search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Praggnanandhaa"

    • சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் 11-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள்.
    • பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

    14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 11-வது சுற்று ஒருநாள் ஓய்வுக்கு பிறகு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோ கருணாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த போட்டியில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்தார். அவரது 7-வது டிராவாகும்.

    மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் 11-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள். ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) பிரக்ஞானந்தாவையும், இயன் நெபோம்னியாச்சி (ரஷியா) விதித் குஜராத்தியையும் தோற்கடித்தனர்.

    11 சுற்றுகள் முடிவில் ரஷிய வீரர் இயன் நேபோம்னியாச்சி 7 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். டி.குகேஷ், ஹிகாரு நகமுரா ஆகியோர் தலா 6.5 புள்ளியுடன் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர.

    பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். பேபியானோ 6 புள்ளியுடன் 4-வது இடத்திலும், அலிசேரா பிரவுசியா (பிரான்ஸ்) 4.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், நிஜாத் அப்சோவ் (அஜர்பைஜான்) 3 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை ஹம்பி. பல்கேரிய வீராங்கனை நூர்சிபால் சலிமோவை தோற்கடித்தார். இதன் மலம் அவர் 5.5 புள்ளியுடன் 3 முதல் 5-வது இடங்களில் உள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான சென்னையை சேர்ந்தவருமான வைஷாலி 11-வது சுற்றில் ரஷியாவை அலெக்சான்ட்ரா சோரியாச்சினாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார். வைஷாலி 4.5 புள்ளிகளுடன் 6 முதல் 7-வது இடங்களில் உள்ளார்.

    • பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சீன வீராங்கனை டான் ஜோங்கிடம் தோற்றார்.
    • மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி ரஷியாவை சேர்ந்த கத்ரினா லாங்கோவுடன் டிரா செய்தார்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 9-வது சுற்று நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்கள் டி.குகேஷ்- பிரக்ஞானந்தா இந்த சுற்றில் மோதினார்கள். இதில் குகேஷ் கறுப்பு நிற காய்களுடனும், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.41-வது நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் டிரா ஆனது.

    இருவரும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்று இருந்தார். இந்த டிரா மூலம் அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

    மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி 9- வது சுற்றில் வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அவர் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை 36-வது நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார். 2-வது முறையாக விதித் குஜராத்தி அவரை தோற்கடித்துள்ளார்.

    இயன் நெபோம்னியாச்சி (ரஷியா)-அலிரேசா பிரவுசியா (பிரான்ஸ்) மற்றும் பேபியானோ (அமெரிக்கா)-நிஜத் அப்சோவ் (அஜர்பைஜான்) ஆகியோர் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது.

    9 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். விதித் குஜாராத்தி 4.5 புள்ளிகளுடன் 4 முதல் 6-வது இடத்தில் உள்ளார்.

    பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சீன வீராங்கனை டான் ஜோங்கிடம் தோற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி ரஷியாவை சேர்ந்த கத்ரினா லாங்கோவுடன் டிரா செய்தார்.

    9-வது ரவுண்டு முடிவில் ஹம்பி 4 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும், வைஷாலி 2.5 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

    • சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜாவை சந்தித்தார்.
    • 6-வது ரவுண்டு முடிவில் வைஷாலி, ஹம்பி தலா 2.5 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களில் உள்ளனர்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

    14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 7-வது ரவுண்டு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜாவை சந்தித்தார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் எதிர்பாராதவிதமாக 40-வது நகர்த்தலுக்கு பிறகு தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த அவர் 2-வது இடத்துக்கு பின்தங்கினார்.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா அமெரிக்காவை சேர்ந்த பேபியானோவுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்னொரு இந்திய வீரர் விதித் குஜாராத்தி அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவுடன் மோதிய போட்டியும் டிரா ஆனது.

    7 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி ( ரஷியா ) 4.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். குகேஷ், பேபியானோ , பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். விதித் குஜராத்தி 3 .5 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும் உள்ளார்.

    பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சீன வீராங்கனை லீ டிங்ஜிடம் தோற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி உக்ரைனை சேர்ந்த அன்னா முசிச்சுக்குடன் டிரா செய்தார்.

