search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nikki Galrani"

    • நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக கூறிவந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
    • இதையடுத்து நிக்கி கல்ராணி சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

    தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக கூறி வந்த நிலையில் சமீபத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

    இதையடுத்து நிக்கி கல்ராணி சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் 'வெல்லும் திறமை' என்ற நிகழ்ச்சியில் நடிகை நிக்கி கல்ராணி, பிரபல நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான்ஹுசைனி மற்றும் நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுந்தர்.சி-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    `பேட்ட' படத்திற்கு பிறகு சசிகுமார் `நாடோடிகள் 2', கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் கென்னடி கிளப் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சசிகுமார் தற்போது கே.வி.கதிர்வேலு இயக்கத்திலும், என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் கே.வி.கதிர்வேலு இயக்கும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.



    சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் 

    நடிக்கின்றனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக தயாராகிறது. சென்னை மற்றும் பொள்ளாச்சியில் முதல்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி - அனேகா சோதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `கீ' படத்தின் விமர்சனம். #Kee #KeeReview #Jiiva #NikkiGalrani
    கல்லூரி மாணவராக இருக்கும் ஜீவா ஒரு ஹேக்கர். கல்லூரிகளில் தனது நண்பர்களுக்காக சிறிய அளவில் ஹேக் செய்து வரும் இவர் ஒருநாள் கேளிக்கை விடுதி ஒன்றில் ஹேக்கிங் மூலமாக பெண்களை கவர முயற்சி செய்கிறார். அப்போது அனேகா சோதி இவரது வலையில் சிக்குகிறார்.

    பத்திரிகையாளரான இவர் நிறைய சாலை விபத்துகள் மர்மமான முறையில் ஏற்படுவதையும், அந்த விபத்துகளுக்கு ஹேக்கிங் ஒரு காரணமாக இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து ஜீவாவுடன் நெருக்கமாக பழகி அவர் மூலமாக அந்த விபத்துகளின் பின்னணி பற்றி தகவல்களை சேகரிக்க முடிவு செய்கிறார்.



    இப்படி இருக்க தன்னை ஹேக் செய்தவர்கள் பற்றி விவரங்களை கண்டுபிடித்து தரும்படி அனேகா, ஜீவாவிடம் கேட்க, அவரும் பரிசோதித்து பார்க்கையில், அனேகாவை ஹேக் செய்தவர்கள் சாதாரண ஹேக்கர் அல்ல என்பது தெரிய வருகிறது. 

    இருப்பினும் வரும் முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தாண்டி ஜீவா தனது திறமைகளை காட்ட அந்த ஹேக்கர்கள் யார் என்பது தெரிய வருகிறது. அவர்களுக்கும் ஜீவா தான் ஹேக் செய்தார் என்பது தெரிந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் ஜீவாவை கொலை செய்ய அந்த கும்பல் தேடி வருகிறது.

    இதற்கிடையே கல்லூரியில் ஒன்றாக படித்து வரும் ஜீவாவும், நிக்கி கல்ராணியும் காதலிக்கிறார்கள்.



    கடைசியில், ஜீவா இந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே கீ படத்தின் மீதிக்கதை.

    ஜீவா ஒரு கல்லூரி மாணவராக, ஹேக்கராக துறுதுறுவென்று நடித்துவிட்டு சென்றிருக்கிறார். நிக்கி கல்ராணியிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் பரபரக்கச் செய்கிறார். நிக்கி கல்ராணி இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான, அராத்து செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார். அனேகா சோதி முக்கிய வேடத்தில் வருகிறார்.

    கோவிந்த சூர்யா வில்லத்தனத்தில் மிரட்ட, கட்டே ராஜேந்திர பிரசாத், மீரா கிருஷ்ணன், சுஹாசினி, மனோபாலா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.



    சமூக வலைதளத்தில் நாம் தவறுதலாக செய்யும் சிலவற்றால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் காலீஸ். ஹேக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்தும் சொல்லியிருக்கிறார். ஹேக்கிங்கை மையப்படுத்தி வரும் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. சிறப்பான கதையை தயார் செய்திருந்தாலும், அது பயணிக்கும் வழியான திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திற்கு தேவையானதை மட்டுமே கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். சென்டிமெண்ட், பாசம் என அனைத்தையுமே கொடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே திணித்தது போல் இருக்கிறது. 

    விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையும், அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `கீ' சாவி. #Kee #KeeReview #Jiiva #NikkiGalrani

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி, அனைகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கீ’ படத்தின் முன்னோட்டம்.
    குளோபல் இன்போ டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் செராபின் ராய் சேவியர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கீ’. 

    ஜீவா நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - அனிஷ் தருண் குமார், படத்தொகுப்பு - நாகூரான், தயாரிப்பு - எஸ்.மைக்கேல் ராயப்பன், செராபின் ராய் சேவியர், கலை - அசோக், நடனம்- பாபா பாஸ்கர், எழுத்து, இயக்கம் -காலீஸ்.



    செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் பற்றி காலீஸ் கூறும்போது,

    தற்போதைய தொழில்நுட்ப உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு செல்போனின் தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதுப்புது செல்போன்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.

    இவ்வாறாக செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக கீ உருவாகி இருக்கிறது. செல்போன் வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்பை படம் பேசுகிறது. ஒரு 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

    நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை பற்றி படத்தில் விவரித்திருப்பதாக காலீஸ் கூறினார்.

    படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #KEE #Jiiva #NikkiGalrani

    கீ டிரைலர்:

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள கீ விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், எந்த அளவுக்கு நன்மை உண்டோ அந்த அளவுக்கு தீமை உண்டு என்பதே கீ என்பதன் பொருள் என்று ஜீவா கூறினார். #KEE
    ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்ஜே.பாலாஜி நடிப்பில் கீ படம் வரும் 12-ந் தேதி வெளியாக இருக்கிறது. காலீஸ் இயக்கிய இந்த படத்தை செராபின் ராயப்பன் தயாரித்துள்ளார். இந்த பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ஜீவா அளித்த பேட்டி:

    பெயரை பார்த்தால் ஆங்கில படம் போல் தெரிகிறதே?

    கீ என்பது தமிழ் வார்த்தை தான். தொல்காப்பியத்தில் கீ என்பதற்கு எந்த அளவுக்கு நன்மை உண்டோ அந்த அளவுக்கு தீமை உண்டு என்று அர்த்தம் சொல்லப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் பற்றிய கதை. தகவல் தொழில்நுட்பம் நமக்கு பல நன்மைகள் கொடுத்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளையும் விளக்கும் படமாக இருக்கும். இன்று ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. செல்போன் பயன்படுத்தும் அனைவருக்குமான படம் இது. எனக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியும், அனைகா ஒரு முக்கிய வேடத்திலும் நடித்து இருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி எனக்கு நண்பராக வருகிறார்.

    கல்லூரி மாணவர் வேடமா?

    எனக்கும் ஆச்சர்யமாக தான் இருந்தது. ஆனால் நன்றாக வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை கல்லூரி மாணவராக நடிப்பது எளிதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. பள்ளி மாணவர்களுக்கு அவ்வளவு வி‌ஷயங்கள் தெரிகிறது. எனவே இனி கல்லூரி மாணவராக நடிப்பது சிரமம். இந்த படத்தில் ஜாலியான ஹேக்கராக வருகிறேன். கல்லூரி மாணவருக்கே உரிய அனைத்து வி‌ஷயங்களும் என் கதாபாத்திரத்தில் இருக்கும்.



    உங்கள் சமூகவலைதள கணக்குகள் ஹேக் ஆகி இருக்கிறதா?

    நிறைய முறை ஆகி இருக்கிறது. எந்த பாஸ்வேர்டு வைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள். இன்று இணைய திருடர்கள் அதிகரித்து விட்டார்கள். இனி இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.

    இரும்புத்திரை படமும் இதே போன்றது தானே?

    இல்லை. நாங்கள் படப்பிடிப்பையே முடித்த பின்னர்தான் அவர்கள் பூஜை போட்டார்கள். அந்த கதை முழுக்க பணம், வங்கி, ஏடிஎம் கார்டு பற்றியது. ஆனால் இது முழுக்க சமூகவலை தளங்களில் நீங்கள் இடும் லைக்குகள், கமெண்டுகள் பற்றியது.

    ரிலீஸ் நேரத்தில் சிக்கல், பட வெளியீடு தாமதம் என்று ஹீரோக்களுக்கு நிறைய பிரச்சினைகள் வருகிறதே?

    ஆமாம். கீ படமே பெரிய தாமதத்துக்கு பின் தான் ரிலீஸ் ஆகிறது. இங்கே ஹீரோவாக இருப்பது சிரமமாக தான் இருக்கிறது. காமெடி, குணச்சித்திர நடிகராக இருப்பது எளிது. ஹீரோவாக இருப்பதால் மற்றவர்களின் கால்ஷீட்டுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. சினிமா என்பது டீம் வொர்க். யாராவது ஒருவர் ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது எல்லோரையும் பாதிக்கும்.

    ஒரு படத்தில் கமிட் ஆனால் அதை முடித்துவிட்டு அடுத்த படத்துக்கு செல்லுங்கள். படங்களுக்கு முன் தயாரிப்பு பணிகளில் திட்டமிடல் மிகவும் அவசியம். #KEE #Jiiva #NikkiGalrani

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கீ’ படத்தை குழந்தைகள் முதல் முதியவர் வரை செல்போன் வைத்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டும் என்று இயக்குநர் கூறியுள்ளார். #KEE #Jiiva
    நாடோடிகள், ஈட்டி, மிருதன், போன்ற வெற்றி படங்களை தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் செராபின் ராயப்பன் தயாரித்துள்ள படம் ‘கீ’.

