search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Park"

    • பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.
    • பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21-வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பல பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றியும், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்தும், புதர் மண்டியும், விஷ புச்சிகள் குடியிருக்கும் இடமாகவும் மாறி வருகிறது.

    குறிப்பாக பூந்தமல்லி நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்கா பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    இந்த பூங்காவுக்கு தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.

    ஆனால் இங்கு ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. இதனை குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும் ஏற்கனவே இருந்த குடிநீர், கழிப்பறை வசதிகள் அனைத்தும் இப்போது இல்லை. கழிவறைகள் உடைந்தும், குடிநீர் குழாய் துருபிடித்தும் காணப்படுகிறது. பூங்காவை சுற்றி நடந்து செல்லும் பாதையும் பல இடங்களில் இடிந்து கிடப்பதால் அதில் செல்லும் வயதானவர்கள் அடிக்கடி தடுமாறி விழும் நிலையும் நீடித்து வருகிறது.

    எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்காவை முறையாக பராமரித்து குழந்தைகள் விளையாட்டு சாதனங்களை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பூந்தமல்லி நகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை. குறிப்பாக நண்பர்கள் நகரில் உள்ள பூங்காவில் குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் விளையாடும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை கழிவுகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் வசிக்கும் இடமாகமாறி வருவதால் பொதுமக்கள் வந்து செல்லவே அச்சம் அடைந்து உள்ளனர்.

    இதனால் பூங்காக்களை பயன்படுத்த தயங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் சின்னப்பா நகரில் உள்ள பூங்காவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 10 நாட்களாகவே தவித்தனர்.
    • கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்படும் வரை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் மொத்தம் 786 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காங்களில் தினமும் காலையிலும், மாலையிலும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி செல்வது வழக்கம். குறிப்பாக ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    மேலும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து மாநகராட்சி பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாட விடுவார்கள். மேலும் ஆண்கள், பெண்கள் அனைவருமே பூங்காக்களில் உள்ள உடற்பயிற்சி சாதனங்களை பயன்படுத்தி உடற்பயிற்சியும் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் சென்னை நகரமே வெள்ளக்காடானது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து மிச்சாங் புயல் வருவதற்கு முன்பே சென்னையில் உள்ள பூங்காக்கள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்படும் வரை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 10 நாட்களாகவே தவித்தனர். பொதுமக்களும் குழந்தைகளுடன் மாலை நேர பொழுது போக்குக்கு இடமில்லாமல் அவதிப்பட்டனர். மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பூங்காக்களை திறக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று திறக்கப்பட்டன. பல பூங்காக்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. நடைபயிற்சி செல்லும் பாதைகளில் முறிந்து விழுந்து கிடக்கும் மரங்களில் கிளைகள் முதலில் அகற்றப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

    இதையடுத்து இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    • திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திருச்சி கம்பரசம் பேட்டையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கப்படுகிறது.
    • காவிரியில் வெள்ளம் வந்தால் இந்த பகுதி பாதிக்கப்படாமல் இருக்க உரிய அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திருச்சி கம்பரசம் பேட்டையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ரூ. 13 கோடியே 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது திருச்சி - கரூர் நெடுஞ்சாலையை ஒட்டி, காவிரி கரையோரத்தில், 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகளை இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இதில் பறவைகள் தங்குமிடம் 60 ஆயிரம் சதுர அடியில் அதன் நல்வாழ்வை உறுதிசெய்ய காற்றோட்டம் மற்றும் இயற்கை விளக்குகளை எளிதாக்கும் வெளிப்படையான கண்ணிகளுடன் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது.

    இதில் தீக்கோழிகள் மற்றும் அரிய வகை பறவைகள் உட்பட பலதரப்பட்ட கவர்ச்சியான பறவை இனங்களை பாதுகாக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட உள்ளது. இதுவும் தஞ்சாவூரில் உள்ள ராஜாலியின் பறவை பூங்காவைப் போன்று பெரிய அளவில் அமைய உள்ளது.

    இந்த பறவைகள் பூங்கா உள்ளூர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உருவாகிறது. காவிரியில் வெள்ளம் வந்தால் இந்த பகுதி பாதிக்கப்படாமல் இருக்க உரிய அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    இந்த பூங்காவின் பறவைக் கூடத்திற்குள், மரங்கள் மற்றும் செயற்கை குளங்களுக்கு மத்தியில் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுவது புதிய அனுபவமாக இருக்கும்.

