search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pensioners"

    • கூட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகளும், கோரிக்கைகளும் கேட்டறியப்பட உள்ளது.
    • கோவை மண்டல அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் டிசம்பர் மாதத்தில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மண்டல அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் டிசம்பர் மாதத்தில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது.

    கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த கூட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகளும், கோரிக்கைகளும் கேட்டறியப்பட உள்ளது. எனவே புகார்கள், கோரிக்கைகள், தொடர்பான மனுக்களை அஞ்சலக கண்காணிப்பாளர், என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மனு உறையின் மீது ஓய்வூதியர்கள் குறைகேட்பு நாள் மனு என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும். சட்டம் சார்ந்த குறைகள், வாரிசுகள் தொடர்பான குறைகள் இந்த கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படாது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

    • 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உடன் வழங்க வேண்டும்.
    • ஏழை பயணிகளின் நலனை கருதி இலவச கழிவறை கட்ட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவையின் 37-வது ஆண்டு விழா தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மூத்த குடிமக்கள் பேரவை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.

    முன்னதாக பேரவை துணைத்தலைவர் பழனி வேலு அனை வரையும் வரவேற்றார்.

    சங்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் கோ.அன்பரசன், இணை செய லாளர் குருநாதன், பேரவை நிறுவனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் 75 வயது நிரம்பியவர்களுக்கு மாவட்ட கருவூல அதிகாரி கணேஷ் குமார் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

    தொடர்ந்து, விளை யாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாரத் கல்விக்குழும நிர்வாக இயக்குநர் புனிதா கணேசன் பரிசுகள் வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக தஞ்சை மருத்துக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் மீனாட்சி ஆஸ்ப த்திரியின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், பொதுச்செயலாளர் சேதுராமன், பொருளாளர் சுப்ரமணியன், துணை தலைவர் திருமலை மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ்தர்தாஸ், துரைராஜன், அறிவழகன், அரிமா செல்வராசு, ஞானசேகர், தங்கவேலு, கோபாலகிருட்டிணன், அய்யனார், செண்பக லெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உடன் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு வழங்கப்பட்டு வந்த ரெயில் பயண கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்,

    தஞ்சை மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அரசு அலுவலர்களுக்கும், ஓய்வூதிய மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் தனி புற நோயாளிகள் பகுதியும், தனி உள் நோயாளிகள் பிரிவும் ஏற்படுத்த வேண்டும், புதிய, பழைய பஸ் நிலையங்களில் கட்டண கழிப்பிடம் மட்டுமே உள்ளது. ஏழை பயணிகளின் நலன் கருதி இலவச கழிவறை கட்டுவதுடன் அவற்றை சுகாதாரமாக பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சிரமத்தை தவிர்க்கும் வகையில் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
    • தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓய்வூதியர்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் அதிக ளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமைப்படுத்த சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஒய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்தி லும், பணிக்கால ஓய்வூதியம் மற்றம் குடும்ப ஓய்வூதியம் பெறுவர்கள் தாங்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்தி லும் நேர்காணல் செய்ய லாம்.

    அவ்வாறு நேர்காணல் செய்ய இயலாத நிலையில் குறிப்பிட்ட மாதத்திற்கு அடுத்த மாதத்தில் நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தில் நேர்காணல் செய்யப்பட வேண்டிய ஓய்வூதியதாரர்கள் 2023-24-ம் ஆண்டிற்கு சிறப்பு நேர்வாக இந்த மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்ற, குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட ஓய்வூதியர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    எனவே ஓய்வூதியர்கள் தங்கள் மின்னணு வாழ் நாள் சான்றிதழை இந்திய தபால் துறை வங்கி சேவை, இ-சேவை, பொது சேவை நிறுவனம், ஓய்வூதியர் சங்கங்களின் சேவை, செல்போன் செயலி ஆகியவற்றில் மின்னணு வாழ்நாள் சான்றை பதிவு செய்து நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    மேலும் வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம். நேரடியாக கருவூலத்திற்கு வந்தும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    இருப்பினும் ஓய்வூதி யர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் அத்தகைய ஓய்வூதியர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணல் செய்து கொள்ள லாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதி யகளுக்கும் கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.

