search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pimples"

    • முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
    • வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது.

    இன்றைய காலக்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலாகத் உள்ளது.

    பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வெளிப்படையான பயன்பாடுகளை பொருத்த வரையில் தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் பரவக்கூடும்.

     முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் பிம்பிள்ஸ் பிரச்சனை இருக்காது.

     கரும்புள்ளிகள் மறைய:

    வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக்கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல எலுமிச்சை சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

     முகத்தில் உள்ள வடுக்கள் நீங்க:

    முகத்தில் பல்வேறு விதமான வடுக்கள் ஏற்படுகின்றன. முகப்பரு வடு, அம்மைத் தழும்பு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்றவை. தொடக்கத்திலேயே இதற்கு அழகு சிகிச்சை கொடுத்தால் நிரந்தரமாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்தான் இதனை குணப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இருந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம்.

    இயற்கை அழகு சிகிச்கை:

    ஐம்பது சதவீத அளவிலான பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். இதற்கு பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணம். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது.

    வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு, போன்றவைகளை அரைத்து தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தேய்க்க வேண்டும். பத்து வயதில் இருந்து சிறுமிகளுக்கு இதனைதேய்து குளிப்பாட்டினால் தேவையற்ற ரோமங்கள் வளருவதை முதலில் இருந்தே தவிர்த்துவிடலாம்.

    • வைட்டமின் சி சீரமில் ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிகமாக இருக்கும்.
    • சருமத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள வைட்டமின் சி சீரம் உதவுகிறது.

    வைட்டமின் சி நம்முடைய உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல தான் நம்முடைய சருமத்துக்கும் வைட்டமின் சி அவசியம். இது சருமத்தில் உண்டாகும் இன்ஃபிளமேஷன்கள் முதல் தீவிரமான சருமப் பிரச்சினைகள் வரை தீர்க்கச் செய்யும். இந்த வைட்டமின் சி சீரமில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகமாக இருக்கும். நம்முடைய உடலுக்கு எப்படி ஆக்சிடென்ட்கள் தேவையோ, அதேபோல தான் சருமத்திற்கும் வைட்டமின் சி அவசியம்.

    சருமத்தில் உள்ள ப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் புறஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் இந்த வைட்டமின் சி முக்கியப் பங்கு வகிக்கிறது.

    சருமத்தில் அதிக சுருக்கங்கள் ஏற்படுவது இளம் வயதிலேயே வயதான தோற்றத்தைக் கொடுக்கும். நம்முடைய சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறைவாக இருக்கும் போது சருமம் அதிக வறட்சி அடையும். சருமத்தை நீரேற்றத்துடனும் மென்மையாகவும் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் இல்லாமல் இளமையாகவும் வைத்திருப்பதில் கொலாஜன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க வைட்டமின் சி சீரம் உதவி செய்கிறது.

    சருமம் நெகிழ்வுத் தன்மையுடனும் இளமையாகவும் இருக்க வேண்டுமென்றால் உங்களுடைய பகல் நேர சரும பராமரிப்பில் வைட்டமின் சி சீரம் பயன்படுத்துங்கள்.

    சருமத்தில் கரும்புள்ளிகள், தடிப்புகள், பருக்கள் ஆகியவை இல்லாமல் தெளிவான க்ளியர் சருமத்தையும், பளபளக்கும் சருமத்தையும் பெறுவதற்கு வைட்டமின் சி மிக முக்கியம். குறிப்பாக வைட்டமின் சி -யில் உள்ள ப்ளீச்சிங் பண்பு சருமத்தின் மேல் அடுக்குகளில் உள்ள கருமை, சன் டேன் ஆகியவற்றை போக்கி சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

    குறிப்பாக சருமத்தில் ஆங்காங்கே காணப்படும் கருந்திட்டுக்கள், பெண்களுக்கு 40 வயதிற்குமேல் ஏற்படும் மங்கு பிரச்சனை, சூரிய வெப்பத்தால் ஏற்படும் சன் டேன் அதிகரிப்பதால் ஏற்படும் பிக்மண்டேஷன்கள் ஆகியவற்றை குறைத்து சருமத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள வைட்டமின் சி சீரம் உதவுகிறது.

    உடலுக்கு நீர்ச்சத்து எவ்வளவு அடிப்படையோ அவசியமோ அதே அளவிற்கு சருமமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். அந்த வகையில் வைட்டமின் சி சீரம் பயன்படுத்தும் போது சருமம் அதிக நீர்ச்சத்துடன் இருக்கும்.

