search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "publication"

    • நாதம் கீதம் புக் செல்லர்ஸ் முருகன் செயலாளராக தேர்வு.
    • நக்கீரன் பதிப்பகம் நக்கீரன் கோபால் துணைத் தலைவராகவும் (தமிழ்) தேர்வு.

    பபாசி என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் இன்று மாலை மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

    இதில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக கவிதா பப்ளிகேஷன் சேது சொக்கலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    நாதம் கீதம் புக் செல்லர்ஸ் முருகன் செயலாளராகவும், ஏசியன் பப்ளிகேஷன்ஸ் டபுள்யுஜே சுரேஷ் பொருளாளராகவும், நக்கீரன் பதிப்பகம் நக்கீரன் கோபால் துணைத் தலைவராகவும் (தமிழ்), சர்வோதய இலக்கியப் பண்ணை புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), பழனியப்பா பிரதர்ஸ் மு.துரைமாணிக்கம் இணைச் செயலாளராகவும், புலம் லோகநாதன் துணை செயலாளராகவும் (தமிழ்), ஃபார்வேடு மார்க்கெட்டிங் சாதிக் பாட்சா துணை செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

    செயற்குழு உறுப்பினர்களாக (தமிழ் -நான்கு பேர்) ஜலால் (இஸ்லாமிக் சொசைட்டி), செந்தில்நாதன்(பரிசல்), அருணாசலம் (அருண் பதிப்பகம்), கண்ணப்பன் (கண்ணப்பன் பதிப்பகம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல், செயற்குழு உறுப்பினர்களாக (ஆங்கிலம்- நான்கு பேர்) பாலாஜி( பாலாஜி புக் செல்லர்ஸ்), சங்கர் (ஈஸ்வர் புக்ஸ்),

    ராம் குமார் ( ஆப்பிள் புக்ஸ்), அசோக் குமார் (மெட்ராஸ் புக் ஹவுஸ்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர்களாக (தமிழ்- இரண்டு பேர்) ஹரிபிரசாத் (ஆண்டாள் திரிசக்தி), மோகன் ( மயிலின் பதிப்பகம்) மற்றும் நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர் (ஆங்கிலம்-இரண்டு பேர்) சிவகுமார் (சிவா புக்ஸ்), யுவராஜ் (புக் வேர்ல்டு) ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

    • சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.எப். மற்றும் ரைபிள்மேன் ஆகியவற்றில் தேர்வு-2022 அறிவிப்பு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
    • தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் வெளியிடப் பட்டுள்ளது.

    சேலம்:

    மத்திய ஆயுதப்படை சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.எப். மற்றும் ரைபிள்மேன் ஆகியவற்றில் தேர்வு-2022 அறிவிப்பு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் விண்ணப்பித்தனர். தகுதி யான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் வெளியிடப் பட்டுள்ளது. மின்னணு ஹால்டிக்கெட் எனப்படும் இ-அட்மிட் கார்டை விண்ணப்பதாரர்கள்https://www.crpfonline.com என்ற சி.ஆர்.பி.எப் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த இ-அட்மிட்டின் அச் சிடப்பட்ட நகலை கொண்டு தேர்வு மையத்து கொண்டு மாறு வர வேண்டும். ஹால்டிக்கெட் கொண்டு வராத விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார் கள் என மத்திய அரசு பணி யாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) அறிவுறுத்தி உள்ளது.

    • 5361 இடங்களை நிரப்புவதற்கு இணையதள விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • விழுப்புரத்தை சேர்ந்த திவ்யா என்பவர் முதலிடம் பிடித்தார்

    வடவள்ளி,

    கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழ–கத்திற்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும், ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    5361 இடங்களை நிரப்புவதற்கு இணையதள விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இளம் அறிவியல் மாணவர்கள் சேர்க்கைக்கு மொத்தம் 41,434 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அதில் 36612 பேர் தர வரிசைக்கு தகுதி பெற்றனர். அதில் பெண்கள் 21, 384, ஆண் 12,333 பேர் விண்ணப்பித்தனர்.

    அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7½ சதவீத இட ஒதுக்கீட்டில் 10,887 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசாங்க பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் இ.எம்.ஐ எண்கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் சரிபார்கக்ப்ப்டு உள்ளது.