    6-வது ரவுண்டு முடிவில் வைஷாலி, ஹம்பி தலா 2.5 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களில் உள்ளனர்.

    • 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 6-வது ரவுண்டு நேற்று நடந்தது.
    • 6 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி , குகேஷ் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.

    14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 6-வது ரவுண்டு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஹிகாரு நகமுராவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் டிரா செய்தார். சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, அஜர் பைஜானை சேர்ந்த நிஜாத் அபாசோவ்வை எதிர் கொணடார். அதில் 45-வது காய் நகர்த்தலுக்கு பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

    அதே போல் மற்றொரு இந்திய வீரரான விதித் குஜராத்தி, 6-வது சுற்றில் பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜாவை தோற்கடித்தார்.

    6 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி , குகேஷ் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 3.5 புள்ளியுடன் 3 முதல் 4-வது இடத்திலும், விதித் குஜராத்தி 3 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய 6-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள்.

    பெண்கள் பிரிவில் 6-வது ரவுண்டு முடிவில் வைஷாலி 2.5 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும், ஹம்பி 2 புள்ளிகளுடன் 7 முதல் 8-வது இடத்திலும் உள்ளனர்.

    • பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தேசிய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரில் நடப்பு உலகச் சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இளம் வயதிலேயே சதுரங்க உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கி அதில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா அவர்கள், உலகளவில் அடுத்தடுத்து பல்வேறு வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • உலக அரங்கில் எனது நாடு சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்.
    • பிரக்யானந்தாவின் திறமை மற்றும் முன்னேறிய வேகம் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று அதானி கூறியுள்ளார்.

    பிரக்யானந்தா டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியில் உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி இந்தியாவின் நம்பர் 1 ஆனார்.

    கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்யானந்தா முதன்முறையாக மூத்த சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்தை முந்தி இந்தியாவின் முதல் தரவரிசையில் உள்ள ஆடவர் சதுரங்க வீரர் என்ற இடத்தை பிடித்தார். இதையடுத்து டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியின் நான்காவது சுற்றில் தற்போதைய உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்த பிரக்யானந்தா இந்தியாவின் நம்பர் 1 என்ற இடத்தை பிடித்து சாதனையை படைத்துள்ளார்.

    அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, செஸ் வீரரான பிரக்யானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



    அதானி கூறியதாவது, "பிரக்யானந்தாவின் திறமை மற்றும் முன்னேறிய வேகம் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் நிச்சயமாக அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு உதாரணம். தேசத்தை பெருமைப்படுத்துவதிலும், உயர்ந்த இடங்களில் பாராட்டுகளை வெல்வதையும் விட உன்னதமானது எதுவுமில்லை. மேலும் விளையாட்டு வீரர்களின் பயணத்தில் துணையாய் நிற்பதில் அதானி குழுமம் அர்ப்பணிப்புடன் உள்ளது" என்றார்.

    இந்த பதிவுக்கு பிரக்யானந்தா, உலக அரங்கில் எனது நாடு சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். நான் விளையாடும் போதெல்லாம், நாட்டுக்காக அதிக பதக்கங்களை வெல்வதே எனது ஒரே குறிக்கோள். எனது திறமைகளை நம்பியதற்காக அதானி குழுமத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

    • அரையிறுதியில் உலகின் 3-ம் நிலை வீரரான ஃபேபியானோ கருணாவை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.
    • மேக்னஸ் கார்ல்சனுடன் பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் பல இந்தியர்கள் விளையாடியுள்ளனர்.

    உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

    அரையிறுதி சுற்றில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று இருந்ததால், சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

    மேக்னஸ் கார்ல்சனுடன் பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் பல இந்தியர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் 2000 மற்றும் 2002ல் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இறுதிச்சுற்றில் விளையாடி முதல் இடத்தை பிடிக்கமுடிந்தது. அதன்பின்னர், கடந்த 20 ஆண்டுகளில், இறுதிச் சுற்றுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவில்லை.

