search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palak Recipes"

    தோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பசலைக்கீரை டிப். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - ஒரு கட்டு
    ஆலிவ் ஆயில் - 1 மேசைகரண்டி
    சின்ன வெங்காயம் - 5
    தயிர் - 2 கப்
    உப்பு மற்றும் மிளகு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிது தண்ணீல் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

    வேக வைத்த பசலைக்கீரையை விழுதாக அரைத்து அதனுடன் தயிர், உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வதங்கிய வெங்காயத்தை தயிர் கலவையில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    பரிமாறுவதற்கு முன்பு குளிரவைத்து, அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பசலைக்கீரை டிப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசி, பாலக்கீரை சேர்த்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 1 கப்
    பாசிப்பருப்பு - 1/3 கப்
    பாலக் கீரை - 1 கட்டு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 1
    இஞ்சி - 1 துண்டு
    உப்பு - 1/3 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    உளுந்து - அரை  டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    முந்திரி - 10



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாமை அரிசியை வறுத்து பாசிப்பருப்பைச் சேர்த்து 3 ½ கப் நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

    குக்கரில் அரிசி பாசிப்பருப்பைத் தண்ணீருடன் ஊற்றி கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு போட்டு 7 விசில் வரும்வரை வேகவிடவும்.

    வெந்ததும் இறக்கி மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் உளுந்து, சீரகம், மிளகு முந்திரி போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து சத்தான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக்கீரை - 1 கட்டு
    கோதுமை மாவு - 1 கப்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
    ப.மிளகாய் - 1
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெண், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பசலைக்கீரையை கொட்டி வதக்கவும்.

    அதனுடன் ப.மிளகாயையும் சேர்த்து வதக்கி ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த கீரை விழுது, கரம் மசாலா துள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    மாவு மிருதுமான பதத்திற்கு வந்ததும பூரிகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான பசலைக்கீரை பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டிரை நட்ஸ், கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காய்ந்த கருப்பு திராட்சை - ஒரு கைப்பிடி,
    பசலைக்கீரை - ஒரு சிறிய கட்டு
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
    வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி - தேவையான அளவு,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி பசலைக்கீரை, மிளகுத்துள், உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் காய்ந்த கருப்பு திராட்சை, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த பசலைக்கீரை நட்ஸ் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வார நாட்களில் இரவு நேரங்களில் என்ன செய்வதென்று குழம்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு நல்ல இரவு உணவாக கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மக்ரோனி - 1 கப்
    ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
    பூண்டு பற்கள் - 5
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    காளான் - 10
    பசலைக்கீரை - 1 கட்டு
    டையட் மயோனிஸ் - 5 ஸ்பூன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை

    பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காளானை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அந்த நீரில் உப்பு சேர்த்து மக்ரோனியை போட்டு வேக வைக்கவும். 5 நிமிடங்கள் வேக விடவும். அவ்வப்போது அடியில் மக்ரோனி தாங்காமல் இருக்க கிளறி விடவும். 5 நிமிடத்திற்கு பிறகு, மக்ரோனியை வடிகட்டி எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.  

    வடிகட்டி எடுத்து வைத்த நீரில் 120 மிலி தண்ணீரை தனியே எடுத்து வைத்து கொள்ளவும். இதனை பிறகு பயன்படுத்த வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றி  சூடானதும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வெந்தவுடன், காளான் மற்றும் கீரையை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

    கீரையில் இருக்கும் நீர் வெளியேறும். அதன் பின்பு, சிறிதளவு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    மக்ரோனி வேக வைத்து வடிகட்டி எடுத்து வைக்கப்பட்ட நீரை இப்போது இந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளறவும்.

    இப்போது அடுப்பில் இருந்து கடாயை இறக்கி, மயோனிஸ் சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு மறுபடி, அடுப்பில் வைத்து கிளறவும். 1 நிமிடத்தில் சாஸ் சற்று கெட்டியாக மாறும். இந்த நேரத்தில் மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

    இப்போது கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, பாலக்கீரை சேர்த்து கட்லெட் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக்கீரை - ஒரு சிறு கட்டு,
    உருளைக்கிழங்கு - 2,
    பிரெட் ஸ்லைஸ்கள் - 4,
    பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பிரெட் தூள் - சிறிதளவு,
    மைதா மாவு - அரை கப்,
    சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆலு பாலக் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் மொறு மொறு பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - 1 கட்டு
    கடலை மாவு- 1 கப்
    பெ.வெங்காயம்- 2 (நறுக்கவும்)
    மிளகாய் தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை:


    கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கொட்டி தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    அதனுடன் கடைசியாக கீரையை கலந்துகொள்ளவும்.

    வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கலந்து வைத்துள்ள மாவு கலவையை உதிர்த்து போட்டு பக்கோடா தயாரிக்கவும்.

    சூப்பரான கீரை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாலக்கீரை நம் உடலுக்கு வலுவூட்டி, குளிர்ச்சியைத் தருவதுடன், மலச்சிக்கலையும் போக்கும் வல்லமை இதற்கு உண்டு. இன்று பாலக்கீரையில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 3 கப்
    கடலை மாவு - 1 ½ கப்
    அரிசி மாவு - 2 ½ டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    வறுத்து அரைத்த சீரகத் தூள் - ½ டீஸ்பூன்
    இஞ்சி விழுது - ½ டீஸ்பூன்
    புதினா இலை - 12
    கொத்தமல்லி தழை - 2 டேபிள் ஸ்பூன்
    சூடாக்கிய எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    பாலக்கீரை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாலக்கீரை, கொத்தமல்லி, புதினா, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இறுதியாக சூடாக்கிய எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பக்கோடாவிற்கு தேவையான பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும். பஜ்ஜி மாவைப் போல் நீர் பதத்தில் இல்லாமல் பொள பொளவென்று இருக்க வேண்டும். அப்போதுதான் பக்கோடா பொரிப்பதற்கு பதமாக, நன்றாக இருக்கும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து பாலக் கீரை கலந்து சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விடவும். அது பொன்னிறமாக ஆகும் வரை வறுக்கவும்.

    பாலக் கலவையை வாணலியில் அளவாக போட்டால் நன்றாக மொறுமொறுவென வரும். இந்த பக்கோடாவை காற்று போகாமல் மூடி வைத்தால் 2, 3 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.

    சூப்பரான பாலக் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று பாலக்கீரை சிக்கன் சேர்த்து சூப்பரான பாலக் சிக்கன் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாலக்கீரை - 1 கட்டு
    சிக்கன் - 1/2 கிலோ
    வெங்காயம் - 300 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து வதக்கவும்.

    இத்துடன் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்க்கவும். தேவையானால் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.

    சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டோஃபு, பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - ஒரு கப்,
    டோஃபு (சோயா பன்னீர்) - 100 கிராம்,
    வெங்காயம் - ஒன்று,
    செலரி - சிறிதளவு,
    கோஸ் - 100 கிராம்,
    நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன்,
    சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகுதூள், காய்கறி வேகவைத்த தண்ணீர், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    டோஃபுவை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, செலரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கோஸ், செலரி, இஞ்சி - பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும்.

    பிறகு பொடியாக நறுக்கிய பாலக் மற்றும் டோஃபு சேர்க்கவும்.

    நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான டோஃபு பாலக் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோர்வடையாமல் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க சாலட்டை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இன்று பசலைக்கீரை, முட்டை சேர்த்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பசலைக்கீரை - கால் கட்டு
    முட்டை - 2
    தக்காளி - 2
    மிளகுத் தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    பசலைக்கீரையை நன்கு கழுவி, பொடியாக நறுக்கி வைக்கவும்.

    முட்டையை நன்றாக வேக வைத்து ஓட்டை உரித்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    அடுத்து தக்காளியை வட்டத் துண்டுகளாக்கி, அதனை லேசாக நெருப்பில் க்ரில் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் முதலில் நறுக்கிய கீரையை போட்டு அதன் மேல் தக்காளியை வைத்து ஒருமுறை பிரட்டி, பின் அதன் மேல் முட்டையை வைத்து, வேண்டுமானால் மேலே லேசாக உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    சூப்பரான பசலைக்கீரை - முட்டை சாலட் ரெடி.

    பசலைக்கீரையை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் கீரையை 3 நிமிடம் சூடான நீரில் போட்டு வைத்த பின்னர் எடுத்தும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அசைவ உணவுக்கு ஈடான சுவையை தரும் காளானுடன் சத்துக்கள் நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து ஒரு குழம்பு செய்தால், மிகவும் அலாதியான சுவையில் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பட்டன் காளான் - 15
    வெங்காயம் - 1
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    பசலைக்கீரை பேஸ்ட் பொருட்கள்...

    பசலைக் கீரை - 1 கட்டு
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 4
    பட்டை - 1
    ஏலக்காய் - 4
    கிராம்பு - 4
    அன்னாசிப்பூ - 1
    கொத்தமல்லி - ஒரு கட்டு



    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டன் காளானை நன்கு நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    பசலைக்கீரை பேஸ்ட்டிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட் போல், தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின்பு நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

    பிறகு பசலைக்கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    அடுத்து மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்ற, மூடி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

    காளான் நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×