search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pregnancy Foods"

    • நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
    • துரித உணவுகள், எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    கர்ப்பகாலத்தின் ஹார்மோன்கள், இன்சுலின் செயல்பாட்டை எதிர்த்து, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதை, கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கிறார்கள். இது பொதுவாக கர்ப்பத்தின் 24 முதல் 28-வது வாரங்களுக்கு இடையில் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    *கார்போஹைட்ரேட் மிக அதிகமாக உள்ள உணவுகள், மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து, கோதுமை, தினை, சோளம் போன்ற தானிய வகைகளை உட்கொள்ள வேண்டும்.

    *நன்கு வேக வைத்த பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    *பால், மீன், முட்டையின் வெள்ளை, போன்ற புரதங்கள் மற்றும் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) குறைவாக உள்ள கொய்யா, மாதுளம், சாத்துக்குடி, ஆரஞ்சு, அத்திப்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம்.

    *நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கும் சிவப்பு இறைச்சி (ஆடு, மாடு போன்ற பாலூட்டிகளின் இறைச்சி), பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், சோடா, பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

    *தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    *ரத்த சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

    *மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா போன்றவற்றையும் செய்யலாம்.

    *துரித உணவுகள், எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    நீரிழிவு நோய் பாதித்த கர்ப்பிணிகளுக்கு பனிக்குடநீர் அதிகமாக இருப்பதால் கருக்கலைப்பு ஏற்படும் அபாயம், ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் இல்லாதபோது அதிகரிக்கிறது.

    • காய்கறிகள், பழவகைகள், பயறு வகைகளை உண்ணலாம்.
    • முதல் மூன்று மாதங்களில் கடல் உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

    கர்ப்ப காலத்தில் பெண்கள், குழந்தையின் நலனையும் சேர்த்து ஆரோக்கியமான உணவினை உண்ண வேண்டும். இக்காலத்தில் இரும்புச்சத்து, கால்சியம், போலிக் அமிலம் நிறைந்த உணவுகள் தாய் மற்றும் சேய் இருவரின் நலனுக்கும் நன்மை பயக்கும். முதல் மூன்று மாதங்களில் கடல் உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

    மலச்சிக்கல் ஏற்படாதவாறு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழவகைகள், பயறு வகைகள் போன்றவற்றை உண்ணலாம். எளிதில் உணவுச் செரிமானம் ஏற்பட சீரகப்பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். குமட்டல், வாந்தியை நீக்க மாதுளை பழச்சாறு, கறிவேப்பிலை துவையல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    இவற்றுடன் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பாவன பஞ்சாங்குல தைலத்தினை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.மேலும் உளுந்து தைலம், குந்திரிக தைலம் போன்றவற்றை இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் தடவி வரலாம். இவை சுகமகப்பேற்றிற்கு உதவி செய்யும்.

    மகப்பேற்றிற்கு பின்னர் பெண்களின் உடல் இயல்பான பலமாற்றங்களை அடைந்து கொண்டிருக்கும்.மேலும் இக்காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உளுந்து, வெந்தயம், வெள்ளைப் பூண்டு, பாதாம் பருப்பு இவை பால்சுரப்பிற்கு சிறந்த உணவாகும்.

    இவற்றுடன் சித்த மருந்துகளான சவுபாக்ய சுண்டி லேகியம் சதாவேரி லேகியம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவை பிரசவத்திற்கு பின்னரான உதிரப்போக்கினை சீராக்குவதுடன், பால் சுரப்பினையும் தூண்டுவிக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் உடலில் கொழுப்புச் சத்தின் அளவு அதிகரித்தல், பித்தப்பைக் கல் போன்றவை மகப்பேற்றிற்கு பின்னர் பெண்களில் காணப்படுகிறது.

    எனவே மைதா மற்றும் எண்ணையில் பொரித்த உணவுகளைத் தவிர்த்தல், சரியான நேரத்தில் அளவுடன் உணவு அருந்துதல், உணவில் பூண்டு, மஞ்சள், பீட்ரூட், கேரட், பப்பாளி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுதல் இவற்றுடன் சித்த மருந்துகளான ஏலாதி, நெருங்சில், கீழாநெல்லி, கிச்சிவி மணப்பாகு போன்றவற்றை மருத்துவரின் அறிவுரையின்படி எடுத்துக்கொள்ளுவதால் பித்தப்பை கல்லினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து வெளிவரலாம்.

    • கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் 1,800 கலோரிகள் சாப்பிட்டாலே போதுமானது.
    • கர்ப்பகாலத்தில் 10 முதல் 15 கிலோ வரை எடை கூடலாம்.

    கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாகச் சொல்லப்படுகிற ஒன்றுதான். இருவருக்குச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கையில் அளவுக்கதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை.

    கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் 1,800 கலோரிகள் சாப்பிட்டாலே போதுமானது. அதைத் தாண்டி கூடுதலாக நீங்கள் எதையும் சாப்பிடத் தேவையில்லை. அதாவது, நீங்கள் ஏற்கெனவே என்ன சாப்பிட்டுக்கொண்டிருந்தீர்களோ, அதையே இந்த மூன்று மாதங்களில் சாப்பிட்டால் போதுமானது.

    சிலருக்கு கர்ப்ப காலத்தில் வாந்தி, தலைச்சுற்றல் அதிகமாக இருக்கும். அதனால் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். எனவே, அப்படி இருந்தால் தேவையான ஊட்டச்சத்துகள் உடலில் சேர்கின்றனவா என்பதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

    4 முதல் 6 மாதங்கள் வரையிலான இரண்டாவது ட்ரைமெஸ்ட்டரில் நீங்கள் 2,200 கலோரிகள் வரை சாப்பிட வேண்டும். அதாவது 300 முதல் 350 கலோரிகள் வரை அதிகமாக நீங்கள் உட்கொள்ள வேண்டியிருக்கும். அதற்காக இன்னொரு வேளை உணவு சாப்பிட வேண்டும் என்றில்லை. ஒரு டம்ளர் பால் குடித்தாலே அதிலிருந்து உங்களுக்கு 150 கலோரிகள் கிடைத்துவிடும். அந்த வகையில் இரண்டு டம்ளர் பால் குடித்தாலே அந்த அதிகப்படியான 300 கலோரிகள் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

    7 முதல் 9 மாதங்கள் வரையிலான மூன்றாவது ட்ரைமெஸ்ட்டரில் மொத்தமாகவே 2,400 கலோரிகள்தான் சாப்பிட வேண்டும். அந்த வகையில் கர்ப்பம் தரிப்பதற்கு முன் நீங்கள் சாப்பிட்டதிலிருந்து 400 முதல் 450 கலோரிகள் வரை அதிகம் சாப்பிட வேண்டி யிருக்கும். இதற்கும் நீங்கள் இரண்டு டம்ளர் பாலுடன் ஒரு முட்டையோ, பத்து பாதாமோ சாப்பிட்டாலே போதுமானது.

    எனவே, கர்ப்ப காலத்தில் இருவருக்கும் சாப்பிட வேண்டும் என அதிகம் சாப்பிடுவது, நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    கர்ப்பகாலத்தில் 10 முதல் 15 கிலோ வரை எடை கூடலாம். ஆனால், அந்த எடையானது கர்ப்பத்தின் போதான பி.எம்.ஐ-யைப் பொறுத்தது. ஒருவேளை உங்களுடைய முந்தைய கர்ப்பத்தில் மிகக் குறைவாகவே எடை கூடியிருந்தால் அடுத்த கர்ப்பத்தில் நீங்கள் 18 கிலோ வரைகூட எடை கூடலாம்.

    • மகப்பேறு காலத்தில் பெண்கள் புரதசத்தினை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    • கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம்.

    சினைப்பை நீர்க்கட்டி, தைராய்டு சுரப்பி கோளாறுகள், கருப்பை கட்டிகள், ஹார்மோன் மாறுபாடுகள் இவற்றால் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை மருத்துவ முறைகளால் சீர்செய்து, தாமதமாகும் கருத்தரிப்பை துரிதமாக்கி, கருச்சிதைவு இன்றி பாதுகாத்து பிரசவம் வரை கொண்டு செல்வது என்பது மகளிர்க்கு மற்றொரு சவால்.

    மாதவிடாய் துவங்கியது முதல் மகப்பேறு, இறுதிபூப்பு வரை உள்ள நோய்க்குறிகள் பெண்களின் ஆரோக்கியத்துக்கு அடுத்தடுத்த சவால் மிகுந்த காலம் ஆகும். இதனால் அவர்களுக்கு பல்வேறு உடலியல் மற்றும் மனவியல் மாறுபாடுகள் ஏற்படுகின்றது. அவை அனைத்தையும் கையாண்டு ஆரோக்கியத்தை நிலைநாட்ட சத்தான உணவு அவசியமாகின்றது. முக்கியமாக கர்ப்பகாலத்தில் வலிமையான, ஆரோக்கியமான அடுத்த சந்ததியை உருவாக்குவதற்கு சத்துக்கள் மிகமிக அவசியம்.

