search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "navratri"

    • குஞ்சு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள குஞ்சு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று நவராத்திரி நிறைவு விழாவையொட்டி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளையும் சில்லறை நாணயங்களையும் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    • கொலு படிகளை ஒற்றைப்படையில் தான் வைக்க வேண்டும்.
    • கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது.

    நவராத்திரி என்றால் கொலு பொம்மை தான் முதலில் நமது நினைவிற்கு வரும். கொலுப் படிகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் வைக்க வேண்டும். எனவே கொலு படிகள் அமைக்கும் போது 3 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். கொலு படிகள் அமைக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும்.

    கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது. மேலே உள்ள படியில் இறைவனின் பொம்மைகளை வைப்பார்கள். ஆதற்கு கீழே ரிஷிகள் முனிகள் சித்தர்கள் போன்ற பொம்மைகள், அதற்கு கீழே மனிதர்கள், பின் விலங்குகள்,பறவைகள், போன்றவற்றை வைப்பார்கள். அதாவது கொலு படிகளில் கீழிருந்து ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, ஐந்தறிவு, ஆறறிவு, ரிஷிகள், தெய்வங்கள் என்ற வரிசையில் பொம்மைகளை அடுக்கி வைத்து கொலுப் படிகளின் நடுவில் கலசம் வைப்பார்கள்.

    நவராத்திரி கொலுப் படியில் இருக்கும் கலசத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம், அட்சதை மற்றும் பூக்கள் மற்றும் வஸ்திரம் சார்த்தி பூஜித்தி வருவார்கள். மாலையில் தினமும் சுண்டல் செய்து நிவேதனம் செய்து வீட்டில் கொலு பார்க்க வருபவர்களுக்கு வழங்க வேண்டும். பத்து நாட்கள் முடிந்த பிறகு கலசத்தில் வைத்த தேங்காயை வைத்து இனிப்பு பண்டங்களைச் செய்யலாம்.

    ஒரு சிலர் வீட்டில் பத்து நாட்களும் விளக்கு எரிய வைப்பார்கள். இதற்கு அகண்ட தீபம் என்று பொருள். இதில் மூன்று வித எண்ணெய் நல்லெண்ணெய், நெய் இலுப்பெண்ணெய்)அல்லது ஐந்து வித எண்ணெய் கலந்து தீபம் ஏற்றலாம்.

    கொலுப்படி மற்றும் பொம்மைகள் வைக்க இயலாதவர்கள் எளிமையாக வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் படத்தை வைத்து அதற்கு முறையாக பூஜைகள், நைவேத்தியங்கள் படைத்து எளிய முறையில் வழிபடலாம்.

    நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் காலை மாலை என இரண்டு வேளை பூஜை செய்ய வேண்டும். அம்மன் பற்றிய பாடல்களை பாடுவார்கள். வீட்டிற்கு அக்கம் பக்கம், தெரிந்தவர்கள் மற்றும் விருந்தினர்களை அழைத்தது வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழம், தட்சினை சுண்டல், மற்றும் நீங்கள் விரும்பினால் ஏதாவது பரிசுப்பொருட்கள அல்லது ரவிக்கை போன்றவற்றை அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கேற்ப கொடுக்கலாம்.

    சிறு குழந்தைகள் வந்தால் அவர்கள் வயதிற்கேற்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இந்த ஒன்பது நாட்களுள் ஏதாவது ஒரு நாள் ஒரு கன்னிப் பெண்ணை அழைத்து உணவளித்து வெற்றிலை, பாக்கு உடை எடுத்து அளிக்கலாம். இதனை செய்வது மிகவும் சிறப்பு.

    இத்தகைய சிறப்புமிக்க்க நவராத்திரி பண்டிகையையொட்டி சென்னை வடபழனியை சேர்ந்த பிரேமலதா-அரவிந்தன் தம்பதி லண்டனில் உள்ள தனது வீட்டில் கொலு வைத்துள்ளனர்.

     அதேபோன்று சென்னை தி.நகர் தண்டபாணி தெருவை சேர்ந்த சங்கர்-லட்சுமி தம்பதியினர் நவராத்திரி பண்டிகையை யொட்டி தங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளார்கள்.