    மேலும் இங்கு 50 பேர் அமரும் திறன் கொண்ட ஒரு மினி தியேட்டர் அமைய உள்ளது. இதில் அறிவியல் ஆவணப்படங்கள் திரையிடுவதற்கும், பறவையியல் குறித்த குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர சிற்றுண்டிச்சாலை, சிமெண்ட் அணுகு சாலை மற்றும் சுமார் 60 கார்கள் மற்றும் 100 பைக்குகளுக்கான பார்க்கிங் வசதிகளும் செய்யப்படுகிறது. இந்த கட்டுமான பணிகளை ஒரு வருட காலத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    இந்த பூங்கா அமைவதால் திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட வழித்தடத்தின் வடிவமைப்பை மாற்றியமைத்து நீட்டிக்க மாவட்ட நிர்வாகம் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    • நகராட்சி ஆணையர் தாமோதரன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு கே.ஜே.நகரில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நகராட்சி ஆணையர் தாமோதரன் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜி.கே.லோகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    இதில் நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், திட்ட இயக்குனர் பாஸ்கரன், மேலும் எம்.கே.டி.சரவணன் 9-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளர் ஜினோ, அவைத்தலைவர் கணேசன், இளைஞரணி நிர்வாகிகள் பிரபு, ரவி பங்கேற்றனர்.

    • அறிவிப்பு பலகைகள், வண்ண மின் விளக்குகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் அமைந்திருந்தன.
    • பாம்புகள், காட்டுப்பன்றிகள் ஆக்கிரமித்து சுற்றுலா பயணியருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா மையமாக உடுமலை பகுதி அமைந்துள்ளது. அமராவதி அணை, திருமூர்த்திமலை மற்றும் வனப்பகுதிகள் என ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையமாக உள்ளது.

    ஆனால் அவர்களை ஈர்க்கும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் மாவட்ட சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெயரளவிற்கு மட்டுமே சுற்றுலா மையமாக உள்ளது. இதில் அமராவதி சுற்றுலா மையத்தில் அமராவதி அணை மற்றும் பூங்கா, வனத்துறை முதலை பண்ணை, அமராவதி மலைத்தொடர்கள், படகு சவாரி என சுற்றுலா மையமாக உள்ளது.

    ஒரு காலத்தில் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் அணையின் கரை பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பசுமையான பூங்கா அமைந்திருந்தது.இங்கு பல செயற்கை நீரூற்றுக்கள், அழகான நடை பாதை, புற்கள், வண்ணமயமான செடிகள், பாரம்பரியமான மரங்கள், அவற்றின் வகைகள், இயல்புகள் குறித்த அறிவிப்பு பலகைகள், வண்ண மின் விளக்குகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் அமைந்திருந்தன.

    அதே போல் அணையின் எதிர்புறம் 2 ஏக்கர் பரப்பளவில், சிறுவர்களுக்கான விளையாட்டுப்பூங்கா, அரிய வகை பறவைகள், 18க்கும் மேற்பட்ட வன விலங்குகள் தனித்தனி அறைகளிலும், பாம்பு வகைகள் தனித்தனி அறைகளிலும், மான் ஆகியவற்றுடன் உயிரியல் பூங்காவும் இருந்தன.மேலும் பூங்காவில், புலி, மான், காளை என சிலைகள் மற்றும் செடி, கொடிகளால் ஆன செயற்கை கூடாரம் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏராளமான அம்சங்கள் இருந்தன.

    சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்தாலும் அணை பூங்காவை பராமரிப்பதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக அணை பூங்கா முட் புதர்கள் முளைத்தும், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.உயிரியல் பூங்கா முழுவதும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றுகள், அவற்றின் உபகரணங்கள் உடைந்தும், மின் விளக்குகள் திருடப்பட்டும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மது அருந்தும் இடமாகவும் பூங்கா மாறியுள்ளது. அணை பூங்கா முழுவதும் அடர்ந்த வனப்பகுதி போல் மாறியுள்ளதால், பாம்புகள், காட்டுப்பன்றிகள் ஆக்கிரமித்து சுற்றுலா பயணியருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    அதே போல் அவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் என அடிப்படை வசதிகள் இல்லை.வாகனங்கள் பார்க்கிங் செய்ய ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களும் மாயமாகியுள்ளது.அணை மற்றும் அணைப்பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள், அணை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கண்டு கொள்வதில்லை.அழகாக இருக்க வேண்டிய பூங்கா அலங்கோலமாக மாறியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் அவல நிலை உள்ளது.

