search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "neet"

    • எங்களுடைய நோக்கம் நீட் தேர்வு மூலமாக தான் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும்
    • நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படி பட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம்

    கோவை தொகுதியில் சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    சின்னவதம்பசேரி கிராமத்தில் ஓட்டு சேகரித்த அவரிடம் பெண் ஒருவர் நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். அப்படி இருக்க ஏன் அதனை கட்டாயப்படுத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் ஏழை மக்களுக்கு நல்லது. முதன் முறையாக ஏழை மாணவர்கள் நீட் மூலமாக தான் அரசு மருத்துவமனைக்கு படிக்க செல்கின்றனர். திமுக 1967-ல் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கொண்டு வந்தது 5 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 17 அரசு மருத்துவக்கல்லூரி தான். ஆனால் நாங்கள் 15 அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்துள்ளோம்.

    எங்களுடைய நோக்கம் நீட் தேர்வு மூலமாக தான் ஏழை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டும். உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அப்படி பட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம்.

    கிராமப்புறத்தில் ஒரு ஒரு ஏழை மாணவன் நீட் தேர்வினால் மட்டும் தான் அரசு மருத்துவக்கல்லூரிக்கு படிக்க செல்ல வேண்டும். இல்லையென்றால் ஏழைமாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளில் தான் படிக்க முடியும்.

    நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறார்கள். மாணவர்கள் யாரேனும் தற்கொலை செய்தால் முதல்வர் ஸ்டாலின் மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளுங்கள். அதற்கு மேல் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

    • ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை.
    • அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக மூன்று நாட்களுக்கு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    * புதிய கல்விக் கொள்கையில் 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கக் கூடாது என புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள்.

    * ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை. நீட் விவகாரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்

    * அவர் மறைந்ததும், திருட்டுத்தனமாக மத்திய அரசான பா.ஜனதாவுக்கு பயந்து அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது.

    * நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

    * நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம், தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட்தேர்வு விலக்கு ஏற்படுமோ, அதுதான் முதல் வெற்றி.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
    • ஒரு பக்கம் பெற்றோர்கள், மற்றொரு மக்கள் பயிற்சி மையம் என நெருக்கடி கொடுப்பதால் மாணவர்கள் மனஅழுத்தம்.

    இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எப்படியாவது மருத்துவராக வேண்டும் என நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களை பெற்றோர்கள் அதிக அளவில் பணம் செலவழித்து நீட் தேர்வு மையத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

    இதை லாப நோக்கத்தில் பார்க்கும் தனியார் மையங்கள் நாட்டில் பெரும்பாலான இடங்களில் நீட் பயிற்சி மையத்தை அமைத்துள்ளன. இந்த பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்த்து விடுகிறார்கள். இந்த மையங்கள் தங்களது பெயர்களை நிலைநாட்ட, மாணவர்களை கசக்கி பிழிந்து எடுக்கிறார்கள்.

    நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அதிகமாக உள்ளன. இதனால் பயிற்சி முனையமாக கோட்டா திகழ்கிறது. வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிகமான அளவில் கோட்டாவில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் படித்து வருகிறார்கள். இவர்கள் இங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே பெற்றோர்களை பிரிந்து வந்து தனிமையில் தங்கியிருக்கும் மாணவர்களை, தங்களது மையம் முதன்மையாக விளங்க வேண்டும் என நினைக்கும் பயிற்சி மையங்கள் தேர்ச்சியை அதிகமாக காண்பிக்க படிபடி என நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் மனஅழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    கடந்த வருடத்தில் மட்டும் கோட்டாவில் 26 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் தங்கிருந்து படித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

    அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பெற்றோர்கள் வந்ததும் அந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ராஜஸ்தான் அரசு, பயிற்சி மையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
    • எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுகின்றனர்.

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், செய்தியாளர்களிடையே பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து புதிய விளக்கம் அளித்துள்ளார். அதில், "இந்தியாவில் கடந்த ஆண்டு நீட் மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகம். இவற்றில் பெரும்பாலானவை காலியாகவே உள்ளன."

    "மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பில், மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் என்பதற்கு அர்த்தம், நீட் எழுதி இருந்தாலே போதும் என்பது தான். அவர்கள் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுகின்றனர்."

    "எம்.பி.பி.எஸ். தேர்வே கட்-ஆஃப் தேர்வு தான். இதைத் தான் தற்போது பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் முழுமையாக நிரம்பும்."

    "நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதலிலும், அடுத்தடுத்த மதிப்பெண்களை எடுத்தவர்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெறுவர். நீட் தேர்வு மதிப்பெண்ணிற்கு ஏற்ற வகையில், அவர்கள் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் சேர முடியும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எம்.பி.பி.எஸ். தேர்ச்சி போதுமானது என்பதால் தான் ஜூரோ பெர்சண்டைல் கொண்டுவரப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்து உள்ளார்.

