search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NIFT-TEA College"

    • பயிற்சி வகுப்பு கடந்த மே 29 ந் தேதி தொடங்கி ஜூன் 3 -ந் தேதி வரை நடைபெற்றது.
    • ஆடை தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியில் கேரளத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு பின்னலாடைத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அஷம்ப்ஸ்சன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. பேஷன் டிசைனிங் படித்து வரும் 23 மாணவா்களுக்கு பின்னலாடைத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியில் அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பு கடந்த மே 29 ந் தேதி தொடங்கி ஜூன் 3 -ந் தேதி வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் நிட்டிங் இயந்திரங்களின் செயல்பாடுகள், ஆடை தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்தப் பயிற்சியின் நிறைவு விழா மற்றும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், கல்லூரியின் பேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் துறைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் கல்லூரி உதவிப் பேராசிரியை அனிதா ரேச்சல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • மே மாதம் 11-ந் தேதி தேசிய தொழில்நுட்ப வாரமாகக் கொண்டாடப்பட்டது.
    • பிரதமரின் குழந்தைப்பருவப்படத்தை ராஜா எம்.சண்முகம் பிரதமருக்குப் பரிசளித்தார்.

     திருப்பூர் :

    திருப்பூரில் உள்ள நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அடல் இன்குபேஷன் மையத்தில் 67 ஸ்டார்ட் -அப் நிறுவனங்கள் புதுமையான படைப்புகளை சமர்ப்பித்துள்ளனர். குறிப்பாக பருத்தியினாலான கழிவுத் துணிகளில் இருந்து உருவாக்கப்பட்ட காகிதம், பேக்கிங் பொருட்கள் துணிகளுக்கு குறைவான உப்புடன் சாயமேற்றும் தொழில்நுட்பம், வாழை நாரை பஞ்சுடன் கலந்து உருவாக்கப்பட்ட ஆடைகள், இரும்பு ஆலைகளுக்கு தேவையான மூலக்கூறுகளை வடிகட்டி வாயுவை தனியாகப் பிரிக்கும் வடிகட்டி பைகள், தானியங்கி முறையில் ஆடைகளை தரம் பிரித்துப் பேக்கிங் செய்யும் தொழில்நுட்பம், பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளைக் கொல்லும் முககவசம் ஆகியவை மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளாகச் சந்தைபடுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பொக்ரான் அணு ஆயுத சோதனை நடைபெற்றதன் 25-வது ஆண்டு நாளான மே மாதம் 11-ந் தேதி தேசிய தொழில்நுட்ப வாரமாகக் கொண்டாடப்பட்டது. அதன்படி ஆராய்ச்சி நிறுவனங்கள் புதுமையான படைப்புகளை புதுடெல்லியில் கடந்த 11-ந் தேதி காட்சிப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு இளம் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தினார்.

    நிப்ட்-டீ இன்குபேஷன் மையம் சார்பில் முதன்மை ஆலோசகர் மற்றும் அடல் இயக்குனர் ராஜா எம்.சண்முகம், தலைவர் பி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளை பிரதமருக்கு எடுத்துரைத்தனர். மேலும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பருத்தியினாலான கழிவுத் துணிகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட காகிதத்தில் இயற்கை சாயம் கொண்டு அச்சிடப்பட்ட பிரதமரின் குழந்தைப்பருவப்படத்தை ராஜா எம்.சண்முகம் பிரதமருக்குப் பரிசளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நிப்ட்-டீ ஆராய்ச்சி மற்றும் இன்குபேஷன் மையத் தலைவர் எஸ்.செந்தில் குமார், மேலாளர் கே.செந்தில் குமார், தொழில்நுட்ப பிரிவு அதிகாரி எஸ்.அருள் செல்வன், புணர்பவா ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இயக்குனர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • திருப்பூர் ஒரு தனி நகரமாக இருந்து பெரும்பான்மையான அளவில் நிதியை பெற்றுத்தந்துள்ளது.
    • என்.95 முககவசம் முதல் பல்வேறு மருத்துவ உபகரணங்களை உலக நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது

    திருப்பூர் :

    மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை மந்திரி கிஷன் ரெட்டி திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ பின்னலாடை கல்லூரியில் சுயசார்பு இந்தியா பற்றி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கல்லூரி தலைவர் மோகன் வரவேற்றார். கல்லூரியின் முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை மந்திரி கிஷன் ரெட்டி பேசியதாவது:-

