search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nothing Phone 1"

    • நத்திங் நிறுவனம் தனது அடுத்த போனை விரைவில் வெளியிட உள்ளதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது.
    • நத்திங் போன் 1-ன் லைட் வெர்ஷனாக அது இருக்கும் என கூறப்படுகிறது.

    மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. டிரான்ஸ்பரண்ட் பேக் பேனலுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேக் பேனலில் எல்.இ.டி ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.

    அதுமட்டுமின்றி இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்நாப்டிராகன் 778G+ புராசஸர், 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 4,500 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி, 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி என எண்ணற்ற அம்சங்களை இந்த போன் கொண்டிருந்தாலும், இதில் சில கோளாறுகள் ஏற்பட்டதாக பயனர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.


    இந்நிலையில், நத்திங் நிறுவனம் தனது அடுத்த போனை விரைவில் வெளியிட உள்ளதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 1-ன் லைட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. நத்திங் போன் 1-ற்கும் அதன் லைட் வெர்ஷனுக்கு சின்ன சின்ன மாற்றங்கள் தான் இருக்குமாம்.

    குறிப்பாக நத்திங் போன் 1-ன் பேக் பேனலில் இடம்பெற்றுள்ள எல்.இ.டி ஸ்டிரிப்கள் அதன் லைட் வெர்ஷனில் இடம்பெற்று இருக்காது என கூறப்படுகிறது. அதேபோல் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இடம்பெற்று இருக்காது என தெரிகிறது. மற்றபடி நத்திங் போன் 1-ல் இடம்பெற்று இருக்கும் அனைத்து அம்சங்களும் அதன் லைட் வெர்ஷனிலும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • இன்று முதல் நத்திங் போனை முன்பதிவு இன்று ப்ளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
    • ஏராளமானோர் ரூ.2000 செலுத்தி முன்பதிவு செய்து இந்த போனை வாங்கினர்.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை 12-ந் தேதி வெளியிட்டது. இந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தியது. அதில் ஒன்று தான் முன்பதிவு. இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் ஏராளமானோர் ரூ.2000 செலுத்தி முன்பதிவு செய்து இந்த போனை வாங்கினர். முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த போன் கடந்த ஜூலை 21-ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முன்பதிவின்றி இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


    அதன்படி இன்று முதல் நத்திங் போனை முன்பதிவு இன்றி ப்ளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நத்திங் போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் டாப் எண்ட் மாடலான 2ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சமீபத்தில் நத்திங் போனை பயன்படுத்தியவர்கள் அதன் டிஸ்ப்ளேவில் கோளாறு இருப்பதாக புகார் அளித்தனர்.
    • டிஸ்ப்ளேவில் உள்ள கோளாறை சரிபடுத்தும் வகையில் விரைவில் ஒரு அப்டேட்டை வெளியிட நத்திங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை 12-ந் தேதி உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது. அன்றைய தினம் இந்தியாவில் இந்த மொபைல் அறிமுகமானது. பல்வேறு நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு வந்தாலும், இந்தியாவில் இன்று இரவு 7 மணிக்கு தான் விற்பனை தொடங்கப்பட உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் இந்த போன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், நத்திங் நிறுவனம் அதன் முதல் போனான நத்திங் போன் (1) மாடலுக்கு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அப்டேட்டில் யூசர் இண்டர்பேஸ், பேட்டரி, கேமரா ஆகியவற்றில் சில மேம்படுத்தல்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அப்டேட் மொத்தம் 93.81 எம்.பி அளவு கொண்டதாகும்.


    அதன்படி இந்த அப்டேட்டில் நத்திங் இயங்குதளத்தின் சிஸ்டம் ஒலிகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர கேமராவில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. குறிப்பாக அதில் HDR10 ப்ளஸுக்கான ஆதரவை பெற்றுள்ளன. இதன்மூலம் ஹெச்டிஆர், போர்ட்ரெய்ட், இரவுக் காட்சி மற்றும் பிற மோட்களுக்கான கேமரா எபெக்ட்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    நத்திங் போன் 1-ன் பேட்டரி ஆயுளும் இந்த அப்டேட் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நத்திங் போனை பயன்படுத்தியவர்கள் அதன் டிஸ்ப்ளேவில் கோளாறு இருப்பதாக புகார் அளித்தனர். இதனை சரிபடுத்தும் வகையில் விரைவில் ஒரு அப்டேட்டை வெளியிட நத்திங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • நத்திங் போன் 1 வெளியானது முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
    • இதற்கு ஹார்ட்வேர் குறைபாடு தான் காரணம் என கூறப்படுகிறது.

    நத்திங் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. டிரான்ஸ்பரண்ட் பேக் பேனலுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேக் பேனலில் எல்.இ.டி ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. நோட்டிபிகேஷன்கள் வரும் போது இது ஒளிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    நத்திங் போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. புராசஸரை பொருத்தவரை இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 778G+ புராசஸரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது.