    • மாரியம்மன் கோவிலில் நவராத்திரி
    • ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது

    முசிறி

    முசிறி கள்ளர் தெரு மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் பால், தயிர், பன்னீர், மஞ்சள், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டன . மயிலாடுதுறை நாத பிரம்மம் கௌரி ஆறுமுகத்தின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி கணேசன், வக்கீல் செந்தில் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது
    • 40-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு நடத்திய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி பெருவிழா கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சர்வாலய அறப்பணிக்குழு செயலர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் துரைராயப்பன், ஆலோசகர் எடையூர் மணிமாறன், தமிழ் பால் சிவக்குமார், ராகவா ஜுவல்லர்ஸ் பாலாஜி,பாபு (எ) குமரவேல், கோவில் ஊழியர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் ஓம் சிவாலய நாட்டிய வித்யாலயம் குரு ஸ்ரீ நடன கலையரசன் காரக் கோட்டை மதியழகன் நட்டுவனர் குழுவினர் 40-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு நடத்திய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு க்களித்தனர். அக்டோபர் 24 வரை தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி குழு மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

    • கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி வீதிஉலா
    • கோலாட்டம் போன்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. இன்று இரவு `கருடசேவை' நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, `ராஜமன்னார்' அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகன வீதி உலாவுக்கு முன்னால் யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக சென்றன. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. 11 கலாசார குழுக்களை சேர்ந்த 281 கலைஞர்கள் குஸ்ஸாடி நடனம், லம்படா நடனம், சுக்கா பஜனை மற்றும் கோலாட்டம் போன்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்களும், பெண்களும் மகாவிஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார் போன்ற வேடமிட்டு சென்றனர். வாகன வீதி உலா தொடங்கும் முன் பல்வேறு ஆன்மிக நூல்கள் வெளியிடப்பட்டன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நவராத்திரி பிரம்மோற்வ வழாவின் 5-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை பல்லக்கில் (மோகினி அலங்காரம்) வாகன வீதிஉலா, இரவு கருடசேவை நடக்கிறது.

    • விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • 24-ந் தேதி சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்து ள்ள புகழ்பெற்ற அம்பாள் திருத்தலமாக விளங்கி வரும் கர்ப்பரட்சா ம்பிகை அம்பாள் உடனுறை முல்லை வனநாதர் திருக்கோயிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் 15-ந்தேதி தொடங்கி வரும் 24ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    இதில் 20ந்தேதி ஏகதின இலட்சார்ச்ச னையும், 23ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்ப ரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னையும், 24ந்தேதி விஜயதசமி அன்று மாலை சுவாமி சந்திர சேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சிச்சியும். இரவு ஷீரகுண்டம் எனும் திருக்குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ப. ராணி மேற்பா ர்வையில் கோயில் செயல் அலுவலர் சு. அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவே நவராத்திரி
    • ஒன்பது என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    'நவம்' என்பதற்கு 'ஒன்பது' என்று பொருள். ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவை, நவராத்திரி" என்று சிறப்பிக்கிறோம். இந்த விழாவில் ஒன்பது என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவில் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலையும், ஒன்பது என்ற எண்ணிக்கையில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படி ஒன்பது.. ஒன்பதாக சொல்லப்பட்ட சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

     இசை

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் இசையை வாசிப்பார்கள். அதன் விவரம் வருமாறு:-

    முதல் நாள் - மிருதங்கம்

    இரண்டாம் நாள் - புல்லாங்குழல்

    மூன்றாம் நாள் - வீணை

    நான்காம் நாள் - கோட்டு வாத்தியம்

    ஐந்தாம் நாள் - ஜல்லரி வாத்தியம்

    ஆறாம் நாள் - பேரி

    ஏழாம் நாள் - படகம்

    எட்டாம் நாள் - கும்மி

    ஒன்பதாம் நாள் - கோலாட்டம்

     மங்கலப்பொருள்

    நவராத்திரி விழாவின்போது, வீட்டிற்கு வரும் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பொருளை வழங்க வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வழங்க வேண்டிய பொருட்களின் விவரம் வருமாறு:-

    முதல் நாள் -புனுகு

    இரண்டாம் நாள் - ஜவ்வாது

    மூன்றாம் நாள் - கஸ்தூரி

    நான்காம் நாள் - அரகஜா

    ஐந்தாம் நாள் - சந்தனம்

    ஆறாம் நாள்- குங்குமம்

    ஏழாம் நாள்-சாந்து

    எட்டாம் நாள் - ஸ்ரீ சூரணம்

    ஒன்பதாம் நாள் மை

     தியானம்

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு தேவியை நினைத்து தியானம் செய்ய வேண்டும். அந்த தேவியரின் பெயர்கள் விவரம்:-