    கடந்த ஆண்டு இந்தியாவில் மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்களே 64 ஆயிரத்து 059 ஆகும். இதில் 4 ஆயிரத்து 400 இடங்கள் காலியாகவே இருந்தன. 2021-22 ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 60 ஆயிரத்து 202 ஆக இருந்தது. இதில் 3 ஆயிரத்து 744 இடங்கள் காலியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டது.
    • நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது.

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.-வினர் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், இது குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டது," என்று குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

     

    இது தொடர்பாக பேசிய அவர், "மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் "பூஜ்ஜியம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் முதலில் அறிந்து கொள்ளவும்."

    "நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக்கொண்டு இருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல? நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை," என்று தெரிவித்து இருக்கிறார்.

     

    தெலுங்கானா கவர்னர் கூறியிருப்பது போன்று பெர்சண்டேஜ் மற்றும் பெர்சண்டைல் இடையே உண்மையில் பெரிய வித்தியாசம் உண்டு. பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மதிப்பெண் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மதிப்பெண்கள். இந்த பெர்சண்டேஜ் எத்தனை பேர் தேர்வு எழுதினாலும் மாறாது. யார் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மாறாது. 50 தான்.

    பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு இடத்தை குறிப்பது. உதாரணமாக, ஒரு தேர்வில் 9 மாணவர்களின் மதிப்பெண்கள்- 89,90,90,91,92, 96,98,98,99. இதில் 50வது பெர்சண்டைல் 92. அதாவது 50% மாணவர்கள் 92க்கு மேல் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 92க்கு கீழ் பெற்றுள்ளனர்.

    இதே தேர்வு சற்று கடினமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். அப்போது மதிப்பெண்கள்- 18,22, 34, 35, 36, 40,41,41,42 என்று இருந்தால், 50% மாணவர்கள் 36க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 50% மாணவர்கள் 36க்கு கீழ் பெற்றுள்ளனர். நீட் நுழைவு தேர்விலும் நெகடிவ் மதிப்பெண் உண்டு.

     

    ஜீரோ பெர்சண்டைல் என்பது ஜீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகடிவில் இருந்தாலும் அதுதான் ஜீரோ பெர்சண்டைல். எனவே முட்டை மதிப்பெண்ணுக்கும் கீழ் நெகடிவ் மதிப்பெண் எடுத்தாலும் சீட் உறுதி.

    அந்த வகையில் மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பின் படி, மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்பதே பொருள்.

    • ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ஒழிப்போம் என்று வாக்குறுதி.
    • பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும், ஏன் அதற்கும் கீழ் எடுத்தாலும் கூட நீங்கள் பட்ட மேற்படிப்பில் சேரலாம்.

    இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி நாடு முழுக்க அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த விதிமுறை அதிக சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்து ஏராளமான சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன. எனினும், சர்ச்சைகளோடு, சேர்த்து நீட் தேர்வும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

    நீட் தேர்வில் பங்கேற்கும் தமிழக மாணவர்களில் பலர் சமீப காலங்களில் அதிகளவில் தேர்ச்சி பெற துவங்கி உள்ளனர். தமிழகத்தில் நீட் தொடர்பான தற்கொலைகளும் முற்றுபெறாமல், தொடர் கதையாகவே இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் ஆளும்கட்சியாக இருக்கும் தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்து இருந்தது.

     

    இது தொடர்பான விவாதங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பங்கேற்போர் பூஜ்ஜியம் மதிப்பெண்களை பெற்றாலும் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு நாடு முழுக்க அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    2016ஆம் ஆண்டு 50 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதன் காரணமாக அன்று பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதிய மருத்துவர்களில் பெரும்பாண்மையானவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்ததால் இந்த விதியால் பிரச்சனையும் எழவில்லை.

    ஆனால், இம்முறை பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதியவர்களில் பலரும் பூஜ்ஜியம் அல்லது அதற்கும் குறைவாகவே மதிப்பெண் எடுத்துள்ளார்கள். எனவே பட்ட மேற்படிப்பு நுழைவு தேர்வில் 50 சதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும் என்றால் இவர்களால் பட்ட மேற்படிப்பு படிக்க முடியாது.

    எனவே இவர்களுக்காக, பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும், ஏன் அதற்கும் கீழ் எடுத்தாலும் கூட நீங்கள் பட்ட மேற்படிப்பில் சேரலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

    2016-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான சேர்ந்தவர்கள் 12ஆம் வகுப்பு மதிப்பெண் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள். ஆனால், 2023-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவு தேர்தில் பூஜ்ஜியம் மதிப்பெண் கூட எடுக்காமல் நெகடிவ் மதிப்பெண் எடுத்திருப்பவர்கள் 2017-க்கு பிறகு நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள்.