    இதுதவிர முன்புறம் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. 4,500 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட இதில் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் 5ஜி மற்றும் 4ஜி எல்.டி.இ போன்ற கனெக்டிவிட்டி ஆப்சன்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.


    இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், வெளியானது முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக இதில் உள்ள ஹார்ட்வேர் குறைபாடு காரணமாக டிஸ்ப்ளேவில் கருப்பு நிறத்திற்கு பதிலாக பச்சை நிறத்தில் காட்சி அளிக்கின்றன. ஒருசிலர் இந்த பிரச்சனை காரணமாக போனை திருப்பு அனுப்பிய போதும் அதற்கு பதிலாக வரும் போனிலும் இதே பிரச்சனை வருவதாக கூறி புலம்புகின்றனர்.

    ஒருசிலருக்கோ செல்ஃபி கேமராவில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பன்ச் ஹோல் செல்பி கேமரா என கூறிவிட்டு அதன் வடிவமே வித்தியாசமாக இருப்பதாக கூறி சிலர் புலம்பி வருகின்றனர். இதற்கெல்லாம் நத்திங் நிறுவனம் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நத்திங் போன் வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் விற்பனைக்கு வர உள்ளது.
    • முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை 12-ந் தேதி வெளியிட்டது. இந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தியது. அதில் ஒன்று தான் முன்பதிவு. இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு பாஸ் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பெற்றவர்களுக்கு மட்டுமே முதலில் நத்திங் போன் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதன் முதற்கட்ட முன்பதிவி முடிந்துவிட்ட நிலையில், தற்போது அடுத்தக்கட்ட முன்பதிவு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் நத்திங் போனின் முன்பதிவு மீண்டும் தொடங்கி உள்ளது. ஜூலை 20-ந் தேதி நள்ளிரவு வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் நத்திங் போன் விற்பனைக்கு வர உள்ளது.

    • நத்திங் போனுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது.
    • #DearNothing என்கிற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டானது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகப்படுத்தியது. லண்டனைச் சேர்ந்த இந்நிறுவனம் அங்கு நடைபெற்ற ஈவண்ட்டில் நத்திங் போன் 1 மாடலை அறிமுகம் செய்தது. பயனர்கள் எதிர்பார்த்தபடி ஏராளமான சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த போனுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பும் கிளம்பியது.

    இதற்கு காரணம் ஒரு லெட்டர் தான். தென்னிந்தியாவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர், நேற்று நத்திங் போன் வெளியான சமயத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் நத்திங் போன் அடங்கிய பாக்ஸை பிரிக்கும் போது அதில் போன் எதுவும் இன்றி காலியாக இருப்பது போலவும், ஒரு லெட்டர் மட்டும் அதில் இருப்பது போலவும் அந்த வீடியோவில் அவர் காட்டி இருந்தார்.


    அந்த லெட்டரில் 'இந்த சாதனம் தென்னிந்திய மக்களுக்கு வழங்கப்படாது' என எழுதப்பட்டிருந்தது. இந்த லெட்டர் சமூக வலைதளங்களில் படு வைரல் ஆனது. நத்திங் நிறுவனம் பயன்படுத்தும் ஸ்டைலிலேயே அந்த லெட்டரில் உள்ள எழுத்துக்கள் இருந்ததனால் நெட்டிசன்களும் அது நத்திங் நிறுவனத்தில் இருந்து வந்த லெட்டர் தான் நம்பி, கொதித்தெழுந்தனர்.

    இதையடுத்து #DearNothing என்கிற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டானது. ஏராளமானோர் நத்திங் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வந்தனர். இதனால் பரபரப்பி நிலவியது. ஆனால் உண்மையில் அப்படி ஒரு லெட்டரை நத்திங் நிறுவனம் அனுப்பவே இல்லையாம். அது அந்த யூடியூபர் செய்த பிராங்க் வீடியோ என்பது பின்னர் தான் தெரியவந்தது. நத்திங் நிறுவனமும் இந்த சர்ச்சை குறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

