search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petitions"

    • விலை சரிவு விவசாயிகள் மத்தியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக வேதனை
    • உள்ளூர் முட்டைகோஸ்க்கு முன்னுரிமை அளிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடந்தது.

    இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் கையில் முட்டைகோசை ஏந்தியபடி வந்து மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்து மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் குறிப்பாக தொண்டாமுத்தூர் பகுதியில் தீத்திப்பாளையம், குப்பனூர், மாதம்பட்டி, கரடிமடை, பூலுவப்பட்டி, தென்கரை, சென்னனூர், மத்திபாளையம், நாதே கவுண்டன்புதூர், இருட்டுப்பள்ளம் செம்மேடு, இக்கரை போளுவாம்பட்டி, தேவராயபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், தெ ன்னமநல்லூர், தொண்டாமுத்தூர், தாளியூர், நரசிபுரம் போன்ற பகுதிகளில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் முட்டைக்கோஸ் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையிலும், பல்வேறு பருவநிலை மாற்றங்களாலும், காய்கறி பயிர்கள் உரிய நேரத்திற்கு பயிரிட முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு விவசாயிகள் ஆளாகி வருகிறார்கள்.

    இந்நிலையில் முட்டைகோஸ் பயிரிடும் விவசாயிகள் நிலைமை நாளுக்கு நாள் சரிவை சந்தித்து கொண்டு வருகிறது. குறிப்பாக முட்டை கோஸ் 1 ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் நாற்றுகள் வரை நாற்று பண்ணையில் இருந்து ஒரு நாற்று 90 பைசா வீதத்தில் வாங்கி நடுகிறார்கள். ஏக்கருக்கு 6 டன் முதல் 8 டன் வரை விளைச்சல் இருக்கும்.

    தற்போது கிலோ ரூ.3 முதல் ரூ.6 வரை விற்கப்படுகிறது. விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்து வரும் நிலையில், இந்த விலை சரிவு விவசாயிகள் மத்தியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே, தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக முட்டைகோஸ் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். தோட்டக்கலைதுறை மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கீடு செய்து ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    விலை சரிவு காலங்களில் பிற மாவட்டங்களுக்கு முட்டைகோஸ் ஏற்றுமதி செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். உள்ளூர் முட்டைகோஸ்க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இடுப்பொருட்கள் மானிய விலையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. மேலும், விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்த முட்டைகோஸ்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி சென்றனர். 

    • மக்கள் நேர்காணல் முகாம் 22 -ந்தேதி நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்துக்கு உட்பட்ட செங்கமங்கலம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நவம்பர் 22 புதன்கிழமை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தாவது:-

    பேராவூரணி வட்டம் ஆவணம் சரகம் செங்கம ங்கலம் கிராமத்தில் நவம்பர் 22ஆம் தேதி புதன்கிழமை நடத்தப்பட உள்ள மக்கள் நேர்காணல் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.
    • மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் உள்ளது. இந்த பகுதியில் சாலை குண்டு குழியுமாக உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் கடலூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கிழக்கு ராமாபுரத்தில் குண்டு குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் திடீரென்று குட்டை போல் நின்றிருந்த மழை நீரில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளை உடனடியாக சீரமைக்கா விட்டால் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தனர் . பின்னர் சிறிது நேரத்தில் சிறைபிடித்த அரசு பஸ்ைசை விடுவித்து நாற்று நடும் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பொது மக்கள் வழங்கினர்
    • ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பொது மக்கள் வழங்கினர்.

    இதேபோல் மாற்றுத்திற னாளிகள் 14 மனுக்களை வழங்கினர். மாவட்ட மாற்றுத்தி றனாளி நல த்துறை சார்பில் தசை சிதைவு நோயினால் பாதிக்க ப்பட்ட 2 மாற்றுத்தி றனாளி களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், மடக்கு சக்கர நாற்காலி 2 நபர்களுக்கும், இயற்கை மரணம் ஈமச்ச டங்கு காசோலை 5 நபர்க ளுக்கும், காதெலிக்கருவி ஒரு நபருக்கும் என மொத்தம் 10 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இதர மனுக்கள் 235 என மொத்தம் 842 மனுக்கள்அளிக்கப்பட்டது.
    • ரூ.4,23,500 மதிப்பீட்டிலான உதவிகளை வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். கூட்டத்தில் பட்டா தொடர்பாக 178 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 72 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக 34 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 62 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 56 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 31 மனுக்களும், தையல் எந்திரம் கோரி 45 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 60 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 235 என மொத்தம் 842 மனுக்கள்அளிக்கப்பட்டது.

    மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கு உதவித்தொகையாக 24 பயனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4,08,000 மதிப்பீட்டிலும் மற்றும் மாற்றுத்திறனாளியின் மகன், மகளுக்கு கல்வி உதவித்தொகையாக 5 பயனாளிகளுக்கு ரூ.15,500 மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.4,23,500 மதிப்பீட்டிலான உதவிகளை வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் பல்வேறு வட்டங்களை சார்ந்த 2 மாற்றுத்திறனாளி பயனாளிகள் உட்பட 20 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • குளிச்சபட்டு ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடந்தது.
    • விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் குளிச்சபட்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    குளிச்சபட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஊராட்சியில் உள்ள வரவு செலவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    பின்னர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் வாசு, ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் மணிகண்டன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா நடராஜன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் ,ஊரக வளர்ச்சித் துறை திட்ட பணியாளர் மாலா, அங்கன்வாடி விற்பனை யாளர் செல்லத்துரை, ஊராட்சி செயலாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 512 மனுக்கள் பெறப்பட்டன.
    • துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலெக்டர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 512 மனுக்கள் பெறப்பட்டன.

    பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு நிவாரணத் தொகையாக 2 பயனாளி களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை, ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 2 பயனாளி களுக்கு சலவை பெட்டி களும் என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டது.
    • 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங் குல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உத வித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப் பட்டுள்ள சிறப்பு அமருமி டத்திற்குச் சென்று, மாவட்ட வருவாய் அலுவலர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சம்மந் தப்பட்ட துறை அலுவலர்க ளிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, மினி டைரி தொழில், ஆடு வளர்ப்பு தொழில்களுக்காக 33 பயனாளிகளுக்கு ரூ.26.90 இலட்சம் மானியத்தொ கைக்கான காசோலைக ளையும், மாவட்ட ஆதிதிரா விடர் நலத்துறை மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.2.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்க ளையும்,

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம் மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், தனித் தணை ஆட்சியர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் கூடு தல் நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன், உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கம்யூனிஸ்டு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் மொத்தம் 94 மனுக்கள் கொடுக்கப்பட்டது.

    திருச்சுழி

    திருச்சுழி ஒன்றியம் நரிக்குடியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. நரிக்குடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் பேராணியாக சென்றனர்.

    வீடற்றவர்களுக்கு வீடு கேட்டும், குடியிருப்பு மக்களுக்கு பட்டா கேட்டும், 100 நாள் வேலையை முறைப்படுத்தி வழங்கவும், கிராமப்புற மக்களுக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் வளர்ச்சி அலுவ லரிடம் மனு கொடுக்கப் பட்டது.

    இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 94 மனுக்கள் கொடுக்கப்பட்டது.

    இந்த ஆர்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பாலு, தாலுகா குழு செய லாளர் பெரியசாமி, விவசாய சங்க தாலுகா தலைவர் அயூப்கான், சி.ஐ.டி.யூ. உதவி தலைவர் சுரேஷ், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டத்தலைவர் பூங்கோதை, மாற்றுத்திற னாளி சங்க நிர்வாகி ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அக்காள்மடம் பகுதியில் மீனவர் குடியிருப்புக்கு சென்று முதல்-அமைச்சர் கலந்துரையாடினார்.
    • சிறுவர், சிறுமிகளுடன் படிப்பு பற்றி கேட்டறிந்தார்.

    ராமநாதபுரம்

    ராநாதபுரம் மாவட்டம், அக்காள்மடம் மீனவர் குடி யிருப்பு பகுதிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மீனவ குடும்பத்தை சேர்ந்த வர்களிடம் கலந்துரையாடினார்.

    ராமநாதபுரம் பேராவூர் பகுதியில் நடந்த தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு ராமேசுவரம் புறப்பட்டு சென்றார்.

    மண்டபத்தில் இன்று தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணை யம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர் களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ராமநாதபு ரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் வழியில் அக்காள் மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று மீனவப் பெருமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது அப்பகுதி மக்கள் குடியிருப்பு பட்டா வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். பட்டா வழங்குவ தற்கு தேவையான நடவ டிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து இருக்கிறீர்களா? என்று அங்குள்ள பெண்களிடம் கேட்டறிந்தார். அத்துடன் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.

    அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அக்காள்மடம் மீனவர் குடி யிருப்பு பகுதியில் உள்ள மாணவர்களுடன் கலந்துரை யாடி அவர்களது படிப்பு விவரங்கள் குறித்து கேட்ட றிந்தார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் மற்றும் அதிகாரி கள், கட்சியினர் உடனிருந்தனர்.

    காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள சந்திப்பு நடக்கிறது.

    குன்னூர்,

    சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வருகிற 5-ந்தேதி குன்னூர் எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வருகிறார். அங்கு அவர் பொதுமக்களை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களும் பெறப்பட உள்ளது.

    எனவே சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் குறை மற்றும் தேவைகளை மனுக்களாக எழுதி, குன்னூர் அய்யப்பன் கோவில் அருகில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் நேரடியாக வந்து கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 மனுக்கள் பெறப்பட்டன.
    • 51 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 970 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்க ளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மொத்தம் 22 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும், முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 51 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 970 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முப்படைவீரர் வாரிய உப தலைவர் மேஜர் பாலகிருஷ்ணன் (ஓய்வு), மாவட்ட அலுவலர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் சரவணன் (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×