    வைட்டமின் சி சீரமில் நீர்ச்சத்துக்கான மூலக்கூறுகள் அதிக அளவில் இருக்கின்றன. இவை சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதோடு தோலின் வறட்சியைப் போக்கி நல்ல மாய்ஸ்ச்சரைசராகவும் செயல்படும்.

    இயற்கையாகவே சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உற்பத்தியாகும். அப்படி இறந்த செல்கள் நீங்கும்போது சருமத்தில் சின்ன சின்ன புள்ளிகள், கருமை, தோலுரிதல், சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக நாம் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வதற்கு ஸ்க்ரப் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும்போது அழுத்தி தேய்ப்பதால் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றை சரிசெய்து சருமம் சிவந்து போதல், தடித்தல் போன்ற பிரச்சினைகளை மிக வேகமாக ஆற்றும் ஹீலிங் பண்பு வைட்டமின் சி சீரமில் அதிகமாக இருக்கிறது.

    சூரிய கதிர்வீச்சில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்களின் தாக்கத்தால் சருமத்தில் நேரடியான பாதிப்புகள் உண்டாகும். சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க தவறினால் அது சருமத்தில் சிறு சிறு பாதிப்புகள் தொடங்கி, சரும புற்றுநோய் வரை கொண்டு போய்விடும். அதனால் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதோடு சேர்த்து வைட்டமின் சி சீரமும் பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் சருமத்திற்கு டபுள் புரொடக்ஷனை கொடுக்கும். புற ஊதா கதிர்களின் தாக்கத்தின் தன்மையை குறைத்து இளமையாக வைத்திருக்கச் செய்யும்.

    ஸ்கின் டோன் பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. முகம் மற்றும் சருமத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு நேரத்திலும் மற்ற இடங்கள் கருமையாகவும் அதாவது வாயைச் சுற்றிய பகுதிகள், கண்ணுக்கு அடியில், கைகளில் முட்டிக்கு மேல் என சில பகுதிகள் கருமையாகவும் மற்ற பகுதிகள் வேறு நிறத்திலும் என இருப்பவர்கள் மிக அதிகம்.

    இந்த பிரச்சினையை சரிசெய்வதில் வைட்டமின் சி சீரம் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்த வைட்டமின் சி சீரமில் உள்ள ப்ளீச்சிங் பண்பு சருமத்தில் ஆங்காங்கே இருக்கும் கருமை, கருத்திட்டு ஆகியவற்றைச் சரிசெய்து சருமத்தை ஒரே நிறமாக வைத்திருக்க உதவி செய்யும். எனவே சருமத்தில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனையை சரிசெய்ய உதவும்.

    வைட்டமின் சி சீரமை உங்களுடைய சரும பராமரிப்பில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.

    • சுருக்கங்கள் வராமல் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • முகம் நீர்ச்சத்தோடு நல்ல மாய்ஸ்ச்சராக இருக்கும்.

    சிலருக்கு நல்ல கலராக இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால் சிலருக்கோ இருக்கும் கலர் போதும் ஆனால் சருமத்தில் எந்த பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் வராமல் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். இதில் இரண்டாவது விருப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. சருமம் கலராக இருக்கிறதோ இல்லையோ ஆரோக்கியமாக மற்ற பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்..

    அரிசி கழுவிய தண்ணீர்

    முகம் கழுவுவதற்கு நாம் விதவிதமாக சோப்புகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் கொரிய பெண்களோ அரிசி கழுவிய தண்ணீரே முகம் கழுவுவதற்கு சிறந்த கிளன்சராக பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் அது சருமத்தை நீண்ட நேரம் நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவி செய்யும்.

    ஒரு ஸ்பூன் அரிசியை ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி முகம் கழுவுவதற்குப் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி, முகம் நீர்ச்சத்தோடு நல்ல மாய்ஸ்ச்சராக இருக்கும்.

    கிரீன் டீ ஐஸ்கியூப்

    கிரீன் டீயில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளும் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகளும் அதிகமாக இருக்கின்றன. இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது மட்டுமின்றி சருமத்தையும் டீடாக்ஸ் செய்ய உதவி செய்யும்.

    ரெண்டு ஸ்பூன் கிரீன் டீ சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை பிரிட்ஜில் ஐஸ் க்யூப் டிரேவில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். அது ஐஸ் ஆன பிறகு அந்த ஐஸ் கட்டிகளை எடுத்த சருமத்தில் நன்கு மசாஜ் செய்து வர சருமத்துளைகள் திறந்து அதில் உள்ள மாசுக்கள் வெளியேறும் கண் முக வீக்கங்கள் குறையும் சருமம் பொலிவுடன் பளிச்சென்று இருக்கும்.

