search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public suffering"

    • பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    வேளச்சேரி:

    சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

    பெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் தற்போது அதிக அளவில் குடியிருப்புகள் பெருகி மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. இதே போல் வாகன போக்குவரத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்த நிலையில் பெரும் பாக்கம் ஊராட்சியின் பின் பகுதியில் ஜல்லடியான் பேட்டை பிரதான சாலையில் உள்ள காலி இடம் குப்பைகளை சேகரிக்கும் இடமாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு சேகரிக்கப் படும் குப்பைகள் பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் ஓரகடம் அருகே உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள நிலையில் குப்பை சேகரிக்கும் இடம் தற்போது குப்பை கிடங்காக மாறி விட்டது. இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் அங்கேயே குவிந்து கிடப்பதால் தெருநாய்கள் மற்றும் மாடுகள் அந்த பகுதியில் அதிக அளவில் சுற்றி வருகின்றன.

    நாய்கள் கழிவுகளை இழுத்து சாலையோரம் போட்டு செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். கடும் துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இங்கு கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி கிடங்கிற்கு மாற்ற ஊராட்சி நிர்வாகம் கடும் சிரமம் அடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, முறையாக பராமரிக்கப்படாத குப்பை கொட்டும் நிலையத்துக்குள் தெருநாய்கள், கால்நடைகள் அதிக அளவில் சுற்றி வருவதால் பெரும்பாக்கத்தில் இருந்து பள்ளிக்கரணை செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான நாட்களில், சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளில் பாதி மட்டுமே குப்பை கிடங்கிற்கு மாற்றப்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள குப்பை சேகரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர்.

    • உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.
    • சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த மாதங்களில் நீர்ப்பனிப்பொழிவு அதிகரித்து, பின்னர் உறைபனியின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டும்.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    அதன்படி தற்போது ஊட்டியில் உறைபனி மற்றும் நீர்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    இன்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி தீர்த்தது. இதனால் தாவரவியல் பூங்காவில் பிரதானமாக அமைந்து உள்ள புல்தரைகள் மற்றும் ஊட்டி குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் இருக்கும் புல்தரைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தற்போது வெள்ளை கம்பளி போர்த்தியது போல வெண்மையாக காட்சி அளிக்கிறது.

    மேலும் சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டியில் தற்போது வழக்கத்தை விட கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அங்கு இன்று காலை குறைந்தபட்ச அளவாக 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனியுடன் தற்போது கடுங்குளிரும் நிலவி வருவதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளனர். இதனால் அவர்கள் வீட்டின் முன்புறம் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    பொங்கல் தொடர்விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள், அதிகாலையில் நிலவும் கடுங்குளிரால், வெளியில் சென்று பார்க்க முடியாமல் விடுதிகளுக்குள் முடங்கி உள்ளனர். நீலகிரியில் உறைபனி கொட்டி தீர்த்து வருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து உள்ளது.

    • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
    • ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி தொடக்கம் வரை வெளுத்து வாங்குவது வழக்கம். அதன்படி அங்கு தற்போது கனமழை பெய்து வருகிறது.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன.

    இதுதவிர மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மேக கூட்டங்கள் தரைக்கு மிகவும் அருகே தவழ்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் பகல் நேரங்களில் கூட மேகமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். இதனால் குன்னூர் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    குன்னூர் பகுதியில் நேற்று முதல் மழைச்சாரலுடன் மேகமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.

    இதுதொடர்பாக குன்னூர் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    குன்னூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அடர்பனிமூட்டம் ஏற்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் வரலாறு காணாத அளவில் அதிகப்படியாக பனிமூட்டத்தை பார்க்க முடிகிறது. மேலும் அங்கு காலநிலை மாற்றமும் ஏற்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அங்கு ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. எனவே நாங்கள் அச்சத்துடன் வாகனங்களில் பயணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குன்னூரில் இன்று காலை 10 மணியை கடந்த பின்னரும் அடர் பனி மூட்டம் காணப்பட்து. இதனால் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. பொதுமக்கள் குளிரை தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். குன்னூருக்கு வந்த சுற்றுலாபயணிகள் வெளியே செல்ல முடியாமல் ஓட்டல்களிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.

    • தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் தீவுகள் போல மாறியுள்ளன.

    சென்னையில் மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்தளத் தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    இதனால் நேற்று இரவு அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய தவித்தனர். வீடுகளுக்குள் நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.