    தமிழ் வழியில் பயில 9997 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள் இட ஒதுக்கீட்டில் 309 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு மொத்தம் 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு இந்த கல்வியாண்டில் 128 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 790 விண்ண ப்பங்கள் பெறப்பட்டு அவர்கள் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தொழில்முறை கல்வி பயின்ற மாணவர்களுக்கு 5 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டு 242 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    இந்த நிலையில் இன்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கீதாலட்சுமி இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

    இதில், முதல் இடத்தை விழுப்புரத்தை சேர்ந்த திவ்யாவும், 2-ம் இடத்தை மதுரையை சேர்ந்த ஸ்ரீராம், 3-ம் இடத்தை தென்காசியை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் பிடித்துள்ளனர்.

    முன்னாள் ராணுவ வீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இந்த மாதம் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது.

    தகுதியானவர்கள் இந்த மாத கடைசி வாரத்தில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். இணைய வழி கலந்தாய்வு மற்றும் பொது இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு ஜூலை முதல் வாரத்தில் இருந்து துவங்க உள்ளது.

    • மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வில் (கியூட்) தேர்ச்சி பெற வேண்டும்.
    • அதன்படி 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான கியூட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமை (என் டி ஏ) சார்பில் நாளை முதல் வரும் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    சேலம்:

    மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வில் (கியூட்) தேர்ச்சி பெற வேண்டும்.

    அதன்படி 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான கியூட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமை (என் டி ஏ) சார்பில் நாளை முதல் வரும் 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.

    முதல் கட்டமாக நாளை முதல் வருகிற 8-ந் தேதி வரை தேர்வு எழுத உள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப் பட்டுள்ளது அவற்றை http://cuet.nta.nic.in/ என்ற இணையத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    • மாவட்ட வருவாய் அலுவலரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெய்பீம் பெற்றுக்கொண்டார்.
    • இறுதி வாக்காளர் பட்டியல் நாளை 4-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் மாவட்டதிட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் வினீத் வெளியிட்டார். இதனை மாவட்ட வருவாய் அலுவலரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெய்பீம் பெற்றுக்கொண்டார்.மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலை திருப்பூர் மாவட்ட ஊராட்சி அலுவலகம்,திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், அனைத்து நகராட்சிகள் அலுவலகம் மற்றும்அனைத்து பேரூராட்சிகள் அலுவலகம் ஆகியவற்றின் விளம்பர பலகையில்விளம்பரப்படுத்தப்படும். இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை 4-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    • கால்நடை பரா மரிப்பு துறையில் அடங்கிய கால்நடை உதவி மருத்து வர்- 731 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் - 33 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டது.
    • மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக ளுக்கான தேர்வு வருகிற 14-ம் தேதியும் கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது.

    ேசலம்:

    தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு கால்நடை பரா மரிப்பு துறையில் அடங்கிய கால்நடை உதவி மருத்து வர்- 731 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் - 33 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டது.

    சேலம், நாமக்கல்

    இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு கால்நடை இள நிலை, முதுநிலை பட்டப்ப டிப்புகள், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களும், உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக்கு இது தொடர்பான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்த வர்களும் விண்ணப்பித்த னர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

    இந்த நிலையில் தேர்வர்க ளுக்கான ஹால்டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் பணிக ளுக்கான தேர்வு 15-ந்தேதி யும், மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக ளுக்கான தேர்வு வருகிற 14-ம் தேதியும் கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்த தேர்வுகள் 2 தாள்கள் கொண்டதாகும். தாள்-1 தேர்வு காலையிலும், தாள் -2 தேர்வு பிற்பகலிலும் நடைபெறுகிறது. இரண்டு தேர்வுகளும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தால் நடத்தப்படு கின்றன. தேர்வர்கள் தங்க ளின் ஒரு முறை பதிவேற்றம் வழியாக நுழைந்து ஹால்டிக் கெட் பதிவிறக்கலாம்.

    • போத்தனூர் ஜங்ஷனுக்கு 5:08 மணிக்கு வரும் ரெயில் 5:10 மணிக்கும், கோவை ஜங்ஷனுக்கு 5:30 மணிக்கு சென்றடைகிறது.
    • திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06078) மதியம் 2 மணிக்கு புறப்படுகிறது.

    உடுமலை:

    பழனி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்டத்தை சமாளிக்க கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.

    கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06077) வருகிற 4, 5, 6 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் வரை இயக்கப்படுகிறது.

    இந்த ெரயில் கோவையில் இருந்து காலை 9:20 மணிக்கு புறப்படுகிறது. போத்தனூருக்கு 9:31க்கு வந்து 9:32 மணிக்கு புறப்படுகிறது. கிணத்துக்கடவுக்கு 9:52க்கு வந்து, 9:53 மணிக்கு புறப்படுகிறது.பொள்ளாச்சிக்கு 10:13 மணிக்கு வந்து 10:15 மணிக்கும், கோமங்கலத்துக்கு 10:46க்கு வந்து 10:47 மணிக்கு புறப்படுகிறது.