    எலுமிச்சை - தேன் மாஸ்க்

    நம்முடைய சரும துளைகளுக்குள் நாம் பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்கள் சுற்றுச்சூழலில் இருந்து வரும் மாசுக்கள் ஆகியவை படிந்திருக்கும். அதனால் சரும துளைகளுக்குள் இருக்கும் மாசுகளை வெளியேற்றவும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாவதற்கும சருமம் சரியாக சுவாசிப்பதற்கு இடமளிப்பதும் அவசியம். அதற்கு மிகச்சிறந்த ஒன்றாக இந்த எலுமிச்சை - தேன் மாஸ்க் இருக்கும்.

    இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். முகத்தை நன்கு கழுவி விட்டு இந்த கலவையை அப்ளை செய்து 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்பு விரல்களால் லேசாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த மாஸ்கை முகத்தில் அப்ளை செய்து வரும் பொழுது சருமத்தில் உள்ள பெரிய துளைகள், பள்ளங்கள் ஆகியவை சிறிதாக ஆரம்பிக்கும். சருமம் சுத்தமாகும்.

    சரும பராமரிப்பு முக பராமரிப்பு என்று சொன்னாலே நம்முடைய முழு கவனமும் முகத்தில் தான் இருக்கிறதே தவிர கண்களைப் பற்றி நாம் பெரிதாக கண்டு கொள்வதே இல்லை.. ஆனால் கண்கள் தான் முகத்தின் உயிராக இருக்கிறது என்பதை உணர வேண்டும். கண்ணுக்கு கீழ் கருவளையம், கண்களுக்கு கீழ் உள்ள வீக்கமாகி அவற்றை குறைக்க உருளைக்கிழங்கு அற்புதமான ஒரு வீட்டு வைத்தியம் என்று சொல்லலாம்.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு வட்ட வடிவில் மெலிதான துண்டுகளாக நறுக்கி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுங்கள். இப்படி செய்யும் போது கண்கள் குளிர்ச்சி அடைவதோடு கண்களைச் சுற்றிலும் உள்ள கருவளையங்கள் நீங்கும். சருமத்தை பட்டு போன்ற மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள கொரிய பெண்கள் தயிரை பயன்படுத்துகிறார்கள். தயிர் அவர்களுடைய சரும பராமரிப்பில் மிக முக்கிய இடத்தைப் பெற்று இருக்கிறது.

    இரண்டு ஸ்பூன் தயிருடன் கால் ஸ்பூன் அளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பிறகு மென்மையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி வைத்து கொள்ளலாம். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த தீர்வாகவும் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளவும் மாய்ஸ்ச்சராக வைத்துக் கொள்ளவும் இது உதவி செய்யும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்கு கழுவி விட்டு கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்வது கொரிய பெண்களின் மிக முக்கியமான இரவு நேர சரும பராமரிப்பு ஆகும்.

    கற்றாலை ஜெல்

    இரவு முழுவதும் சருமத்தில் கற்றாழை ஜெல்லை அப்ளை செய்திருக்கும் பொழுது அது சருமத்தில் உள்ள காயங்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் ஆகியவற்றைப் போக்கவும் நல்ல ஹீலிங் பண்பு கொண்டிருப்பதால் சருமத்தில் உள்ள அரிப்புகள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவியாக இருக்கும். கொரியப் பெண்களின் சரும பராமரிப்பில் ஷீட் மாஸ்க் களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்த சீட் மாஸ்குகள் சருமத்தின் வறட்சியைப் போக்குவதோடு சருமத்தை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க செய்யும்.

    இன்னொரு முக்கியமான விஷயம் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க இந்த சீட் மாஸ்குகள் பயன்படும். அதிலும் வெள்ளரிக்காய் உட்பொருளாக சேர்க்கப்பட்ட ஷீட் மாஸ்குகளைப் பயன்படுத்தும்போது சருமம் மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், மூக்கை சுற்றிலும் உள்ள வெண்புள்ளிகள் ஆகியவற்றைக் குறைக்க முட்டையின் வெள்ளைக் கருவைப் பயன்படுத்தலாம்.

    முட்டையின் வெள்ளை கரு மாஸ்க்.