    • நத்திங் போனை வாங்க முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு அந்நிறுவனம் ஏராளமான சலுகைகளையும் வழங்கி உள்ளது.
    • முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் முதலில் கிடைக்கும்.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை லண்டனில் நேற்று நடைபெற்ற ஈவண்ட்டில் வெளியிட்டுள்ளது. இந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தியது. அதில் ஒன்று தான் முன்பதிவு. இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு பாஸ் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பெற்றவர்களுக்கு மட்டுமே முதலில் நத்திங் போன் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    நத்திங் போன் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை வாங்க முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு அந்நிறுவனம் ஏராளமான சலுகைகளையும் வழங்கி உள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு போனில் மொத்த விலையில் இருந்து ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, முன்பதிவு செய்தவர்கள் ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மூலம் நத்திங் போனை வாங்கினால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உடனடி டிஸ்கவுண்ட் சலுகையும் வழங்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர நத்திங் போனை முன்பதிவு செய்தவர்கள் அந்நிறுவனத்தின் 45வாட் பவர் அடாப்டர் மற்றும் நத்திங் இயர் 1 TWS இயர்போனை ரூ.1000 சலுகையுடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடாப்டர் மற்றும் இயர்போனின் ஒரிஜினல் விலை ரூ.2,999 மற்றும் ரூ.6,999 ஆகும். வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளம் மூலம் நத்திங் போனின் விற்பனை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    நத்திங் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் இன்று அறிமுகமானது. டிரான்ஸ்பரண்ட் பேக் பேனலுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் பேக் பேனலில் எல்.இ.டி ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. நோட்டிபிகேஷன்கள் வரும் போது இது ஒளிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. நத்திங் போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. புராசஸரை பொருத்தவரை இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 778G+ புராசஸரை கொண்டுள்ளது.


    இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது. இதுதவிர முன்புறம் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. 4,500 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட இதில் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் 5ஜி மற்றும் 4ஜி எல்.டி.இ போன்ற கனெக்டிவிட்டி ஆப்சன்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

    சார்ஜ் செய்துகொள்ள யு.எஸ்.பி டைப் சி போர்ட் இந்த போனில் இடம்பெற்று உள்ளது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் இதில் உள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், 3 மைக்ரோபோன்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்று உள்ளன. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 3 வருடத்துக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளும், 2 வருடத்திற்கான செக்யூரிட்டி பேட்சுகளும் வழங்கப்படுகின்றன.


    நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான இது மூன்று வித மெமரி வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் ஆகிய மூன்று விதமான மெமரி ஆப்சன்களுடன் இந்த போன் அறிமுகமாகி உள்ளது.

    விலையைப் பொருத்தவரை நத்திங் போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடலான 2ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.

    • நத்திங் போனை முன்பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • இந்தியாவில் இந்த போன் பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்தியாவில் இந்த போன் பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது. இந்த போனுக்கான முன்பதிவு கடந்த வாரம் பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கப்பட்டது. முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு பாஸ் ஒன்று வழங்கப்படும் அது இருந்தால் மட்டுமே நத்திங் போனை வாங்க முடியும்.

    இந்த போனை முன்பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும், அந்த தொகையை செலுத்தினால் தான் பாஸ் வழங்கப்படும். இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நத்திங் போன் பற்றிய மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நத்திங் போனின் ரீ-டெயில் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதன்மூலம் நத்திங் போன் (1) மாடலுக்கு சார்ஜர் வழங்கப்பட மாட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ரீ-டெயில் பாக்ஸ் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. 

    • இந்தியாவில் நத்திங் போன் 1 பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது.
    • நத்திங் போனுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்தியாவில் இந்த போன் பிளிப்கார்ட் தளம் மூலம் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த போனுக்கான முன்பதிவு இன்று முதல் பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு பாஸ் ஒன்று வழங்கப்படும் அது இருந்தால் மட்டுமே நத்திங் போனை வாங்க முடியும்.


    இந்த போனை முன்பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும், அந்த தொகையை செலுத்தினால் தான் பாஸ் வழங்கப்படும். இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை 30 ஆயிரம் என கூறப்படுகிறது. அறிமுகமாகும் போது தான் அதன் ஒரிஜினல் விலை என்ன என்பது தெரியவரும்.

    • ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானபோதும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டது.
    • நத்திங் போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் 2 வாரங்களுக்கு மேல் இருந்தாலும், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.

    அதில் ஒன்றைப் பற்றி தான் தற்போது பார்க்கப்போகிறோம். நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை எப்படி இருக்கும் என்பதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அழைப்பிதழ் முறையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.


    புது நிறுவனம் என்பதனால் உடனடியாக லட்சக்கணக்கிலான போன்களை தயாரிக்க முடியாது. அதனை கருத்தில் கொண்டு முதலில் அழைப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக உற்பத்தி கூடியதும். அழைப்பிதழையும் அதிக அளவில் கொடுத்து விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானபோதும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நத்திங் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வாயிலாக விற்பனைக்கு வர உள்ளது.
    • நத்திங் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    நத்திங் நிறுவனத்தின் தலைவரான கார்ல் பெய், கடந்த வாரம் இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான நத்திங் போன் (1) குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்திருந்தார். தற்போது அந்த போன் குறித்த புதிய தகவல் ஒன்று லீக் ஆகி உள்ளது.

    அதன்படி நத்திங் போன் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனங்களில் எதனுடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.


    உள்நாட்டிலேயே தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதனால், இந்திய மக்களுக்கு தகுந்த விலையில் இந்த நத்திங் போன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வாயிலாக விற்பனைக்கு வர உள்ளது. நத்திங் போனின் பின்பக்கம் ஐபோன் 13 மாடலின் சாயலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×