    முதல் நாள் - நீலாயதாட்சி

    இரண்டாம் நாள் - காமாட்சி

    மூன்றாம் நாள் - மீனாட்சி

    நான்காம் நாள் - விசாலாட்சி

    ஐந்தாம் நாள் - ஜலஜாட்சி

    ஆறாம் நாள் - ராட்சி

    ஏழாம் நாள் - பத்மாட்சி

    எட்டாம் நாள் - வனஜாட்சி

    ஒன்பதாம் நாள் - பங்கஜாட்சி

     கோலம்

    நவராத்திரி விரதத்தின் ஒன்பது நாட்களுக்கும் போட வேண்டிய கோலங்கள் விவரம்:-

    முதல் நாள் - அரிசி மாவு கோலம்

    இரண்டாம் நாள் - கோதுமை மாவு கோலம்

    மூன்றாம் நாள் - முத்துக்கள் கொண்டு மலர் கோலம்

    நான்காம் நாள் - அட்சதை (அரிசி) கொண்டு படிக்கட்டு கோலம்

    ஐந்தாம் நாள் - கடலை பருப்பு கொண்டு பறவைக் கோலம்

    ஆறாம் நாள் - பருப்புகளைக் கொண்டு தேவியின் நாமத்தை கோலமாக எழுத வேண்டும்

    ஏழாவது நாள் - மலர்களைக் கொண்டு திட்டாணி கோலம்

    எட்டாவது நாள் - காசுகளை கொண்டு தாமரைப் பூ கோலம்

    ஒன்பதாம் நாள் - வாசனைப் பொடிகளை கொண்டு ஆயுதங்களை கோலமாக அமைக்க வேண்டும்.

     விளையாட்டுப் பொருட்கள்

    நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு விளையாட்டுப் பொருளை வழங்க வேண்டும். அதன் விவரம்:-

    முதல் நாள் - சோழி

    இரண்டாம் நாள் - குன்றிமணி

    மூன்றாம் நாள் - தட்டைப் பவளம்

    நான்காம் நாள் - கிளிஞ்சல்

    ஐந்தாம் நாள் - மரச்சொப்பு

    ஆறாம் நாள் பொம்மை

    ஏழாம் நாள் - அம்மானைக் காய்

    எட்டாம் நாள் - பந்து

    ஒன்பதாம் நாள் - கழற்சிக் காய்

     பூக்கள்

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான பூக்களால் மாலை தொடுத்து தேவிக்கு அணிவிக்க வேண்டும். அதன் விவரம் வருமாறு:-

    முதல் நாள் - மல்லிகைப் பூ மாலை

    இரண்டாம் நாள் - முல்லைப் பூ மாலை

    மூன்றாம் நாள் - சம்பங்கிப் பூ மாலை

    நான்காம் நாள் - ஜாதிப்பூ மாலை

    ஐந்தாம் நாள் - பாரிஜாதப் பூ மாலை

    ஆறாம் நாள் - செம்பருத்திப் பூ மாலை

    ஏழாம் நாள் - தாழம்பூ மாலை

    எட்டாம் நாள் - ரோஜாப்பூ மாலை

    ஒன்பதாம் நாள் - தாமரைப்பூ மாலை

     பெண் வழிபாடு

    நவராத்திரி விழாவின் போது நம் வீட்டிற்கு வரும் பெண்களை ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு பெயரில் தேவியாக நினைத்து வணங்க வேண்டும். அதன் விவரம்:-

    முதல் நாள் - பாலா

    இரண்டாம் நாள் - குமாரி

    மூன்றாம் நாள்- கன்னிகை

    நான்காம் நாள் - தேவதை

    ஐந்தாம் நாள் - பிரவுடா

    ஆறாம் நாள் - முத்து

    ஏழாம் நாள் - சுமங்கலி

    எட்டாம் நாள் - தருணீ

    ஒன்பதாம் நாள் - மாதா

    நைவேத்தியம்

    முதல் நாள் - சுண்டல்

    இரண்டாம் நாள் - வறுவல்

    மூன்றாம் நாள் - துவையல்

    நான்காம் நாள் - பொரியல்

    ஐந்தாம் நாள் - அப்பளம்

    ஆறாம் நாள் - வடகம்,

    ஏழாம் நாள் - சூரணம்

    எட்டாம் நாள் - முறுக்கு

    ஒன்பதாம் நாள் - திரட்டுப் பால்

     பழங்கள்

    நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பழத்தை வழங்க வேண்டும். அதன் விவரம்:-