    இந்த நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக உருவாகி இருக்கும் இந்த படத்தை செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காலீஸ் இயக்கியிருக்கிறார். ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ளனர். அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தற்போதைய தொழில்நுட்ப உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு செல்போனின் தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதுப்புது செல்போன்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.



    இவ்வாறாக செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக கீ உருவாகி இருக்கிறது. செல்போன் வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்பை படம் பேசுகிறது. ஒரு 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

    நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை பற்றி படத்தில் விவரித்திருப்பதாக இயக்குநர் காலீஸ் கூறினார். 

    விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏப்ரல் 12-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. #KEE #Jiiva #NikkiGalrani

    அவரை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது என்று நடிகர் ஜீவா, கீ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். #Kee #Jiiva
    நாடோடிகள், ஈட்டி, மிருதன், போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் தற்போது ‘கீ’ படத்தை தயாரித்துள்ளது. இது இந்நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ். இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜீவா பேசும்போது, ‘வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில் தோன்றியது. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். 



    தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமைந்துள்ளது. சரியான தருணத்தில் கூப்பிட்ட நேரத்தில் வந்து ஒளிப்பதிவினை மேற்கொண்ட அபிநந்தன் அவர்களுக்கு என் நன்றிகள். காலீஸ் சிறந்த இயக்குனர். இதுபோன்ற நிறைய இளைய புதுமுக இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிற்கு தேவை. 

    இளைய இயக்குனர்கள் வந்தால்தான் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் இருந்ததால் தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களை தர முடியும். இந்த படத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜி, அனைகா அருமையாக நடித்துள்ளனர். படத்தின் காட்சிகள் மிக பிரமாண்டமாக வந்துள்ளது. இறுதியாக இந்த படம் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. உங்கள் அன்பாலும் ஆதரவாலும்  படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்’ என்றார்.
    கதிர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க நிக்கி கல்ராணி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Sasikumar #NikkiGalrani
    சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த `பேட்ட' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக `நாடோடிகள் 2' ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. பிப்ரவரியில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    சசிகுமார் தற்போது, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் `கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சசிகுமாரின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை சுந்தர்.சி.-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கதிர் இயக்குகிறார்.


    சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்., இசையமைக்க, சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சபு ஜோசப் படத்தொகுப்பையும், சுரேஷ் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். #Sasikumar #NikkiGalrani #Sasikumar19 #Kathir #Sathish #SamCS

    சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் விமர்சனம். #CharlieChaplin2 #Prabhudeva #NikkiGalrani #CharlieChaplin2Review
    மேட்ரிமோனி நடத்தி வரும் பிரபுதேவா, தனக்கு ஏற்ற பெண்ணையும் தேடி வருகிறார். அரவிந்த் ஆகாஷ், சந்தனா இருவரும் இவரின் நண்பர்கள். கையில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக மருத்துவரான பிரபுவை சந்திக்க செல்லும் இவருக்கு, நிக்கி கல்ராணி 15 நாளில் இறந்து விடுவார் என்று தெரிய வருகிறது.

    இதையடுத்து நிக்கி கல்ராணியை திருமணம் செய்வதற்கான முயற்சியில் பிரபுதேவா இறங்க, ஒரு கட்டத்தில் நிக்கி கல்ராணிக்கு ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது. அத்துடன் நிக்கி கல்ராணி பிரபுவின் மகள் என்பதையும் அறிந்து கொள்கிறார். இதையடுத்து இரு குடும்பத்தாரும் பேசி இவர்களது திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார்கள்.



    இதற்கிடையே நிக்கி கல்ராணி வேறு ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை பார்த்து அதிர்ச்சியடையும் பிரபுதேவா, நிக்கியை கேவலமாக திட்டி வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை அனுப்பிவிடுகிறார். பின்னர், நிக்கி மீது தவறில்லை என்பது அறிந்த பிரபுதேவா, அந்த வீடியோவை நிக்கி கல்ராணி பார்த்தவிடுதற்கு முன்பாக அதை அழிக்க நினைக்கிறார்.