    எனவே அமராவதி அணை பூங்காவை முழுமையாக புதுப்பிக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும், சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அணை பூங்காவை புதுப்பிக்க, பொதுப்பணித்துறை சார்பில் சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் பல முறை திட்ட அறிக்கைகள் தயாரித்து அரசுக்கு நிதி கோரி அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் அணை பூங்கா அடையாளத்தை இழந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரே சுற்றுலா தலமாக உள்ள நிலையில் இதனை மேம்படுத்த வேண்டும். தமிழகத்திலேயே சிறப்பு வாய்ந்த கள்ளி வகைகள் இருக்கும் வகையில், பாறை பூங்கா அமைக்கப்பட்டது.பல்வேறு வகையான மற்றும் வடிவங்களிலுள்ள கள்ளி செடிகள் இங்கு அமைக்கப்பட்டு பல வண்ண மலர்களுடன் அவற்றின் ரகங்கள், இயல்புகள் குறித்து அறிவிப்பு பலகைகள் என அழகாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தாவரங்கள் குறித்த அறிவு வளர்க்கும் அம்சமாகவும் இருந்தது. தற்போது கள்ளிப்பூங்காவும் பராமரிப்பின்றி, அடையாளத்தை இழந்து அடர்ந்த வனமாக மாறியுள்ளது. 

    • ஊட்டி பகுதியில் பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதாக செய்தி வெளியானது
    • பூங்காவை உடனடியாக சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் உத்தரவு

    ஊட்டி,

    ஊட்டி பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்கா பராமரிப்பின்றி கிடந்தது. இதனால் அங்கு நடைபயிற்சிக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதுதொடர்பாக மாலைமலர் பத்திரிகையில் செய்திகள் வெளியாயின. தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி அந்த பூங்காவில் தற்போது சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    • அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து மாநகராட்சியாக கடந்த 2021-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி மேயராக மகாலட்சுமி உள்ளார்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சி திட்டங்கள் முழுமை அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

    கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பெருநகராட்சி என்ற பெயர் பலகைகள் கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளன. மாநகராட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் பூங்கா முழுவதும் புதர் மண்டி காடுபோல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள விளையாட்டு சாதனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு காட்சி அளிக்கின்றன. இதனால் இந்த பூங்காவுக்கு செல்வதையே பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள்.

    இந்த பூங்கா கடந்த 2017-ம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பூங்கா சரிவர சீரமைக்கப்படாமல் அலங்கோலமாக காட்சிஅளிப்பதால் இங்கு வரும் பொதுமக்கள் முகம்சுளித்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கூட்டத்திலும் பூங்காவை சீரமைக்க ரூ.5 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த கூட்டத்திலும் இந்த பூங்காவை சீரமைக்க ரூ.2 லட்சம் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    ஆனாலும் இதுவரை பூங்காவை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காஞ்சிபுரம் பெருநகராட்சி என்ற பெயர் பலகையும் மாநகராட்சியாக தரம் உயராமல் அப்படியே காட்சி அளிப்பதால் இதனை பார்த்து செல்லும் மக்கள் பூங்காவில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆவது எப்போது? என்ற கேள்வியுடனே செல்கிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் வளர்ச்சிப்பணிகளில் மாறவில்லை. போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம் அருகே பல்லவன் நகரில் உள்ள பூங்காவை சீரமைக்க மாநகராட்சி கூட்டத்தின் போது அனுமதி அளிக்கப்பட்டாலும் இதுவரை பணிகள் நடைபெறவில்லை.இதற்காக காரணம் என்ன என்று தெரிவியவில்லை.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மண்டல குழு அலுவலகங்கள் புதிதாக புனரமைக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பூங்காவை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
    • உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ், ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்து, 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு ஒப்படைத்தார்.

    தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் சார்பில், தலா ரூ.2.10 லட்சம் மானியம் வீதம், 38 நபர்களுக்கு ரூ.79.30 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை மற்றும் தனி நபர் கழிவறை அமைக்கும் திட்டத்தின்கீழ், தலா ரூ.9,300 வீதம் 10 நபர்களுக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய செயற்பொறியாளர் குமாரதுரை, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அசோக், செயல் அலுவலர் (பொ) ஷேக் லத்திப், கவுன்சிலர்கள் மகாலட்சுமி செந்தில், சசிகலா கபரியேல், சந்திர பாண்டியன், வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி அன்பரசு, கந்தன், பார்த்திபன், கீதா செந்தில், உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஆடிப்பெருக்கை யொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் ஒரே நாளில் 18 ஆயிரம் பேர் குவிந்த வண்ணம் உள்ளனர்
    • கொடிவேரியில் 13,500 பேர் குளித்து மகிழ்ந்தனர்

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வ தற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழக த்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட ஏராள மான மக்கள் வந்து தண்ணீரில் குளித்து மகிழ் வார்கள். இதனால் தடுப்பணையில் எப்போது கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் ஆடி பெருக்கை நேற்று வழக்க த்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து கொடி வேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். காலை முதலே ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பலர் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் கொடி வேரி பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்களின் தலைகளாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கூட்டம் அலை மோதியது.

    இந்த நிலையில் ஆடி பெருக்கு விழாவையொட்டி நேற்று ஒரே நாளில் சுமார் 15 ஆயிரத்து 500 பேர் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து விட்டு சென்றனர். இதன் மூலம் ரூ.67 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் சத்திய மங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணைக்கு ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி ஏராளமான பொதுமக்கள் வந்து இருந்த னர். பவானிசாகர் அணைக்கு காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அதி கரித்து கொண்டே இருந்தது.

    ஆடி பெருக்கையொட்டி அணையின் மேல் பகுதியில் பொதுமக்கள் அனுமதி க்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு கருதி அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பவானிசாகருக்கு வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதை தொடர்ந்து அவர்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். குழந்தைகளுடன் வந்து இருந்த மக்கள் அங்கு ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். இதனால் பவானிசாகர் முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது. தொடர்ந்து பொது அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.இதனால் நேற்று ஒரே நாளில் பவானிசாகர் அணை பூங்காவுக்கு சுமார் 18 ஆயிரத்து 394 பேர் கண்டு களித்தனர். இதன் மூலம் ரூ. 91 ஆயிரத்து 470 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒற்றை யானையை பூங்காக்குள் மெதுவாக ஜாலியாக நடந்து சென்றது.
    • பவானி ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் வழியாக பவானி சாகர் வனப்பகுதிக்குள் சென்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் வனச்சரகத்து க்குட்பட்ட பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தினமும் யானைகள் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி அணையின் மேல் பரப்பில் இருந்து அணைப்பகுதிக்கு வந்து தண்ணீர் குடிப்பது வாடிக்கையாகி வருகிறது.

    அதேபோல் இன்று காலை 7 மணியளவில் பவானிசாகர் வனப்பகுதி யில் இருந்து பவானிசாகர் அணை பகுதிக்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்த ஒற்றைக்காட்டு யானை அணையின் மேல் பகுதியில் அப்படியே நடந்து வந்து பவானிசாகர் அணை பூங்காவில் நுழைந்தது.

    இதைப்பார்த்து பூங்கா ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். காலை 7 மணி அளவில் யானை வந்ததால் பயணிகள் யாரும் உள்ளே இல்லை. இதனால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. பின்னர் ஒற்றை யானையை பூங்கக்குள் மெதுவாக ஜாலியாக நடந்து சென்றது.

    பின்னர் யானை மெல்ல மெல்ல பூங்காவில் உணவு கிடைக்குமா என அங்கும் இங்கும் அலை மோதி கடைசியாக ஒரு வழியில் பூங்காவில் நுழைவாயில் இருந்து வெளியே வந்தது. வெளியே வந்த யானை பூங்காவின் எதிரே உள்ள கடைகளுக்கு சென்று ஏதாவது உணவு கிடைக்குமா என தேடி பார்த்தது. அப்போது கடைகள் மூடி இருந்ததால் அவை ஒன்றும் செய்யாமல் சென்றுவிட்டது.

