search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Optional Petitions"

    • 15-வது பொது தேர்தல் விழுப்புரத்தில் விருப்ப மனுக்களை தி.மு.க.வினர் வழங்கினர்.
    • ஒன்றியங்களில் போட்டியிடும் விருப்பமுள்ள திமுக பிரதிநிதிகளுக்கு விருப்ப மனுக்களை வழங்கினார்.

    விழுப்புரம்:

    தி.மு.க. 15-வது பொதுத்தேர்தல் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்தல் விருப்ப மனு இன்று கலைஞர் அறிவாலயத்தில் காலை 10 மணி முதல் 5 மணி வரை பெறப்படும் என விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில்முன்னாள் மதுரை மேயரும், தலைமைகழக பிரதிநிதி தேர்தல் ஆணையாளர் குழந்தைவேல் கலந்துகொண்டு விழுப்புரம் மத்திய மாவட்ட த்தில் உள்ள வானூர் கிழக்கு ,வானூர் மேற்கு, கிளியனூர் கண்டமங்கலம் கிழக்கு, கண்டமங்கலம் மத்திய, கண்டமங்கலம் மேற்கு, விக்கிரவாண்டி கிழக்கு, விக்கிரவாண்டி மத்திய , விக்கிரவாண்டி மேற்கு, காணை வடக்கு, காணை மத்திய, காணை தெற்கு, கோலியனுர் கிழக்கு, கோலியனூர் மேற்கு, கோலியனூர் தெற்கு, முகையூர் வடக்கு, முகையூர் தெற்கு, மணம்பூண்டி, திருக்கோவிலூர் கிழக்கு, திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஆகிய ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளதால் மேற்கண்ட ஒன்றியங்களில் போட்டியிடும் விருப்பமுள்ள திமுக பிரதிநிதிகளுக்கு விருப்ப மனுக்களை வழங்கினார்.

    இதில் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து மீண்டும் மனுக்களை தேர்தல் ஆணையரிடம் வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் ெஜயசந்திரன், மாவட்ட பொருளாளர்ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் புஷ்பராஜ், மைதிலி ராஜேந்திரன், முருகன், மாநில விவசாய அணி அன்னியூர் சிவா ,ஒன்றிய செயலாளர்கள்கல்பட்டு ராஜா, மும்மூர்த்தி, தெய்வசிகாமணி,தங்கம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    ×