search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyar statue"

    • சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
    • அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஒரே பீடத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

    அதில் பெரியார் சிலை யின் இடது கை பெருவிரல் சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர், மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமை யில் மறியல் மற்றும் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன், பெரம்பலூர் டி.எஸ்.பி. சுக்கிரன் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிலையை சேதப்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தி, மர்ம நபர் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தார். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சிலை சேதப்படுத்தியது தொடர்பாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் அனுசந்திரன் (வயது 37) என்ற கூலித்தொழிலாளி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோ தை யில் பெரியார் சிலை அருகே படுத்திருந்ததாகவும், பெரியாரின் சிலையில் உள்ள விரலை பிடித்து எந்திரிக்க முயற்சித்த போது, உடைந்து விட்டதாகவும், இதனால் தான் பயன்படுத்திய சிவப்பு துண்டை வைத்து, மறைத்து விட்டு சென்றதாகவும், ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • பெரியார் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நெல்லை:

    தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பாளை பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க.

    தி.மு.க. சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. மூத்த நிர்வாகி சுப சீதாராமன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ். வி. சுரேஷ், மண்டல சேர்மன் பிரான்சிஸ், கவுன்சிலர்கள் சுதா மூர்த்தி, கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செயலாளர்கள் திருத்துச் சின்னத்துரை, ஜெனி, கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், நிர்வா கிகள் பூக்கடை சப்பானி முத்து, பி.ஆர்.பி. ராஜா, மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஜோதிபுரம் ஊர் நாட்டாண்மை தங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர் அருள் ராஜ் ஆகியோரது தலைமையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மூத்த தலைவர் லெனின் பாரதி, மாவட்ட துணைத் தலைவர்கள் வெள்ளை பாண்டியன், மாரியப்பன், மாவட்ட செயலாளர்கள் செய்யது அலி, மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுடலை ராஜ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், மேலப்பாளையம் செய லாளர் குழந்தைவேலு, வக்கீல் பழனி, செல்வம், ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் முத்து வளவன் தலைமையிலும், ம.தி.மு.க சார்பில் மனப்படை மணி உள்ளிட்ட நிர்வாகிகளும், தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் ஒருங்கி ணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையிலும், ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும் ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • பெரியார் நினைவு தினத்தையொட்டி பாளை பஸ் நிலையம் எதிரே உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பெரியார் நினைவு தினத்தையொட்டி பாளை பஸ் நிலையம் எதிரே உள்ள அவரது உருவச்சிலைக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் சுப வீரபாண்டியன், துணை மேயர் ராஜு, மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், மாநகர துணை செயலாளர் சுதா மூர்த்தி, கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, தி.மு.க. இளைஞரணி ஆறுமுகராஜா, கவுன்சிலர் உலகநாதன், வக்கீல் செல்வ சூடாமணி, கணேஷ்குமார் ஆதித்தன், காசிமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் உள்ள முக்கிய சந்திப்புகளில் பெரியார், அம்பேத்கர் சிலைகள் நிறுவப்பட்டிருக்கும்.
    • சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர் கும்பகோணத்தில் காவி உடையுடன் கூடிய அம்பேத்கர் சுவரொட்டிகளை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    ஐகோர்ட்டில் வக்கீல்களும், ராஜா அண்ணாமலைபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு இந்து மக்கள் கட்சியினர் காவி சாயம் பூசி விடக்கூடாது என்பதால் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகள் முன்பு நேற்று இரவில் இருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெரியார், அம்பேத்கர் சிலைகளை பொறுத்தவரையில் தமிழகத்தில் முக்கிய சந்திப்புகளில் இந்த 2 சிலைகளும் நிறுவப்பட்டிருக்கும். கிராமப்புறங்கள் தொடங்கி நகர பகுதிகள் வரையில் உள்புற சாலைகளிலும் இந்த 2 தலைவர்களுக்கும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராஜபாளையம்

    தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி ராஜபாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரை முருகேசன் தலைமையில் மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் சிவகுருநாத பாக்கியம் முன்னிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட பேரவை துணைச் செயலாளர் ராசா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் யோக சேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக பிரிவு வெங்கடேஷ் ராஜா, அவைத்தலைவர் கணேசன், பொருளாளர் ஜீவா, சிறுபான்மை பிரிவு மைதீன் என்ற ராஜப்பா, ஆந்திரா குமார், விக்னேசுவரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராமர், ராமராஜா, ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    ராஜபாளையம் நகர ம.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு விருதுநகர் மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நகரசெயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன், தலைமை கழக பேச்சாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், நகர அவைத்தலைவர் சேது.இன்பமணி, மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பவேல், ஞானசேகரன், நகரத் துணைச் செயலாளர்கள் அக்பர்அலி, லிங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 144-வது பிறந்தநாள் விழா
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் பெரியாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழுத் தலைவர் வெங்கட்ரமணன், அம்மூர் பேரூர் செயலாளர் பெரியசாமி, ராணிப்பேட்டை நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், அம்மூர் பேரூராட்சி துணை தலைவர் உஷாராணி அண்ணாதுரை, ராணிப்பேட்டை நகரமன்ற உறுப்பினர்கள் அப்துல்லா, குமார் உள்பட ஒன்றிய, நகர, பேரூர் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பெரியாரின் உருவ படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    பெரியார் பிறந்தநாளையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் முன்புள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. சார்பில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மாகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க. செயலாளர் டி.கே.டி. நாகராஜ், கவுன்சிலர்கள் திவாகர், ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட செயலாளர்.நாகராஜன் தலைமையில் திருப்பூர் ெரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர்.நேமிநாதன்,மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தாமணி, மாமன்ற உறுப்பினர் குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல்,மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்னசாமி,தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜகோபால் மற்றும் பகுதி செயலாளர்கள் ,ஒன்றியச் செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்தக்கொண்டனர்.

    • கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
    • பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும், கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று கனல் கண்ணன் பேசியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

    கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "சிலையை உடைக்கப் போவதாக கூறவில்லை. சிலையை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைதான் விடுக்கப்பட்டது. மனுதாரர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை" என்று வாதிடப்பட்டது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநகர குற்றவியல் அரசு வக்கீல் ஜி.தேவராஜன் வாதிட்டார். "மனுதாரர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மோதலை உருவாக்கும் விதமாக மதங்களை பற்றியும் பேசியுள்ளார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • காரைக்குடியில் கருணாநிதி பிறந்த நாளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரியார் சிலை அருகில் நடந்தது.

    காரைக்குடி

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடி 15-வது வட்ட தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரியார் சிலை அருகில் நடந்தது.

    நகர்மன்ற தலைவர் முத்துதுரை வரவேற்றார்.முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுப.துரைராஜ், நகர செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தி.மு.க. கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.ஆனந்த், சின்னத்துரை, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சத்யா ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், அன்னை மைக்கேல், நாகராஜன், சித்திக், தெய்வானை, கலா, ஹேமலதா செந்தில், பூமி, கார்த்திகேயன், தனம் சிங்கமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் சேவியர், கென்னடி, முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ்,புதுவயல் பேரூராட்சி துணை தலைவர் பகுர்தீன் அலி, நிர்வாகிகள் ருக்மா சரவணன், அமராவதிபுதூர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். #PeriyarStatueVandalised #KSAlagiri #Ramadoss #vaiko
    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் சமூகத்திற்கு எவருமே ஆற்ற முடியாத அரும்பெரும் பணிகளை செய்த பெரியாரின் சிலையை தமிழகத்திலுள்ள வகுப்புவாத சக்திகள் இத்தகைய வன்முறைச் செயலின் மூலம் சிலைக்கு சேதாரம் ஏற்படுத்தியது குறித்து காவல்துறையினர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகுப்புவாத, பாசிச, பிற்போக்கு சக்திகளை அடையாளம் கண்டு, வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் பெரியார் மீது பற்று கொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அணி திரண்டு கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படுமென தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    தமிழ்நாடு அமைதியாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத சக்திகள் தான் இந்த சமூக விரோத செயலை செய்துள்ளனர். இத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையும் இனியும் அனுமதிக்கக்கூடாது.

    பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    பெரியாரின் கருத்துக்களை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாராளுமன்ற பொதுத்தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் பெரியார் சிலையை உடைத்து, கலவர விதைகளைத் தூவ நினைப்போரின் உள் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #PeriyarStatueVandalised #KSAlagiri #Ramadoss #vaiko
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #PeriyarStatueVandalised #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டவர்கள், அமைதியைக் குலைக்கும் வகையில் இழிவான செயல்களில் ஈடுபடுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருந்தது.

    அத்தகைய இழிவான செயல்களின் முன்னோட்டமாகத் தெரிகிறது. மிக மோசமான இந்தச் செயலை தி.மு.க வன்மையாகக் கண்டிக்கிறது.



    இத்தகைய செயல்பாடுகள் மூலம், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து, வன்முறையைத் தூண்ட நினைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.

    பெரியார் சிலையைச் சிதைத்த காலிகளை, காவல் துறை மூலம் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வன்முறைக்குத் துளியும் இடம்தராத வகையில், அத்தகைய தீய எண்ணத்தில் இருக்கும் நாசகார சக்திகள் எதுவாக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி, இரும்புக் கரம்கொண்டு முறியடிக்கப்பட வேண்டும், நசுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #PeriyarStatueVandalised #DMK #MKStalin
    அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #PeriyarStatueVandalised
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே 8 அடி உயரம் கொண்ட பெரியார் சிலை உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு தி.க. தலைவர் கி.வீரமணி இந்த சிலையை திறந்து வைத்தார்.

    பெரியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் தி.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பெரியார் சிலை சாக்குகளால் போர்த்தி மூடி வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மறைந்த பழைய தலைவர்களின் சிலைகளை மூடி வைக்க தேவையில்லை என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் மூடி வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சாக்குகள் அகற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை அந்த பகுதிக்கு வந்த யாரோ மர்ம நபர்கள் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். சிலையின் தலைபகுதியை இரண்டு துண்டுகளாக உடைத்து அதே இடத்தில் வீசி இருந்தனர்.



    காலையில் அந்த பகுதிக்கு வந்தவர்கள் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறந்தாங்கி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. அடுத்த சில நிமிடங்களில் அங்கு தி.க., தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். மேலும் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவ.மெய்யநாதனும் வந்தார்.

    பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தி.க. அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் யோகராஜ் அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், டி.எஸ்.பி. கோகிலா ஆகியோரும் வந்து விசாரித்தனர்.

    இதற்கிடையே தி.க. மண்டல தலைவர் ராவணன் தலைமையில் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் கட்சியினர் திடீரென அமர்ந்து மறியல் செய்தனர். உடனடியாக பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர். அவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார். இந்த மறியலால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சென்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல் அறந்தாங்கியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதையும் மீறி இன்று அதிகாலை பெரியார் சிலை உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதை இந்து முன்னணியினர் கண்டித்தனர். இதில் பயங்கர மோதல் உருவானது.

    அதேபோல் இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தி.க. தலைவர் கி.வீரமணிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் தற்போது அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.  #PeriyarStatueVandalised
    ×