    முதல் நாள் - வாழைப்பழம்

    இரண்டாம் நாள் - மாம்பழம்

    மூன்றாம் நாள் - பலாப்பழம்

    நான்காம் நாள் - கொய்யாப்பழம்

    ஐந்தாம் நாள்- மாதுளம் பழம்

    ஆறாம் நாள் - நாரத்தைப் பழம்

    ஏழாம் நாள் - பேரீச்சம் பழம்

    எட்டாம் நாள் - திராட்சைப் பழம்

    ஒன்பதாம் நாள் - நாவல் பழம்

     ராகங்கள்-9

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு ராகத்தை இசைத்து தேவியை வழி பட வேண்டும். அதன் விவரம்:-

    முதல்நாள்- தோடிராகம்

    இரண்டாம் நாள் - கல்யாணி ராகம்

    மூன்றாம் நாள் - காம்போதி ராகம்

    நான்காம் நாள் - பைரவி ராகம்

    ஐந்தாம் நாள் - வராளி ராகம்

    ஆறாவது நாள் - நீலாம்பரி ராகம்

    ஏழாவது நாள் - பிலஹரி ராகம்

    எட்டாம் நாள் - புன்னாகவரளி ராகம்

    ஒன்பதாம் நாள் - வஸசந்தா ராகம்

     9 வகை சுண்டல்

    நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளிலும் ஒரு நைவேத்தியம் படைப்பது போல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சுண்டலை அம்பாளுக்கு படைத்து வழிபட்டால் அதற்கான பலன் கிடைக்கும். அதன் விவரம்:-

    முதல் நாள் - வெள்ளைக் கடலை சுண்டல்

    இரண்டாம் நாள் - காராமணி சுண்டல்

    மூன்றாம் நாள் - மொச்சை சுண்டல்

    நான்காம் நாள் - பச்சைப் பட்டாணி சுண்டல்

    ஐந்தாம் நாள் - வேர்க்கடலை கண்டல்

    ஆறாம் நாள் - பச்சைப்பயறு சுண்டல்

    ஏழாம் நாள் - கொண்டைக் கடலை சுண்டல்

    எட்டாம் நாள் - மொச்சைப் பயறு சுண்டல்

    ஒன்பதாம் நாள் வேர்க்கடலை கண்டல்

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள், இது போன்ற நவதானிய கண்டல்களை செய்து சாப்பிடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாகவே இதுபோன்ற நவதானிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

     சித்ரான்னம்

    விதவிதமான சுவைகளின் சமைத்த உணவை 'சித்ரான்னம்' என்பார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேவிக்கு படைத்து வணங்கி வேண்டிய சித்ரான்னங்களை இங்கே பார்க்கலாம்...

    முதல் நாள் - வெண் பொங்கல்

    இரண்டாம் நாள் - புளியோதரை

    மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்

    நான்காம் நாள் - கதம்ப சாதம்

    ஐந்தாம் நாள் - தயிர் அன்னம்

    ஆறாம் நாள் - தேங்காய் சாதம்

    ஏழாம் நாள் - எலுமிச்சை சாதம்

    எட்டாம் நாள் - பாயசம்

    ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல் (வெல்லம், பால், அரிசியில் செய்வது)

    சிறு பெண் வழிபாடு

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறு வயது பெண்களை, அம்மனாக பாவித்து, வளையல் போட்டு நலுங்கு வைத்து ஒவ்வொரு பெயரில் வழிபாடு செய்வார்கள். அதன் விவரம் மற்றும் அதன் பலன்கள் வருமாறு:-

    முதல் நாள் - 2 வயது பெண் (குமாரி) - வீட்டில் தரித்திரம் விலகும்

    இரண்டாம் நாள் - 3 வயது பெண் (திருமூர்த்தி) - மன மகிழ்ச்சி உண்டாகும் ராஜ்ஜிய சுகம் கிடைக்கும்

    மூன்றாம் நாள் - 4 வயது பெண் (கல்யாணி) - நல்வித்தை,

    நான்காம் நாள் - 5 வயது பெண் (ரோகிணி) - வியாதிகள் விலகும்

    ஐந்தாம் நாள் - 6 வயது பெண் (காளிகா) - பகை மறையும்

    ஆறாம் நாள் - 7 வயது பெண் (சண்டிகா) - ஐஸ்வரியங்கள் தேடி வரும்.