    எட்டு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பெரும்பாலான இந்திய வீரர்களால் முதல்-இரண்டாம் சுற்றுக்கு அப்பால் செல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு, உலகக் கோப்பையின் காலிறுதி போட்டியில், எட்டு நபர்கள் தேர்வானார்கள். அதில் நான்கு இந்தியர்கள் இருந்தனர். அதாவது இறுதி எட்டு வீரர்களில் பாதி பேர் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள். சீனா, ரஷ்யா அல்லது போலந்து மற்றும் இங்கிலாந்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை. அதனால் இந்த போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதை நம்மால் உணர முடிந்தது.

     

    மேலும், இந்த போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் பெரும்பாலும், இருபதுகள் மற்றும் இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள வீரர்கள். இந்தியாவின் இளம் தலைமுறை செஸ் விளையாட்டை எப்படி உள்வாங்கி உள்ளது என்பதற்கு இந்த இளம் முகங்களே சாட்சி.

    FIDE புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் உலக கோப்பை போட்டிக்கு சென்றனர். அதில் 10 ஆண்களும், 7 பெண்களும் அடங்குவர். கடந்த முறை, ரஷியாவில் 2021ல் FIDE உலக கோப்பை போட்டிக்கு நான்கு பெண்கள் உள்பட இந்திய வீரர்கள் பங்குபெற்றனர்.

    18 வயதிலேயே தன்னுடைய பெயரை வரலாற்றில் மிக தீர்க்கமாக பதித்துள்ளார் பிரக்ஞானந்தா. மிகவும் இளம் வயதில் செஸ் உலக்கோப்பை இறுதிப்போட்டியில் நுழைந்த முதல் வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். உலக சாம்பியனை கடைசி வரை போராட விட்ட பிரக்ஞாந்தாவை முதலமைச்சர் உள்பட பல சினிமா பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரோ தலைவர் சோமநாத், பிரக்ஞானந்தா வீட்டுக்கு சென்று நினைவுப் பரிசு வழங்கினார்.
    • பிரக்ஞானந்தா சாதனைக்காக மிகவும் பெருமைப்படுகிறோம் என்றார்.

    சென்னை:

    இஸ்ரோ தலைவர் சோமநாத் இன்று சென்னை வந்துள்ளார். அவர், சென்னையில் உள்ள செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வீட்டுக்கு சென்றார். அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தார்.

    இது குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில், இஸ்ரோ தலைவர் சோமநாத்தை சந்திப்பதில் பெருமிதம் கொள்கிறேன். சந்திரயான் 3 புறப்பட்டு தரையிறங்குவதைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. எனது பயணம் மற்றும் பயிற்சி குறித்து விவாதித்தோம். ராக்கெட்டுகள் தயாரிக்கப்படும் திருவனந்தபுரத்திற்கும், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் வருமாறு என்னை அவர் அழைத்துள்ளார். எனவே, நான் நிச்சயமாக அங்கு செல்வேன் என கூறினார்.

    இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், ஒவ்வொரு இந்தியரைப் போலவே, நாமும் பிரக்ஞானந்தா சாதனைக்காக மிகவும் பெருமைப்படுகிறோம்.

    செஸ் என்பது இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு பழைய விளையாட்டு. நாம்தான் அதன் பிறப்பிடம். இது மனமும் புத்திசாலித்தனமும் கொண்ட விளையாட்டு.

    நிலவில் பிரக்ஞன் இருக்கிறான் என்று பெருமை கொள்கிறோம், பூமியில் இந்த பிரக்ஞன் இருக்கிறான்.

    நிலவில் இந்தியாவுக்கு நாம் என்ன செய்தோமோ அதை அவர் நிலத்தில் சாதித்திருக்கிறார். விண்வெளியை மேம்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறார்.

    அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாற்ற இளைஞர்களை ஊக்குவிப்பதில் எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளைஞர்கள் இவரை பார்த்து செஸ் விளையாட ஆர்வம் பெறுவர்.
    • இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கு 100 ஆண்டுகள் ஆகி விட்டன.

    மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடம் பிடித்து அசத்திய பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பிரக்ஞானந்தாவுடன் அவரது பெற்றோர்களும் சென்றிருந்தனர்.