    இந்திய பொருளாதார ஏற்றுமதியில் திருப்பூர் ஒரு தனி நகரமாக இருந்து பெரும்பான்மையான அளவில் நிதியை பெற்றுத்தந்துள்ளது. திருப்பூரில் உள்ள இளைஞர்கள் தொழில் அதிபர்களாகவும், தொழில் முனைவோராகவும் உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் தீனதயாள் உபத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்ட கிளை இந்திய அளவில் 79 இடங்களில் உள்ளன. அதில் ஒரு கிளை இங்கு செயல்படுவது பெருமையாக உள்ளது. அடல் இன்குபேஷன் சென்டர் செயல்படும் விதம் சிறப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கொரோனா காலத்தில் சுயசார்பு இந்தியா இயக்கத்தின் மூலம் சாதித்தது என்ன என்று கேள்வி கேட்ட மாணவிக்கு, என்.95 முககவசம் முதல் பல்வேறு மருத்துவ உபகரணங்களை உலக நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது என்று மந்திரி பதில் அளித்தார். முடிவில் கல்லூரி துணை தலைவர் பழனிசாமி நன்றி கூறினார். கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மதிப்பீடு மற்றும் கணக்கெடுப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு நடைபெற்றது.
    • 3 முதல் 6 மாதம் ஆராய்ச்சி துறையுடன் இணைந்து தரவுகள் பற்றி கணக்கெடுப்பார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூருக்கு நிகர பூஜ்ய கார்பன் கிளஸ்டர்ஸ் சான்றிதழ் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு டிஐஎப்ஏசி .உடன் இணைந்து தரவு மதிப்பீடு மற்றும் கணக்கெடுப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு கருத்தரங்கம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் இன்குபேஷன் மையத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினர்களாக டிஐஎப்ஏசி .துறையின் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் தீபக்குமார் மற்றும் மணீஷ் குமார் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன் வரவேற்றார். இதில் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பத் துறை தலைவர் அருள் செல்வன், இன்குபேஷன் மைய மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் மற்றும் கல்லூரியின் முதன்மை வழிகாட்டி ராஜா சண்முகம் பேசும்போது "கார்பன் வெளியிடும் தன்மை மற்றும் அதற்கு ஈடான பசுமை ஆற்றல் உருவாக்கம் மற்றும் கழிவு மறுசுழற்சி காரணமாக இவை இரண்டும் சமமாக உள்ள காரணத்தால் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியிடும் கிளஸ்டர் என திருப்பூரை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று ஆராய்ச்சியாளர் குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் 3 முதல் 6 மாதம் ஆராய்ச்சி துறையுடன் இணைந்து தரவுகள் பற்றி கணக்கெடுப்பார்கள். இதன் மூலம் திருப்பூர் கிளஸ்டர் முதல் நிகர பூஜ்ய கார்பன் கிளஸ்டர்ஸ் என்ற சான்றிதழ் பெற ஏதுவாக இருக்கும்" என்றார்.

    • நிப்ட்-டி கல்லூரியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமான சவால்கள் குறைவாக உள்ளன.
    • கல்லூரியில் விரைவில் அமையவுள்ள டிசைன் ஸ்டுடியோ திருப்பூருக்கு இன்னுமொரு மைல்கல்லாக அமையும்.

    திருப்பூர் :

    திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நிப்ட்-டி பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2015-2018 கல்வியாண்டில் பயின்ற இளங்கலை, முதுகலை, முதுகலை பட்டய படிப்பு மாணவர்கள் 532 பேருக்கு பட்டங்கள், பட்டயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனா். கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

    திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

    அப்போது, சமுதாயத்தில் எவ்வளவோ இடையூறுகளுக்கு மத்தியில் படிக்க வாய்ப்பு பெற்று படித்து, பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். நிப்ட்-டி கல்லூரியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமான சவால்கள் குறைவாக உள்ளன. கல்வித்துறையில் பலவித சவால்கள் இருந்தாலும் நாளை தலைவர்களை, தொழிலதிபர்களை உருவாக்கும் துறை சார்ந்த கல்வியை வழங்கும் இதுபோன்ற கல்வி நிலையங்களில் பயில்வது என்பது மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. திருப்பூரில் இன்று தொழிலாளியாக இருப்பவர்கள் நாளைய முதலாளி என்கிற நிலையை அடைவதற்கு வாய்ப்பு அமைந்துள்ள நகரமாக இருக்கிறது.

    அப்படி வளர்ந்துதான் இவ்வளவு பெரிய இடத்தை திருப்பூர் பிடித்துள்ளது. அதற்கு நிப்ட்-டி போன்ற கல்வி நிலையங்களும் உறுதுணையாக அமைந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. மேலும் இந்தக் கல்லூரியில் விரைவில் அமையவுள்ள டிசைன் ஸ்டுடியோ திருப்பூருக்கு இன்னுமொரு மைல்கல்லாக அமையும். பட்டம் பெற்ற மாணவர்கள் புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி சேர்மன் பி.மோகன், கல்லூரி தலைமை ஆலோசகர் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம், கல்லூரியின் முன்னாள் தலைவர் சி.எம்.என்.முருகானந்தன், கல்லூரியின் துணைத்தலைவர்கள் என்.ரங்கசாமி, கே.வாசுநாதன், பொருளாளர் ஆர்.கோவிந்தராஜு, பொதுச்செயலர் ஈ.பழனிசாமி, துணைச்செயலர் மற்றும் கல்வித்துறை தலைவர் ஆர்.ஆர்.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் என்.சண்முகம், சிறப்பு அழைப்பாளர் கே.கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனா்.

    ×