    பின்னர் சிறிது நேரம் அங்கும், இங்கும் பார்த்துவிட்டு பிறகு பவானி ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் வழியாக பவானி சாகர் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பூங்காவானது பூட்டியே கிடக்கிறது.
    • அதிவிரைவில் பூங்காவை சுத்தம் செய்து திறப்பு விழா நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பூங்காக்கள் என்பது மக்களின் பொழுது போக்கு அம்சத்தில் முக்கிய அங்கமாகும். கோவையில் சிறுவர் பூங்கா, முதியோர் பூங்கா, உயிரியல் பூங்கா என பல பூங்காக்களும் உள்ளது. இந்த பூங்காக்கள் மக்களுக்கு மன நிம்மதியையும், மன அமைதியையும் கொடுத்து வருகிறது.

    பரபரப்பான இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வார நாட்கள் முழுவதும் தங்கள் வேலைகளில் முழ்கி கிடப்பார்கள். வார இறுதி நாட்களில் யாராவது உறவினர்களை சந்திப்பது, பூங்காக்களில் சென்று பொழுதை கழிப்பது என தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

    அதிலும் பூங்காவுக்கு தங்கள் குடும்பத்தினர் மட்டுமின்றி, உறவினர்களை அழைத்து வந்து, அன்றைய வாரத்தில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் உள்பட எண்ணற்ற தகவல்களை சிரித்து பேசி மகிழ்வார்கள்.

    தற்போது எல்லாம் பெரிய, பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பூங்காக்கள் உள்ளன. மக்கள் பூங்காவை தேடி அலைய வேண்டாம் என்பதற்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் போதே, அதன் அருகே இடத்தை வாங்கி அங்கு பூங்காவையும் உருவாக்கி விடுகின்றனர். அந்த பூங்காவில் குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை இடம் பெற செய்து விடுகிறார்கள்.

    இது குடியிருப்பில் வந்து வாழக்கூடிய பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து நேரத்தை போக்குவதற்கு வரபிரசாதமாக உள்ளது.

    கோவையில் ஏராளமான பூங்காக்கள் இருந்தாலும், ஒரு சில பூங்காக்கள் எந்தவித பராமரிப்பும் இன்றி புதர் மண்டி மக்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகிறது. இது மக்களுக்கு மிகவும் வருத்தத்தை தான் தெரிகிறது. தாங்கள் பயன்படுத்தி வந்த பூங்கா இப்போது இப்படி ஆகி விட்டதே என நினைத்து சிலர் வருந்தி சொல்லி கொண்டு செல்வதையும் காணதான் முடிகிறது.

    கோவை சாய்பாபா காலனி கே.கே புதூர் பகுதியில் இருந்து கிரி நகர் செல்லும் வழியில் கணபதி லே-அவுட் உள்ளது. இந்த பகுதியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

    அந்த பகுதி மக்களின் தேவைக்காகவும், குழந்தைகள் விளையாடுவதற்காக பூங்கா ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த பூங்காவில் சிறுவர்களுக்கு பிடித்தமான ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, செயற்கை நிரூற்றுகள், ரெயில் வண்டிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.

    இதில் அந்த லேஅவுட்டில் வசிப்பவர்கள் மட்டுமின்றி அருகே உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் குழந்தைகளுடன் வந்து, பூங்காவை பார்வையிட்டு, அதில் சிறது நேரம் அமர்ந்து பேசி விட்டு செல்வார்கள். குழந்தைகள் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்வதும் வழக்கமாக இருந்து வந்தது.

    ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பூங்காவானது பூட்டியே கிடக்கிறது. அந்த பூங்கா முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி ஒரு காடு போல காட்சியளிக்கிறது. உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. அந்தளவுக்கு இந்த பூங்காவானது மாறி விட்டது.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூங்கா எப்படி இருந்தது தெரியுமா. எங்களின் நேர போக்கே இந்த பூங்காவாக தான் இருக்கும்.

    எங்களுக்கு ஏதாவது மன கவலையோ அல்லது ஏதாவது சிறு பிரச்சினைகள் வந்தாலோ உடனே நாங்கள் தேடி செல்லும் இடம் இந்த பூங்காவாக தான் இருக்கும். ஏனென்றால் அங்கு சென்றவுடன் குழந்தைகள் துள்ளி குதித்து விளையா டுவதும், அங்கு நிலவக்கூடிய அமைதியும், நம் மனதில் இருக்கும் அனைத்தையும் அப்படியே மறைத்து நம்மை வேறு நிலைக்கு மாற்றி விடும்.

