search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbers"

    • மர்ம ஆசாமிகள் வந்த காரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
    • கடலூரில் இருந்து 2 போலீஸ் மோப்ப நாய்கள் கூப்பர், வெற்றி வரவழைக்கப்பட்டது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் சென்னை சாலை பூங்குணம் ஏரிக்கரை பகுதியில் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்,போக்குவரத்து போலீஸ்காரர் கார்த்தி ஆகியோர் நேற்று பிற்பகல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரித்தனர்.காரில் கட்டு கட்டாக பணம், நகை இருந்தது தெரியவந்தது. காரின் சாவியை போலீசார் எடுத்தனர். இதனால் ஆத்திரமடை ந்த காரில் வந்த 3 பேர் போலீசாரிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கத்தியால் போலீசாரை தாக்கமுயன்றனர்.அதிர்ஷ்டவசமாக அவர்களின் கொலை வெறி தாக்குதலில் இருந்து போலீசார் காயம் இன்றி தப்பினார். பின்னர் கண்ணிமை க்கும் நேரத்தில் காரில் இருந்த பணம் நகைகளை வாரி சுருட்டிக்கொண்டு ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடித்தனர்.வாகன சோதனையில் இருந்தபோக்குவரத்துபோலீசாரை தாக்கம் முயன்றுகொலை மிரட்டல் விடுத்து 3 பேர் தப்பிய தகவல் அந்த பகுதியில்காட்டுத்தீ போல பரவியது.

    தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுபழனி இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பரமேஸ்வர பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, எழில்தாசன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுமர்ம ஆசாமிகள்வந்த காரை பறிமுதல்செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர் . மேலும் கடலூரில் இருந்து 2 போலீஸ் மோப்ப நாய்கள் கூப்பர், வெற்றி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு சித்திரச்சாவடி, கணிசப்பாக்கம், வி.ஆண்டி குப்பம் வழியாக பண்ருட்டிக்கு ஓடி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    போக்குவரத்து போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய ஓடிய மர்ம ஆசாமிகள் வந்த காருக்கு 4 நம்பர் பிளேட் இருந்தது. காரின் நம்பர் போலி எனவும், மர்ம நபர்கள் திருச்சி, திண்டுக்கல் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சென்னைக்கு செல்ல பண்ருட்டி வழியாக வந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் செங்க ல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகில் உள்ள பொத்தேரி சிறுவாச்சூர் என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல், வேளாங்கண்ணி, நதியா ஆகியோர்கள் என தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு பகல் நேரத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 2 பெண் மற்றும் 3 ஆண்கள் சேர்ந்து தங்க நகைகளை திருடி சென்றது சம்பந்தமாக பண்ருட்டி நகர போலீஸ் நிலையதில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளைய ர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா மேற்பா ர்வையில் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் கண்ணன்,சப்-இன்ஸ்பெ க்டர்க ள்தங்கவேல், பிரசன்னா ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டு சி.சி.டி.வி . காமிரா காட்சி மற்றும் சைபர் கிரைம் ஏட்டுகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் இந்த கொள்சளை ம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் செங்க ல்பட்டு மாவட்டம் மறைம லைநகர் அருகில் உள்ள பொத்தேரி சிறுவாச்சூர் என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல், வேளாங்கண்ணி, நதியா ஆகியோர்கள்என தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து வேறொரு கொள்ளை வழக்கில் சிதம்பரத்தில் கைதாகிகடலூர் மத்திய சிறையில் இருந்தஇவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பண்ருட்டியில்வக்கீல் ஒரு வீட்டில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.தலைவ ராக உள்ளஇவர்க ளது கூட்டாளிஒருவனிடம் பணம் உள்ளது என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பணத்துடன் தலைமறை வாகியுள்ளகூட்டாளியை பொறிவைத்து தேடி வருகின்றனர்.

    • திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு கோவில் உண்டியலை ஓடையில் வீசி சென்ற கொள்ளையர்கள்.
    • ராமநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்க ள் திருடிச் சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலின் உண்டியல் கடந்த 16-ந்தேதி மர்மநபர்களால் திருடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல ராமநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்க ள் திருடிச் சென்றனர். இந்த கொள்ளை சம்ப வங்கள் குறித்து துப்பு கிடைக்காததால், கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் ராமநத்தம் போலீசார் திணறி வருகின்றனர்.

    வாகையூர் அருகேயுள்ள ஆக்கனூர் கிராமத்தில் ஓடை உள்ளது. இதனை சுற்றியுள்ள நிலங்களில் களை எடுக்க பெண்கள் சென்றனர். அப்போது ஓடை அருகே உடைந்த நிலையில் ஒரு உண்டியல் கிடந்தது. அருகில் சென்று பார்த்த போது உண்டியல் மீது வாகையூர் செல்லியம்மன் கோவில் உண்டியல் என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து வாகையூர் கிராம பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர். உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள், உண்டியலை ஆக்கனூர் ஓடை அருகே வீசி சென்றிருக்கலாம் என கிராம பிரமுகர்கள் அனுமானித்தனர். இதையடுத்து ஓடையில் இருந்த உண்டியலை மீட்டு கோவிலுக்கு கொண்டு வந்தனர். மேலும், இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    • திருட்டு கும்பல் தலைவனை பிடிக்க மதுரைக்கு விரைந்துள்ள போலீசார்
    • ஆம்னி வேனில் பின்தொடர்ந்து கைவரிசை

    கள்ளக்குறிச்சி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கிருந்து 770 மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வேலூருக்கு கடந்த 20-ந்தேதி லாரி புறப்பட்டது. இந்த லாரியை திருவண்ணா மலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள சூரியகுப்பத்தை சேர்ந்த முத்துமணி (வயது 45) என்பவர் ஓட்டிவந்தார். தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி வழியாக வேலூர் செல்லும் வழியில், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூரில் லாரியை நிறுத்தி விட்டு டீ குடித்தார். பின்னர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்றார். காட்டுக்கோவில் அருகே சென்ற போது வயிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்று திரும்பினார்.

    அப்போது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்ப ட்டிருந்தது. இத்தகவலை டாஸ்மாக் அதிகாரிகளிடம் கூறிவிட்டு லாரியை வேலூர் குடோனுக்கு எடுத்து சென்றார். அங்கு மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டியை ஊழியர்கள் இறக்கினர். இதில் 45 பெட்டிகளை காணவில்லை. அதிலிருந்த 2160 பாட்டில்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே டீ குடிக்க நிறுத்திய இடத்தில் திருடு போயிருக்கலாம் என்று சந்தேகமடைந்த முத்துமணி, இது தொடர்பாக எலவனா சூர்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 7 பேர் கொண்ட கும்பல் தார்ப்பாயை பிரித்து அதிலிருந்த மதுபான பாட்டில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளை கொள்ளையடித்தை கண்டறிந்தனர்.

    இது தொடர்பாக கடந்த 26-ந்தேதி வழக்குப் பதிவு செய்த போலீசார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (37), விக்கிரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உசிலம்பட்டியை சேர்ந்த பொட்ராசு (45) என்பவர் தலைமையில் 7 பேர் மாருதி வேனில் பின் தொடர்ந்துள்ளனர். எறையூரில் நின்றிருந்த லாரியில் மதுபான பாட்டி ல்களை கொள்ளையடித்து, வேனில் ஏற்றிச் சென்று அனைவரும் பிரித்துக் கொண்டதாக கூறினார்கள். இதனையடுத்து உளுந்தூ ர்பேட்டை போலீசார், மதுபாட்டில்களை திருடும் கும்பல் தலைவன் பொட்ராசு மற்றும் 4 பேரை பிடிக்க மதுரை விரைந்துள்ளனர். மேலும், மதுபாட்டில்களை திருடப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல் நாயகி மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • 16 செல்போன்களள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் மர்ம நபர்கள் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கரவழி மாதப்பூர் அண்ணா நகரில் உள்ள தனியார் மில் ஊழியர்கள் தங்கும் அறையில் 5 செல்போன் திருட்டு போனது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல் நாயகி மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் பொரு த்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்

