search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public protest"

    • வள்ளலார் சர்வதேச மையத்தை ஞானசபை பெருவெளியில் அமைக்க கூடாதென்றும், இதனால் பூச நடசத்திர நாளில் நடைபெறும் ஜோதி தரிசனம் பாதிக்கும்.
    • கடந்த சில தினங்களுக்கு முன்பாக சர்வதேச மையம் அமைக்க ஞானசபை வெளியில் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் ஞானசபை பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க கடந்த மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இந்த மையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, வள்ளலாரை பின்தொடரும் சன்மார்க்க சங்கத்தினர், அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    வள்ளலார் சர்வதேச மையத்தை ஞானசபை பெருவெளியில் அமைக்க கூடாதென்றும், இதனால் பூச நடசத்திர நாளில் நடைபெறும் ஜோதி தரிசனம் பாதிக்கும். எனவே, சர்வதேச மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், இவர்களுக்கு ஆதரவாக பா.ம.க.வும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    அடிக்கல் நாட்டு விழாவினை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக சர்வதேச மையம் அமைக்க ஞானசபை வெளியில் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும், சன்மார்க்க சங்கத்தினரும் கடந்த 8-ந் தேதி, குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்த போலீசார், அருகிலிருந்த தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணியின் கண்டனத்தை தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வடலூர் தெய்வத்தமிழ் பேரவை மற்றும் சன்மார்க்க சங்கத்தினர், மற்றும் சன்மார்க்க ஆர்வலர்கள் இணைந்து ஞானசபை பெருவெளியில் சர்வதேச அமைக்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து வடலூர் 4 முனை ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த வடலூர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்திய போலீசார், 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் வடலூர் நகரப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    வடலூர் ஞானசபை வெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
    • வள்ளலார் சர்வதேச கட்டுமானப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளாலாரின் சத்திய ஞான சபையும், தருமச்சாலையும் உள்ளது. இங்கு மாதம்தோறும் பூச நட்சத்திர நாளில் 6 திரை நீக்கி ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது.

    சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி, ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அந்தப் பகுதியைச் சேர்ந்த பார்வதிபுரம் கிராம மக்களும், சன்மார்க்க சங்கத்தினர்கள், பா.ம.க.வினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    நேற்று பார்வதிபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். வள்ளலார் சர்வதேச மையத்தை இங்கு அமைக்கக்கூடாது, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இந்நிலையில் இன்றும் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டும்போது பார்வதிபுரம் மக்கள் பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து வள்ளலார் சர்வதேச கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் போராட்டத்தால் கட்டுமான பணிகள் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.

    • வேறு இடத்தில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது.
    • பொது மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளாலாரின் சத்திய ஞான சபையும், தருமச்சாலையும் உள்ளது. இங்கு மாதம்தோறும் பூச நட்சத்திர நாளில் 6 திரை நீக்கி ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது.

    சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி, ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அந்தப் பகுதியைச் சேர்ந்த பார்வதிபுரம் கிராம மக்களும், சன்மார்க்க சங்கத்தினர்கள், பா.ம.க.வினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் சர்வதேச அமைப்பதை கைவிட்டு, வேறு இடத்தில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது. மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் பார்வதிபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இன்று காலை இறங்கினர். வள்ளலார் சர்வதேச மையத்தை இங்கு அமைக்ககூடாது, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொது மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • போலீசார் தாக்கியதால் தான் முருகன் இருந்ததாக கூறி சம்பவத்திற்கு காரணமான 3 போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.
    • சங்கரன்கோவில் நகரில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 37) வேன் டிரைவர்.

    இவருக்கு மீனா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். முருகன் கடந்த 8-ந் தேதி சிவராத்திரி அன்று அச்சம்பட்டி கிராமத்தில் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் சென்ற வாகனத்தில் வேன் மோதிய சம்பவத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அப்போது அங்கு வந்த போலீசார் போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாக இருந்ததாக கூறி முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    பின்னர் வேனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முருகன் மர்மமான முறையில் இறந்துள்ளார். தொடர்ந்து அவரது உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் போலீசார் தாக்கியதால் தான் முருகன் இருந்ததாக கூறி சம்பவத்திற்கு காரணமான 3 போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். உயிர் இழந்த முருகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 6-வது நாளாக அவரின் உடலை வாங்க மறுத்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் சங்கரன்கோவில் தேரடி திடலில் இன்று ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சங்கரன்கோவில் நகரில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.
    • மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்புரம் பகுதியில் 100 குடும்பங்கள் 4 தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்களின் பல கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் அபகரிப்பு முயற்சி செய்து வருவதாக அப்பகுதி பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில், ஆவுடையார்புரம் பகுதியில் மது போதையில் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மத்திய பாகம் போலீஸ் நிலையத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனர்.