    "வாயும் வயிறுமா இருக்கியே, வயித்துல இருக்கிற புள்ளைக்கும் சேர்த்து சாப்பிடணும்" என்று நம் பாட்டி காலம் முதல் பழகி வந்தவை நம் பாரம்பர்ய உணவுகள். இன்றைய அறிவியல் கூறும் சுண்ணாம்பு சத்தும் (கால்சியமும்), இரும்புச்சத்தும் கர்ப்ப காலத்தில் மிகவும் அவசியம் என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து அத்தகைய சத்துக்கள் இருக்கும் உணவு முறைகளை வழங்கி இயற்கையான முறையில் ஆரோக்கியத்திற்கு வித்திட்டனர்.

    புரதச்சத்துக்கள் உடலின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்று. மகப்பேறு காலத்தில் பெண்கள் புரதசத்தினை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே உடல் உறுப்புகள் வளர்ச்சியை அதிகரிக்கும். கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு கிட்டத்தட்ட 10 கிலோ வரை எடை கூடும். அதற்கு புரதம் சிறந்த உணவு. சைவபிரியர்களுக்கு பட்டாணி வகைகள், முளைகட்டிய தானியங்கள், பயறு வகைகள் இவற்றிலும், அசைவப்பிரியர்களுக்கு மீன், முட்டை, கறி வகைகள் இவற்றிலும் அதிக அளவு புரதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    நமது பாரம்பரிய பருப்பு வகையான உளுந்து மற்றும் பாசிப்பயறில் அதிகம் புரதம் உள்ளது. ஆதலால் மாதவிடாய் துவங்கியது முதல் பெண்கள் தோலுடன் உள்ள கருப்பு உளுந்தை வடையாகவோ அல்லது பனைவெல்லம் சேர்த்த கஞ்சியாகவோ எடுத்துக்கொள்ளலாம். உளுந்து பெண்களுக்கு இடுப்புக்கு அதிக வலிமையை தரும் என்கிறது சித்த மருத்துவம்.

    பாசிப்பயிறு எனும் சிறந்த போஷாக்கு அளிக்கும் பருப்பு வகையை பொங்கலில் சேர்த்து எடுத்துக்கொள்வது நம் மரபு. பொங்கல் என்பது கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி, புரதம் நிறைந்த பாசிப்பயிறு, கொழுப்புச்சத்து நிறைந்த நெய் இவை மூன்றும் கலந்த சரிவிகித உணவாக உள்ளது. சரிவிகித உணவு பற்றி இன்றைய அறிவியல் பேசும் முன்னரே, பொங்கலை உணவாக படைத்தது நமது பாரம்பரிய உணவுமுறையின் சிறப்பு.

    சர்க்கரைச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட்கள் உடலுக்கு முதன்மை ஆற்றலை அளிக்கும் தன்மையுடையன. மாவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் இருப்பது இந்த சர்க்கரை சத்துக்கள் தான். சர்க்கரை சத்துக்கள் அரிசி வகைகளிலும், பழங்களிலும் அதிகம். ஆனால், பழங்களில் சர்க்கரை சத்துக்களுடன் எண்ணற்ற தாது உப்புக்களும், வைட்டமின்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த இயற்கை நிறமிகளும் அதிகம் உள்ளது.

    இயற்கை நிறமிகள் பழங்களில் அதிகம் கிடைக்கின்றது. ஆக, 'மாசமா இருக்கும் போது மாதுளை சாப்பிட்டால் பிறக்கிற குழந்தை நல்ல கலர்ல இருக்குமாம்' என்பதை வேடிக்கை மொழியாக பார்க்காமல், ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த மாதுளையை பெண்கள் எடுத்துக்கொண்டால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். ஆரோக்கியம் தானே அழகு. அதற்குத்தான் இந்த மறைமொழி.

    கர்ப்பம் தரித்த பெண்கள், சர்க்கரைச்சத்து நிறைந்த தீட்டப்பட்ட அரிசியை எடுத்துக்கொள்வதை விட பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்வது நல்லது. பூங்கார் அரிசி சர்க்கரை சத்தினை மட்டும் கொண்டிராமல் அதிக அளவு இரும்புச்சத்தினையும் கொண்டுள்ளது.

