search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus 2 exam"

    • மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தனர்.
    • 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு.

    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.

    இந்த தேர்வில், 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தனர்.

    இதைத்தவிர, 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர் எனவும் கூறப்பட்டது.

    இதற்காக, தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    தமிழ் பாடத்தேர்வான இன்று சுமார் 12,364 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என கூறப்படுகிறது.

    • தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் தவிர்க்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
    • பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பதட்டம் அடையாமல் தேர்வு எழுதுவதற்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்தடுத்து தொடங்கி நடைபெற உள்ளது. பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசியாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் தவிர்க்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

    தேர்வு கூடங்களில் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    1-ந்தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வு 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதலில் தமிழ் தேர்வும் அதனை தொடர்ந்து 5-ந்தேதி ஆங்கிலம், 8-ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகள், 11-ந்தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், 15-ந்தேதி இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, 19-ந்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 22-ந் தேதி பயாலஜி, தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3, 4 நாட்கள் இடைவெளி உள்ளது.

    பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பதட்டம் அடையாமல் தேர்வு எழுதுவதற்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. வினாத்தாள்கள் கட்டுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுகாப்பாக விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது.
    • தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

    சென்னை:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இத்தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான தேர்வுக் கூட நுழைவு சீட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 20-ந்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று 'ஆன்லைன்-போர்டல்" என்ற வாசகத்தினை கிளிக் செய்து user ஐ.டி. பாஸ்வேர்டை கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இதே போல பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டினை 19-ந்தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம். பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மட்டும் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை எவ்வித குழப்பம் இல்லாமல் நடத்த தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.

    குறிப்பாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக வைக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கேள்விகளின் வரிசை மாற்றப்பட்டு இருக்கும். ஒரு தேர்வு மையத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏ, பி, என 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும்.

    இந்த 2 வகையான வினாத்தாள் வரிசை எண் மாற்றப்பட்டு இருக்கும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது.

    இது குறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்ட போது இந்த முறை 15 வருடத்திற்கு முன்பே இருந்து உள்ளது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படும். தற்போது 2 வகையில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என்றார்.

    • பிரக்யானந்தா தற்போது பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வருகிறார்.
    • 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந் தேதி நிறைவு பெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடர் குறித்து தற்போது வரை பல நாட்டு வீரர்களும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

    இந்நிலையில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை ஏற்கனவே இருமுறை தோற்கடித்து செஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்யானந்தா தற்போது பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வருகிறார். அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இன்று எனது 12-ம் வகுப்பு தேர்வில் ஆங்கில தேர்வுக்கான கேள்வி தாளை கொடுத்தனர். அதில் வந்த கேள்வியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கேள்வி என்னவென்றால், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எவ்வாறு நடைபெற்றது என்பதை விவரித்து வெளிநாட்டில் படிக்கும் உங்கள் நண்பருக்கு கடிதம் எழுதுங்கள் என கேள்வித்தாளில் இடம் பெற்றிருந்தது என குறிப்பிட்டிருந்தார்.

    பிரக்யானந்தாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இதனை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்விக்கு நீங்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றீர்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். முடிவுகள் வெளிவந்தவுடன் பகிரவும் என பதிவிட்டிருந்

    • மாணவி சம்ரித்தா பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
    • மாணவி லிபினா அருள், யாபியா ஜோஸ் ஆகியோர் தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    ஆலங்குளம்:

    நெல்லை மாவட்டம் இடைகாலில் உள்ள ஸ்டஅக் ஹை-டெக் பள்ளியில் பிளஸ் -2 வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுதேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று முதல் ஆண்டிலேயே 100 சதவீத தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளது.இதில் மாணவி சம்ரித்தா பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மேலும் தொடர்ந்து 3 ஆண்டுகளாக 10-ம் வகுப்பிலும் 100 சதவீத தேர்ச்சி என்ற உச்சம் தொட்டுள்ளது. 10-ம் வகுப்பில் மாணவி லிபினா அருள் மற்றும் யாபியா ஜோஸ் ஆகியோர் தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களையும், தனுபிரபா, ஜெசிந்த் ஹெப்சிபா மற்றும் ஸ்வீட்லின் அனி ஆகியோர் தகவல் தொழில்நுட்பம் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி மற்றும் முதல்வர் பிரவின்குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

    • 2 பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தார்
    • சால்வை அணிவித்தார்

    செய்யாறு:

    செய்யாறு டவுன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இங்கு படித்த கிஷேர் என்ற மாணவர் பிளஸ்-2 தேர்வில் பள்ளியில் முதல் இடமும், இரண்டு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெணும் எடுத்தார்.

    ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பி.டி.ஏ. தலைவர் அசோக் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 12-வது இடம்பெற்றது.
    • கடந்த ஆண்டு வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இந்த ஆண்டு ராமநாதபுரம் பின்னடைவை சந்தித்துள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் பிளஸ் -2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் 6790 பேரும், மாணவிகள் 7516 பேரும் என மொத்தம் 14306 பேர் தேர்வு எழுதினர்.இதில் 6413 மாணவர்கள், 7364 மாணவிகள் என மொத்தம் 13777 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விழுக்காடு 94.45 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விழுக்காடு 97.98 சதவீதம் ஆகும்.

    தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடும்போது 96.30 விழுக்காடு பெற்று மாநிலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 12-வது இடத்தை பெற்றுள்ளது.மொத்தம் 70 அரசு பள்ளிகளில் 18 அரசு பள்ளிகளும்,அரசு உதவி பெறும் 37 பள்ளிகளில் 8 பள்ளிகளும்,53 மெட்ரிக் பள்ளிகளில் 47 மெட்ரிக் பள்ளிகளும்,100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாவட்ட அளவில் ஒப்பிடும்போது 160 பள்ளிகளில் 73 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற பிளஸ்2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 13 மாணவிகளும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 மாணவர்களும் தேர்வை எழுதி இருந்தார்கள்.

    இத்தேர்வு முடிவுகளை இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்த மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

    • நகர்புற மாணவர்களை விட கிராமபுற மாணவர்கள் தான் அதிகம் பேர் தேர்வை எழுதவில்லை என்பது தெரியவந்தது.
    • மாணவர்களின் பள்ளி கல்வியில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட தாக்கம் குறித்து இதுவரை சரியான ஆய்வு முடிவுகள் இல்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 தேர்வில் 3 அல்லது 4 சதவீதம் பேர் தான் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பொது தேர்வில் ஆப்சென்ட் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த ஆண்டு பிளஸ் -2 தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். இதில் மொழித்தாள் தேர்வை 49 ஆயிரத்து 559 பேர் எழுதவில்லை.

    கடந்த ஆண்டு 32 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழித்தேர்வை எழுதவில்லை. இந்த ஆண்டு இது 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    நகர்புற மாணவர்களை விட கிராமபுற மாணவர்கள் தான் அதிகம் பேர் தேர்வை எழுதவில்லை என்பது தெரியவந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தேர்வு பயம், உடல்நிலை சரிஇல்லாதது , வைரஸ் காய்ச்சல் பரவல் போன்ற காரணங்கள் சொல்லப்படுகிறது.

    சில மாவட்டங்களில் பெற்றோருடன் சேர்ந்து மாணவ- மாணவிகள் வேலைக்கு சென்று விடுவதால் அவர்களால் தேர்வுக்கு வர முடியாத நிலை உள்ளது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அரசு பள்ளியில் எவ்வளவு பேர், தனியார் பள்ளியில் எவ்வளவு பேர் தேர்வு எழுதவில்லை என்ற பட்டியலை எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசாரணையில் தேர்வு எழுதாத 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பில் பெயிலானவர்கள் என்பது தெரியவந்தள்ளது.

