search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy Procurement Station"

    • கடந்த ஒரு வார காலமாக இந்த நெல் மூட்டைகள் மேல்புறம் தார்ப்பாயின்றி காணப்பட்ட நிலையில் உள்ளது.
    • இதனால் இப்பகுதியில் பெய்த மழையினால் நெல்மூட்டை கள் பல நனைந்து நாசமாகி உள்ளது.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட் பட்டது ஐந்தாங்கட்டளை கிராமம். ஆலங்குளம் தாலுகா விற்குட்பட்ட இக்கிராமத்தின் தென்புறமாக அமைந்துள்ள பரும்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியில் நெல்மூட்டைகளை வாங்கி இந்த கொள்முதல் நிலையத்தில் பணியாளர் மூலம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த நெல் மூட்டைகள் மேல்புறம் தார்ப்பாயின்றி காணப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் பெய்த மழையினால் நெல்மூட்டை கள் பல நனைந்து நாசமாகி உள்ளது. மேலும் பல நெல் மூட்டைகள் முளைத்த நிலையில் காணப்படுகின்றன.

    இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிகாரிகளின் கண்டுகொள்ளாத நிலையால் பல நெல் மூட்டைகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், உயர் அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டு என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

    • கறம்பக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கபட்டது
    • நெல் கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. முத்துராஜா திறந்து வைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கரு கீழத்தெரு ஊராட்சியில் உள்ள குரும்பிவயலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. கொள்முதல் நிலையத்தை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கரு கீழத்தெரு ஊராட்சி மன்ற தலைவரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவ பாஞ்சாலன், அரசு ஒப்பந்ததாரரும் மாவட்ட இலக்கிய அணியின் துணைச் செயலாளருமான கருக்காகுறிச்சி பரிமளம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் தமிழக அரசுக்கும், எம்.எல்.ஏ. முத்துராஜாவிற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் அப்பகுதி கிராமமக்கள் எம்.எல்.ஏ.விடம் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ. முத்துராஜா வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனால் அப்பகுதி பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

    • ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 3 நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
    • முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் அழியா நிலையில் 37 மெ.டன், துளையனூரில் 8 ஆயிரம் மெ.டன் பாதுகாக்கும் வகையில் மேற்கூரையுடன், கான்கிரீட் தளம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பொருட்டு கான்கிரீட் தளம், மேற்கூரை கட்ட தமிழக அரசு ரூ.47.11 நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 40 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில் அறந்தாங்கி தாலுகா, அழியா நிலையிலும், துளையனூரில் 12.50 மெ.டன் என மொத்தமாக 52.5 மெ.டன் பாதுகாக்கப்படும் வகையில் 37 மேற்கூரையுடன் கூடிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது.

    முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் அழியா நிலையில் 37 மெ.டன், துளையனூரில் 8 ஆயிரம் மெ.டன் பாதுகாக்கும் வகையில் மேற்கூரையுடன், கான்கிரீட் தளம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் அழியா நிலையில் 3 ஆயிரம் மெ.டன் கொள்ளவு கொண்ட 2 கிடங்குகளையும், துளையனூரில் 4 ஆயிரம் மெ.டன் கொள்ளவு கொண்ட 3 கிடங்குகளையும் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மேலும் புதுக்கோட்டை மாவட்டம், சிறுமருதூர், பொன்னன்விடுதி, நெற்குப்பை ஆகிய இடங்களில் தலா ரூ.62.50 இலட்சம் வீதம் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 3 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