    பளபளப்பாக கண்ணாடி போல இருந்தாலும் வறட்ச்சியாகவும் இருக்காது, அதிக எண்ணெய் பசையுடனும் இருக்காது. சருமத்தின் பிஎச் அளவை சமநிலையில் பராமரிக்கும். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான மாஸ்குகளில் ஒன்று தான் முட்டையின் வெள்ளை கரு மாஸ்க்.

    முட்டையின் வெள்ளைக் கருவை தனியே பிரித்து எடுத்து, நன்கு ஸ்பூனால் பீட் செய்து முகம் மற்றும் மூக்கு பகுதிகளில் நன்கு அப்ளை செய்து 20 நிமிடம் வரை அப்படியே ஊற விட்டு விட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து பீல் ஆப் மாஸ்க் போல அதை உரித்து எடுத்து விட்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட்டுப் பாருங்கள். முதல் முறை அப்ளை செய்யும்போதே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

    சரும பராமரிப்புகளில் நம்மில் பெரும்பாலானோர் கண்டுகொள்ளாமல் விடும் விஷயம் இந்த மசாஜ் தான். எவ்வளவு சரும பராமரிப்புகள் செய்தாலும் சருமத்தை சரியாக மசாஜ் செய்யவில்லை என்றால் சருமத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. சருமத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி சருமத்தை மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் மாய்ஸ்ச்சராகவும் வைத்துக் கொள்வதற்கு மசாஜ் மிக முக்கியம்.

    • துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது.
    • துளசி ஃபேசியல் செய்தால் முகப்பருக்கள், தழும்புகள் மறையும்.

    துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பசை போல் அரைக்கவும். அதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், அவற்றால் உண்டாகும் தழும்புகள் நீங்கும்.

    எண்ணெய்ப்பசை நீங்க:

    ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை பசை போல அரைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு கலக்கவும். இதை  முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2 முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.

    முகச்சுருக்கம் மறைய:

    ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக்கொண்டு முகத்தை கழுவவும். தினமும் இதுபோல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறைந்து இளமை அதிகரிக்கும்.

    முகம் பொலிவு பெற:

    சிறிதளவு துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அது நன்றாக கொதித்த பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும், அந்த தண்ணீருடன் சிறிதளவு சந்தனம் சேர்த்து ஃபேஸ்பேக் தயாரிக்கவும். அதை முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவவும். அவ்வப்போது இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.

    முகத்தில் கரும்புள்ளிகள் மறைய:

    சிறிதளவு துளசி இலைகளை நன்றாக அரைத்து, அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் கலந்து முகத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்த பின்பு ஈரமான துணியால் மென்மையாக துடைத்து எடுக்கவும். பிறகு சிறு துண்டு பஞ்சை ரோஸ்வாட்டரில் தோய்த்து அதைக்கொண்டு முகத்தை துடைக்கவும். இதுபோல் வாரத்திற்கு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

    முகத்தில் உள்ள வறட்சி நீங்க:

    2 சிட்டிகை துளசி பொடியுடன், 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் பூசவும். ௧௫ நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் சரும வறட்சியை போக்கி, முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.

    சருமம் புத்துணர்ச்சி பெற:

    சிறிதளவு துளசி மற்றும் புதினாவுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பசை போல அரைக்கவும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி நன்றாக உலர்ந்த பிறகு கழுவவும், இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

    • தேன் பாரம்பரியமாகவே முகத்தில் இருக்கும் வடுக்களையும் தழும்புகளையும் போக்க கூடியது.
    • வெங்காயம் அழற்சி, எதிர்ப்பு பண்புகளை கொண்டவை.

    முகத்தில் அம்மை வடு, தழும்பு, காயங்கள் போகணுமா ? இதை செய்துபார்த்து பயன் அடையுங்கள்

    உடலில் காயங்களினால் ஏற்படும் தழும்பு ஆறாமல் இருந்தால் முகம், உடல் என எந்த இடத்தில் இருந்தாலும் அது அசெளகரியாகவே நினைக்க தோன்றும். அதிலும் அவை முகத்தில் வந்தால் அழகையும் குறைத்து காட்டும்.

    தழும்புகள், வடுக்கள், காயங்கள் என எதுவாக இருந்தாலும் அதன் பாதிப்பை குறைத்து சருமம் பழைய தோற்றத்தை பெறுவதற்கு வீட்டு வைத்தியங்கள் உண்டு. எளிமையான முறையில் இதை சரி செய்ய உங்களுக்கு இந்த வைத்தியம் உதவும்.