    கடைசியில் நிக்கி அந்த வீடியோவை பார்த்தாரா? பிரபுதேவா - நிக்கி கல்ராணி திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    பிரபுதேவா தனது வழக்கமான கலகலப்பான நடிப்பால் கவர்கிறார். நிக்கி கல்ராணியை, அந்த வீடியோவை பார்க்க விடாமல் பண்ண பிரபுதேவா எடுக்கும் முயற்சிகள் பழைய பிரபுதேவாவை நினைவுபடுத்துகின்றன. நிக்கி கல்ராணி படம் முழுக்க மாடர்னான குடும்ப பெண்ணாக வருகிறார். அடா சர்மா, அரவிந்த் ஆகாஷ், சந்தனா உள்ளிட்டோரும் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றி இருக்கிறார்கள். பிரபு, டி.சிவா முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். விவேக் பிரசன்னா, அமித் பார்கவ், சமீர் கோச்சார் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    சார்லி சாப்ளின் என்ற முழுநீள காமெடி படத்தை கொடுத்த சக்தி சிதம்பரம், சார்லி சாப்ளின் 2 படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சக்தி சிதம்பரம் இயக்கிய படமா இது என்று யோசிக்கும்படி படம் இருக்கிறது. திரைக்கதை ஓரளவுக்கு வேகமாக நகர்ந்தாலும், அது படத்திற்கு பலமாக அமையவில்லை. குறிப்பாக காமெடி காட்சிகளில் சிரிக்க முடியவில்லை. ஜி.சசிகுமாரின் படத்தொகுப்பு ஓரளவுக்கு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.



    அம்ரிஷ் கணேஷ் இசையில் சின்ன மச்சான் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `சார்லி சாப்ளின் 2' ஏமாற்றம். #CharlieChaplin2 #Prabhudeva #NikkiGalrani #CharlieChaplin2Review

    அம்மா கிரியேசன்ஸ் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் முன்னோட்டம். #CharlieChaplin2
    அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் "சார்லி சாப்ளின் 2". இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.

    முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, ரவிமரியா, டி.சிவா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - செளந்தர்ராஜன் / இசை - அம்ரீஷ், பாடல்கள் - யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், செல்ல தங்கையா, எடிட்டிங் - சசி / கலை - விஜய்முருகன் / நடனம் - ஜானி, ஸ்ரீதர், ஸ்டண்ட - கனல் கண்ணன் / தயாரிப்பு நிர்வாகம் - மகேந்திரன், தயாரிப்பு மேற்பார்வை - பரஞ்சோதி - திலீபன், இணை தயாரிப்பு - சந்திரசேகர், சரவணகுமார், தயாரிப்பு - டி.சிவா

    கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி சிதம்பரம். படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது, என் படங்களில் காமெடியும் கமர்ஷியலும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் இதெல்லாம் இருந்ததால் தான் படம் எல்லா மொழிகளிலும் அமோக வெற்றி பெற்றது. 16 வருடங்களுக்கு பிறகு அதே டைட்டிலில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

    பிரபு தேவா மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்தும் வேடத்தில் நடிக்கிறார். நிக்கி கல்ராணி சமூக ஆர்வலராக நடிக்கிறார். பிரபு டாக்டராகவும், அதா சர்மா மனோதத்துவ நிபுனராகவும் நடிக்கிறார்கள். இம்மாதம் 25ம் தேதி படம் வெளியாகிறது.
    அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CharlieChaplin2
    அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின் 2’. இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.

    முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதன் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா சர்மா நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, ரவிமரியா, டி.சிவா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் நடித்திருக்கிறார்கள்.



    கதை திரைக்கதை வசனம் எழுதி ஷக்தி சிதம்பரம் இயக்கி இருக்கிறார். அம்ரிஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை வரும் ஜனவரி 25ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியானது. முன்னதாக சின்ன மச்சான் பாடல் யூடியூப்பில் 7 கோடிக்கு மேல் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    கவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, தற்போது முதல் முறையாக பழங்குடியின பெண்ணாக நடிக்க இருக்கிறார். #NikkiGalrani
    ‘1983’ எனும் மலையாள படம் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்த நிக்கி கல்ராணிக்கு அந்தப் படமே நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அந்தப் படத்திற்காக பல விருதுகளையும் அவர் பெற்றார். பின்னர் கன்னடம், மலையாளம் என வலம்வந்த அவர், டார்லிங் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆனார்.

    அதன் பின்னர் வரிசையாக தமிழ்ப் படங்களில் நடித்து வரும் அவருக்கு தற்போது சார்லி சாப்ளின் 2, கீ என சில படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில் மீண்டும் மலையாள சினிமா பக்கம் திரும்பியுள்ளார் நிக்கி. இதிகாஷா 2 என்னும் படத்தில் அவர் தற்போது நடிக்கஉள்ளார். பினு எஸ் இதை இயக்க உள்ளார். கவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, இதில் பழங்குடியின பெண்ணாக நடிக்க இருப்பதால் நடிப்பு ரீதியாக அவருக்கு இது ஒரு சவால் மிக்க படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இதில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். இந்திரஜித்தின் மனைவிக்கும் நிக்கிக்கும் இடையே ஏற்கெனவே நட்பு இருந்தாலும், இந்திரஜித்தும் நிக்கியும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 25-ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது.
    ×