    மாதம்தோறும் ரத்தஇழப்பினை சந்திக்கும் பெண்களுக்கு இரும்புசத்து தேவையான ஒன்று. அதனை பூங்கார் அரிசி பூர்த்தி செய்யும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான சுண்ணாம்பு சத்து எனும் கால்சியம் அதிகம் உள்ள பாரம்பரிய அரிசி வகை குழியடிச்சான் அரிசி, அதிகம் கால்சியத்தை கொண்ட மற்றொரு அரிசி வகை நீலம் சம்பா அரிசி. பெரும்பாலான பாரம்பரிய அரிசி வகைகள் பெண்களுக்கு மட்டுமல்ல அனைவரின் உடலுக்கும் தேவையான அத்தியாவசிய சத்துக்களை இயல்பாகவே கொண்டுள்ளன. இதைப் பயன்படுத்திய நமது மூதாதையர்கள் சத்துக்கு தனி மாத்திரை மருந்துகளை உண்ணாமல் வாழ்ந்தது உலகறியும் வரலாறு. சத்தான உணவைப் பயன்படுத்த மறந்த நாம், சக்கையை உணவாக அருந்தி மாத்திரைகளை நம்பி வாழ்நாளை கடத்துகிறோம் என்பது தான் உண்மை.

    கொழுப்பு பொருட்கள் அதிக அளவு சக்தியை தரக்கூடியது. நரம்பு மண்டலத்தின் செயர் பாட்டுக்கும், உடலை காக்கவும், உடல் அழகுக்கும் அவசியமானது. நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பில் கரையும் வேதிமூலக்கூறுகள் கொழுப்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டால் மட்டுமே உடல் பெறமுடியும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல பலத்தை தரும். பாலில் புரதச்சத்தும், கொழுப்பு சத்தும் உள்ளது குறிப்பி டத்தக்கது. பொதுவாக எண்ணெய் வகைகளில் கொழுப்பு சத்துக்கள் அதிகம்.

    சித்த மருத்துவம் எண்ணெய் என்று குறிப்பிடுவது எள்ளின் நெய்யை தான். நல்ல எண்ணெய் என்ற பெயரைக்கொண்ட எள்எண்ணெய் பெண்களுக்கு மிகசிறந்த பலனைத் தரக்கூடியது. சமையலில் நல்லெண்ணையை பயன்படுத்தினால் புற்றுநோயை தடுக்க முடியும் என்கிறது சில ஆய்வு முடிவுகள். எள்ளு உருண்டையை எடுத்துக்கொள்வதன் மூலமும் பெண்களுக்கு அத்தகைய சத்துக்கள் கிடைக்கும். எள் எலும்புகளுக்கு மிகசிறந்த உணவு. எள்ளு ருண்டைகளை பாரம்பரிய கால்சியம் சத்து உருண்டைகள் என்றே சொல்லலாம்.

    எலும்புகளை, மூட்டுகளை வன்மையாக்கும் கால்சியம் சத்துக்கள் நிறைந்த எளிய உணவு கேழ்வரகு. இதனை மகப்பேறு காலத்தில் பெண்கள் அவ்வப்போது பனைவெல்லம் சேர்த்து உருண்டையாக்கி எடுத்துக்கொள்வது நல்லது. பயன்படுத்த மறந்த மற்றொரு பாரம்பரிய சிறுதானிய உணவு தினை. இதனுடன் அவ்வப்போது நெய், பனைவெல்லம் சேர்த்து தினைமாவு உருண்டையாக எடுத்துக்கொண்டால் எலும்புகள் வலுப்படும்.

    இரும்பு சத்து உடலின் ரத்தத்துக்கு அவசியமான ஒன்று. மகப்பேறு காலத்தில் பெண்கள் இரும்பு சத்து மாத்திரைகளை எடுப்பதுடன் அதிக இரும்பு சத்து மிக்க முருங்கைக்கீரையை, ஈர்க்குடன் சேர்த்து அவ்வப்போது சூப் செய்து எடுத்துக்கொள்ளலாம். கறிவேப்பிலை மற்றும் ஈர்க்கும் அதிக இரும்புச்சத்தினை கொண்டது. பப்பாளி, அத்திபழம் ஆகிய நம் நாட்டு நார்ச்சத்துள்ள பழங்களை எடுத்துக்கொள்வதும் சத்துகுறைப்பாட்டை பூர்த்தி செய்யும்.

    வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லி,கொய்யா ஆகிய பழங்களையும், கண் பார்வைக்கு வித்திடும் வைட்டமின் ஏ அதிகமுள்ள மாம்பழம் மற்றும் முருங்கை கீரை, கறிவேப்பிலை ஆகிய எளிமையாக கிடைக்கும் சித்த மருத்துவ மூலிகை உணவுப்பொருட்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதை அமைக்கும்.

    வைட்டமின் சி உள்ள பழங்கள் நமது உடலில் இரும்புசத்து உட்கிரகித்தலை அதிகமாக்கும் தன்மை உடையது என்கிறது நவீன அறிவியல். இதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்த நம் முன்னோர்கள் இரும்புசத்து மிக்க அய செந்தூரம், அன்னபேதி செந்தூரம் ஆகிய மருந்துகளை நெல்லிக்காய் சேர்ந்த திரிபலை சூரணத்துடன் உட்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர் என்பது அறிவியலே வியக்கும் வண்ணம் உள்ளது.

    வைட்டமின் டி-3 எனும் சத்து, தாய்க்கும், கருவில் வளரும் சேய்க்கும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். இயல்பாகவே குறைந்தது 15 நிமிடங்கள் வரை தோலினை வெயில் படும்படியாக செய்வது தேவையான வைட்டமின் டி சத்தினை தோலில் உற்பத்தி செய்யும். உணவுமுறைகளில் அவ்வப்போது சுண்டைக்காயை வற்றலாக்கி பயன்படுத்தினாலும் வைட்டமின்-டி உடலுக்கு கிடைக்கும். மாமிச வகைகளில் ஒமேகா-3 சத்துக்கள் நிறைந்த மீன் வகைகள் மகவின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

    இன்றைய நவீன அறிவியல் கூறும் ஜிங்க், மெக்னீசியம், செலினியம் ஆகிய பல சத்துக்களும், போலிக் அமிலம் போன்ற எண்ணற்ற வைட்டமின்களும் நாம் பாரம்பரியமாக பழகி வந்த உணவு முறைகளில் கணக்கில்லாமல் கிடக்கின்றது என்பது தான் உண்மை. அதை விடுத்து கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்துக்கள் இல்லாத, உடலுக்கு கேடு விளைவிக்கும் தன்மையுடைய துரித உணவுகளை விரும்பி எடுத்துக்கொள்வது கருவில் உள்ள மகவின் ஆரோக்கியத்தை கெடுப்பது போன்றது. அவ்வகை உணவுகளை நாகரிக வாழ்வியலில் வாழும் பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும்.

    வழிவழியாய் மகப்பேற்றின் சீமந்த விழாவில் பெண்களுக்கு சத்தான சிகப்பரிசியும், கம்பு உருண்டையும் கொடுத்து தாய்க்கும், சேய்க்கும் போஷாக்களித்து பலம் சேர்ப்பது நமது பாரம்பரிய உணவுமுறைக்கு உதாரணம். மொத்தத்தில் இரும்பு சத்து, கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம், பாஸ்பரஸ், ஜின்க் சத்துக்கள் என சத்துக்களின் கூடாரமாக உள்ளது சிகப்பரிசி வகை.

    சித்த மருத்துவ கூற்றுப்படி சப்த தாதுக்களை வன்மைப்படுத்த அனைவருக்கும் சத்தான உணவு அவசியம். சத்தான உணவு உண்பது தாய்க்கு மட்டுமல்ல கருவுக்கும் வளர்ச்சியை கொடுத்து வருங்கால சந்ததியினை ஆரோக்கியமாக உருவாக்க வழிவகை செய்யும். உண்மையில் நம் பாரம்பரிய உணவு முறைகள் நம் நாட்டு மருத்துவத்தின் ஒரு அத்தியாயம்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • கர்ப்பிணிகள் அவகேடோ பழத்தை சாப்பிட்டு வந்தால் குமட்டல் பிரச்சினையை கட்டுப்படுத்தலாம்.
    • சிட்ரஸ் பழங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்.

    கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், அதன் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் தாய் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேலும் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களில் இருந்து தாயையும், சேயையும் பாதுகாப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.

    தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் கிடைப்பதற்கு பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றுள் சிறந்த 5 பழங்கள் குறித்து பார்ப்போம்.

    1. வாழைப்பழம்: இதில் பொட்டாசியம் நிறைந்திருக்கும். வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகளும் உள்ளடங்கி இருக்கும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழ்நிலையில் அதிக நார்ச்சத்து கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவது உதவியாக இருக்கும். வைட்டமின் பி6 குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் இந்த பிரச்சினைகள் தலைதூக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் அதனை சாப்பிடுவது நல்லது.