     

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை எடுத்தாலும் மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற மத்திய அரசின் புதிய அறிவிப்பின் மூலம், நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயின்றவர்களால், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை கூட எடுக்க முடியவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    மேலும், நீட் தேர்வின் மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தவர்களால் பட்ட மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை கூட எடுக்க முடியாத நிலை இருப்பதால் தான், இந்த சட்ட திருத்தம் இயற்றப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

    • மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி னார்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுக்கா அரியலூர் அரசு பள்ளியில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஒன்று திரண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி னார். இது பற்றி தகவலறி ந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.செ யலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமானவசந்தம் கார்த்திகேயன் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் .

    நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே மாணவர்களாகிய நீங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்றார். அதனை ஏற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், கட்சி நிர்வாகிகள் அண்ணா துரை, லிங்கநாதன், பத்மநா பன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • அதிமுக மாநாடு நடைபெற்றால் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மதுரையில் கூடினர்
    • மாநாடு உடன் போராட்டம் நடத்தப்பட்டால் பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால் தள்ளிவைப்பு

    தி.மு.க. நேற்று நடத்திய போராட்டம் மதுரையில் மட்டும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றதாலும், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாலும், மதுரையில் மட்டும் போராட்டம் நடைபெறவில்லை.

    இதனால் மதுரையில் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 24-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அண்ணாநகர், அம்பிகா தியேட்டர் அருகில் உள்ள ரவுண்டானாவில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் பேராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக,

    'நீட்' தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், தமிழ்நாடு கவர்னரையும் கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் மதுரையை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    உண்ணாவிரதத்தை தி.மு.க. பொதுச் செயலாளர், அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முன்னதாக 'நீட்' தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் உயிரிழந்த மாணவர்களின் உருவப்படங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    உண்ணாவிரத போராட்டத்தில், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தி.மு.க. மாவட்ட செயலாளர் சிற்றரசு, மாணவர் அணி செயலாளர் எழிலரசன், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகராஜன், இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, செயல் தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி., திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • ஆளுநரை கேள்வி கேட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
    • காங்கிரஸ் கட்சியை அமர வைத்தால் நீட் தேர்வு ரத்தாகும்.

    தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நீட் தேர்வு 21 உயிர்களை பலி வாங்கி உள்ளது. நீட் தேர்வு மரணங்களுக்கு அதிமுக துணை நின்றது.

    நீட் மாணவர் உயிரிழப்பை தற்கொலை என கூறுகிறோம், அது தற்கொலை அல்ல கொலை.

    உயிரிழந்த 21 குழந்தைகளின் அண்ணனாக நான் பேசுகிறேன்.

    உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ பங்கேற்கவில்லை. சாதாரண மனிதனாக உதயநிதி ஸ்டாலினாக பங்கேற்று உள்ளேன்.

    நாம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆளுநர் நீட் தேர்வுக்கு கோச்சிங் எடுக்கிறார்.

    ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களை சந்தித்து ஏதேனும் ஒரு தொகுதியில் நின்றால் வெற்றி பெறுவாரா ?

    ஆளுநரை கேள்வி கேட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

    நீட் தேர்வு விவகாரத்தில் இன்றைய போராட்டம் முடிவல்ல ஆரம்பம். பொதுக் தேர்வின்போது தற்கொலை செய்துகொள்வது வழக்கமானது என பாஜக தலைவர் கூறி உள்ளார்.

    மாடு பிடிக்க போராடுகிறோம், மாணவர்கள் உயிருக்காக போராட கூடாதா? நீட் விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் போராட வேண்டும்.

    தமிழகத்திற்கு பாஜக என்ற கட்சி தேவையற்றது. அதிமுக மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவார்களா ? நீட் விவகாரத்தில் பிரதமரின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட தயார் ? நீங்கள் வர தயாரா ?

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை விரட்டி, காங்கிரஸ் கட்சியை அமர வைத்தால் நீட் தேர்வு ரத்தாகும். ராகுல் காந்தி அந்த வாக்குறுதியை கொடுத்திருக்கிறார். அதுதான் நான் சொல்லும் ரகசியம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
    • தமிழக ஆளுநர் அவர்கள், இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, தற்போது நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கோரி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021-க்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் துரதிருஷ்டவசமான விளைவுகள் குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து, நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் வழங்கிடக் கோரி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (14-8-2023) கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும், நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்குமே சாதகமாக உள்ளது என்றும், அடிப்படையிலேயே ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்தத் தேர்வு முறை உள்ளது என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர், நீட் போன்ற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை விட, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டுமென்றும், நுழைவுத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டின் கருத்தாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை செயல்முறை, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஆகியவை குறித்து ஆராய்ந்திட, உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு, தீர்வுகள் குறித்த தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்ததாகவும், இந்தக் குழுவின் அறிக்கை மற்றும் பல்வேறு விவாதங்களின் அடிப்படையில், தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021' (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021), தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13-9-2021 அன்று நிறைவேற்றப்பட்டு.