    பிரக்ஞானந்தாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர்,"நான் அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறார். 16 வயதிலேயே மற்றவர்களால் செய்ய முடியாததை அவர் செய்து காட்டியிருக்கிறார். பல்வேறு இளைஞர்கள் இவரை பார்த்து செஸ் விளையாட ஆர்வம் பெறுவர். செஸ் போட்டி இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கு 100 ஆண்டுகள் ஆகி விட்டன. தாமதம் ஆகிவிட்ட நிலையிலும், அது வெற்றிகரமான ஒன்றாக அமைந்தது," என்று தெரிவித்தார்.

     

    இதே நிகழ்வில் பேசிய பிரக்ஞானந்தா, "இத்தகைய ஆதரவு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், இவை எங்களை மேலும் அதிக கடினமாக உழைத்து எதிர்கால போட்டிகளில் சிறப்பாக விளையாடி, நாட்டுக்கு பெருமை பெற்றுக் கொடுக்க ஊக்குவிக்கும்," என்று தெரிவித்தார்.

    முன்னதாக பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

    • உலகக் கோப்பை இறுதி சுற்றில் பிரக்ஞானந்தா மற்றும் மாக்னஸ் கார்ல்சன் மோதினர்.
    • பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

    ஃபிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்து. இதில் இந்திய இளம் வீரர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மாக்னஸ் கார்ல்செனும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர்.

    டை-பிரேக்கரில் கார்ல்சென் வெற்றி பெற்றார். இளம் வயதிலேயே சிறப்பாக விளையாடி 2-வது இடம் பிடித்த 18 வயதாகும் பிரக்ஞானந்தாவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததுடன், வீடியோ கால் மூலம் பேசி பாராட்டினார். சமீபத்தில் தமிழகம் வந்த பிரக்ஞானந்தா தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தார்.

    இந்த நிலையில், பிரக்ஞானந்தா மற்றும் அவரது குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் அழைப்பின் பேரில், அவரது இல்லத்திற்கு குடும்பத்தாரோடு சென்ற பிரக்ஞானந்தா பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரக்ஞானந்தாவை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "இன்று இரவு 7 மணிக்கு மிகவும் விசேஷமான விருந்தனர்களை சந்தித்தேன். உன்னையும், உனது குடும்பத்தாரையும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். உங்கள் உதாரணம் இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் எப்படி கைப்பற்ற முடியும் என்பதை காட்டுகிறது. உன்னை நினைத்து பெருமை அடைகிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை
    • அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது

    பிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். டை-பிரேக்கரில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

    இளம் வயதிலேயே சிறப்பாக விளையாடி 2-வது இடம் பிடித்த 18 வயதாகும் பிரக்ஞானந்தாவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததுடன், வீடியோ கால் மூலம் பேசி பாராட்டினார். அத்துடன் தமிழக விளையாட்டுத்துறை சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரக்ஞானந்தாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அவரை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்கள், தனியார் பள்ளி மாணவர்களும் வரவேற்க திருண்டு இருந்தனர்.

    மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமிய கலைகள் மூலம் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகம் வந்தடைந்த பிரக்ஞானந்தா, இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார்.

    • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார்.
    • ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

    மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் ஆர்.பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

    உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் - இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.

    இருவருக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டு சுற்று போட்டிகளிலும் டிரா ஆன நிலையில், டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இளம் கிராண்மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார்.

    பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். இது செஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டப்படுகிறது.

    இந்நிலையில், பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    குழந்தைகளுக்கு வீடியோ கேம்களை கொடுக்காமல், மூளைக்கு வேலை கொடுக்கும் செஸ் போன்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் பெற்றோர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். உங்களைப் போன்ற பலர் பிரக்ஞானந்தாவுக்கு ஒரு தார் (Thar) பரிசளிக்குமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எனக்கு வேறு யோசனை இருக்கிறது.

    பிரக்ஞானந்தாவின் பெற்றோர், நாகலட்சுமி மற்றும் ரமேஷ்பாபு ஆகியோருக்கு ஒரு எக்ஸ்யூவி 4 ஓஇவியை பரிசளிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×