    உடுமலைக்கு 11 மணிக்கு வந்து 11:01 மணிக்கும்,மைவாடி ரோடுக்கு 11:09 மணிக்கு வந்து 11:10 மணிக்கும் புறப்படுகிறது. மடத்துக்குளத்துக்கு 11:14 மணிக்கு வந்து, 11:15 மணிக்கு புறப்படுகிறது. அதன்பின் திண்டுக்கல்லுக்கு, 1 மணிக்கு சென்றடைகிறது.திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06078) மதியம் 2 மணிக்கு புறப்படுகிறது. அங்கு இருந்து மடத்துக்குளத்துக்கு 3:18 மணிக்கு வந்து 3:19க்கும், மைவாடி ரோடு சந்திப்புக்கு 3:24 மணிக்கு வந்து 3:25 மணிக்கும்,உடுமலைக்கு 3:33 மணிக்கு வந்து 3:34 மணிக்கும் புறப்படுகிறது.

    கோமங்கலத்துக்கு 3:47 மணிக்கு வந்து 3:48 மணிக்கும்,பொள்ளாச்சி ஜங்ஷனுக்கு 4:18க்கு வந்து 4:20 மணிக்கு புறப்படுகிறது.கிணத்துக்கடவுக்கு 4:43க்கு வந்து 4:44 மணிக்கும், போத்தனூர் ஜங்ஷனுக்கு 5:08 மணிக்கு வரும் ரெயில் 5:10 மணிக்கும், கோவை ஜங்ஷனுக்கு 5:30 மணிக்கு சென்றடைகிறது.இதற்கான நேர அட்டவணையை தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ளது.

    • அனைத்து திருத்தங்களுக்காக 17,511 படிவங்களும் ஏற்கப்பட்டது.
    • கிராம சபை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    அதன்படி, மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் 9,93,844 பேரும், பெண் வாக்காளா்கள் 10,49,103 பேரும், இதர பாலினத்தவா்கள் 169 பேரும் என மொத்தம் 20,43,116 வாக்காளா்கள் உள்ளனா்.

    இதில், 2022 நவம்பா் 9ஆம் தேதி முதல் டிசம்பா் 8ஆம் தேதி வரை புதிதாக சோ்ப்பதற்கு 33,351 படிவங்களும், இறந்த, இடம் பெயா்ந்தவா்களை நீக்குவதற்கு 23,389 படிவங்களும், அனைத்து திருத்தங்களுக்காக 17,511 படிவங்களும் ஏற்கப்பட்டது.

    இந்த வாக்காளா் பட்டியல் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வை க்காக வைக்கப்படவுள்ளது. மேலும், ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும்.

    நிகழாண்டு முழுவதும் நடைபெறவுள்ள தொடா் திருத்தப் பணியில் 18 வயது நிறைவடைந்தவா்கள் அடுத்துவரும் நான்கு காலாண்டுகளின் மையத் தகுதிநாளில் அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய காலாண்டின் தகுதி நாளில் முன்கூட்டியே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் 6ஐ வட்டாட்சியா் அலுவலகத்தில் பெற்று பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வயது, இருப்பிடத்துக்கான ஆவண ஆதாரங்களை இணைத்து நிறைவு செய்யப்பட்ட படிவத்தை தொடா்புடைய வட்ட அலுவலகத் தோ்தல் பிரிவில் வழங்கலாம். (அல்லது) NVSP Portal என்ற இணையதளம் மற்றும் voters help line என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

    சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

    திருவிடைமருதூா்

    ஆண் வாக்காளர்கள்- 1,28,359 -, பெண் வாக்காளர்கள் 1,30,839 , மூன்றாம் பாலினத்தவர் 16. மொத்தம் 2,59,214.

    கும்பகோணம்

    ஆண் வாக்காளர்கள் 1,32,152, பெண் வாக்காளர்கள்-1,39,285, மூன்றாம் பாலினத்தவர் - 17, மொத்தம் - 2,71,454.

    பாபநாசம்

    ஆண் வாக்காளர்கள்- 1,27,552, பெண் வாக்காளர்கள் - 1,33,607 , மூன்றாம் பாலினத்தவர்- 19, மொத்தம் - 2,61,178.

    திருவையாறு

    ஆண் வாக்காளர்கள் - 1,29,872, பெண் வாக்காளர்கள் - 1,36,620 , மூன்றாம் பாலினத்தவர்- 20, மொத்தம் - 2,66,512.