    ஏழாம் நாள் - 8 வயது பெண் (சாம்பவி) - ராஜயோகம் உண்டாகும்.

    எட்டாம் நாள் - 9 வயது பெண் (துர்க்கா) - காரியம் வெற்றியாகும்

    ஒன்பதாம் நாள்- 10 வயது பெண் (சுபத்ரா) - மனசாந்தி கிடைக்கும்

    • பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது.
    • ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம்.

    இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது. ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம். தீமையை அகற்றி நன்மையை பரவச் செய்வதை கருப்பொருளாகக் கொண்டு, இந்தியா முழுவதும் இந்த விழா கொண்டாடப்பட்டாலும், உள்ளூர் பழக்க வழக்கம் மற்றும் மரபுகளின்படி, மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விழா மாறுபடுகிறது.

    வட மாநிலங்களில் நவராத்திரி விழா துர்க்கை தேவிக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டாலும், தென்னிந்தியாவில் சரஸ்வதி சாமுண்டி உன் ளிட்ட சில தெய்வங்களை இணைத்து கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது. நவராத்திரியை வெவ்வேறு விதமாக கொண்டாடும் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் பற்றி இங்கே...

     தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் துர்க்கை மட்டுமின்றி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவியரின் வழிபாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என்று மூவருக்கும் சமமான வழிபாட்டு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் 10 நாட்களிலும் வீடு மற்றும் கோவில்கள், பொது இடங்களில் 'கொலு அமைப்பது என்பது விசேஷமானது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள். அதில் மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பொருட்களையும், கலைஞர்கள் தங்களின் கலை சார்ந்த பொருட்களையும், ஒவ்வொரு உழைப்பாளர்களும் தங்கள் உழைப்பை முன்னிறுத்தும் பொருட்களையும் சரஸ்வதியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 10-ம் நாளில் மகிஷனை வதம் செய்த துர்க்கையின் வெற்றி தினமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக உலகப்புகழ்பெற்ற திருவிழாவாக இந்த தசரா திருவிழா உள்ளது.

     கேரளா

    பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக புராணங்கள் சொல்லும் கேரள மாநிலம் 'கடவுளின் தேசம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட 108 பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. நவராத்திரி விழாவின் போது இந்த ௧௦௮ கோவில்களும் துர்க்கையின் ஆலயங்களாக பாவித்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்தியாவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாநிலமாகத் திகழும் கேரளாவில், தங்களின் கல்வி சார்ந்த பொருட்கள், வீட்டு விலங்குகள், வாகனங்களை வழிபடுவதை மக்கள் விரும்புகிறார்கள்.

    நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறார்கள். அப்போது மாணவர்கள் கரும்பு அல்லது வெல்லம் போன்ற நைவேத்தியங்களுடன், தங்களின் கல்வி சார்ந்த பொருட்களை சரஸ்வதி தேவியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குகிறார்கள்.

     ஆந்திரா

    நவராத்திரி பண்டிகையானது 'பதுக்கம்மா பண்டிகை' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்கள் பலரும். இனிமையான தாம்பத்ய வாழ்க்கை அமைய அன்னை கவுரி தேவியை வழிபடும் நிகழ்வாக இது இருக்கிறது. திருமணமாகாத பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று இந்த வழிபாட்டில் இணைகிறார்கள். இந்த பண்டிகையின் இறுதிநாள் விழாவில், ராமலீலா நிகழ்வு நடத்தப்படும். அதாவது ராவணனின் உருவ பொம்மை செய்து, அதை நெருப்பு மூட்டி எரியூட்டுவார்கள்.

    இந்த நிகழ்வில் ஆண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அன்னை கவுரி தேவியின் வழிபாட்டிற்காக உள்ளூரில் உருவாகும் மலர்களைக் கொண்டு மலர் அடுக்குகளை உருவாக்குவார்கள். இது பன்னெடுங்காலமாக நடை பெறும் வழக்கமாகும். திருவிழாவின் இறுதிநாளில் இந்த மலர் அடுக்கானது, ஒரு ஏரி அல்லது ஆற்றில் விடப்படும்.