    அப்போது தூத்துக்குடி மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை செயலாளர் வக்கீல் செல்வகுமார் கூறுகையில், இப்பகுதியில் 3 நபர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர்.

    அதை பொதுமக்கள் தட்டிக்கேட்டனர். அதற்கு அவர்களின் வீட்டை அந்த 3 பேரும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளோம் என்றார்.

    இதுகுறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தெருக்களில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது.
    • வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    காக்களூர் ஊராட்சி ம.பொ.சி.நகர், வி.எம்.நகர், விவேகானந்தா ஆகிய பகுதி களில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் காக்களூர் ஏரி நிரம்பி தண்ணீர் புகுந்தது. இன்னும் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே வெள்ளம் பாதித்த காக்களூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ண சாமி, கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டனர். அப்போது பொது மக்கள் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். உடனடியாக அந்த பகுதியில் தண்ணீரை வெளியேற்ற அமைச்சர் மூர்த்தி அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.

    இதேபோல் திருமழிசை பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது. அப்பகுதி மக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. திருமழிசையில் ஆவின் பால் வழக்கத்தை விட ரூ.5 கூடுதலாகவும், குடிநீர் கேன்கள் ரூ.10 கூடுதலாகவும் விற்பனை செய்யப்பட்டது. வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருப்பூரில் இருந்து சோமனூர் பகுதிக்கு தனியார் பஸ் வி.அய்யம்பாளையம் வழியாக சென்று வருகிறது
    • தனியார் பஸ் நிர்வாகத்தினர் எழுத்துபூர்வமாக எழுதிகொடுத்தால் மட்டுமே சிறைபிடிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வி.அய்யம்பாளையம் பகுதியில் திருப்பூரில் இருந்து சோமனூர் பகுதிக்கு தனியார் பஸ் வி.அய்யம்பாளையம் வழியாக சென்று வருகிறது.சமீப காலமாக தனியார் பஸ் தங்கள் பகுதிக்கு வருவதில்லை எனக்கூறி நேற்று மாலை வி.அய்யம்பாளையம் பகுதிக்கு வந்த தனியார் பஸ்சை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.இது பற்றி தகவல் அறிந்து வந்த சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, மங்கலம் போலீசார் தனியார் பஸ்சை சிறை பிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது தனியார் பஸ் நிர்வாகத்தினர் எழுத்துபூர்வமாக எழுதிகொடுத்தால் மட்டுமே சிறைபிடிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தனியார் பஸ் நிர்வாகத்தினர் வி.அய்யம்பாளையம் பகுதிக்கு பஸ் இயக்கப்படும் என பொதுமக்களுக்கு எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்ததைத் தொடர்ந்து வி.அய்யம்பாளையம் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • அதிகாரிகளிடம் வாக்குவாதம்-பரபரப்பு
    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையத்திலிருந்து அருகில் உள்ள நகராட்சி அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் சென்னை மற்றும் பெங்களூர் செல்ல தேசிய நெடுஞ்சாலை பஸ் நிலையம் என அனைத்துக்கும் சென்று வர நியூடவுன் ெரயில்வே கேட் கடந்து செல்வதை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    ெரயில்வே கேட் அருகே இந்த சாலையின் ஓரம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பெரிய மரங்கள் உள்ளது. ெரயில்வே கேட்டை கடந்து செல்ல மேம்பாலமும் சுரங்க பாதையோ இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாததால் பள்ளி கல்லூரி செல்பவர்களும், ெரயில்வே கேட்டில் ெரயில் கடக்கும் நேரத்தில் இந்த பழமையான மரத்தின் கீழ் நிழலுக்காக பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.

    பழமையான இந்த மரத்தின் கிளைகள் ரயில்வே தண்டவாளத்தின் மேல் உள்ள மின்சார கம்பியில் உரசாமல் இருக்க ரயில்வே அதிகாரிகளின் ஏற்பாட்டால் மரக்கிளை களை வெட்டுவதற்கு ஒப்பந்ததாரருக்கு விடப்பட்டுள்ளது.