    இந்த நிலையில் கருமத்தம்பட்டி போக்குவரத்து பணிமனை அருகே, 3 வட மாநில வாலி பர்கள் செல்போன்களை குறைந்த விலையில் விற் பனை செய்வதாக தனிப்படை போலீஸ்சா ருக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் ஒடிசா மாநிலம், பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் குமார் மாலிக், பிரதாப்மாலிக் மற்றும் ராஜேஷ் மாலிக் என்பதும், அவர்கள் கரவழி மாதப்பூர் அண்ணா நகரில் உள்ள தனியார் மில் ஊழியர் விடுதியில் செல்போன் திருடியதும் தெரிய வந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 செல்போன்களள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கருமத்தம்பட்டி போலீசார் கூறுகையில் இந்த வழக்கில் துப்பு துலக்க சிசிடிவி காமிராக்கள் உதவியாக இருந்தது. எனவே அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கும் அறையில் சிசிடிவி காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    • வீடு புகுந்து தொழிலதிபரை வெட்டினர்.
    • முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் கே.கே. நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் செல்வராஜ் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    முகமூடி கொள்ளையர்கள்

    கடந்த மாதம் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் செல்வராஜ் கொள்ளையர்களை பார்த்தவுடன் கூச்சலிடவே பொதுமக்கள் அங்கு கூடினர். இதை கண்ட கொள்ளையர்கள் அங்கி ருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப் பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் 2-வது முறையாக அப்பகுதிக்கு இரவு காரில் வந்த கொள்ளை யர்கள் காளையார் கோயில் பத்திரப்பதிவு அலுவல கத்தில் வேலை பார்க்கும் காமராஜ் என்பவர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தனர்.

    அரிவாள் வெட்டு

    மேலும் தொழிலதிபர் செல்வராஜ் வீட்டுக்குள் மீண்டும் புகுந்த கொள்ளையர்கள் சி.சி.டி.வி. காமிராக்களின் வயர்களை துண்டித்தனர். தொடர்ந்து அவர்கள் செல்வராஜின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து தொழிலதிபர் செல்வராஜ் காளையார்கோவில் காவல் நிலையத்தில் சி.சி.டி.வி. காட்சிகளுடன் புகார் செய்தார். ஆனால் இதுவரை காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

    பொது மக்கள் அச்சம்

    மேலும் இரவில் ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.நள்ளிரவில் வீடுபுகுந்து தாக்கிய முகமூடி கொள்ளை கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உடனடி நடவடிக்கை எடுத்து முகமூடி கொள்ளை யர்களை பிடித்து மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக் கையாக உள்ளது.

    • மதுரையில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கோரிப்பாளை யம் ஜம்புராபுரம் தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி ரேகா (வயது 37). இவர் இரவு கணவர் லெனினுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அவர்கள் விளாங்குடி பகுதி யில் சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அவர்கள் ரேகா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த ரேகா கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    மதுரை கருப்பாயூரணி, மீனாட்சி நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சசிரேகா (46). இவர் நேற்று இரவு மோட் டார் சைக்கிளில் கோமதி புரத்துக்கு சென்றார். அந்த வழியாக மோட்டார் சைக்கி ளில் வந்த 2 மர்ம நபர்கள் சசிரேகா அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இது பற்றி சசிரேகா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த 2 நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்பது ெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
    • நாராயணசாமி, முத்துக்கருப்பன் ஆகிய 2 பேரையும் மதுபாட்டில்களால் தாக்கினர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாறு அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி மது விற்பனை அமோகமாக நடந்து வந்தது.

    இந்த கடையில் பூமிநாதன், முத்துக்கருப்பன், நாராயண சாமி, பெருமாள்ராஜ் ஆகி யோர் விற்பனையாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். மேற்பா ர்வையாளர்களாக செந்தில், மாரியப்பன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையை மூடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடைக்குள் புகுந்தனர். அதனை தடுக்க முயன்ற பூமி நாதனை அரிவாளால் வெட்டினர்.