    எலுமிச்சை

    எலுமிச்சை ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது தழும்புகளின் தோற்றத்தை மங்க செய்யும். குறிப்பாக முகப்பருக்கள், பருக்களினால் வந்த தழும்புகளை குணப்படுத்த இவை உதவும்.

    எலுமிச்சை சாறு - 3 அல்லது 4 டீஸ்பூன் அளவு நீர்த்தது

    காட்டன் பஞ்சு - சிறு உருண்டை

    பாதிக்கப்பட்ட இடத்தை முதலில் க்ளென்ஸ் செய்யுங்கள். பின்னர் எலுமிச்சை சாறில் சிறு பஞ்சு உருண்டையை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை சுத்தம் செய்யவும். பிறகு வெளியில் செல்வதாக இருந்தால் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்யவும். தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.

    சிலருக்கு எலுமிச்சை சாறு சருமத்தில் ஒவ்வமையை உண்டாக்கலாம். அதனால் பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்துங்கள். ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

    தேன்

    தேன் பாரம்பரியமாகவே முகத்தில் இருக்கும் வடுக்களையும் தழும்புகளையும் போக்க கூடியது. தேனில் இருக்கும் பண்புகள் காயங்களை குணப்படுத்தக்கூடியவை. இதனுடன் பேக்கிங் சோடா இணைந்து பயன்படுத்தும் போது அது சரும வடுக்களை மங்கி காட்டும்.

    தேன் - 1 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா- 1 டீஸ்பூன்

    வெதுவெதுப்பான நீர் - தேவைக்கு

    சுத்தமான மெல்லிய துணி - தேவைக்கு

    தேனையும் பேக்கிங் சோடாவையும் நன்றாக குழைக்கவும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு மெல்லிய துணியை வெந்நீரில் நனைத்து அதன் மேல் போர்த்தி பிறகு சுத்தம் செய்யவும். தினமும் இரண்டு முறை செய்யலாம்.

    வெங்காயம்

    வெங்காயம் அழற்சி, எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. இது கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்ட சருமம் இயல்பு நிலைக்கு திரும்பும்.

    வெங்காயச்சாறு - தேவைக்கு

    சிறிய வெங்காயமாக இருக்கட்டும். வெங்காயத்தை தோல் உரித்து சாறு எடுக்கவும். இதை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். முகத்தில் அதிகமான காயங்களும் தழும்புகளும் இருந்தால் தினமும் 3 வேளை இதை செய்து வரலாம். வெங்காயம் சருமத்துக்கு பயன்படுத்தினால் பிறகு மாய்சுரைசர் பயன்படுத்துவதை மறக்க வேண்டாம். கண்டிப்பாக மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.

    சோற்றுக்கற்றாழை

    சோற்றுக்கற்றாழை அழற்சி எதிப்பு பண்புகளை கொண்டவை. இது சரும எரிச்சலை போக்க கூடியது. சருமத்தில் உண்டாகும் வடுக்களையும் போக்கும். சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும்.

    சோற்றுக்கற்றாழை மடல்களில் இருந்து ஜெல் போன்ற பகுதியை எடுக்கவும். கடைகளில் கற்றாழை ஜெல் கிடைக்கும். இதை வாங்கி மசாஜ் செய்யலாம். தேவையான இடத்தில் இதை தடவி மென்மையாக மசாஜ் செய்து விடவும். இதற்கு பிறகு சருமத்தை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வரை இதை பயன்படுத்தலாம்.

    நெல்லிக்காய்

    நெல்லிக்காய் வைட்டமின் சி அடங்கிய சிறந்த பொருள். இதை உள்ளுக்கு எடுப்பது போன்று வெளிப்புற பூச்சுக்கும் பயன்படுத்தலாம். இது வடுக்களை குறைக்க செய்யும். இது நாள்பட்ட தழும்புகளையும் வடுக்களையும் மாற்றி சருமத்தை புதியது போல் ஜொலிக்க செய்யும்.

    நெல்லிக்காய் பொடி (கொட்டை நீக்கியது)

    ஆலிவ் ஆயில் - தேவைக்கு

    நெல்லிக்காய் பொடியை தேவைக்கு எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட் போல் குழைக்கவும். இதை முகத்தில் அல்லது உடலில் என பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். ஒவ்வொரு மாற்று நாளிலும் இதை பயன்படுத்தலாம்.

