search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OUR LADY OF FATIMA"

    • அன்னை பாத்திமா கல்லூரியின் நிதி மேலாண்மை கருத்தரங்கம் நடந்தது.
    • பின்னர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிதி மேலாண்மை பற்றிய 2 நாள் கருத்தரங்கம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் தலைமை செயல் அதிகாரி சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் படி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமை தாங்கி நிதி மேலாண்மை என்பது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிமனிதனுக்கும் அவசியம் தேவை. நிதி மேலாண்மை தெளிவு இருந்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.இக்கருத்தரங்கில் பகிரக் கூடிய நிதி பற்றிய அனைத்து தகவல்களையும் மாண வர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு தேர்வுக்கு மட்டுமல்லாமல் தங்களின் வாழ்வின் வெற்றிக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    முதலாம் நாள் அமர்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செபி அமைப்பின் நிதி மேலாண்மை கல்விப் பிரிவின் ஆலோசகர் டாக்டர் நளினி நிதி சேமிப்பு, நிதி முதலீடு, மற்றும் நிதி பராமரிப்பு போன்றவற்றை பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ மாணவிகள் கேட்ட வினாக்களுக்கு விரிவான பதில் அளித்தார். 2-ம் நாள் அமர்வில் மாணவ மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு நிதி மேலாண்மை பற்றிய குழு விவாதம் நடத்தப் பட்டது. இவ்விவாதத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து உற்சாகமாக கலந்து கொண்டனர். பின்னர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நிர்வாக மேலாண்மை துறை இயக்குனர் பேராசிரியர் நடேச பாண்டியன், டாக்டர் நாசர், டாக்டர் திருப்பதி, பி.பி.ஏ. துறை தலைவர் கார்த்திகா பேராசிரியர்கள் அழகு லட்சுமி, கார்த்திக் ஆகியோரின் மேற்பார்வையில் மாணவர்கள் ஜமால், தினேஷ், திவ்யா, பத்மப்பிரியா ஆஃபரின், ரேஷ்மா, மகா, சுவேதா ஆகியோர் செய்தனர். இறுதியில் பேராசிரியர் திருப்பதி நன்றி கூறினார்.

    • திருச்சி புத்தூர் பாத்திமா அன்னை ஆலய பெருவிழாவை முன்னிட்டு வருகிற 20-ந்தேதி தேர் பவனி நடைபெறுகிறது
    • 21-ந்தேதி திருச்சி மறைமாவட்ட பொருளாளர் ஜேம்ஸ் செல்வநாதன், திருச்சி கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலர் மரியசூசை ஆகியோர் தலைமையில் நற்கருணை பெருவிழா பவனி நடக்கிறது

    திருச்சி:

    திருச்சி புத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான பாத்திமா அன்னை ஆலய பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

    இதையடுத்து தற்போது நோய் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து திருவிழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 65-வது ஆண்டு பெருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்னைய தினம் திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் கொடியேற்றி வைத்தார். இதையடுத்து திருவிழா நாட்களில் தினமும் மூத்த அருட்பணியாளர்கள் மற்றும் பங்குத்தந்தைகள் தலைமையில் பல்வேறு தலைப்புகளில் மறையுரை சிந்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் தேர் திருவிழா நடைபெறுகிறது. இந்த தேர் பவனி பாத்திமா அன்னை ஆலயத்தில் தொடங்கி அரசு பொது மருத்துவமனை, மதுரம் மருத்துவமனை, பட்டாபிராமன் சாலை, காவேரி மருத்துவமனை, பாத்திமா உயர்நிலைப்பள்ளி, புத்தூர் நான்கு ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடையும். இதில் திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அந்துவான், மரியன்னை பேராலய பங்குத்தந்தை சகாயராஜ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    21-ந்தேதி திருச்சி மறைமாவட்ட பொருளாளர் ஜேம்ஸ் செல்வநாதன், திருச்சி கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலர் மரியசூசை ஆகியோர் தலைமையில் நற்கருணை பெருவிழா பவனி நடக்கிறது.

    இந்த பவனி திருச்சிலுவை சபை அருட்சகோதரிகள் இல்லம், வண்ணாரப்பேட்டை, அரசு பொது மருத்துவமனை, புத்தூர் நான்கு ரோடு வழியாக ஆலயத்தை வந்தடையும். பின்னர் அன்று மாலை கொடியிறக்கம் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தையும், மறைமாவட்ட அதிபருமான பாஸ்கரன், உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ் செலஸ்டின் மற்றும் பங்கு பேரவை, பங்கு மக்கள் செய்துள்ளனர்.


    ×