    2. சிட்ரஸ் பழங்கள்: இவை கர்ப்பிணிப் பெண்களுக்கும் நன்மை பயக்கும். எலுமிச்சை, நெல்லிக்காய், கிவி, அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிரம்ப பெற்றிருக்கும். கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் சி நல்லது. சிட்ரஸ் பழங்கள் கர்ப்பிணிப் பெண்ணின் செரிமானத்தை மேம்படுத்தவும், கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும் உடல் உபாதைகளை போக்கவும் உதவும்.

    3. அவகேடோ: இந்த பழத்தில் அதிக போலேட் உள்ளது. வைட்டமின் சி, பி, கே, நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிகம் காணப்படும். மேலும் அவகேடோ பழத்தில் உள்ள பொட்டாசியம் கர்ப்ப காலத்தில் காலில் ஏற்படும் தசை பிடிப்புகளை கட்டுப்படுத்த உதவும். பொதுவாக பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடு காரணமாக காலில் பிடிப்புகள் ஏற்படலாம். கர்ப்பிணிகள் அவகேடோ பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அளவை பூர்த்தி செய்து விடலாம். குமட்டல் பிரச்சினையையும் கட்டுப்படுத்தி விடலாம்.

    4. ஆப்பிள்: நார்ச்சத்துள்ள இந்த பழம் அதிக அளவு வைட்டமின் சியையும் கொண்டுள்ளது. வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் பெக்டின் ஆகியவையும் உள்ளன. பெக்டின் என்பது ஆப்பிளில் காணப்படும் ஒரு ப்ரீபயாடிக் ஆகும். இது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆப்பிளில் இருக்கும் அதிக சத்துக்களை பெறுவதற்கு அதனை தோலுடன் சாப்பிடுவதுதான் சரியானது. இருப்பினும் தோல் பகுதியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னரே சாப்பிட வேண்டும்.

    5. தர்பூசணி: தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி, பி6, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும் தாதுக்களும், நார்ச்சத்துகளும் உள்ளன. கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் நெஞ்செரிச்சல், கை, கால்களில் உண்டாகும் வீக்கம் போன்றவற்றை தணிக்கும் தன்மை தர்பூசணிக்கு உண்டு. தசைப்பிடிப்புகளையும் போக்க உதவும்.

    பிளாக்பெர்ரி, கிவி, மாம்பழம், கொய்யா, பேரிக்காய், மாதுளை, திராட்சை, செர்ரி, சப்போட்டா, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழ வகைகளையும் சாப்பிடுவது நல்லது.

    • கர்ப்பிணிப் பெண்கள் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
    • நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்.

    கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், அதன் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் தாய் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேலும் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களில் இருந்து தாயையும், சேயையும் பாதுகாப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் கிடைப்பதற்கு பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றுள் சிறந்த 5 காய்கறிகள்குறித்து பார்ப்போம்.

    கர்ப்ப காலத்தில் சாப்பிட சிறந்த காய்கறிகள்

    1. பச்சை இலை காய்கறிகள்: முட்டைக்கோஸ், கீரை உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, ஈ, கால்சியம், இரும்பு, போலேட் மற்றும் நார்ச்சத்துகள், தாதுக்கள் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும். இவற்றுள் போலேட் மிகவும் முக்கியமான வைட்டமின் ஆகும். இது பிறப்பு குறைபாடுகளை தடுக்கக்கூடியது.

    2. சர்க்கரை வள்ளிக்கிழங்கு: உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், இரும்பு, வைட்டமின் சி மற்றும் பி போன்ற வைட்டமின்களும் அதில் இருக்கிறது.

    3. வெள்ளரி: நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும். வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது கர்ப்பிணிப் பெண்களிடத்தில் நீரிழப்பை தடுக்க உதவும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளான மலச்சிக்கல் மற்றும் மூல நோய் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

    4. தக்காளி: தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசிய தேவையான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, போலிக் அமிலம் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. தக்காளியை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது பாதுகாப்பானது. உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. தக்காளியை அளவோடு பயன்படுத்துவதன் மூலம் அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.