    18-9-2021 அன்று தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநரால் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு இச்சட்டமுன்வடிவு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இச்சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்குப் பிறகு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டதாகவும், தமிழக ஆளுநர் அவர்கள், இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, தற்போது நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவு தொடர்பாக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 21-6-2022 அன்று கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய உயர்கல்வி அமைச்சகம் 26.08.2022, 15.05.2023 ஆகிய தேதிகளில் கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் 13.01.2023 அன்று கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பெறப்பட்டதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அமைச்சகங்கள் கோரியிருந்த அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு அரசு விரைவாக வழங்கியதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாததால், அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறையைப் பின்பற்ற வேண்டிய நீட் கட்டாயத்தில் உள்ளதாகவும், இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில் மிகுந்த கவலையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், நீட் தேர்வின் மூலம் சேர்க்கை கிடைக்காத விரக்தியில் மாணவர்களும், சில நிகழ்வுகளில் அவர்களது பெற்றோர்களும் தற்கொலை செய்து கொள்ளும் பல்வேறு சோகமான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் முதலமைச்சர் அவர்கள் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

    அண்மையில்கூட, நீட் தேர்வில் தோல்வியடைந்த மன உளைச்சலில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஒருவரும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், இதுபோன்ற சோக நிகழ்வுகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு என்றும், அதனைச் செயல்படுத்துவதில் மாணவர்களுக்கு ஏற்படுத்துவதோடு ஏற்படும் மருத்துவ மட்டுமல்ல, ஒவ்வொரு சேர்க்கை சமுதாயத்தில் நாள் தாமதமும், கிடைப்பதில் தகுதியான பாதிப்புகளை விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்த விவகாரத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    • தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆற்றுப்படை அறக்கட்டளையை சேர்ந்த அரவிந்த் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.
    • நடப்பு ஆண்டில் 80 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

    சென்னை:

    'பெல்லோ சிட்டிசன்' நிதியுதவியுடன் செயல்படும் ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 6 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

    சமூக சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் இருக்கும் இளைஞர்களுக்கு அதற்குரிய பொருளாதார வசதி, பின்னணி இல்லாமல் இருப்பார்கள். அதுபோன்ற இளைஞர்களையும், சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களையும் அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வகையில் 'தந்தி' டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து 'பெல்லோ சிட்டிசன்' (சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்கள்.

    அந்தவகையில், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வரும், பயிற்சி டாக்டரும், ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன் என்பவர் 'பெல்லோ சிட்டிசன்' அமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டார். அந்த தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆற்றுப்படை அறக்கட்டளையை சேர்ந்த அரவிந்த் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் கடந்த ஆண்டில் 90 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் பங்கு பெற்றவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் 10 இடங்களில் வந்தனர்.

    அதேபோல், நடப்பு ஆண்டில் 80 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பங்கு பெற்ற மாணவ-மாணவிகளில் 6 பேர் வெற்றி பெற்று, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கு பெற தகுதி பெற்றனர். அவர்களில் 5 பேர் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இடங்களை பெற்று இருக்கின்றனர். அதன்படி, கே.துர்கா தேவி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியையும், ஹரிணிதேவி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், ஆர்.இலக்கியா திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியையும், விமல்சுவார் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியையும், விஷ்ணுபிரியா ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்து உள்ளனர்.

    இதுதவிர நீட் தேர்வில் 523 மதிப்பெண் பெற்ற கனிஷ்கா என்ற மாணவி பொதுப்பிரிவு கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து, அதற்கான முடிவுக்காக காத்திருக்கிறார். இவர் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவி ஆவார்.

    ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் 2024-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்று, மாணவர் சேர்க்கையும் முடிந்துவிட்டது. அவர்களுக்கான வகுப்புகள் விரைவில் தொடங்கி நடைபெற இருக்கின்றன.

    • முன்பணத் தொகை வழக்கமாக திருப்பித் தரப்பட மாட்டாது என ஏற்கனவே நடைமுறை உள்ளது.
    • கடைசி ரவுண்டில் சீட் எடுத்து சேராவிட்டால் இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.

    இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதில், அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

    முன்பணத் தொகை வழக்கமாக திருப்பித் தரப்பட மாட்டாது என ஏற்கனவே நடைமுறை உள்ளது.

    இந்நிலையில், தற்போது கூடுதலாக நீட் தேர்வெழுத ஓராண்டு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடைசி ரவுண்டில் சீட் எடுத்து சேராவிட்டால் இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×