    இதே போன்று தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதி களிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

    ஆவடி மின்வாரிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு வசித்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500-க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கீழ்தளத்தில் வசிப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் மழை தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அந்த பகுதியில் தேங்கிய மழைநீரை குழாய்கள் மூலமாக வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்று மழை பாதிப்பு வரும் காலங்களில் ஏற்படாத வகையில் அதிகா ரிகள் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மழை வெள்ளத்தில் நாய், பூனை போன்ற விலங்குகளும் செத்து கிடப்பதால் துர்நாற்றம் வீசு கிறது. அந்த பகுதியில் மின் கம்பிகளும் பொது மக்களை அச்சுறுத்தம் வகையில் இருப்பதாகவும் அதையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அம்பத்தூர் ஆவின் பகுதியில் உள்ள பட்டரவாக்கம் காந்திநகர், ஞானமூர்த்தி நகர், மேனாம்பேடு மின் வாரிய காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் வெள்ளம் போல தேங்கியது.

    இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு சென்றவர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது.

    செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நேற்று புழல் பகுதியில் மட்டும் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.

    இதனால் நேற்று வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இன்று காலை 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு கடலை சென்று அடைகிறது.

    இதனால் தண்ணீர் செல்லும் கால்வாயை ஒட்டியுள்ள சாமியார் மடம், வட பெரும் பாக்கம், வடகரை ஆகிய பகுதிகளில் மழைநீர் குடியி ருப்புகளில் புகுந்து பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் விளாங்காடுபாக்கத்தில் உள்ள மல்லிகாநகர் நியூ ஸ்டார் சிட்டி விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் மற்றும் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் உள்ள சன் சிட்டி, விவேக் நகர் ஆகிய நகரங்களில் வெள்ள நீர்புகுந்து பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர். எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புழல் விளாங்காடுபாக்கம் ஊரை ஒட்டியுள்ள மல்லிகா கார்டன், தாய் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதன் அருகில் உள்ள நியூஸ்டார் சிட்டி பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

    குறிப்பாக நியூஸ்டார் சிட்டி குடியிருப்பு பகுதியை ஒட்டி ஓடும் கால்வாயில் இருந்து வெளியேறும் மழை வெள்ளம் அந்த பகுதி யில் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. அந்த பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகளும் அப்பகுதி மக்களை அச்சு றுத்திக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மழைக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் இந்த பாதிப்பில் இருந்து விடிவு காலம் பிறக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    அடுத்த ஆண்டு மழை காலத்திற்குள்ளாவது தங்களது பகுதியில் நீடிக்கும் வெள்ள பாதிப்புகளை மாதவரம் எம்.எல்.ஏ. சுதர் சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகி யோர் தீர்த்து வைப்பார் களா? என்றும் அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

    விளாங்காடுபாக்கம் ஊருக்குள்ளும் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால் அங்கு வசிக்கும் மக்களும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர்.

    இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மழைக்காலங்களில் நீடிக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பு களை அதிகாரிகள் சரி செய்துதர வேண்டும் என்பதே அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 120 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.35 அடியாகவும் உள்ளது.
    • வியாபாரிகளும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.

    உடன்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று மாலை வரையிலும் கனமழை பெய்வதும். பின்பு மழை தணிவதுமாக இருந்தது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 37 மில்லிமீட்டரும், மற்ற 2 பகுதிகளிலும் தலா 32 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, களக்காடு, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. அதிக பட்சமாக சேரன்மகாதேவியில் 11.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில்1 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் 108 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 120 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.35 அடியாகவும் உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ஆய்குடி, தென்காசி, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. கடனா மற்றும் ராமநதி அணை பகுதிகளிலும் மிதமான மழை பெய்ததால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குலசேரகன்பட்டினத்தில் பலத்த மழை பெய்தது. அங்கு இன்று காலை நிலவரப்படி 60 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. எட்டயபுரம், சூரன்குடி, வைப்பார், விளாத்திகுளம், கீழ அரசடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    உடன்குடி பகுதியில் நேற்று திடீரென பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. மணப்பாடு, சிறுநாடார் குடியிருப்பு, மெய்யூர், தேரியூர், மாதவன்குறிச்சி, பிச்சிவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. கனமழையால் வாரந்தோறும் திங்கட்கிழமை செயல்படும் உடன்குடி வாரச்சந்தைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வியாபாரிகளும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.