    இதனாலேயே காலை, மாலை நேரங்களில் நாங்கள் எங்கள் குழந்தைகளை பூங்காவுக்கு அழைத்து வந்துவிடுவோம். அங்கு சிறிது நேரம் உட்கார்ந்து சற்று இளைப்பாறுவதுடன், குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி எங்கள் பொழுதை கழித்து வந்தோம். இது எங்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    கை குழந்தைகளை தூக்கிக் கொண்டு வரும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நிலவை காட்டியும், அக்கம்பக்கத்தில் விளையாடி கொண்டி ருக்கும் குழந்தைகளை காண்பித்து ஏமாற்றி சாதம் ஊட்டுவோம். குழந்தைகளும் தன்னையே மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு சாதம் அனைத்தை யும் சாப்பிட்டுவிடும். ஆனால் தற்போது குழந்தை யை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் புழுதி பறக்கும் சூழ்நிலைதான் காணப்படுகிறது.

    இந்த பூங்கா பொழுதை கழிக்க மட்டும் உதவவில்லை. நல்ல தோழிகளையும், குடும்ப நண்பர்களையும் உருவாக்கி தந்தது. தோழிகள் அனை வரும் ஒருவ ருக்கொருவர் மனம்விட்டு பேசியும் வந்தோம். அந்தவுக்கு விளங்கிய இந்த பூங்கா தற்போது, 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக தினமும் நேர போக்கிற்கே பொழுதை கழிக்க முடியாமல் சிரமப்படு கிறோம்.

    பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மாலை நேரங்களில் இங்கு வந்து நிம்மதியாக அமர்ந்து நேரத்தை போக்குவது வழக்கம். ஆனால் தற்போது அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் வீட்டுக்கு ள்ளேயே முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகவே வயதானவர்களின் வாழ்க்கையிலும் இந்த பூங்கா ஒரு இன்றியமையாத இடத்தை பிடித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதும் கூட ,இப்பகுதியில் நடைபயிற்சி செய்யும் வயதானவர்கள் பூங்காவை ஒரு நிமிடம் நின்று வெறித்து வெறித்து பார்த்துவிட்டு சொல்லும் சூழ்நிலையை காண முடிகிறது.

    மழையிலும், வெயிலி லும் காய்ந்த நிலையில் உள்ளதால் பூங்காவிற்குள் அமைந்துள்ள ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு போன்ற உபகரணங்கள் அனைத்தும் துருப்பிடித்த நிலையில் உள்ளது.

    மேலும் பூங்காவில் புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகள் வருவதுடன், நள்ளிரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்களும் இங்கு நடந்து வருகிறது.

    ஒரு சில பகுதிகளில் பூங்காவை சுத்தம் செய்து வருகின்றனர். ஆனால் இங்கு பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா எப்போது சுத்தம் செய்யப் போகிறார்கள்? எப்போது திறக்கப் போகிறார்கள்? என்று தான் நாங்கள் கேட்டு கொண்டிருக்கிறோம். அதிவிரைவில் பூங்காவை சுத்தம் செய்து திறப்பு விழா நடத்த வேண்டும்.

    மீண்டும் எங்களுக்கு நேரப்போக்கு அம்சத்தை உருவாக்கி தர வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை யாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நகராட்சி பூங்காவில் மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது.
    • பூங்காவிற்கு வரும் குழந்தைகள் திறந்த வெளி குடிநீர் வால்வு பள்ளங்களில் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரை பகுதியில் உள்ள சுந்தரபுரம் தெருவில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இதனை சுற்றி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நூலகம், வணிக வளாகத்துடன் கூடிய குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது.

    குறுகிய இடத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா வில் குடிநீர் குழாய்கள் திறக்க வால்வு பள்ளங்கள் 3 இடத்தில் மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அருகில் மிகவும் தாழ்வான நிலையில் அறுந்து தொங்கும் மின் சப்ளை செல்லும் மின்சார வயர்கள் செல்கிறது.

    தினமும் மாலை நேரங்க ளில் மற்றும் விடுமுறை நாட்களில் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் திறந்த வெளி குடிநீர் வால்வு பள்ளங்களில் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.

    எனவே நகராட்சி நிர்வாகம் தாழ்வாக செல்லும் மின்சார வயர்களை பூங்கா வழியே பயன்படுத்தாமல் மாற்று வழியே பயன்படுத்தி திறந்த வெளி பள்ளங்களை மூடி பூங்காவிற்க்கு கூடுதல் இடம் ஒதுக்கி விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×