search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pattabhishekam"

    • ஆவணி மூலத்திருவிழாவில் இன்று சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
    • வளையல் விற்ற லீலையை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக் கொட்டு விழா, ஆவணி மூல திருவிழா, ஐப்பசி நவ–ராத்திரி விழா ஆகியவை பிரசித்தி பெற்றவை.

    இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 30-ந்தேதி வரை 19 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழா–வையொட்டி தினமும் காலை, மாலை 2 வேளைக–ளிலும் 4 ஆவணி மூல வீதி–களிலும் சுவாமியும், அம்ம–னும் பஞ்ச மூர்த்திகளுடன் உலா வந்து மண்டகப்படிக–ளில் எழுந்தருளி பக்தர்க–ளுக்கு அருள்பாலிப்பார்கள்.

    விழாவின் முக்கிய அம் சங்களாக திருவிளையா–டல் புராண தொடர்பான உற்ச–வங்கள் நடைபெறும். அதன் படி கடந்த 19-ந்தேதி கருங் குருவிக்கு உபதேசம் செய் தல், 20-ந்தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், 21-ந்தேதி மாணிக்கம் விற்றல், 22-ந்தேதி தருமிக்கு பொற் கிழி அருளல், 23-ந்தேதி உலவாக்கோட்டை அருளல், 24-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டி லீலைகள் நடந்தன.

    நேற்று இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல் நடந்தது. இன்று (25-ந்தேதி, வெள்ளிக்கிழமை) வளை–யல் விற்ற திருவிளை–யாடல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மீனாட்சி அம்மன், சுந்தரேசு–வரரை தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ் வாக இன்று இரவு 7.35 மணிக்கு சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறு–கிறது. சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை நான்கு மாதங்களுக்கு மதுரை மகாராணியாக மீனாட்சி அம்மன் ஆட்சி செய்வார். ஆவணி மூலத் திருநாளின் 7-ம் நாள் முதல் பங்குனி வரையான எட்டு மாதங்களுக்கு மதுரை மன்னராக சுந்தரேசப் பெரு–மான் ஆட்சிபுரிவார். இத–னைக் குறிக்கும் வகையி–லேயே சுந்தரேசப் பெருமா–னுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

    நாளை (26-ந்தேதி) நரியை பரியாக்கியது, குதி–ரைக்கு கயிறு மாறியது, 27-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந் தது நடைபெறும். அன்று அதிகாலையில் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திக–ளுடன் பிட்டு தோப்புக்கு செல்வர். அங்கு பிட்டு திருவிழா நடை பெறும். இந்த திருவிழாவில் திருவா–தவூர் மாணிக்கவாசகரும், திருப்பரங்குன்றம் சுப்பிர–மணியசுவாமியும் மதுரைக்கு எழுந்தருளு–வார்கள்.

    அன்று இரவு 9.30 மணிக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக் கப்படுவர். அன்றைய தினம் இரவு வடக்கு கோபு–ரம் வழியாக ஆயிரம்கால் மண்ட பத்தை பார்வையிடு–வதற்கும் அனுமதி அளிக்கப் படும். 28-ந்தேதி விறகு விற்றல் லீலை நடைபெறும்.

    • பட்டாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    • இன்று மதியம் 12:30 மணிக்கு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகின்றது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கக்கூடிய ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனிடையே இந்த ஆண்டின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவானது நேற்று முன்தினம் ராவண சம்காரத்துடன் தொடங்கியது.

    ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் 2-வது நாளான நேற்று விபீஷ்ணர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதற்காக கோவிலில் இருந்து ராமபிரான், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் தங்க கேடயத்திலும் மற்றும் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு எழுந்தருளினர். தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு கோதண்டராமர் கோவில் வைத்து இலங்கை மன்னராக ராவணனின் தம்பி விபீஷ்ணருக்கு, ராமபிரான் தலையில் பரிவட்டம் கட்டி பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.

    இதைதொடர்ந்து ராமர் மற்றும் விபீஷ்ணருக்கும் சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. இந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விபீஷ்ணர் பட்டாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு கோவில் நடையானது சாத்தப்பட்டு மாலை 5 மணி வரையிலும் பக்தர்கள் தீர்த்தம் நீராடவும், தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.

    ராமர் மற்றும் விபீஷ்ணர் மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் கோவில் நடையானது மாலை 5 மணிக்கு மேல் திறக்கப்பட்டு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருவிழாவின் கடைசி நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மதியம் 12:30 மணிக்கு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகின்றது.

    • ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
    • சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராம நாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 2-ம் நாளான இன்று தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி இன்று அதிகாலையில் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி சன்னதி மற்றும் பர்வத வர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை கள், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அதன் பின்னர் விபீஷ்ணர் மற்றும் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் ஆகியோர் வாகனத்தில் புறப்பாடாகி 4 ரத வீதிகள் வழியாக நகர் வலம் வந்தனர்.

    பின்னர் ராமர்தீர்த்தம் பகுதியில் உள்ள ராமர் கோவிலை சென்ற டைந்தனர்.அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் ராமர் சுவாமியை அழைத்து கொண்டு தனுஷ்கோடி சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலை சென்றடைந்தது. அங்கு பகல் 1 மணிக்கு மேல் விபீஷ்ணருக்கு பட்டா பிஷேகம் நடந்தது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுவாமிகள் சென்றதையடுத்து ராமநாத சுவாமி கோவிலில் இன்று காலை நடைகள் சாத்தப்பட்டது. விபீஷ்ணர் பட்டாபிஷேகம் முடிந்தவுடன் அங்கிருந்து சுவாமி புறப்படாகி மாலையில் கோவிலுக்கு வந்தடைந்தவுடன் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    • நாளை திருக்கல்யாணம் நடக்க இருப்பதால் மதுரை விழாக்காலம் கொண்டுள்ளது.
    • 3-ந் தேதி தேரோட்டம் நடக்க இருக்கிறது.

    மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டனர்.

    ஆவணி முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் மதுரையை ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    மீனாட்சி அம்மனுக்கு முடி சூட்டும் வைபவம் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் 8-ம் நாளில் நடக்கும்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று இரவு நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை தங்கப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் எழுந்தருளி கீழச்சித்திரை வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசி வீதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி காட்சி அளித்தனர். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 3 மணி அளவில் புறப்பட்டு கோவிலை அடைந்தனர்.

    அதை தொடர்ந்து மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை கூறும்வகையில் பட்டாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்தன.

    இந்த நிகழ்வுகள் அம்மன் சன்னதி ஆறுகால பீடத்தில் தொடங்கியது. காப்பு கட்டிய சரவணன் பட்டர் மற்றும் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் ஆகியோர் பட்டாபிஷேக பூஜைகளை தொடங்கினர். இரவு 7.20 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மீனாட்சி அம்மனுக்கு அந்த வைர கிரீடம் சூட்டி நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு தங்கத்தினால் ஆன செங்கோலும் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்த கண்கொள்ளா காட்சியை தரிசித்தனர்.

    அப்போது மீனாட்சி அம்மனுக்கு மீன்கொடியும் அளிக்கப்பட்டது. இளஞ்சிவப்பு நிற பட்டு புடவையில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்பு மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல், அம்மன் பிரதிநிதியாக கோவில் துணை கமிஷனர் அருணாசலத்திடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் கொடுத்தார்.

    அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். அவருடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தார்.

    பட்டத்து அரசியான மீனாட்சியை காண 4 மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு இருந்தனர். இதன் மூலம் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்கியது.

    பட்டத்து அரசியாக பொறுப்பேற்ற பின்பு மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வை நினைவூட்டும் திக்கு விஜயம் நிகழ்ச்சி, இன்று (திங்கட்கிழமை) மாசி வீதிகளில் நடக்கிறது. அதை தொடர்ந்து நாளை (2-ந் தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    திருக்கல்யாணம் நடைபெறும் வடக்கு, மேற்கு ஆடி வீதிகளில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருக்கல்யாண மேடை ரூ.25 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    திருக்கல்யாணம், அதற்கு மறுநாள் (3-ந் தேதி) தேரோட்டமும் நடக்க இருக்கிறது. 4-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவை, 5-ந் தேதி வைகையில் எழுந்தருளல் என முக்கிய நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதால் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • நாளை இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
    • மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது.

    மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். ஏன் என்றால் இங்குள்ள மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து நாட்டை ஆண்டு, பட்டத்து அரசியாக மகுடம் சூட்டி, தேவதேவா்களை போரில் வென்று சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு மதுரையை ஆண்ட மகாராணி மீனாட்சிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது.

    அந்த 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். அந்த ஒரு மாதமும் மதுரை விழாக்கோலம் பூண்டு இருக்கும். மேலும் இந்த திருவிழாவிற்காக ஒரு மாதத்திற்கு முன்பே கோவில் திருவிழாவிற்கான வேலைகள் தொடங்கி விடும்.

    சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும். காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி சுந்தரேசுவரா் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். வயதானவா்கள் முதல் அனைத்து ஜீவராசிகளும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். எனவே நம்மை தேடி வரும் இறைவனை காண மாசி வீதி முழுவதும் மக்கள் கூட்டமாக கூடி வரவேற்பார்கள். இது தவிர சுவாமிக்கு முன்னால் வரும் டங்கா மாடு, யானை, ஒட்டகம் மற்றும் சிறுவா், சிறுமியா்கள் இறைவனை வரவேற்று ஆடி பாடி வரும் காட்சியை காண உலகம் முழுவதும் இருந்தும் பக்தா்கள் கூட்டம் இந்நாளில் வந்து விடும்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடை பெறும் விழாவில் 6-ம் நாளான நேற்று இரவு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை யானை மகால் முன்பு நடந்தது. அப்போது தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினார்கள். பின்னர் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா. இந்த விழா நாளை (30-ந் தேதி) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னத்தியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும். அதில் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    அந்த திருவிழாவிற்கு அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனிடம் போர் புரியும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    சித்திரை விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. எனவே திருக்கல்யாணத்தை பக்தர்கள் காணுவதற்கு 500, 200 ரூபாய் டிக்கெட்டுகள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

    சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் திருக்கல்யாணத்தை அமர்ந்து பார்ப்பதற்கு பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்த வருகிறது. இது தவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருடன் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.

    • திருஏடு வாசிப்பு திருவிழா 7 நாட்கள் நடைபெற்றது.
    • அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளினார்.

    திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெற்றது. விழா காலங்களில் தினசரி மாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு நடந்தது. கடந்த 23-ந்தேதி திருக்கல்யாணம் நடந்தது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் மாலையில் சிகர நிகழ்ச்சியான பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. இதனை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தொடங்கி வைத்தார். பின்னர் வைகுண்ட மகராஜன்மற்றும் ஆனந்த் குழுவினர் பட்டாபிஷேக திருஏடு வாசித்தனர். இரவில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, பதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

    • திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் தலைமைபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழாவில் தினமும் மாலையில் திருஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி போன்றவை நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அய்யா வைகுண்ட சாமிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று மாலையில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, அன்னதானம் போன்றவை நடந்தன. நிகழ்ச்சியில் தலைமைபதி குரு பால. ஜனாதிபதி அகிலத்திரட்டு பாராயண விளக்கவுரையாற்றினார். குருமார்கள் பால. லோகாதிபதி, ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேற்று மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமரி, சென்னை, நெல்லை, தூத்துகுடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

    அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கினர்.

    • அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு பூஜை நடந்தது.
    • சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது.

    திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெறக்கூடிய பங்குனிபெருவிழா, தெப்பத்திருவிழா மற்றும் திருக்கார்த்திகை திருவிழா ஆகிய 3 திருவிழாக்களிலும் கொடியேற்றத்துடன் நடப்பது போலவே இந்த 3 திருவிழாக்களிலும் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடப்பது தனிசிறப்பு.

    திருக்கார்த்திகை திருவிழாவான நேற்று வழக்கம்போல முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். அங்கு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு பூஜை நடந்தது.

    மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு சிரசில் தங்க கிரீடம் சாற்றப்பட்டது. மேலும் முருகப்பெருமானின் திருக்கரத்தில், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சூடி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பட்டாபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருவிழாவின் முதல் நாளில் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இன்று ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளில் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் இரண்டாவது நாளான நேற்று விபீஷ்ணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்காக கோவிலிலிருந்து ராமபிரான், சீதாதேவி, லெட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருடன் தங்ககேடயத்திலும், விபீஷ்ணரும் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு எழுந்தருளினர். தொடர்ந்து பகல் 2 மணிக்கு மேல் ராமபிரான் இலங்கை மன்னராக விபீஷ்ணருக்கு பரிவட்டம் கட்டி பட்டாபிஷேகம் செய்து வைத்தார். பின்னர் ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் விபீஷ்ணருக்கும் சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

    இந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பகல் 12.30 மணிக்கு கோவிலில் உள்ள ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகிறது. அதன் பின்னர் இரவு சுவாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி கோவில் ரத வீதிகளை சுற்றி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    ×