சதவீதம், பிளஸ்-2 தேர்வில் ஆசனூர்-68 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதும், பூர்த்தி செய்யாததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பர்கூர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை 418 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 418 பேருக்கு ஒரு தமிழாசிரியர், ஒரு ஆங்கில ஆசிரியர் உள்ளனர்.

    இது குறித்து கேட்டால் இந்த பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையில் வருவதில்லை வேறு துறைகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை தான் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது.

    பள்ளி கல்வித் துறையில் காலிப்பணியிடங்களில் 95 சதவீதத்தை நிரப்பி விட்டு மீதி ஆசிரியர்கள் இருந்தால் இது போன்ற பிற துறை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இதுபோன்ற பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தற்போது பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • செங்கோட்டை பகுதியில் விளைச்சல் குறைவால் மாம்பழங்கள் விலை அதிகரித்துள்ளது.
    • சீசன் காலமான தற்போது பருவநிலை மாற்றத்தால் காற்று அதிகளவில் இல்லாமல் மரங்கள் விளைச்சல் குறைந்துள்ளதாக செங்கோட்டை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை, கண்ணுப்புளி மெட்டு, பண்பொழி, வல்லம், புளியரை, தெற்குமேடு உள்ளிட்ட பகுதி களில் அதிகளவில் மா சாகுபடி செய்ய ப்பட்டு விவசயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்த பகுதிகளில் விவசாயிகள் நெல்லுக்கு அடுத்தபடியாக மா விவசாயத்தில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலமான ஏப்ரல், மே, ஜுன் மாதம் தோப்புகளில் உள்ள மா மரங்களில் மாங்காய்கள் கொத்துக்கொத்தாக காய்த்து தொங்கும். சாலையோரம் உள்ள மரங்களில் இக்காட்சியை சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுத்து செல்வார்கள்.

    செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இமாம்பசந், சப்போட்டா, அல்போன்ஸா, கிளிமூக்கு, மல்கோவா உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மாதங்கள் இப்பகுதியில் மா அறுவடை செய்யப்படுகிறது.

    நகர்புறங்களில் இருப்பது போன்று குடோன்களில் இருப்பு வைத்து தேவைக்கேற்ப செயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் இருக்கும் தோப்புகளில் இருந்து இறக்கப்படும் மாம்பழங்கள் சாலையோர கடைகளுக்கு நேரடியாக வியாபாரத்துக்கு வந்துவிடுகிறது.

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சீசன் காலமான தற்போது பருவநிலை மாற்றத்தால் காற்று அதிகளவில் இல்லாமல் மரங்கள் விளைச்சல் குறைந்துள்ளதாக செங்கோட்டை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் மா விலை அதிகரித்துள்ளது. மாம்பழங்கள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு கிலோவுக்கு ரூ. 50 முதல் ரூ. 150 வரை விற்கப்படுகிறது.

    இதுபற்றி இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மாம்பழங்களை பதப்படுத்தி வைக்க இப்பகுதிகளில் சேமிப்பு கிடங்கு ஏதும் இல்லை. எனவே இங்கு விளையும் மாம்பழங்களை வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கு கொடுக்க வேண்டிய சூழல் எங்களுக்கு ஏற்படுகிறது.

    தமிழக அரசு இப்பகுதியில் மாம்பழங்களை பதப்படுத்தி வைக்கும் அளவில் ஒரு சேமிப்பு கிட்டங்கி அமைத்தால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். கிட்டங்கி வசதி இருந்தால் வெளிநாடுகளுக்கும் இங்கு விளையும் மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும்.