     குஜராத்

    நவராத்திரி விழாவானது. குஜராத் மாநிலத்தில் ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. குஜராத் மக்கள், நவராத்திரியின் ஒன்பது நாட்களும், துர்க்கை மற்றும் துர்க்கையின் வெவ்வேறு ஒன்பது அவதாரங்களையும் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். நவராத்திரி நாளில் குஜராத் மக்கள் ஆடும் ஒரு வகை நடனம் பிரசித்தி பெற்றதாகும். இந்த நடனத்திற்கு "கர்பா நடனம்" என்று பெயர்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் நோன்பு இருக்கும் பெண்கள், பானைக்குள் ஏற்றிவைக்கப்பட்ட மெழுகுவர்த்தி முன்பாக நின்று தங்கள் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை சொல்லி வழிபடுவார்கள். "கார்போ" என்று அழைக்கப்படும் இந்த பானை, வாழ்க்கையின் மூலத்தையும் ஒளி, சக்தியையும் குறிக்கும். 'கார்போ' என்பதே மருவி 'கர்ப என்றானதாக சொல்கிறார்கள்.

    கர்பட் என்ற வார்த்தைக்கு "கருப்பை" என்றும் பொருள். பானைக்குள் உள்ள மெழுகுவர்த்தியும், அதன் ஒளியும்கருப்பையில் இருக்கும் உயிரை குறிக்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஆண்களும், பெண்களும், துர்க்கா தேவி சிலையை சுற்றி ஆடும் பாரம்பரிய நடனமாக கரிபா நடனம் இருக்கிறது.

     கர்நாடகா

    கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா உலகப் புகழ் பெற்றதாகும். இது ஒரு மாநில விழாவாகும். மைசூர் நகரின் மையத்தில் மிகவும் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கி.பி. 1610-ம் ஆண்டு முதல் அப்போதைய மன்னன் முதலாம் ராஜா உடையார் கடைப்பிடித்த சடங்குகளைப் பின்பற்றியே, இன்றளவும் இந்த மைசூர் தசரா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவான, மகாநவமி அன்று அரச வாள் ஒரு சிம்மாசனத்தில் வைத்து வணங்கப்படும்.

    அதன்பின்னர் யானைகள் மற்றும் குதிரைகள் மூலமாக அந்த வாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். 10-ம் நாள் தசமி அன்று. யானை மேல் தங்க பல்லக்கில், சாமுண்டீஸ்வரியின் (துர்க்கையின் வடிவம்) உருவத்தை வைத்து, நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் சூழ்ந்துவர பிரமாண்டமான ஊர்வலம் நடைபெறும்.

     இமாச்சலப் பிரதேசம்

    நாட்டின் பிற மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டம் முடியும் பத்தாம் நாளில், இமாச்சலப் பிரதேசத்தில் இந்த விழா தொடங்குகிறது. 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர், அயோத்தி திரும்பியதை குறிக்கும் வகையில் இந்த கொண்டாட்டம் இருக்கும். பத்தாம் நாளில் `குலு தசரா' என்ற பெயரில் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். குலு பள்ளத்தாக்கில் மிகப் பிரபலமான திருவிழா இதுவாகும்.

    இந்த நாளில் குலு பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள தெருக்கள் வண்ண விளக்குகளால் பிரகாசமாக மின்னும். தெய்வங்களின் சிலைகளை பிரதான மைதானத்திற்கு எடுத்துச்செல்லும் பெரிய ஊர்வலம். அந்த ஊர்வலத்துடன் கலந்த மக்களின் உற்சாகம் மற்றும் ஆடல். பாடல் ஆகியவை இந்த விழாவின் சிறப்பம்சமாகும். பல்வேறு நடனம், கலாசார நிகழ்ச்சிகள் இந்த நாளை அழகாக்கும்.

    இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் தெய்வமான ரகுநாதரின் சிலை, அழகாக வடிவமைக்கப்பட்டு ஒரு தேரில் வைக்கப்படும். அந்த தேரை உள்ளூர் மக்கள் கயிறுகளால் இழுத்து நகரத்தின் பல பகுதிகளிலும் வலம் வருவார்கள்.

    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    • ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதி உலா.

    தூத்துக்குடி:

    பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் முத்தாரம்மன் கற்பக விருச்சிக வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மூன்றாம் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை கலையரங்கத்தில் சமய சொற்பொழிவும், இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், மாலையில் முத்துப்பந்தல் வாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா நடைபெற்றது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

     வாகன வீதி உலாவுக்கு முன் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலாவும், இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வபூலபால வாகன வீதிஉலாவும் நடக்கிறது.

    • கல்வி,செல்வம்,வீரம் என மூன்று சக்திகளை கொண்ட தேவியர்களை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம்
    • உடுமலை பகுதி கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.