    5. கத்திரிக்காய்: கத்தரிக்காயும் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது. இருப்பினும், அளவோடு சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கத்திரிக்காய் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தக்கூடியது, ஏனெனில் இதில் வைட்டமின் ஈ, ஏ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

    • கர்ப்பிணிகள் தான் எந்த உணவைச் சாப்பிட வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.
    • எந்த உணவுகளை தொடவே கூடாது என்பது பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு அழகிய பயணமாகவே இருக்கும். கர்ப்பிணி பெண்ணுக்கு தான் எந்த உணவைச் சாப்பிட வேண்டும்,

    எந்த அளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த உணவுகளை தொடவே கூடாது என்பது பற்றியெல்லாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் தனக்கும், தன் உடலில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்டச் சத்துக்கள் என்ன, எவ்வளவு கலோரிகள் அளவு இந்த ஊட்டச் சத்துக்கள் தேவைப்படும், அவை எந்த உணவுகளில் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சுமார் 2200 கலோரி அளவிலான உணவைத் தாண்டி, 300 கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலோரிகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியம். இந்த கலோரிகளை நல்ல சத்து நிறைந்த உணவுகள் மூலம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    * Green leaves – கீரை வகைகள்

    * Green vegetables – பச்சைக் காய்கறிகள்

    * Grains – முழு தானியங்கள்

    * முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.

    * அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். அன்னாசி, பப்பாளி போன்றவை உடலுக்கு நல்லது. அவை சினிமாவிலும் டிவி மொகா தொடர்களிலும்தான் அபார்ஷனை ஏற்படுத்தும்.

    * தினமும் அரை லிட்டர் அளவு பால் குடிப்பது கருவில் உள்ள குழந்தையின் எலும்புகளுக்கு கால்சியம் சத்தை சேர்த்து அவற்றை உறுதிப்படுத்தும். கருவுற்ற முதல் சில மாதங்களுக்கு வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு அதிகமாக இருக்கும். அச்சமயம் பழ ஜூஸ், வேகவைத்த காய்கறிகள், கஞ்சி வகைகளை அடிக்கடி சாப்பிடலாம்.

    * கருவுற்ற தாய்க்கு நாக்கில் ருசி மாறும். அதனால்தான் சாம்பல் ருசிக்கிறது. மனத்துக்குப் பிடித்த உணவுகளை வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடலாம். எள் உருண்டை, கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை போன்றவற்றில் உள்ள வெல்லம் இரும்புச் சத்தை தரும். கடலை, எள்ளு ஆகியவற்றில் உடலுக்கு மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்கள் (Essential Fatty Acids) உள்ளன. எள், கருச்சிதைவை ஏற்படுத்தாது.

    பெண்கள் கர்ப்பமாவதற்கு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், பழங்கள் சிறந்த உணவாக விளங்கும்.
    முட்டைக்கோஸ்

    முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும். அதற்கு காரணம் அதிலுள்ள டி-இண்டோல் மீதேன் என்ற ரசாயனம். இது ஈஸ்ட்ரோஜன் மெட்டபாலிசத்தில் முக்கிய பங்கை வகிப்பதால், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.

    ப்ராக்கோலி

    கர்ப்பமாக திட்டமிடும் பெண்களுக்கு அருமையான உணவாக விளங்குகிறது. அதிலுள்ள ஃபோலிக்  அமிலம், இரும்புச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் அதனை ஒரு முழுமையான உணவாக மாற்றுகிறது. கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைக்கும், கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் இதில் அளவுக்கு அதிகமாக உள்ளது.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கு கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அவித்த உருளைக்கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, அணுக்கள் பிரிவை அதிகரிக்க உதவும். இதனால் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

    மாதுளை

    மாதுளையில் உள்ள பல வித உடல் நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.

    வாழைப்பழம்

    சீரான மாதவிடாய் சுழற்சியில் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை இடர்பாடும் கர்ப்ப சிக்கல்களும் குறைவாகவே இருக்கும். அதனால் கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் வாழைப்பழங்கள் உண்ண வேண்டும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6. சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த வைட்டமின் அதிமுக்கிய ஒன்றாகும். இதனால் கருவுறும் தன்மையும் மேம்படும்.

    அன்னாசிப்பழம்

    அன்னாசிப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாங்கனீசு உள்ளது. பல வித இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பதற்கு இந்த கனிமம் முக்கிய பங்கை வகிக்கிறது. கூடுதலாக, உடலில் மாங்கனீசு அளவுகள் குறைவாக இருப்பதற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.

    முட்டை

    முட்டைகள் கருவுறும் தன்மைக்கு சந்தேகமே இல்லாமல் சிறந்த உணவாக விளங்குகிறது. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும் வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முழுமையான உணவாக விளங்கும்.