    இதனால் தொழில் வர்த்தக ரீதியாக செங்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதி மாங்காய் உற்பத்தியாளர்கள் முன்னேர்வதோடு அரசுக்கும் வருவாய் கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    உடன்குடி வட்டார பகுதியில் தற்போது கருப்பட்டி உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கருப்பட்டி விலை கிடுகிடு என உயர்வடைந்துள்ளது.
    உடன்குடி:

     உடன்குடி வட்டார பகுதியில் தற்போது கருப்பட்டி உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. செட்டியாபத்து, மாதவன்குறிச்சி, ஆதியாகுறிச்சி, லட்சுமிபுரம், நங்கை மொழி, குதிரைமொழி, பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை, மாநாடு தண்டுபத்து, நயினார்பத்து, குலசேகரன்பட்டினம் ஆகிய ஊராட்சி மன்ற பகுதியில் உள்ள சுமார் 50 கிராமங்களில் சுமார் 500 குடும்பத்தினர் பனைமரத்தில் பதனீர் எடுத்து அதை பக்குவப்படுத்தி காய்ச்சி கருப்பட்டியும், பனங் கற்கண்டும் உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இங்கு உற்பத்தியாகும் கருப்பட்டி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு செல்கிறது. வெளியூர்களில் உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும் என்று ஊர் பெயரோடு எழுதி வைத்து விற்பனை செய்வது வழக்கம்.

    ஏராளமான வியாபாரிகள் உடன்குடிக்கு வந்து தங்கியிருந்து எந்த கலப்படமும் இல்லாத ஒரிஜினல் புது கருப்பட்டியை வாங்குவதற்கு உற்பத்தியாகும் இடத்திற்குச் சென்று கொள்முதல் செய்கின்றனர்.

    முன்பு ரூ.200-க்கு கொள்முதல் செய்த கருப்பட்டி தற்போது  உயர்ந்து ஒரு கிலோ ரூ.240 வரையில் கொள்முதல் செய்கின்றனர். இதுபற்றி உடன்குடியில் முகாமிட்டவியாபாரி ஒருவர் கூறுகையில்,   புகழ்பெற்ற உடன்குடி கருப்பட்டி மருத்துவ குணமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டதாகும், இவைகளை எந்த கலப்படமும் இல்லாமல் ஒரிஜினலாக வாங்குவதற்காகவே நாங்கள் இங்கு முகாமிட்டு உள்ளோம். அதனால் கூடுதல் விலை கொடுத்து வாங்கி அனுப்புகிறோம் என்றார்.

    அதனால் தற்போது எந்த கலப்படமும் இல்லாத உடன்குடி புதுகருப்பட்டி திடீர் என விலை உயர்ந்து, ஒரு கிலோ கருப்பட்டி ரூ.280 வரை சில்லரைக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு பழைய கருப்பட்டி ரூ.300-க்கு விற்பனை செய்தனர். தற்போது ஒரு கிலோ ரூ.380-க்கு விற்பனை செய்யபடுகிறது.
    வரி குறைப்பு செய்வதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.#Ramadoss #petorl #diesel
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை லிட்டருக்கு ரூ.1 குறைத்து கேரள அரசு ஆணையிட்டுள்ளது.

    கேரளத்தில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள் நாளை (இன்று) நடைமுறைக்கு வருகின்றன. இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான முடிவு ஆகும். கேரள அரசின் இந்த அறிவிப்பிலிருந்து மற்ற மாநில அரசுகள், குறிப்பாக தமிழக அரசு பாடம் கற்கவேண்டும்.

    மாநில அரசு அதன் செலவுகளுக்காக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீது அதிக வரி வசூலிப்பது வழிப்பறிக்கு இணையான செயல் ஆகும். தமிழகத்தில் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட விற்பனை வரியை குறைத்தாலே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.31 குறையும்.



    அதேபோல், டீசல் விலை ரூ.2.10 குறையும். இந்த விலைக்குறைப்பால் தமிழக அரசுக்கு பெட்ரோல், டீசல் விலை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரிய அளவில் எந்த இழப்பும் ஏற்படாது. அதேநேரத்தில் மக்களின் செலவு பெருமளவில் குறையும். இதனால் தொழில் உற்பத்தி அதிகரித்து மாநில அரசின் வருவாய் அதிகரிக்கும். மாறாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டால் அது தமிழகத்தின் முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும்.

    மத்திய, மாநில அரசுகள் வரி குறைப்பு செய்வதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.70, ரூ.60-க் கும் கீழ் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Ramadoss #petorl #diesel 
    ×