    • கூடலூரில் இருந்து 4 கி.மீ. தூரம் உள்ள ஏக லூத்துவரை யிலான சாலைகள் மழைக்கால ங்களில் அடிக்கடி காட்டா ற்று வெள்ளங்களினால் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது.
    • இருசக்கர வாகனங்களில் விளை நிலங்களுக்குச் சென்று வரும் விவசாயிகள் கூர்மையான ஜல்லிக் கற்க ளால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி இடையிலேயே நின்று விடுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரப் பகுதிகளான கல் உடை ச்சான் பாறை, ஏகலூத்து , குறுக்கு வழி சாலை, புதுக்குளம் ஆகிய பகுதிக ளில் உள்ள மானாவாரி காடுகளில் விவசாயிகள் நிலக்கடலை, எள், தட்டைப் பயறு, மொச்சை, அவரை உள்ளிட்ட பயிர்களையும், தோட்ட விவசாயிகள் வாழை,தென்னை, திராட்சை, முட்டைக்கோஸ், வெங்காயம் உள்ளிட்ட பணப் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்ற னர் . மேலும் மா, புளி, இலவம் மர தோப்பு களும் அதிக அளவில் உள்ளன.

    கூடலூரில் இருந்து 4 கி.மீ. தூரம் உள்ள ஏக லூத்துவரை யிலான சாலைகள் மழைக்கால ங்களில் அடிக்கடி காட்டா ற்று வெள்ளங்களினால் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தி ருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

    ஆனால் கடந்த 3 மாதங்களாக இந்தச் சாலையில் மேற்கொண்ட பணிகள் எதுவும் செய்ய ப்படாமல் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் விளை நிலங்களுக்குச் சென்று வரும் விவசாயிகள் கூர்மையான ஜல்லிக் கற்க ளால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி இடையிலேயே நின்று விடுகிறது.

    இதனால் விளைப் பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது,வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, நடந்து செல்வோரை துரத்துவது என அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
    • மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது,வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, நடந்து செல்வோரை துரத்துவது என அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    இந்த அட்டகாசத்தால் நாய் கடிக்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரிக்கு வருப வர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது வெளியே பெரும்பாலானவர்களின் புலம்பலாக உள்ளது.

    ஆங்காங்கே சுற்றித்திரியும் நாய்கள் தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் கிடக்கும் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்டு வளர்கின்றன.இது தவிர சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தின்று திரிகின்றன.இதில் சில வெறி நாய்களாக மாறும் போது சாலைகளில் செல்வோர்களை எல்லாம் கடிக்க தொடங்கி விடுகிறது.

    இதுஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது. திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் ரெயில்வே நிலையங்களில் பஸ் மற்றும் ரெயில் ஏறுவதற்காக வேகமாக வரும் பயணிகளை நாய்கள் விரட்டி கடிப்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கின்றனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் ரயில்வே நிலையம் ஒய்.எம்.ஆர். பட்டி, ரவுண்ட் ரோடு, ரெயில்வே காலனி, அனுமந்தநகர், மரியாநாதபுரம், சுப்புராமன் பட்டறை, தென் போஸ்கோ நகர் குள்ளனம்பட்டி, வேடப்பட்டி, நாகல்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

    பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் நாய்கள் வாகன ஓட்டிகளில் செல்வோரை விடாமல் துரத்துகிறது. இப்படி நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் அடுத்த அடுக்கம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட அ.கட்டுபடி கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. பராமரிப்பின்றி பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது.

    இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கிராமத்திற்கு வரவேண்டிய பஸ்சும் சரிவாக வருவதில்லை.

    இதனால் பள்ளி மாணவர்கள், நோயாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ்கள் முலம் மற்ற இடத்திற்கு செல்கின்றனர். தற்போது தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டுள்ளது.

    இதில் அ.கட்டுப்படி கிரா மத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய், ஏரிக்கு செல்ல வழி இல்லாமல் பாதியில் நிற்கிறது. மேலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    கால்வாய் முடியும் இடத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் சாலையில் கழிவு நீர் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடியே கடந்து செல்கின்றனர்.

    தற்போது கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் கழிவுநீருடன் கலந்த மழை நீர் ஆதிகளவில் சாலையில் தேங்கி நிற்கிறது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வயதான முதியோர் மற்றும் மாணவர்கள் கழிவு நீர் தேங்கிய இடத்தில் விழுந்து காயங்களுடன் செல்வது தொடர்கதையாக உள்ளது.

    எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் முழுமையாக சீரமைப்பதோடு, கழிவுநீர் தேங்காமல் கடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பாதாள சாக்கடைகள் அடிக்கடி நிரம்பி சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
    • சாலைகளில் தேங்காதவாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக காளவாசல் உள்ளது. மதுரையில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் காளவாசல் சந்திப்பை கடந்தே தேனி மெயின் ரோடு வழியாக செல்ல வேண்டும். அந்த பகுதி முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் நிரம்பி இருக்கின்றன.

    மேலும் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம் மற்றும் கேரளா செல்லும் புறநகர் பஸ் களும் இங்கு நிறுத்தியே பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நெரிசலுடன் காணப்படும். இந்த நிலையில் காளவாசல் சந்திப்பு அருகில் தேனி மெயின் ரோடு பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகள் அடிக்கடி நிரம்பி கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் அவதியடைகின்றனர்.

    அவ்வப்போது பாதாள சாக்கடைகள் அடைப்பு நீக்கி சரி செய்யப்பட்டாலும் மீண்டும் நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. மதுரை மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் இந்த சாலை வழியாகத்தான் அடிக்கடி சென்று வருகின்றனர். இருப்பினும் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பஸ் நிறுத்ததிற்கு நடந்து செல்ல பயணிகள் சிரமப்படு கின்றனர்.

    மேலும் சாலை யோரத்தில் வாகனங்களை நிறுத்துபவர்களும், பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களும் மூக்கை பிடித்தப்படி செல்லும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து அந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளின் அடைப்பை முழுமையாக நீக்கி கழிவுநீர் சீராக செல்லவும், சாலைகளில் தேங்காதவாறும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • காவிரி சாலையில் ரோ ட்டில் நடுவில் தொடர்ந்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
    • இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு காவிரி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.

    இந்த சாலை வழியாக தான் ஈரோட்டில் இருந்து சேலம் மற்றும் சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன.

    அதேப்போல் சேலம், சென்னையில் இருந்து இந்த வழியாக தான் ஈரோடுக்கு பஸ்கள் வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த பகுதியில் சாலை இருபுறமும் நூற்றுக்க ணக்கான நகை, ஜவுளி க்கடைகள், வணிக நிறுவன ங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதேபோல் இந்த பகுதியில் 3 பள்ளிகள் உள்ளன. இதனால் காவிரி சாலை பகுதி எப்போதும் மக்கள் நிறைந்து பரபர ப்பாக காட்சி அளிக்கும்.

    இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகள் நடந்து சேதமடைந்த ரோடுகள் சரி செய்யப்பட்டு புதிதாக தார் சாலை அமை க்கப்பட்டுள்ளது.

    இந்நிலை யில் சாலை நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்புகள் வைக்கப்ப ட்டன. அதாவது காவிரி சாலை கிருஷ்ணா தியேட்டர் முதல் வாய்க்கால் பாலம் வரை சாலையின் நடுவே தடுப்பு கள் அமைக்க ப்பட்டுள்ளன.

    இதில் காந்தி சிலை அருகே தடுப்புகள் இடைவெ ளி இன்றி உள்ளது. இந்த பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இதேப்போல் அல் அமீன் ஸ்கூல் மற்றும் அதன் எதிர்ப்புறம் உள்ள அரசு பள்ளி உள்ளது.

    இந்த பகுதியிலும் தடுப்புகளில் இடைவேளை விடப்பட வில்லை. அங்குள்ள பெ ட்ரோல் பங்க் பகுதிகளிலும் தடுப்புகளில் இடைவெளி வைக்கவில்லை.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த பகுதியை கடக்க நீண்ட தூரம் சுற்றி வர வேண்டி உள்ளதாக கூறியுள்ளனர்.

    இது குறித்து 40-வது வார்டு கவுன்சிலர் வக்கீல் ரமேஷ் குமார் கூறும்போது,

    ஈரோடு மாநகராட்சியின் முக்கிய போக்குவரத்து பகுதியாக காவிரி சாலை உள்ளது. இந்த பகுதியில் 3 பள்ளிகள், நூற்றுக்கணக்கான ஜவுளி, நகை கடை கள், தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காவிரி சாலையில் ரோ ட்டில் நடுவில் தொடர்ந்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

    காந்தி சிலை அருகே, அல் அமீன் ஸ்கூல், அரசு பள்ளி மற்றும் பெட்ரோல் பங்க் பகுதிகளில் மட்டும் தடுப்புகளில் இடைவெளி விட வேண்டும் என கோரி க்கை வைக்கின்றோம்.