    குறைந்தபட்ச ஓய்வூதிய மாக ரூ. 7,850 நிர்ணயம் செய்து அங்கன்வாடி, சத் துணவு, தலையாரிகள், ஊராட்சி செயலர்கள், வனத்துறை தொகுப்பூதிய ஊழியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செலவுத் தொகை வழங்காமல் இருக் கும் அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக நட வடிக்கை எடுத்து செலவு தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித் தார். மாவட்டப் பொருளா ளர் முருகேசன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் புஷ்பராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சே கர், அரசு கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் ஜெனி ஸ்டா, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ராமச்சந்திர பாபு, அரசு போக்குவரத்துக் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டலச் செய லாளர் பவுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றிருந்த ஓய்வூதியர்கள் இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை.
    • போதிய வசதிகள் செய்யப்படவில்லை.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஓய்வூதியதாரர் களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 60 வயதிற்கும் மேற்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய நேர்காணல் மாலை வரை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்தவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை. ஒருவருக்கு நேர்காணல் நடத்த குறைந்தது 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஆனது. இதனால் நேர்காண லுக்கு வந்திருந்த வயதான வர்கள் அலுவலகத்தின் வெளியே நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக அவர்களால் நிற்க முடியவில்லை. இதனால் பலர் அங்குள்ள மரத்தடி யில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. எனவே ஓய்வூதியதாரர்களின் நேர்காணலுக்கு வருவோ ருக்கு இருக்கை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • மூத்த குடிமக்களுக்கு ரெயிலில் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உளன்ளிட்ட 16 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • மாநில சங்க பொருளாளர் வெங்கடாச்சலம் நிதிநிலை அறிக்கை படித்தார்

    தஞ்சாவூர்:

    தஞ்சை சண்முகா நகரில் இன்று தஞ்சை மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநகர கிளை சங்க 29-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் கோபால் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளரும் கிளை தலைவருமான கந்தசாமி வரவேற்றார். மதுரை மண்டல தலைவர் விவேகானந்தன் நிர்வாக அறிக்கை வாசித்தார்.

       மாநில சங்க பொருளாளர் வெங்கடாச்சலம் நிதிநிலை அறிக்கை படித்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சி உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் தனபாண்டியன், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கூட்டமைப்பு மாநில செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னர்.இந்த கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் மறைவிற்கு பின்னர் வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரெயிலில் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உளன்ளிட்ட 16 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநகராட்சி கிளை துணை செயலாளர் கருப்பையா நன்றி கூறினார்.

    • எப்போது உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.
    • அரசாணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய உயிர்வாழ் சான்றிதழை அவர்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் வழங்க வேண்டுமென்றும், ஒரு மாதம் சலுகைக் காலம் வழங்கப்படும் என்றும் 31.5.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    இது விடுதலைப் போராட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் பயன்பெறுபவர்களுக்கும் பொருந்தும் என்றும், இதனை உரிய காலத்தில் மேற்கொள்ளவில்லை என்றால், ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், இந்த அரசாணையில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியவர்கள் சிறப்பு நேர்வாக ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில், முந்தைய ஆண்டுகளில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்றவர்கள் எப்போது உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்த அரசாணை ஒரு தெளிவற்றதாக இருக்கிறது. இந்த அரசாணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, உயிர்வாழ் சான்றிதழ் தொடர்பான 31-5-2023 நாளிட்ட நிதித் துறை அரசாணை எண். 165-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும், இதுகுறித்து ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் கருத்தினைக் கேட்டு அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கூட்டமைப்பின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
    • 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு நெல்லை மாவட்ட கிளை சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

    கூட்டமைப்பின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். அமைப்பாளர் சண்முக சுந்தரராஜ் நோக்கங்கள் குறித்து விளக்கி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தி.மு.க. அரசு பதவியேற்ற பின் வழங்கிய 4 தவணை அகவிலைப்படியை மத்திய அரசுபோல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் நல்லபெருமாள் நன்றி கூறினார்.

    • ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்.
    • 20 ஆண்டுகள் பணி செய்த ஊழியர்களுக்கு அரசு காலிப்பணியிடத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சந்திரா தலைமை தாங்கினார்.

    மாவட்ட அமைப்பாளர் கமலநாதன், மாநில துணைத் தலைவர் கணேசன், அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை தலைவர் அஞ்சுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டத் துணைத் தலைவர் மதிவாணன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணி செய்த ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6750 அகவிலை படியுடன் வழங்க வேண்டும்.

    சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் 20 ஆண்டுகள் பணி செய்த ஊழியர்களுக்கு அரசு காலி பணியிடத்தில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜோதி, சுசீலா, ஒன்றிய தலைவர்கள் சாந்தி, துரை நடராஜன், செயலாளர் ராதாகிருஷ்ணன் கணபதி, வாசுகி, சி.ஐ. டி.யு மாவட்ட துணை தலைவர் ராமானுஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிதி காப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • ஓய்வூதியதாரர்களின் பதிவு எண், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
    • ஏற்கனவே, ஓய்வூதியம் பெற்று வந்த அசல் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குலசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் வருகிற ஆண்டிற்கான உயிர்வாழ் சான்றினை www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் கீழ்கண்ட விவரங்களுடன் பதிவேற்றம் செய்யுமாறும், உயிர்வாழ் சான்றினை தாக்கல் செய்வதற்கு யாரும் நேரில் அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    ஓய்வூதியதாரர்களின் பதிவு எண், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆதார் அட்டையினை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். (தவறான ஆதார் எண் உள்ளீடு செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்). வாரியம் மற்றும் தொழிலின் தன்மை சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.

    ஏற்கனவே, ஓய்வூதியம் பெற்று வந்த அசல் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் வங்கி கணக்கு ஐ.எப்.எஸ்.சி. கோடு, எம்.ஐ.சி.ஆர்.கோடு ஆகியவற்றை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரிய ஓய்வூதியதாரர்கள், அவர்களது சாதியை சரியாக குறிப்பிட வேண்டும்.

    புதிய குடும்ப அட்டை எண் மற்றும் அசல் அட்டை ஆகியவற்றை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆயுள் சான்றுக்கு ஆதாரமாக ஓய்வூதிய ஆணை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர் அவரது ஆதார் அட்டையினை கையில் பிடித்துக் கொண்டிருப்பது போல் நேரடி போட்டோ எடுக்கப்பட வேண்டும்.

    மேலும் கூடுதல் விவரங்களுக்கு நெல்லை, தென்காசியில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் வகையில் மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது.
    • ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்று பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருச்சி மண்டல இ.பி.எப். முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ.பி.எப். (வருங்கால வைப்பு நிதி நிறுவனம்) சார்பில் "நிதி ஆப்கே நிகத்" என்ற பெயரில் இ.பி.எப் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நாகை மாவட்டத்திற்கான குறை தீர்க்கும் முகாம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 27- ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது.

    இந்த முகாமில் இ.பி.எப். தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

    செட்டில்மெண்ட் பெறுவது, வெவ்வேறு இ.பி.எப். கணக்குகளை ஒரே கணக்கில் இணைப்பது, இ.பி.எப். சந்தாதாரர்கள் தங்களது யு.ஏ.என். கணக்கினை பயன்படுத்தும் முறை, ஆதார் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தங்களது சுய விபரங்களை தங்களது யு.ஏ.என். கணக்கில் இணைத்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

    மேலும் ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்று பதிவு செய்ய இந்த முகாமிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சந்தாதாரர்கள் தங்களது பெயர் மாற்றக் கோரிக்கை உட்பட அனைத்து கோரிக்கைகளையும் தகுந்த ஆதாரங்களுடன், எழுத்துப்பூர்வமாக முகாமில் சமர்ப்பிக்கலாம்.

    இ.பி.எப். சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்களின் முதலாளிகள், முகவர்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×