    உடுமலை

    கல்வி,செல்வம்,வீரம் என மூன்று சக்திகளை கொண்ட தேவியர்களை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம்.இந்த விழாவானது புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வருகின்ற வளர்பிறை ஒன்பது நாட்களும் கொண்டாடப்படுகிறது.

    விழாவின் முதல் மூன்று நாட்களும் வீரசக்தியின் தோற்றமான பார்வதி தேவியையும்,நடுவில் உள்ள மூன்று நாட்களும் செல்வசக்தியின் தோற்றமான லட்சுமி தேவியையும்,இறுதி மூன்று நாட்களும் கல்விசக்தியின் தோற்றமான சரஸ்வதி தேவியையும்,10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியையும் வழிபாடு செய்யப்படுகிறது.

    பெண்களுக்கே உரித்தான இந்த பண்டிகை நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பெண்கள் ஆண்டுதோறும் தவறாமல் விரதம் இருந்து வீடுகளில் கொலு வைத்தும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தும் வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு 23-ம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.இதை முன்னிட்டு உடுமலை பகுதியில் உள்ள கோவில்களில் கொலு வைத்து நவராத்திரி விழா தொடங்கி உள்ளது.உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் முதல் நாளன்று அம்பாள் சைலபுத்திரிதேவி வடிவத்தில் ஆரஞ்சு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதைத்தொடர்ந்து பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதே போன்று உடுமலை பகுதி கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.

    இதற்காக கோவில்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது.ஒரு சில பொதுமக்கள் வீடுகளில் கொலு வைத்தும் நவராத்திரி விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கரம்பன் நீரில் நின்று அன்ன ஆகாரம் இன்றி தவம் செய்தான்.
    • பஞ்சாங்கனி மத்தியில் ரம்பன் தவம் செய்தான்.

    தனு என்ற அசுரனுக்கு மிகவும் பராக்கிரமசாலியான ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த புத்திரர்களை பெற வேண்டும் என்று கடும் தவம் புரிந்தனர். கரம்பன் நீரில் நின்று அன்ன ஆகாரம் இன்றி தவம் செய்தான். அப்பொழுது இந்திரன், 'இவனுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து' என்று கருதி, முதலை உருவில் சென்று நீரில் நின்றிருந்த கரம்பனை கொன்றான்.

    யட்சபுரி என்ற ஊரில் ரசாலம் என்ற ஆலமரத்தின் அடியில் பஞ்சாங்கனி மத்தியில் ரம்பன் தவம் செய்தான். சகோதரனாகிய கரம்பனுக்கு இந்திரனால் ஏற்பட்ட மரணத்தை அறிந்து, தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான். தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னியில் செலுத்த முயன்றான்.

    அப்போது அக்னி தோன்றி, `உனக்கு வரம் தருகிறேன். இவ்வாறு செய்யாதே" என்றார். ரம்பன் மகிழ்ந்து, `எனக்கு யாராலும் ஜெயிக்க முடியாத மகன் வேண்டும்" என்றான். அதற்கு அக்னி தேவன், 'நீ முதலில் எந்த உயிரினத்தை பார்க்கிறாயோ, அதன் மூலம் உனக்கு புத்திரன் பிறப்பான்' என்று வரம் கொடுத்தார்.

    இதையடுத்து ரம்பன் தவத்தில் இருந்து வெளியே வந்தான். அப்போது அவன் முதலில் எருமை ஒன்றை கண்டான். அந்த எருமையை பார்த்தவுடன் அதன் வாயிலாக அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. எருமைத்தலையும் மனித உடலுமாக பிறந்த அந்த பிள்ளை மக்ஷாகரன்' என்று அழைக்கப்பட் டான்.

    மகிஷாசுரன் மகாமேரு என்ற மலையை அடைந்து அங்கு பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான். மரணம் இல்லாத வாழ்க்கையை அவன் பிரம்மாவிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், மரணம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. வேறு வரம் கேள்" என்றார். அதற்கு அவன். "தேவர்களாலும் பூதங்களாலும். ஆண்களாலும், மிருகங்களாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்றான்.

    பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால். பெண்களை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.

    மகிஷாசுரனுக்கு, சிட்சூரன் என்பவன் சேனாதிபதியாகவும். தாம்ரன் என்பவன் தளபதியாகவும் இருந்தனர். அசிலோமா, பிடாலன், பாஷ்களன், காலபந்தகன், உதர்க்கன், த்ரிநேத்ரன் போன்ற மந்திரிகளும் அவனுடன் இருந்தனர்.