    ஏனென்றால் இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர இது பயனு ள்ளதாக இருக்கும். இல்லையெ ன்றால் நீண்ட தூரம் அவர்கள் சுற்ற வேண்டியிருக்கும்.

    பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த பகுதிகளில் தடுப்புகளில் இடைவெளி விட வேண்டும். இதேபோல் இங்கு அரசு பள்ளி மற்றும் எதிரில் அல் அமீன் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ ர்கள் பெற்றோர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் போக்குவரத்து போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.

    • செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • சிறுநீரக நோயால் பலர் சிகிச்சை பெறுவதாக பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திலுள்ள 44 ஊராட்சிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நரிக்குடி, என்.முக்குளம், புல்வாய்க் காரை, மானூர், வீரசோழன், கொட்டகாட்சியேந்தல், மறையூர் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக் கள் 5 ரூபாய் நாணயம் செலுத்தி குடிநீர் பெரும் வகையில் 10-க்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு குடிநீர் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டன.

    இதில் கொட்டகாட்சி யேந்தல் மற்றும் மறையூர் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்காக நிர்வாக அனுமதி இருந்தும் தற்போது வரை அதனை முழுமையாக செயல்படுத்துவதில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மந்தநிலை காரணமாக திட்டமானது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்க ளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

    மேலும் வீரசோழன் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டங்குளம், சாலை இலுப்பைகுளம் ஊராட் சிக்கு உட்பட்ட சொட்டமுறி என இன்னும் இது போன்ற பல்வேறு கிராமங்களில் குடிநீரில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குழாயில் வரும் குடிநீரை குடிப்பதற்கு பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர்.

    மேலும் குடிக்க குடிநீரின்றி வேறு வழியில்லாமல் பல வருடமாக அதனை குடித்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கல்லடைப்பு ஏற்பட்டு சிறுநீரக கோளாறுகளால் கடும் பாதிப்படைந்து வருகி ன்றனர்.

    இந்த நிலையில் நரிக்குடி ஒன்றியத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அதன் திட்டங்கள் முடிக்கப்பட்ட நிலையில் இன்னும் மின் இணைப்பே கொடுக் கப்படாமல் உள்ளது.

    எனவே பெரும்பாலான குடிநீர் நிலையங்கள் இழுத்து மூடப்பட்டு செயல்பாடின்றி கிடப்பதால் பல லட்சம் ரூபாய் மதிப் புள்ள குடிநீர் நிலையங்க ளின் உபகரணங்கள் வீணாகி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு கடும் நிதியிழப்பு ஏற்பட்டு வருவதுடன் பொதுமக்களும் சுகாதாரமான குடிநீருக்காக பல வருடங்களாக ஏங்கி தவித்து வருவதாக அப்பகுதி களிலுள்ள சமூக ஆர்வலர் கள் கடும் மன வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    மேலும் பல கிராமங்களில் குழாய்களில் வரும் குடிநீரை குடித்து வருவதால் பொது மக்களுக்கு கல்லடைப்பு ஏற்பட்டு அதனால் சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டு பெரும்பாலானோர் மருத்து வமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருவதா கவும் தெரிய வருகிறது. சில பகுதிகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.

    ஆகவே மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் நலன் கருதி குடிநீரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கல்லடைப்பு மற்றும் சிறுநீ ரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வரும் கிராமங்களை கண்டறிந்து ஆய்வு செய்து உடனடியாக அங்கு 5 ரூபாய் நாணய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து தருவதோடு, அதன் செயல் பாடுகளை அதிகாரிகள் மூலமாக அவ்வப்போது ஆய்வுகள் செய்து பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    பல்லடம்:

    பல்லடத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல்லடம் பகுதியில் உள்ள,அண்ணா நகர், மகாலட்சுமி புரம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். காந்தி ரோடு பகுதியில் உள்ள மகாலட்சுமிபுரம் குடியிருப்பில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

    மழை காலம் வரும்போது இந்தப் பிரச்சினைகள் எழுகின்றது. எனவே முறையாக கழிவுநீர் கால்வாய் வசதி செய்து மழை நீர் தேங்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×