search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power cut"

    • கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
    • காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூரை அடுத்த பாப்பரம்பாக்கம் அருகே உள்ள புதுவள்ளூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    மழை நின்றும் மின் இணைப்பு வழங்காததால் ஆத்திரம் அடைந்த புது வள்ளூர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு காக்களூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உற்பத்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இந்தநிலையில் மழை நின்ற பின்னரும் மின்சாரம் வழங்காததை கண்டித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் காக்களூர் துணை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • பொதுமக்கள் அவதி
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து செந்தில் நகர், நாகலம்மன் நகர், கைனூர், வாணியம்பேட்டை உள்ளிட்ட அரக்கோணம் நகர எல்லை பகுதிகளுக்கு மின்சாரம் வழங் கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு சில நிமிடமே பெய்த லேசான மழை காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

    இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில் இந்த பகுதியில் இரவு நேரங்களில் சிறு தூறல் அல்லது காற்று வீசினாலே மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக் கள், குழந்தைகள் கொசுக்கடியால் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். மேலும், அடிக்கடி இது போன்று பல மணி நேரம் ஏற்படும் மின் வெட்டால் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர்.

    எனவே இது போன்று அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம், மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பாலாஜிநகர், அய்யப்பாநகர் பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலிபாளையம், பலவஞ்சிபாளையம், நல்லூர் துணை மின்நிலையப்பகுதிகளில் நாளை 28-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை முதலிபாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார்பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பாளையம் மற்றும் நல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு. பலவஞ்சிபாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யப்பாநகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சந்தைப்பேட்டை துணைமின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம் ஆகிய இடங்களில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சந்தைப்பேட்டை துணைமின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், எம்.ஜி. புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யுனியன்மில் ரோடு, மிஷன் வீதி, காமராஜ் ரோடு, புதுசந்திராபுரம், புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின்ரோடு, சந்திராபுரம்,செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம் ஆகிய இடங்களில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
    • வியாசர்பாடி பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாசர்பாடி பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாசர்பாடி மார்க்கெட் மற்றும் தொழிற்பேட்டை, ஈ.எச்.ரோடு, பி.வி.காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர், எம்.பி.எம்.தெரு, சென்ட்ரல் குறுக்கு தெரு, ஏ.பி.சி. கல்யாணபுரம், சத்திய மூர்த்தி நகர் 1 முதல் 25-வது தெரு வரை சாமியார் தோட்டம், பல்லா தெரு 1 முதல் 3 வரை, உதய சூரியன் நகர், எஸ்.ஏ.காலனி மற்றும் சர்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
    • வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    உடுமலை:

    உடுமலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே அதுசமயம் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    அப்போது மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • வட்டாளபதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை( செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., விஜி புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம்,தளவாய்பாளையம்,பி.வி.ஆர்.பாளையம், சிறுகளஞ்சி, பரப்பாளையம், பாப்பம்பாளையம், வெண்கலபாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம்,எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம்,அ.கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், வயக்காட்டுப்புதூர், மானூர், ஆர்.கே.பாளையம்,நடுதோட்டம், அருகம்பாளையம், தொட்டியபாளையம், கத்தாங்கண்ணி, செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிகவுண்டம்பாளையம், நீலாகவுண்டம்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூர், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை (21- ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை (21- ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம் பாளையம், பெரியமருதூர்,சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பிற பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்தி வேலூர் மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

    • நாளை சாத்தான்குளம், நாசரேத் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • அதன் காரணமாக முதலூர், நாசரேத், கச்சனாவிளை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    உடன்குடி:

    உடன்குடி, நவ. 20-

    திருச்செந்துர் மின்சார வினியோக பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சாத்தான்குளம், முதலூர், கடாச்சபுரம் கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராய புரம், தருமபுரி, போலயார் புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங் குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான் மாணிக்கம்.

    நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ள மடம், எழுவரை முக்கி, தேரிப்ப னை, சொக்கனுர், செம்பூர், மானா ட்டூர், பத்தவாசல், பிள்ளை மடையூர், மணல் குண்டு, ஆதிநாதபுரம், வேலன் காலனி, மளவராய நத்தம், மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமி புரம், லெட்சுமிபுரம், வாகை விளை, மானாடு, செட்டி விளை, நடுவக்குறிச்சி, பூச்சிக்காடு, அதிசயபுரம், சொக்கன்குடியிருப்பு, தட்டார்மடம், கொம்மடிக் கோட்டை, புத்தன்தருவை, மணிநகர், படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன் கோட்டை, பெரியதாழை, செட்டிவிளை, தோப்பு விளை, உதிரமாடன் குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம், பழனியப்ப புரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரி மங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசிர்வாத புரம், கருங்கடல், கோம னேரி ஆகிய பகுதிகளில் நாளை(செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    • வள்ளியூர் மின் கோட்டத்திற்குட்பட்ட களக்காடு, பணகுடி மற்றும் சங்கனான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • களக்காடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடைபடும் .

    வள்ளியூர்:

    தமிழ்நாடு மின் வினியோக வள்ளியூர் பிரிவு செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வள்ளியூர் மின் கோட்டத்திற்குட்பட்ட களக்காடு, பணகுடி மற்றும் சங்கனான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடைபடும் . மேலும் மின்விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்ற வற்றை அகற்றி மின்பாதை யினை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    களக்காடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு,காடுவெட்டி, வடமலை சமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.

    பணகுடி துணைமின் நிலையத்திற்குட்பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.சங்கனான்குளம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்குஏறாந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21-ந்தேதி மின் தடை
    • காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    துறையூர்

    துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21-ந்தேதி செவ்வாய்கிழமை அன்று கொப்பம்பட்டி, து,ரெங்கநாதபுரம் மற்றும் த.முருங்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர். காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம். மருவத்தூர், செல்லிபாளையம். செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • கரூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
    • சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    கரூர்,

    கரூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கரூர் காமராஜபுரம், கே.வி.பி. நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவகர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம் சாலை, கோவை ரோடு, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர் ஆண்டாங்கோவில் ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம் புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.

    பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லி வலசு, அரவக்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து பள்ளப்பட்டி, மண்மாரி, வேலம்பட்டி, ரெங்கராஜ்நகர், லிங்கப்பநாயக்கன்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வல்லப்பம்பட்டி சந்தப்பேட்டை, பண்ணப்பட்டி, இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிப்பட்டி, மொக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிகாரன் வலசு அரவக்குறிச்சி, கொத்தம்பாளையம், கரடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    ×