    உருளைக்கிழங்கு சாறு

    உருளைக்கிழங்கு சாறு பைட்டோகெமிக்கல் சருமத்தில் இருக்கும் வடுக்களை மந்தமாக்க செய்யும். இது பிக்மெண்டேஷன் போக்குவதோடு கருவளையம், முகப்பரு மற்றும் பருக்களையும் போக்கும் தன்மை கொண்டவை. இது சரும நிறத்தை மீட்டு கொடுக்கும்.

    உருளைக்கிழங்கு சாறு - 2 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு துருவி அரைத்து அதன் சாறை எடுக்கவும். அதில் காட்டன் உருண்டையை நனைத்து ஊறவைத்து முகத்தில் தடவி விடவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்து வரலாம்.

    தழும்புகள், வடுக்களை போக்க வைட்டமின் ஈ மாத்திரைகள் உதவும். மருத்துவரின் அறிவுரையோடு வைட்டமின் ஈ மாத்திரைகள் எடுக்கலாம். வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் சேர்க்கலாம். இவை எல்லாம் சருமத்தில் இருக்கும் காயங்கள், வடுக்கள், தழும்புகளை அதன் தீவிரம் பொறுத்து மந்தமாக்கும் அல்லது குணப்படுத்தவும் செய்யும்.

    • வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும்.
    • வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    நாம் ஒவ்வொருவரும் அழகாக இருக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறோம். அந்த வகையில், இயற்கை நமக்கு பல்வேறு தீர்வுகளையும் வழிகளையும் கொடுக்கிறது. அத்தகைய ஒரு தீர்வு வேம்பு. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். வேம்பு உங்கள் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதோடு, தெளிவான மற்றும் பொலிவான சருமத்தையும் உங்களுக்கு கொடுக்கிறது. வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு வேம்பு ஃபேஸ்பேக் பயன்படுத்துவது இயற்கையான சிறந்த வழியாகும். வேப்பம்பூ ஃபேஸ்பேக்கை வழக்கமாகப் பயன்படுத்துவது சரும வீக்கத்தைக் குறைக்கவும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவும்.

    வேப்பம்பூ அல்லது வேப்பம் இலைகளை தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது தேன் போன்ற கேரியர் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட்டாகவும் தயாரித்து முகப்பரு உள்ள இடத்தில் இந்த பேஸ்ட்டை போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதை அடிக்கடி போட்டு வந்தால் விரைவில் நல்ல பலனை நீங்கள் பார்ப்பீர்கள்.

    வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

    ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.

    வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.

    வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

    • பருக்களை விரல்களால் கிள்ளுவதை முதலில் கைவிடவேண்டும்.
    • கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும்.

    இன்றைய இளைஞர்கள் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. பொதுவாக, 13 வயதில் முகப்பரு தொடங்கி 35 வயதுவரை இது நீ்டிக்கும். சிலருக்கு, இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு. சில பெண்களுக்கு மாதவிலக்கின்போது, மாறும் ஹார்மோன்களின் அளவினாலும் அந்த சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும். அதுபோன்று, சினைப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு முகப்பரு வருவது வழக்கம்.

    ஆல்பா ரெடக்டேஸ் எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படலாம். இந்த என்சைம் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்தி, பருக்கள் வர வழிவகுக்கிறது.

    முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், அதற்கு மேல் களிம்பு தங்கினால், அதில் தூசு சுலபமாக ஒட்டிக் கொள்ள, எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும். தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனச் சோப்பு நல்லது. அடிக்கடி சோப்பை மாற்றக்கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்வது இன்னமும் நல்லது. முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும் கூடாது. வாரத்திற்கு இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது. முகப்பரு உள்ளவர்கள் முகத்தில் பவுடர் பூசுவதை தவிர்ப்பது நல்லது.

    முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும். உடலில் கொழுப்பின் அளவு கூடும்போதும், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள வாய்ப்புண்டு.

    எந்நேரமும் பருக்களை விரல்களால் கிள்ளுவதை முதலில் கைவிடவேண்டும். பருக்களிலிருந்து வெள்ளைநிறக் குருணைகளை வெளியேற்ற பருக்களைக் கிள்ளாதீர்கள், பிதுக்காதீர்கள் மிகவும் தேவைப்பட்டால் மட்டும் இதற்கென்றே இருக்கிற இடுக்கியைப் பயன்படுத்துங்கள்.

    நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுவது நல்லது. தினசரி 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்சா, பர்கர், தந்தூரி, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், எண்ணெய் பலகாரம் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

    • முகப்பரு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
    • முகப்பரு வந்தால் அதை கிள்ள கூடாது.

    உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் இளம் வயதினருக்கு அடிக்கடி முகத்தில் பருக்கள் தோன்றும். இதற்கு அதிகமாக நீரை குடிப்பது, சீரான உணவு பழக்கம் போன்றவற்றால் குணப்படுத்தலாம். மேலும் ஒரு பரு வந்தாலும் அதை கிள்ளி விட்டால் அது மேலும் மோசமாகி அதிக பருக்கள் தோன்றும். அதனால் முகப்பரு வந்தால் அதை கிள்ள கூடாது. சிலருக்கு மாத விடாய் காலத்தில் பரு வந்து, அது முடிந்ததும் மறைந்து விடும். ஆனால் சிலருக்கு அந்த தழும்புகள் முகத்தில் தோன்ற காரணம் அதை கிள்ளி விடுவதுதான். தவறான உணவு பழக்கவழக்கங்கள், அதிகப்படியான மன அழுத்தம், மாசுபட்ட சூழலில் வாழ்வது, மற்றும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் என முகப்பரு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

    அனைவரும் மிக வேகமாக இயங்கி வரும் இந்த வாழ்க்கை முறையில் முகப்பரு வராமல் பாதுகாத்துக் கொள்ள அதுக்கென தனி நேரம் ஒதுக்கி நம் சருமத்தை பராமரிப்பது அனைவருக்கும் முடியாத செயல். இதனால் முகப்பரு ஏற்பட்டு மறைந்தாலும் கூட அந்த தழும்பு அப்படியே இருக்கும். இது போன்ற காரணங்களினால் முகப்பரு வராமல் தடுப்பது சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.

    1. ஒருவருக்கு அடிக்கடி நெற்றியில் பரு வந்து போகிறது என்றால் அவருக்கு ஜீரண சக்தி சீரில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

    2. உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் சரியாக வெளியேற்ற படாததாலும், நெற்றியில் முகப்பரு அடிக்கடி வரும் வாய்ப்புள்ளது.

    3. பருக்கள் வராமல் தடுக்க நீங்கள் சாப்பிடக்கூடிய உணவு பண்டங்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.

    4. முகத்தில் பருக்கள் வராமல் பாதுகாக்க நிறைய தண்ணீரை குடிப்பது அவசியம். குறிப்பாக நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் பழங்களை உட்கொள்ளலாம்.

    5. அடிக்கடி ஆரஞ்சு பழம், மாதுளை பழம், சாத்துக்குடி, போன்ற பழங்களை சாப்பிடுவோருக்கு பருக்கள் வராது.

    6. பருக்கள் வராமலிருக்க காய்கறிகளை அதிகமாக உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர்பானங்களை நீங்கள் குடிக்க கூடாது.

    நம்முடைய கைகளில் பல வித கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் தோற்றி இருக்க கூடும். அதே கையோடு நம் முகத்தை தொடும்போது அதில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் முகத்தில் பரவி முகப்பருவை உண்டாக்குகின்றன.

    எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் அதிக அளவு எண்ணெய் மற்றும் சீபம் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் முகப்பருக்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

    • வெட்டிவேர் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • சருமத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது.

    பழுப்பு நிறமும், பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட வெட்டிவேரின் வேர்ப்பகுதி மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

    கோடை காலமோ, குளிர்காலமோ ஒரு சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்து, எண்ணெய் வழியும். இதனால் பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு வாசனையான பேக் போடலாம். வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள். வெட்டிவேர் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

    வெட்டி வேர் (vettiver) எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை உடலில் தேய்த்து தினமும் குளிக்கலாம். 

    வெட்டி வேர் தூளுடன் தண்ணீர் சேர்த்து குலைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலரவிட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துண்டால் துடைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி 'பேக்' போட்டு வந்தால் பருக்கள் நீங்கி முகம் வசீகரமாகும்.

    சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊறவைத்து தலைமுடிக்கு தேய்த்துவர வேண்டும். தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கருமையாக முடி வளரும். கண்களும் குளிர்ச்சியடையும். 

    தலைக்கு தேய்த்து குளிக்கும் சீயக்காய்க்கு பதிலாக வெட்டி வேர் பவுடரை பயன்படுத்தலாம். வெட்டி வேர் தூளை தலைக்கு தேய்த்து குளிப்பதால், முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும்.

    வெட்டி வேரை சிறு சிறு துண்டுகளாக்கி, அதனுடன் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதை அரைத்து விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.