    மேலும் விற்பனையா ளர்கள் நாராயணசாமி, முத்துக்கருப்பன் ஆகிய 2 பேரையும் மதுபாட்டில்க ளால் தாக்கினர்.

    இதைத்தொடர்ந்து டாஸ்மாக் ஊழியரிடம் இருந்த ரூ.6 லட்சத்து 47 ஆயிரம் ரொக்கம், 4 செல்போன்கள், அரை பவுன் மோதிரம் ஆகிய வற்றை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த கடை ஊழியர்கள் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுபற்றிய புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி னர்.

    மேலும் கடை செயல்படும் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டு கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில் டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டிய நபர்களை போலீ சார் தீவிரமாக தேடி வரு கின்றனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கலக்கி கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இவர்களை பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. மேலும், கொள்குளை சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுப்பெற்றது  இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலிஸ் சூப்பரண்டு கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.  கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்கள் வேளாங்கண்ணி பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் போலீசார் வேளாங்கண்ணிக்கு விரைந்து சென்றனர். அங்கு 2 வாலிபர்களை போலீசார் பிடித்து அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்  கடலூர் சிங்காரத்தோப்பு சேர்ந்த விக்னேஷ் (வயது 23), கடலூர் முதுநகர் சேர்ந்த பிரகாஷ் (வயது 22) என்பது தெரியவந்தது. இவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவிலில் சி.சி.டி.வி. கேமராவை சேதப்படுத்தி உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. பண்ருட்டி, நெல்லிக்குப்பம், விருதாச்சலம், புதுச்சேரி மாநிலம் முள்ளோடை, காரைக்கால், நாகப்பட்டினம், பழனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் 2 வாலிபர்களும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது                                 .

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே 2 வாலிபர்கள் கோவில் பூட்டை உடைத்து திருடுவதற்கு வந்தபோது, அங்கு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்ததால் பயத்தில் அதிகாலை 3 மணி அளவில் சாலை ஓரத்தில் இளம் பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது இவர்கள் திருடுவதற்கு குறிக்கீடாக இருப்பதால் சாலை ஓரத்தில் இருந்த இளம்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று சாலையில் இறக்கி விட்டு, மீண்டும் கோவிலுக்கு வந்து திருடி சென்ற சுவாரசிய சம்பவம் தெரியவந்துள்ளது. எங்கெங்கு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கலக்கி கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் மாமனாரின் வீட்டில் விருத்தாச்சலத்தில் தங்கியுள்ளார்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியில் வாகீசம்பிள்ளை நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் கிருஷ்ணராஜ். இவர் நெய்வேலி டவுன்ஷிப்பில் கார் உதிரி பாகங்கள் விற்பனை கடை சொந்தமாக வைத்துள்ளார்கிருஷ்ணராஜ் மனைவிக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆன நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் மாமனாரின் வீட்டில் விருத்தாச்சலத்தில் தங்கியுள்ளார்நேற்று காலை வேலு அவரது மனைவியும் தனது சொந்த ஊரான ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையில் உள்ள விவசாய விளை நிலங்களை பார்ப்பதற்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

    இதையடுத்து மாலை 4:30 மணிக்கு திரும்பி அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்து போது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 5பவுன் நகை, 14,000பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து வடலூர் போலீ ஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

    தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

    • அண்ணன்-தங்கையை மிரட்டி நகை பறித்த கொள்ளையர்கள் கண்காணிப்பு காமிரா மூலம் சிக்கினர்.
    • விசாரணையில் கைதான 4 பேர் மீதும் மாநகராட்சி பகுதி போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை சீமான் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் பாண்டிராதா (வயது 21). இவர் சம்பவத்தன்று இரவு தனது சகோதரர் நல்லமணிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பக்கத்து தெருவுக்கு சென்றார். பின்னர் அவர் தனியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அவர் சீமான் நகர், அம்மன்கோவில் தெரு சந்திப்பில் வந்தபோது, 4 பேர் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாண்டிராதா அணிந்திருந்த 1 செயினை பறிக்க முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சிய டைந்த அவர், சத்தம் போட்டார். இதனை கேட்டு அவரது சகோதரர் நல்லமணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது மர்ம நபர்கள் பாண்டிராதா அணிந்திருந்த 1 பவுன் செயினை பறித்ததுடன், நல்லமணி வைத்திருந்த செல்போனையும் பறித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி பாண்டிராதா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் துப்பு துலங்கவில்லை. இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் குற்றவாளிகளை கைது செய்யும்படி உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் பாண்டிராதாவிடம் நகை பறித்தது சீமான் நகர் பாரதிபுரம் ராஜபாண்டி (25), நவீன்குமார் (20), முத்துப்பாண்டி (23), விஸ்வா (20) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் பறித்து சென்ற நகை மற்றும் செல்போனை மீட்டனர்.

    விசாரணையில் கைதான 4 பேர் மீதும் மாநகராட்சி பகுதி போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    தஞ்சையில் நகை வியாபாரியிடம் கொள்ளையடித்த மர்மநபர்களை 5 தனிப்படை அமைத்து தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    சென்னை கீழ்ப்பாக்க த்தைச் சேர்ந்தவர் மணி (வயது 55). சென்னையில் உள்ள நகைகள் மொத்த வியாபாரியிடம் பணியாற்றி வரும் இவர், ஒவ்வொரு ஊராகச் சென்று கடைகளில் நகைகள் விற்பனை செய்து வருகிறார். அப்போது இவர் விற்கப்படாத நகைகளை உருக்கி திரும்பப் பெற்றுக் கொள்வதும், விற்கப்பட்ட நகைகளுக்கு பணமாகப் பெறுவதும் வழக்கம்.

    இதுபோல, தஞ்சாவூருக்கு நகைகளை விற்பதற்காக வந்த  நகைகள் கொண்ட பையுடன் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள உணவகத்துக்குச் சென்றார். 

    உணவு பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடு ப்பதற்காக பையை கீழே வைத்தார். பணம் கொடுத்த பிறகு கீழே பார்த்தபோது பைகாணாமல் போனது தெரியவந்தது. 

    இதுகுறித்து மேற்கு போலீஸ் நிலையத்தில் மணி அளித்த புகார் மனுவில் 5 கிலோ புதிய நகைகளும், 1.2 கிலோ உருக்கப்பட்ட நகைகளும் என மொத்தம் 6.2 கிலோ தங்கம், ரூ. 14 லட்சம் ரொக்கமும் கொண்ட பை திருட்டு போனதாகத் தெரிவித்துள்ளார். இவற்றின் மதிப்பு மொத்தம்  ரூ. 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

    இதைத்தொடர்ந்து, போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    இச்சம்பவத்தில் ஈடுபட்ட  குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக இன்ஸ்பெ க்டர்கள் கருணாகரன் (கிழக்கு), ஸ்ரீதர் (தெற்கு), சந்திரா (மேற்குஆகியோர் தலைமையில் 3 தனிப்ப டைகள் அமைக்க ப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள 2 தனிப்படைகளும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே, கடை யிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைத் தனிப்ப டையினர் பார்த்தபோது, வெள்ளை நிற சட்டை அணிந்த 8 அல்லது 9 பேர் மணியின் பையை தூக்கிக் கொண்டு வேகமாக நடந்து செல்வது தெரிய வந்தது. இக்காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது  யாருக்கும் சரிவர அடையாளம் தெரியவில்லை.

    இதையடுத்து கண்கா ணிப்பு கேமராவில் பதிவான காட்சி வீடியோவை தமிழ்நாட்டின் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு குற்றவாளி களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர தனிப்படை போலீசார் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இது தவிர குற்றவாளிகள் வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்று இருந்தால் அவர்களை பிடிப்பதற்காக அந்தந்த மாநில போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 

    இப்படி நாலா புறமும் கொள்ளையர்களை போலீசார் தேடுவதால் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×