    ஆனால் மரக்கிளையை வெட்டும் ஒப்பந்ததாரர் அளவுக்கு அதிகமாக மரக்கிளைகளை வெட்டி வருதாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் மரம் வெட்டும் ஒப்பந்ததாரர் மற்றும் ெரயில்வே அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்ப ந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மரங்களை அதிக அளவில் வெட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை
    • நீர்வழிப் பாதையை பொதுப்பணித் துறையுடன் இணைந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

    மேட்டுப்பாளையம்,

    அன்னூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் உள்ளது. இந்தக் குளம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இணைக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டமாக குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், அன்னூர் சுற்றுவட்டரப் பகுதியில் பெய்து வரும் மழையால் குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அன்னூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகள், விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது.

    பல இடங்களில் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். தகவல் அறிந்து வந்த தாசில்தார் காந்திமதி, பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது, பொதுமக்கள் கூறியதாவது:-

    பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குளம் நிரம்பும் நிலையில் உள்ளது. ஒரு நாள் பெய்த மழைக்கே குடியிருப்புப் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. மீண்டும் கனமழை பெய்தால் குளம் நிரம்பி குடியிருப்புகளை மழைநீர் சூழ வாய்ப்புள்ளது.

    எனவே, அன்னூர் குளத்தில் இருந்து குன்னத்தூராம்பாளையம் குளத்துக்கு செல்லும் நீர்வழிப் பாதையை அளவீடு செய்து, நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குன்னத்தூராம் பாளையம் குளத்துக்கு தடையின்றி மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    நீர்வழிப் பாதையை பொதுப்பணித் துறையுடன் இணைந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் காந்திமதி உறுதி அளித்ததையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • குடிநீர் விநியோகம் செய்யும் பைப் லைன் உடைந்துள்ளது
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சி பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து கட்டுமான பணிக்காக லாரிகள் மூலம் கற்கள் மற்றும் சல்லிகள் எடுத்துச் செல்லப்படுகிறது.

    இந்நிலையில் அதிகமான லாரிகள் அந்தப் பகுதி வழியாக செல்வதால் கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் பைப் லைன் உடைந்துள்ளது.

    இதனையடுத்துஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • அமைப்பினர்கள் ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
    • முடிதிருத்தும் குத்தகை ஏலம் தள்ளி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும். இதையொட்டி இப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் பாரம்பரியமாக பொங்கல் திருவிழாவில் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர் சார்பில் முடி திருத்தும் குத்தகை ஏலத்தை நேற்று நடத்துவது என்று முடிவு செய்து அறிவித்திருந்தார்கள்.

    உள்ளூரில் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்கள் பாரம்பரியமாக நாங்கள் செய்து வரும் முடி திருத்தும் வேலையை நாங்கள் தான் செய்வோம் என்று இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலருக்கு எதிர்ப்பு தெரிவித்து டெண்டர் ஏலத்தை நடத்தக் கூடாது என்று முடி திருத்தும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, பேனர் வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்த சமய அற நிலையத்துறை அதிகாரிகள் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்தார்கள். ஏலம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முடி திருத்தும் தொழிலாளர்கள், ஊர் பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் இன்து முன்னணி அமைப்பினர்கள் ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    பாரம்பரியமாக முடி திருத்தும் தொழிலாளிகளுக்கே விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி முடிதிருத்தும் குத்தகை ஏலம் தள்ளி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    முன்னெச்சரிக்கையாக கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி தலைமையில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 15-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்த பின் ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

      சேலம்:

      சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூலக்கடை பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் ஏதும் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

      இதையடுத்து மத்திய நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நல்லுகாரர் வீதி முதல் மூலக்கடை வரை கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் இப்பணிகள் முழுமை பெறுவதற்கு முன்னதாகவே பணிகள் நிறைவு பெற்றதாக கூறி கல்வெட்டு ஒன்றை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது, கழிவுநீர் முறையாக செல்ல வழி இல்லாததால் கழிவு நீர் முழுவதும் சாலையில் தேங்குவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சல், மலேரியா, டெங்கு, தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

      இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுரோட்டில் இருந்து முத்துநாயக்கன்பட்டி செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

      ×