    கடந்த ஆண்டு நடந்த பிளஸ்- 1 தேர்வில் 83 ஆயிரத்து 819 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் பிளஸ்-1 துணைத்தேர்வு எழுதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி பெறாததால் பிளஸ் -2 தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும் என்ற பயத்தில் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அவர்கள் பெயர்கள் பள்ளி பதிவேட்டில் இருந்து நீக்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. அந்த மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரனோ காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் ஆல் பாஸ் செய்யப்பட்டது. சென்ற ஆண்டு பாதி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முழு அளவிலான பாடத்திட்டத்தின்படி தேர்வு நடத்தப்படுவதால் எங்கே நாம் தேர்ச்சி பெற முடியாமல் போய் விடுவோமோ என்ற பயத்தில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராததால் மாணவர்கள் மத்தியில் ஒருவித பயம் ஏற்பட்டு உள்ளதாகவும் , அவர்களை மனதளவில் தயார் செய்ய வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்ற ஆண்டு 12- ம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ளாததற்கான காரணங்களை அறிய மாநில அரசு விரிவான ஆய்வு நடத்தியிருக்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

    முன்னாள் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கே.தேவராஜன் கூறும்போது, மாணவர்களின் பள்ளி கல்வியில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட தாக்கம் குறித்து இதுவரை சரியான ஆய்வு முடிவுகள் இல்லை. அத்தகைய ஆய்வு அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க உதவும் என்றார்.

    மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவது ஏன்? என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும், கல்வி துறை இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் விரிவான முறையில் கலந்து ஆலோசித்து மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை வேண்டும் என முன்னாள் கல்வி நிபுணர் அருணா ரத்தினம் தெரிவித்து உள்ளார்.

    • இவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
    • அனைத்து மாணவர்களும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தல்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மொழி பாடத்தேர்வு நடைபெற்றது. அதில் மொத்தம் விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல் நாளில் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

    தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கமாக 4 முதல் 5 விழுக்காடு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வின் போது ஆப்சென்ட் ஆவது வழக்கமான ஒன்றுதான் இதில் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இருந்தாலும் 8 லட்சம் மாணவர்களில் 50 பேர் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரக்கூடிய தேர்வுகளில் இதே அளவு ஆப்சென்ட் இருக்குமா? என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அதிகாரிகளுடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.

    ஜூன் 23-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவ-மாணவிகள் 10, 11, 12-ம் வகுப்பு பொது தேர்வினை எழுதி முடித்துள்ளனர்.

    மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. சுமார் 28 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.

    பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு இடையே மாற்றி அனுப்பப்பட்டன. முகாம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பாடம் மற்றும் மொழி வாரியாக திருத்தம் செய்யப்படுகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. 83 முகாம்களில் இந்த பணி நடைபெறுகிறது.

    8 லட்சத்து 37 ஆயிரம் மாணவ-மாணவிகள் விடைத்தாள்களை 76 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியைகள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் 87 முகாம்களில் 87 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 லட்சத்து 56 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.

    விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனத்துடன் ஈடுபட வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தேர்வுத்துறை விதித்துள்ளது. இதற்காக கையேடு வெளியிடப்பட்டு விடைத்தாள் முகாம் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் என்னென்ன பணிகள் என்பதை பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மண்டல முகாம் அலுவலர், முகாம் அலுவலர், முதன்மை தேர்வாளர் பணிகள், கூர்ந்தாய்வு அலுவலரின் பணிகள், உதவி தேர்வாளரின் பணிகள் என தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பொதுவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பீட்டு எண் மிக முக்கியமாக மற்றும் இன்றியமையாத பணியாகும். மைய மதிப்பீட்டு பணியில் ஒவ்வொரு வேலையும் சுமூகமாகவும், சரியாகவும் மற்றும் கடும் மந்த தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    முகாம் அலுவலர் தனது மைய மதிப்பீட்டு பணியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு வேகமாகவும், துல்லியமாகவும், விழிப்புணர்வுடனும் செய்யப்பட்டு முகாமினை உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும். முகாம் அலுவலரே முகாம்களுக்கு முழு பொறுப்பு. மைய மதிப்பீட்டு பணி நடைபெறும் முகாம்களுக்கு வெளிநபர் யாரையும் அனுமதிக்க கூடாது.

    முகாமில் நடைபெறும் எந்தவொரு குளறுபடிகளும் முகாம் அலுவலரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    விடைத்தாள்கள் 10 நாட்களுக்குள் திருத்தி முடிக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கும். ஜூன் 23-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ×