search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officer"

    • வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    மதுரை:

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து, அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

    இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்வதற்காக இன்று நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமான மாவட்ட கோர்ட்டு உத்தரவுகளை அமலாக்கதுறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டு, வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    • 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • 4 மண்டலங்களிலும் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது.

    நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் மழை நீர் தேங்கிய நிலையில் நெல்லை, மேலப்பாளையம், தாழையூத்து ஆகிய மண்டலங்களில் மழைநீர் முழுவதும் வடிந்துள்ளது.

    ஆனால் பாளை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதற்கிடையே நெல்லை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது.

    குறிப்பாக பாளை மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து மாநகர பகுதி முழுவதும் சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ ராவ் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் 4 மண்டலங்களிலும் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இன்று வண்ணார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கொசு மருத்து தெளிக்கப்பட்டது. மேலும் பாளை பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு அனைத்து இடங்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளும் நடைபெறுகிறது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் டெங்கு தடுப்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதிகளில் டெங்கு அறிகுறி காணப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டு அங்கு அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் வள்ளியூர், நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் அரசு மருத்துவமனைகளிலும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    • வாழை மரங்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தி பூசணிக்காய் உடைத்து வெகு விமர்சை யாக கொண்டாடப்படு வது வழக்கம்.
    • பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்கள் வாங்கு வதற்கு திரண்டு வந்தனர்.

    கடலூர்:

    நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு வீட்டில் பொறி, அவல் கடலை, பழ வகைகள் போன்றவற்றை வைத்து படைத்தும், வாகனங்களில் வாழை மரங்கள் கட்டி கோவிலுக்கு சென்று வாக னங்களை படைத்தும், வீட்டில் படைத்தும் மற்றும் வணிக நிறுவனங்கள் கடை களில் வாழை மரங்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தி பூசணிக்காய் உடைத்து வெகு விமர்சை யாக கொண்டாடப்படு வது வழக்கம். இந்த நிலையில் கடலூர் பகுதிகளில் நாளை ஆயுத பூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதச மியை முன்னிட்டு டன் கணக்கில் ஆயிரக்கணக் கான வாழைத்தார்கள் குவிந்து உள்ளது.

    இதன் காரணமாக இன்று காலை முதல் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்கள் வாங்கு வதற்கு திரண்டு வந்தனர். இதில் 150 முதல் 300 ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடலூருக்கு வழக்கமாக 2 டன் வாழைத் தார்கள் வந்த நிலையில் விழாக்காலம் என்பதால் 4 டன் வரை தற்போது வாைழத்தார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் நாளை ஆயுத பூஜை என்பதால் வாழ்த்தார்கள் அதிகளவில் வரவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரி வித்தார். 

    • கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடந்தது.
    • போலீசார் 3 பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அத்திக்குளம் கிராம நிர்வாக அலுவலர் திருப்பதி (44). இவர் மணல் திருட்டு தொடர்பாக உளுத்திமடை ஆற்றுப்பாலம் பகுதியில் வாகன சோதனைக்கு சென்றார்.

    அப்போது அங்கு வந்த செங்கமடை கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் திருப்பதியுடன் தகராறு செய்து தாக்கினார். மேலும் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து திருப்பதி கொடுத்த புகாரின்பேரில் கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்-அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் செங்குன்றாபுரம் கிராம உதவியாளராக உள்ளார். இவரது கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் இவருக்கு தங்கை கணவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்து குடும்பத்தினர் அவரை தாக்கி வீட்டை சேதப்படுத்தினர்.

    மேலும் தங்க செயினை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாண்டியம்மாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ஆமத்தூர் போலீசார் 3 பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப்படுகிறார்கள்.
    • திருச்செங்கோட வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சரவணன் ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வழியாக செல்லும் பல பஸ்களிலும், தொலைதூரம் செல்லும் சில அரசு பஸ்களிலும் முன்பக்க கண்ணாடிகளில் ஒளிரும் வண்ணவிளக்குகள் கொண்ட பட்டைகள் பொருத்தியிப்பதாகவும் இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப் படுவ தாக வந்த புகாரை அடுத்து

    திருச்செங்கோட வட்டார

    போக்குவரத்து அலுவலர்

    (பொறுப்பு) சரவணன்

    ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்களில் இருந்த வண்ணவிளக்கு பட்டைகளை அகற்றி னார்கள். பஸ் எண் வழித்தடம் மற்றும் டிரைவர், கண்டக்டர் உரிமங்களை பெற்று பதிவு செய்து கொண்டதோடு இந்த முறை அறிவுறுத்துவதோடு அடுத்த முறை பிடிபட்டால் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.
    • வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி (வயது 43).

    துணை வட்டார

    வளர்ச்சி அதிகாரி

    இவர் நாமகிரிப்பேட்டை யில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி யாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜோதி செல்வன் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.

    பீரோ திறந்து கிடந்தது

    இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மேல் ஜோதிசெல்வன் சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது. அதை பார்த்த ஜோதி செல் வன்அதிர்ச்சி அடைந்தார். முன்பக்க கதவு திறக்கப்படா மல் இருந்த நிலையில் சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததால் மர்ம நபர்கள் உள்ளே எளிதாக புகுந்து துணிகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து உள்ளனர்.

    28 பவுன் நகை

    அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரங்கள், தங்கச் செயின் உள்பட ரூ.12 லட்சம் மதிப்புள்ள 28 பவுன் நகை களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது பற்றி ஜோதிசெல்வன் மனைவிக்கு தகவல் அளித்தார். அவரும் வீட்டுக்கு விரைந்து வந்தார். கொள்ளை சம்பவம் குறித்து லோகநாயகி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    2 தனிப்படைகள்

    நாமக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்களை சேகரித்த னர். இதனிடையே கொள்ளை சம்பவத்தை ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகவனம் ஆகியோர் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கல்லணை தொடங்கி பூம்புகார் பகுதி வரை அவர் ஆய்வு மேற்கொண்டார்.‌
    • ஆய்வின்போது உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவா லங்காட்டில் நீர்வளத்து றையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

    காவிரி ஆற்றில் கல்லணை தொடங்கி காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பூம்புகார் பகுதி வரை அவர் ஆய்வு மேற்கொண்டார். திருவாலங்காடு கிராமத்தில் உள்ள காவிரி, விக்கிரமன் தலைப்பிலும் ஆய்வு செய்து பாசன வசதிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயராமன், வீரமணி மற்றும் உதவி பொறியா ளர்கள் உள்ளிட்ட அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    • கீரம்பூரில் உள்ள கிராம நிர்வாக அலுவல கத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியாவை சந்தித்து பேசி விட்டு வெளியே சென்றுள் ளார்.
    • அப்போது, தனது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே வைத்து விட்டு லதா சென்றுள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் அருகே உள்ள திண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி லதா (வயது 40). இவர் திண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று காலை கீரம்பூரில் உள்ள கிராம நிர்வாக அலுவல கத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியாவை சந்தித்து பேசி விட்டு வெளியே சென்றுள் ளார்.அப்போது, தனது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே வைத்து விட்டு லதா சென்றுள்ளார்.

    இந்த நிலையில் லதாவின் கணவர் பூபதி, மாலை வரை தனது மனைவி வீட்டுக்கு வராதால் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பூபதி, பல்வேறு இடங்களில் லதாவை தேடி உள்ளார்.

    எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு பரமத்தி போலீசில் பூபதி புகார் செய்தார். அதன்பேரில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய் துள்ளேன். கிராம நிர்வாக அலுவலர் லதா, தானாக எங்காவது சென்று விட்டா ரா? அல்லது எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் கிராம நிர்வாக அலுவலர் திடீரென மாய மான சம்பவம் அந்த பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    கல்வி தகுதி ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ைஹட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்.சி. படித்து முடித்திருக்க வேண்டும். வயது 1.7.2023 அடிப்ப டையில் பொதுப்பிரிவினர் 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் ேதர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 23-ந்தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குமாரபாளையம் அருகே ஆதரவற்றோர் மையத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கீதா ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு முறையாக உணவு 3 வேலையும் வழங்க–படுகிறதா? மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    குமாரபாளையம் அருகே ஆதரவற்றோர் மையத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கீதா ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு முறையாக உணவு 3 வேலையும் வழங்க–படுகிறதா? மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    நெல்லை கல்குவாரி விபத்து சம்பவத்தில் கனிம வளத்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என கற்களுடன் ஏராளமானோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் வினோத் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்பன் பாண்டியன் தலைமையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜபார், ஜமால், நிர்வாகிகள் நடராஜன், பீட்டர், பாலமுருகன் உள்பட ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர்.

    அதில், கல்குவாரி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான கனிமவளத்துறை உதவி இயக்குனரை அரசு ‘சஸ்பெண்டு’ செய்துள்ளது அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    திருப்பணிகரிசல்குளம் சேர்ந்த விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் முத்துமாரி தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

     திருப்பணிகரிசல்குளம் குளத்திற்கு சிறுக்கன்குறிச்சி வேளார் குளம், வெட்டுவான் குளம், வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மழைநீர் வரக்கூடிய பாதையின் ஓடையின் குறுக்கே பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் 60 அடி நீளத்தில் தடுப்புச் சுவர் ஒன்று கட்டப்படுகின்றது. இதனால் குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை தடைபடுகிறது. எனவே இந்த கட்டுமான பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.

    தேவர்குளம் அருகே உள்ள வட தலைவன் பட்டியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வாரம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கப்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குகிறார்கள்.

     ஒருதலைப்பட்சமாக வேலை வழங்குவதை தடுத்து நிறுத்தி அனைவருக்கும் வாரத்தில் 5 நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
    ×