    இதற்காக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற் நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் எம்.சீதாராமன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • வடக்கலூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
    • விவசாயிகள் தங்கள் பகுதியிலேயே தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியம் வடக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும்பாலும் நெல் சாகுபடியே அதிகமாக செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் பகுதியிலேயே தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதையடுத்து தமிழக அரசின் சார்பில் வடக்கலூர் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் செல்லம்மாள் மாயவேல், துணைத் தலைவர் கணேசன், முன்னாள் தலைவர் பிச்சமுத்து, நெல் கொள்முதல் கண்காணிப்பாளர் சையது முஸ்தபா, பட்டியல் எழுத்தர் அழகுதுரை, அகரம் காமராஜ், பழைய அரசமங்கலம் குருசாமி, கத்தாழை மேடு செல்வகுமார் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதனால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு தொகுதியைச் சேர்ந்த வெம்பாக்கம் ஒன்றியம், சிறுவஞ்சிபட்டு, உக்கல், அளத்துறை, செய்யாறு ஒன்றியம், காழியூர் ஆகிய 4 கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயி களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் ஜெ.சி.கே. சீனிவாசன், தினகரன், ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளின் பயன்பெறும் வகையில் 4 அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் வெம்பாக்கம், அப்துல்லாபுரம், தூசி ஆகிய கிராமங்களில் தி.மு.க. சார்பில் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கோடை வெயில் தாக்கத்தை போக்கும் வகையில் பொது மக்களுக்காக தண்ணீர் பந்தல்கள் திறந்து வைத்து கிராம மக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, கிர்னி பழம், கீரைக்காய் உள்ளிட்ட வைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு, அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பார்த்திபன், சுந்தரேசன், கருணாநிதி, தி.மு.க. நிர்வாகிகள் சிட்டிபாபு, பிரகாசம், சங்கர், பெரு மாள், ராதாகிருஷ்ணன், தயாளன், அம்பிகாபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நெமிலி பெரப்பேரி விவசாயிகள் வலியுறுத்தல்
    • அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் அவதி

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பெரப்பேரி கிராமத்தில் விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர்.

    கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் ஏரி, குளம், குட்டை ஆகியவை முழுமையாக நிரம்பியது. இதனால் நவரை பருவகால நெற்பயிரை அனைவரும் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து விளைவித்த நெல்லை விற்க நெடுந்தூரம் கொண்டு செல்லவேண்டியுள்ளதால் தங்கள் பகுதியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என ராணிப்பேட்டை கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற கலெக்டர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டிருந்தார்.

    ஆனால் இதுவரை நெல்கொள் முதல் நிலையம் தொடங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டிவருகின்றனர். இதனால் அறுவடை செய்த நெல்லை விற்கமுடியாமல் விவசாயிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெமிலி பஸ் நிலையத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வேடல், அரக்கோணம் பகுதியில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேடல் செம்பேடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், குமார், சுந்தரமூர்த்தி, கருணாநிதி, பிரசாத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் கலந்துகொண்டு 2 இடங்களில் அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சவுந்தர், பொதுக்குழு தலைவர் கிருஷ்ணன், அவைத்த லைவர் சக்கரவர்த்தி, ஒன்றிய துணைச் செயலா ளர்கள் எஸ்.இ.போர் பாபு, பூசனம் கன்னியப்பன், பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் எம்.மூர்த்தி, குப்புசாமி, ராமலிங்கம், சுற்றுச்சூழல் ஒன்றிய துணை அமைப்பாளர் ஐயப்பன், தொழில்நுட்ப பிரிவு சந்துரு, ராகுல், தனசேகர், கிளைக் கழக செயலாளர்கள் மிலிட்டரி சுப்பிரமணி, ஏழுமலை, ராஜகோபால், சேகர், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர்.

     தாராபுரம் :

    தாராபுரம் அலங்கியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுவதற்கு 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர். ஆனால் அங்கு பணிபுரிந்து வந்த கொள்முதல் நிலைய அதிகாரி ஏழுமலை என்பவர் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் விவசாயிகளிடம் நீங்கள் வாங்கும் ரூ.15 உடன் எங்களுக்கும் சேர்த்து கூடுதலாக ரூ.10 வாங்கி தர வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரிடம் செல்போனில் லஞ்சம் கேட்டு பேசியதாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரி ஏழுமலை என்பவரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தார். அதற்கு பதிலாக புதிய அலுவலராக இளவரசன் என்பவரை அதிரடியாக அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    • போலீசார் விசாரணை
    • யார்? என்று அடையாளம் தெரியவில்லை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பின்புறம் இருந்த கழிவு நீர் குட்டையில் ஆண் பிணம் தண்ணீரில் மிதந்து கிடப்பதாக கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவுநீர் குட்டையில் இறந்து கடந்த பிணத்தை வெளியே எடுத்து பார்த்தபோது பிணம் அழுகிய நிலையில் இருந்தது. இறந்து கிடந்தவருக்கு சுமார் 37 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.

    பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதே குட்டையில் கடந்த பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது உடைய வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இன்றுவரை அடையாளம் காணப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போத இரண்டாவதாக ஒரு வாலிபர் அதே குட்டையில் இறந்து கிடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன.

    இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் இறந்த நபர் முன்விரோதம் காரணத்தால் யாராவது அடித்து கொலை செய்துவிட்டு இங்கு போட்டு விட்டு சென்று உள்ளார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    கடந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 2 பேர் மர்மமான முறையில் இறந்த கிடப்பது சந்தேகத்தி ற்குரியதாக உள்ளது. இதனை போலீசார் உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து இங்கு வந்து இரவு நேரங்களில் லாரியில் வந்து ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு தங்கி விடுகின்றனர். இப்பகுதியில் பலமுறை கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளன.

    இதனைத் தொடர்ந்து தற்போது மர்மமான முறையில் வாலிபர்கள் இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • விவசாயிகள் குற்றச்சாட்டு
    • 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனில் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் விஜயகீர்த்தி தலைமையில் 15 கோரிக்கை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணி அண்ணா சிலை, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, பழைய பஸ் நிலையம், ஆற்றுபாலம் வழியாக சென்று மா மரம் பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது.

    கூட்டுறவு சங்கத்தின் கடன் தவனை நீட்டிக்க வேண்டும். நேரடி கொள்முதல் நிலையம் இல்லாத ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரத்தை வேளாண்மை கூட்டுறவு மூலம் விற்பனை செய்ய வேண்டும் . கரும்பு டன்னுக்கு 6000 ரூபாய் ஆக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தினர்.

    நெல் கொள்முதல் நிலையங்களில் 1 கிலோவிற்கு 1 ரூபாய் கட்டாயம் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குகின்றனர். இதனை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும் கோஷமிட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அரிகிருஷ்ணன், மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் பெருமாள் மாவட்ட பொருளாளர் வேலு, ஆரணி வட்டார தலைவர் வேலப்பாடி கோபி, நெசல் கிளைத் தலைவர் மணிவண்ணன், கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கிளைச் செயலாளர்கள் வெற்றி வேந்தன் வெங்கடேசன் சக்திவேல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    • பாலாமடையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • சாலையில் படுத்து உருளும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.

    நெல்லை பாலாமடையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல் கொள்முதல் நிலையம்

    எங்கள் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொது கழிப்பிடம், சாலைகள் உள்ள பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதனை வேறு இடத்தில் அமைக்க கோரி ஊர் பொது மக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்திலும், நுகர்பொருள் வாணிப கழக மண்டல பொது மேலாளரிடமும் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம்.

    மேலும் இதனால் இரு தரப்பினருக்கிடையே பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைவில் மாற்று இடத்தில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    மோசமான சாலைகள்

    ராமையன்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல பகுதிகளிலும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.

    குறிப்பாக பாளை மார்க்கெட் முதல் சீவலப்பேரி, தச்சநல்லூர் முதல் நயினார்குளம் மார்க்கெட், டவுன் மவுன்ட் ரோடு முதல் குன்னத்தூர், பழைய பேட்டை முதல் டவுன் ஆர்ச் வரை மேலும் பால் கட்டளை, அழகநேரி, முக்கிய பஸ் நிலையங்களை சூழ்ந்துள்ள பகுதிகள் என முக்கிய இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.

    மேலும் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் போதுமானதாக இல்லை. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலையில் படுத்து உருளும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • கந்தர்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
    • அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தொடங்கி வைத்தார்

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அண்டனூர் ஊராட்சியில் மஞ்சம்பட்டியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பரமசிவம், மாவட்ட பிரதிநிதி முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகேசன், ராஜேந்திரன், ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, துணைத் தலைவர் மலர்விழி சிவானந்தம், ஊராட்சி செயலர் இளவரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×