    தஞ்சாவூா்

    ஆண் வாக்காளர்கள்- 1,33,991 , பெண் வாக்காளர்கள்- 1,46,184, மூன்றாம் பாலினத்தவர் - 59, மொத்தம் - 2,80,234.

    ஒரத்தநாடு

    ஆண் வாக்காளர்கள் - 1,19,004, பெண் வாக்காளர்கள் - 1,26,065, மூன்றாம் பாலினத்தவர் - 5, மொத்தம் - 2,45,074.

    பட்டுக்கோட்டை

    ஆண் வாக்காளர்கள் - 1,16,604, பெண் வாக்காளர்கள் - 1,26,521 , மூன்றாம் பாலினத்தவர்- 24, மொத்தம் - 2,43,149.

    பேராவூரணி

    ஆண் வாக்காளர்கள் - 1,06,310, பெண் வாக்காளர்கள் - 1,09,103 , மூன்றாம் பாலினத்தவர்- 9, மொத்தம் - 2,16,301.

    இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, எல்.ஜி.அண்ணா, புண்ணியமூர்த்தி (தி.மு.க) , சரவணன் ( அ.தி.மு.க ), ஜெய்சதீஷ், விநாயகம் , முரளிதரன் ( பா.ஜ.க ), மோகன்ராஜ், பழனியப்பன் ( காங்கிரஸ் ), அடைக்கலம் , லக்கி செந்தில் ( தே.மு.தி.க) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சி.எஸ்.ஐ.ஆர் (யு.ஜி.சி) நெட் தேர்வு -ஜூன் 2022 அறிவிப்பு 11.08.2022 -ல் இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
    • நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு வருகிற 16 -ந்தேதி காலை 9 முதல் மதியம் 12 வரை நடக்கிறது.

    சேலம்:

    சி.எஸ்.ஐ.ஆர் (யு.ஜி.சி) நெட் தேர்வு -ஜூன் 2022 அறிவிப்பு 11.08.2022 -ல் இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும்

    விரிவுரையாளர் (LS), துணைப் பேராசிரியர் உள்ளிட்ட தகுதி பெற கணினி அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    இதையடுத்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து முதுநிலை அறிவியல் பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு வருகிற 16 -ந்தேதி காலை 9 முதல் மதியம் 12 வரை நடக்கிறது. 16-ந்தேதி பூமி, வளிமண்டலம், பெருங்கடல்

    மற்றும் கிரக அறிவியல்

    இயற்பியல் அறிவியல் கணித அறிவியல்

    17-ந்தேதி உயிர் அறிவியல், வாழ்க்கை அறிவியல்

    18-ந்தேதி ரசாயன அறிவியல் நடக்கிறது.

    பரீட்சை சம்பந்தமான அட்மிட் கார்டுகள்

    10 -ம் தேதியில் இருந்து என்.டி.ஏ. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வரலாற்று நூல் வெளியீட்டு விழா நடந்தது.
    • திருவிளக்கு பூஜை குழுவினர், கோவில் மண்டகப்படி உபயோகிப்போர் உள்பட கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா கோவில் அன்னதான மண்டபத்தில் நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    கவுன்சிலர் சத்திய பிரகாஷ், சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் இளமதி குத்துவிளக்கு ஏற்றினார். விவேகானந்தா கல்லூரி முதல்வர் வெங்கடேசன் நூலை வெளியிட்டார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் சத்தியமூர்த்தி, தொல்லியல்துறை காப்பாட்சியர் சக்திவேல், முன்னாள் சேர்மன் முருகேசன் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.

    முன்னாள் கல்லூரி முதல்வர் சின்னன், வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை நிர்வாகி ராஜ்குமார், வட்டார விஸ்வகர்ம ஐந்தொழிலாளர் உறவின்முறை சங்க நிர்வாகி கண்ணன், ஆதி பெருமாள் ஆகியோர் பேசினர். நூல் ஆசிரியர் ஜனகராஜ் நன்றி கூறினார்.மணிகண்டன், இருளப்பன் என்ற ராஜா, முருகன், நடன ஆசிரியை பாக்கியலட்சுமி, கோவில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள், கவுன்சிலர்கள் குருசாமி, முத்துச்செல்வி, சதீஷ்குமார், செந்தில்வேல் மற்றும் திருவிளக்கு பூஜை குழுவினர், கோவில் மண்டகப்படி உபயோகிப்போர் உள்பட கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம், நாமக்கல் மாணவர்கள் எழுதிய ஜே.இ.இ. தேர்வுக்கான பி.இ., பி.டெக் தாள்-1 விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது.
    • இந்த நுழைவுத்தேர்வு கடந்த ‌ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது.