    மஞ்சள்

    சமைக்கும் போதெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும் மேம்படுத்தும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், கருவுறும் தன்மையை ஊக்குவிக்கும் சக்தி இந்த அதிசய மசாலாவிற்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.
    உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் என மொத்தம் 11 வகையான சத்துகள், கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படுகின்றன. எனவே அது மாதிரியான சத்து வகைகளை கர்ப்பிணிகள் உணவாக கொள்ளவேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து கிடைக்க தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை வெல்லம் கலந்த உணவு சாப்பிட்டால் நல்லது. அவ்வப்போது முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் சுண்டைக்காய், பாகற்காய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் மூலம் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும். கர்ப்ப காலத்தில் காபி, டீ குடிப்பதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை கிரகிக்க முடியாமல் காபி, டீ போன்றவை தடுத்து விடுகின்றன. அதே நேரத்தில் டீ, காபிக்கு பதிலாக கர்ப்பிணிகள் பால் குடிப்பது மிகவும் நல்லது.

    பால், பருப்புகள், காய்கறிகள், முட்டைகள் ஆகியவற்றில் இருந்து புரதச்சத்து கிடைக்கும். பச்சை காய்கறிகளை சமைக்கும் போது அவற்றில் போலிக் அமில சத்து வெளியேறி விடுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம் தானே!
    கர்ப்ப காலத்தில் பெண்கள் எடை குறைவு மற்றும் இரத்த சோகை பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.
    * இரண்டு அத்தி பழம், இரண்டு பேரிட்சை, காய்ந்த‌ திராட்சை இவை மூன்றையும் தினம் காலையில் சாப்பிட‌வேண்டும். இது முன்றையும் சேர்த்து ஹ‌ல்வாவாக‌வும் செய்து சாப்பிட‌லாம்.

    * புரோகோலி சூப், பொரிய‌ல், புரோகோலி பீஃப் போன்ற‌வை சாப்பிட‌லாம். இந்த புரோகோலியில் அதிக இரும்பு சத்து உள்ளது.

    * ஏதாவ‌து ஒரு கீரை சிறு ப‌ருப்பு சேர்த்து கூட்டு வைத்து (அ) பிர‌ட்டியோ க‌றியுட‌ன் சேர்த்தோ சாப்பிட‌லாம்.

    * ம‌ண்ணீர‌ல் சுட்டு அல்ல‌து பொரித்தோ சாப்பிட‌லாம். இது வார‌ம் முன்று முறை சாப்பிட்டாலே ஹிமோகுளோபின் அள‌வு கூடும்.

    * சால‌ட் நிறைய‌ செய்து சாப்பிட‌லாம்.

    * கொத்தும‌ல்லி, க‌றிவேப்பிலை அரைத்து, துவையலாக‌ (அ) ர‌ச‌ம் வைத்து சாப்பிட‌லாம்.

    * ப‌யிறு வ‌கைக‌ளை ஊற‌வைத்து அடையாக‌ சுட்டு சாப்பிட‌லாம்.

    * கேழ்வ‌ர‌கில் பான‌ம், புட்டு,இனிப்பு அடை போன்ற‌வை சாப்பிட‌லாம்.

    9. பீட்ரூட் ஜூஸ், பொரியல், சாலட், பீட்ரூட் வித் கீமா கடலைபருப்பு சேர்த்து கறி பண்ணி சாப்பிடலாம்.

    * இரவில் மட்டும் லேசான ஆகாரங்கள் உண்பது நல்லது அதுவும் 7 லிருந்து 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து கொள்ளவும்.

    ஒரு நாளைக்கு முன்று ட‌ம்ள‌ர் பால் அருந்துவ‌து ந‌ல்ல‌து. இது குழ‌ந்தை வ‌ள‌ரும் ச‌மய‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு தேவையான கால்சிய‌ம் ச‌த்து கிடைத்து விடும்.

    அதே போல் தாய்மார்கள் சாப்பிடும் ஓவ்வொரு உணவும் குழந்தையை போய் தான் அடைகிறது என்பதை மனதில் கொண்டு நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். இரண்டு மாதத்திலிருந்து ஐந்து மாதம் வரை எவ்வளவுக்கு எவ்வளவு சத்தான ஆகரம் சாப்பிடுகிறீர்களோ வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவ்வளவு ந‌ல்ல‌து.
    ×