    பாசிப்பயறு 100 கிராம் ,வெட்டிவேர் 50 கிராம் எடுத்து அந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இந்தப் பவுடரை உடலுக்கு தேய்த்துக் தினமும் குளித்து வந்தாலே உடம்பில் வரும் சிறு சிறு உஷ்ணக் கட்டிகளும் , உடல் விரிவதனால் ஏற்படும் வரிகளும் மறைந்து போகும்.

    வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி வர இயற்கையாக முகம் அழகு பெறும். 

    வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.

    பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

    • முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்.
    • பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி.

    சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுப்பது அவசியம்.

    முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

    கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், பாலாடை போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

    பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி. அன்றாட உணவுப் பழக்கத்தைச் சரிசெய்வதன் மூலமாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பருக்களைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், கடைகளில் கிடைக்கும் எந்தவித வாசனை சோப்புகளையும் லோஷன்களையும் பயன்படுத்தக் கூடாது.

    முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயனத்தன்மை இருக்கிறது. இது சருமத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

    பொடுகுத் தொல்லை,​ நீளமாக நகம் வளர்த்தல்,​ முறையற்ற உணவுப்பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவற்றைத் தனித்தனியாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். முகப்பரு இருப்பவர் பயன்படுத்தும் பொருள்களை மற்றவர் பயன்படுத்தும்போது அவருக்கும் பரவக்கூடும்.

    குளிப்பதற்கு அமிலத்தன்மை மற்றும் அதிக உப்பு இல்லாத சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

    முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது நீரில் முகத்தைக் கழுவி, சுத்தப்படுத்த வேண்டும். ​

    தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையால், சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, பருக்கள் வராமல் தடுக்கும்.

    • எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட்டால் முகப்பரு வரும்.
    • கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

    முகம், நெற்றி, தோள்பட்டை மார்பு போன்ற பகுதிகளில் ஏராளமான எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, இவற்றிலிருந்து எண்ணெய் (சீபம்) சுரக்கிறது. இவை வெளியேறும் வழியில் ஏற்படுகின்ற தடையினால் பருக்கள், கட்டிகள் வருகிறது. ஹார்மோன் மாற்றங்கள், பாக்டீரியா தொற்றினாலும் இவை ஏற்படுகின்றன.

    இதற்கு சித்த மருந்துகளில், கடல் சங்கை தண்ணீரில் உரசி முகப்பரு, கட்டி உள்ள இடங்களில் பூசி வர வேண்டும். அடுத்து, ஏலாதி சூரணம் ஒரு கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. கலந்து காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிட வேண்டும். இரவு தூங்கும் போது குங்குமாதி லேபம் களிம்பை முகத்தில் பூசவும்.

    முகப்பருக்கள் நீங்க ஐஸ் கட்டி ஒத்திடம் கொடுக்கலாம். ஒரு சிறு ஐஸ்கட்டி எடுத்து அதை ஒரு சுத்தமான துணியில் சுற்றி முகப்பரு உள்ள இடத்தில் ஒற்றி எடுக்கலாம். இப்படி செய்வதால் முகப்பருக்களால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி குறையும்.

    எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து முகப்பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கும்.

    முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவ வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

    • மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும்.
    • எக்காரணம்கொண்டும் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது.

    எந்த வகையினால் முகப்பரு ஏற்பட்டிருந்தாலும் எளிமையான முறையில் அதை எப்படி நீக்குவது என்பதுபற்றி இங்கே பார்க்கலாம்.

    - திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும்.

    - குங்குமாதி லேபத்தைப் பருக்களின்மீது தடவி வர, பருக்கள் மறைவதோடு தழும்புகளும் விரைவில் நீங்கும்.

    - பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.

    - 50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊற வைக்க வேண்டும். 20 நாள்கள் கழித்துப் பயன்படுத்த வேண்டும். இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.

    - அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் இது நீங்கும்.

    - வெங்காரத்தைப் பொரித்தால் (போரக்ஸ்) அது மாவாகக் கரையும். அதைத் தண்ணீருடன் கலந்து பரு பழுத்திருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவில் பழுத்து உடையும்.

    - வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.

    - மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும். வெட்பாலை தைலத்தைப் பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்குவதோடு, முகப்பருவும் மறையும்.

    - பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்கள் சீக்கிரம் மறையும்.

    - எலுமிச்சைப்பழச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாள்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.

    - வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.

    ×