    சேலம்:

    இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ேஜ.இ.இ. நுழைவுத் தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பகுதி-1 ேஜ.இ.இ. நுழைவுத் தேர்வு (முதன்மை)-2022 அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக், பி.பிளான், பி.ஆர்க். உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான இந்த நுழைவுத்தேர்வு கடந்த ‌ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது.

    சேலம் மாவட்டத்தில் காகாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் எழுதினர். தாள் -1 தேர்வு காலை, மதியம் என 2 ஷிப்டுகளாக நடைபெற்றது.

    தாள்- 1 விடைகள் வெளியீடு

    இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை முதற்கட்ட ேஜ.இ.இ. முதன்ைம நுழைவு தேர்வுக்கான பி.இ., பி.டெக் பாடப்பிரிவு தாள்-1 க்கான இறுதி விடை குறிப்புகள் வெளியிட்டுள்ளது.

    அதில், ஷிப்ட் -1, ஷிப்ட்-2 கேள்வித்தாளுக்கான விடைகள் கேள்வி ஐ.டி. மற்றும் சரியான தேர்வு ஐ.டி. யுடன் வழங்கி உள்ளது.

    பி.இ., பி.டெக் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் இறுதி விடைக்குறிப்புகளை பார்த்து மதிப்பெண்கள் ஒப்பீடு செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் பி.ஆர்க். பி.பிளானிங் தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்படும் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

    ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் தேர்வு

    இந்தியாவின் ஒட்டுமொத்த பிளஸ்-2 மாணவர்களில் இருந்து சிறப்பானவர்களை தேர்ந்தெடுக்க ஜே.இ.இ. மெயின் தேர்வு உதவுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் மிக சிறப்பானவர்களை தேர்ந்தெடுத்து ஐ.ஐ.டி.வளாகங்களுக்குள் அனுப்ப ஜே.இ.இ.அட்வான்ஸ்ட் வழிகாட்டும்.

    மெட்ராஸ் ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. போன்று இந்தியா முழுக்க இருக்கும் 23 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 19 மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல தனியார் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில, இந்த தேர்வு வழிவகுக்கும்.

    • சேலம், நாமக்கல் மாணவர்கள் எழுதிய மத்திய அரசின் ஓட்டல் மேலாண்மை நுழைவு தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியிட்டது.
    • இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 4.2.2022 தொடங்கி, 3.5.2022 அன்று முடிவடைந்தது.

    சேலம்:

    இந்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பி.எஸ்.சி. (உபசரிப்பு மற்றும் ஓட்டல் மேலாண்மை) படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுைழவுத் தேர்வு -2022 அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 4-ந்தேதி மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

    இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 4.2.2022 தொடங்கி, 3.5.2022 அன்று முடிவடைந்தது. இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ்-2 மாணவ- மாணவிகள் பலர் விண்ணப்பித்தனர்.

    கடந்த 18-ந்தேதி தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுைழவு தேர்வு கணினி வழியாக நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, ேகாவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதனால் சேலம், நாமக்கல் மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கோவையில் உள்ள மையத்தில் தேர்வு எழுதினர். தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை என 3 மணி நேரம் நடைபெற்றது.

    தற்காலிக விடைகள் வெளியீடு

    இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் கேள்வித்தாளில் பதிவு செய்த பதில்களுடன் தற்காலிக விடைகள் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. பதிவு எண், கடவு சொல் அல்லது பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தாங்கள் எழுதியுள்ள விடைகள், கேள்விகளுக்கு என்.டி.ஏ . வழங்கியுள்ள விடைகள் ஆகியவற்றை பார்க்கலாம். அதில் விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதி உள்ள விடைகள் சரியாக உள்ளதா? எனவும் சரிபார்த்து கொள்ளலாம்.

    என்.டி.ஏ. வழங்கிய உள்ள விடைகள் தவறாக இருப்பதாக கருதினால் அதற்கான ஆதாரங்களுடன் ஒரு கேள்விக்கு ரூ.200 செலுத்தி இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும். அதை பாட வல்லுநர் குழுவால் சரிபார்க்கப்படும்.

    சரியானது என கண்டறியப்பட்டால், விடை குறிப்பு அதற்கேற்ப திருத்தப்படும்.

    திருத்தப்பட்ட இறுதி விடைக்குறிப்பின் அடிப்படையில், முடிவு தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். நிபுணர்களின் முடிவே இறுதியானது. இந்த தகவலை மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×