    அவனுக்கு பயந்த ரிஷிகளும், முனிவர்களும் அவன் சொல்படி கேட்டு நடந்தனர். அவன் மிக அழகிய மாஹிஷம் என்ற பட்டினத்தை அஞ்சனம் என்ற மலையில் நிர்மாணித்தான். தேவர்களை தனக்கு உதவியாளர்களாக மாற்றிக் கொண்டான்.

    மும்மூர்த்திகளும். தேவர்களும் ஒன்று கூடி, மகிஷனை எப்படி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். தேவர்களின் சக்தியிலும், மும்மூர்த்திகளின் ஒளியிலும் இருந்து தெய்வீக சக்தி படைத்த தேவி தோன்றினாள்.

    புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இந்த பராசக்தி தேவர்களுக்கு காட்சி கொடுத்தாள். இந்த தேவி 18 கைகள் கொண்டு அஷ்டாதச மகாலட்சுமியாக காட்சி தந்தாள். தொடர்ந்து ஒன்பது இரவுகள் போர் புரிந்து மகிஷாகரனையும் அவனுடன் இருந்த அசுரர்களையும் அழித்தாள். இதனால் அந்த இன்னை மகிஷாசுர மர்த்தினி என்று அழைக்கப்பட்டாள். எந்த இடத்தில் தேவர்களின் சத்ருவான மகிஷனை, தேவி வதம் செய்தாளோ அந்த இடம் `தேவிப்பட்டினம்' என்று பெயர் பெற்றது. அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றிபெற்ற 10-ம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.

    இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் மகிஷாசுர மர்த்தினிக்கு, "துர்க்கா தேவி" என்ற பெயர் எப்படி வந்தது என்று ஒரு சமயம் துர்கமன் என்ற அசுரன், தேவர்கள், மகரிஷி, முனிவர்கள், வேதியர்கள் போன்றவர்களிடம் இருந்த மந்திரங்களை தன் சக்தியால் கவர்ந்து சென்றான். இதனால் உலகில் ஜபம், யாகம் எதுவும் நடைபெறவில்லை.

    இதனால் மழை பொழியாமல் பயிர்கள் வாடின. பசுமையான மரங்கள் கூட உதிர்ந்தன. கிணறு, குளம், நதி ஆகியவை வற்றியது. இவ்வாறு நூறு ஆண்டு காலம் மக்கள் பஞ்சத்தில் தவித்தனர். இதையடுத்து தேவர்கள், அன்னை பராசக்தியை துதித்து வழிபட்டனர். அப்போது தேவி அங்கு தோன்றினாள். இவர் பல கண்களைக் கொண்டிருந்ததால், 'சதாட்சி' என்று பெயர் பெற்றாள்.

    புஷ்பம், தளிர் கீரை, காய்கறிகள், கிழங்குகளுடன் தோன்றியதால், இந்த தேவியை `சாகம்பரி' என்றும் பெயரிட்டு அழைத்தனர். இந்த அன்னை, துர்கமனுடன் சண்டையிட்டு அவனை வீழ்த்தினாள். அவன் இறந்த பிறகு அவனுடைய உடலில் இருந்து அவன் கவர்ந்து சென்ற மந்திரங்கள் பேரொளியோடு அன்னையை வந்து சரணடைந்தன. அதைக்கண்ட தேவர்கள் ஜெய ஜெய' என்று கோஷமிட்டனர்.

    துர்கமன் என்னும் அசுரனை அழித்ததால் அன்னை `துர்க்கா' என்று அழைக்கப்பட்டாள். சூலினி துர்க்கா, வன துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரி துர்க்கா என நவ துர்க்கைகளாகவும் இருந்து அன்னை அருள்புரிகிறாள்.

    இந்த தேவியின் பெருமைகளை கூறும் தேவி மாகாத்மியத்தை, ஒன்பது நாளும் பாராயணம் செய்வது சிறப்பான பலனைத் தரும். அப்படி முடியாவிட்டால் துர்க்கைக்கு மிக- விசேஷமான துர்க்காஷ்டமி அன்றாவது பாராயணம் செய்வது நல்லது. தேவர்கள் மகிஷனை வதம் செய்த போது மகிஷாசுர மர்த்தினியை துதித்த துதிக்கு மகிஷாசுரமர்த்தினி சுலோகம் என்று பெயர் வந்தது.

    ×