search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mulaipari"

    • மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரப்பன் கொட்டாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலை முதலே மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி, சக்தி கரகம் எடுத்து வந்து வழிபட்டனர்.

    மேலும் கொதிக்கும் எண்ணையில் கைகளை விட்டு வடை சுட்டு எடுத்து பக்தர் ஒருவர் நேர்த்திகடன் செலுத்தினார். இதில் வீரப்பன் கொட்டாய், புதுக்காடு, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர்க்கவுண்டர், கோவில் நிர்வாகிகள், பூசாரி மற்றும் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி காலை நடக்கிறது.
    • முதல்கால வேள்வி பூஜை இன்று நடக்கிறது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி காலை நடக்கிறது.

    கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று இ்ரவு 7 மணிக்கு முதல்கால வேள்வி பூஜை நடக்கிறது. முன்னதாக கடந்த 24-ந்தேதி மூத்த பிள்ளையார் வழிபாடும், கணபதி ஹோமமும் நடந்தது. இதையடுத்து 25-ந்தேதி சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் முன்னிலையில் லஷ்மி ஹோமம் ஸ்ரீசூத்தம் ஜபம் நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தல காவிரி தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கடந்த சனிக்கிழமை அவிநாசியில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலம் தலைக்காவேரி சென்ற நிலையில் அங்கு தீர்த்தம் எடுத்து இன்று அதிகாலை அவிநாசி வந்தடைந்தனர்.

    இதனை தொடர்ந்து அவினாசி வீர ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் வலம் வரும் ரத வீதிகளின் வழியாக 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். தீர்த்தக் கூட ஊர்வலத்துக்கு முன்பு மேளதாளங்கள் முழங்க இசைக்கேற்றவாறு குதிரை நடனமாட பெண்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    இதில் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வந்தடைந்த தீர்த்தர்கள் கும்பாபிஷேகத்தன்று அவிநாசிலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.

    காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச் செய்து தூய்மை செய்தல் பணி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருட்சத்திகளை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளி ஆனந்தம் அருளும் அவினாசியப்பருக்கு முதல்கால வேள்வி பூஜை தொடங்குகிறது. நாளை காலை 9 மணிக்கு 2-ம் காலமுறை விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    காலை 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண்வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு 3-ம் கால வேள்வி பூஜை , பேரொளி வழிபாடு ஆகியவை நடக்கிறது.

    31-ந்தேதி காலை 6 மணிக்கு 4-ம் கால வேள்வி, மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வியும், 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வியும் நடக்கிறது.அன்று காலை 10 மணிக்குள் அவினாசியப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு கும்பாபிஷேக பெருவிழாவும், மாலை 6 மணிக்கு 7-ம் கால வேள்வி 108 மூலிகை பொருட்கள் வேள்வி ஆகியவை நடக்கிறது.

    வருகிற 2-ந்தேதி காலை 8-ம் கால வேள்வி பூஜை, திருமுறைவிண்ணப்பம், பேரொளி ஆராதனை ஆகியவை நடக்கிறது. காலை 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும், 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.

    அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், 8 மணிக்கு அவினாசி அப்பருடன் ஐம்பெரும் தெய்வங்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    • முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து தொடங்கியது.
    • உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    ஈஷாவில் உள்ள லிங்கபைரவி சந்நிதியில் தைப்பூச திருவிழா இன்று (ஜன 25) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து லிங்கபைரவி தேவிக்கு அர்ப்பணித்தனர்.

    இந்த முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் கிராம மக்கள், பழங்குடி மக்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தேவி பக்தர்கள் என ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் சக்தி கரகம் ஏந்தி முன் செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியில் வடிவமைக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியின் ரதத்தை பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.

    வரும் வழியில் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, மலைவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதியம் 12 மணியளவில் இந்த யாத்திரை லிங்கபைரவி சந்நிதிக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து தேவிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.

    புனிதமான தைப்பூச திருநாளில் ஏராளமான பக்தர்கள் தேவிக்கு தானியங்கள், தேங்காய், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தேவியின் அருளை பெற்றனர். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 21 நாட்கள் 'பைரவி சாதனா' என்ற பெயரில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் விரதத்தை இன்று நிறைவு செய்தனர்.

    • பத்ரகாளி அம்மன் கோவில் கொடைவிழா-முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
    • இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    சாயல்குடி

    சாயல்குடி வி.வி.ஆர்.நகரில் உள்ள சத்திரிய இந்து நாடார் உறவின் முறைக்கு தனித்து பிரதான பாத்தியப் பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் மற்றும் அம்மன் கொடை விழா, முளைப்பாரி ஊர்வ லம் நடைபெற்றது.

    கிராம தலைவர் விஷ்ணுகாந்த், செயலாளர் சிவஞான குருநாதன், பொருளாளர் ஆறுமுகப் பெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், கிருஷ்ணன், காசிராஜா, முருகன், குரு முருகன், ராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் முன்னிலை வகித்தனர்.

    வருடாபிஷேகத்தை முன்னிட்டு முதல், 2-ம் கால யாகபூஜை நடந்தது. 5 ஏக்கர் தீர்த்தக்கரையில் தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மஞ்சள் பானை நீர் தொட்டு ஆடுதல் நிகழ்ச்சி, பொதுப் படைக்கஞ்சி காய்த்து அம்மனுக்கு தீபாரதனை நடைபெற்றது.

    மேலும் அக்னி சட்டி, அம்மன் தேர் பவனி, பொங்கல் வைத்தல், கும்மியடித்தல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பாம்பலம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
    • காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணி செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    மன்னாடிமங்கலம் பாம்பலம்மன் கோவில் 58-வது முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடந்தது. இதை யொட்டி கடந்த வாரம் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

    முதல் நாள் முத்து பரப்புதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை பா.ஜனதா விவசாய அணி மாநில துணை தலைவர் மணி முத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டி யன் ஆகியோர் தலைமையில் முளைப்பாரிக்கு முத்து பரப்பினார்கள்.

    மாலை உலக நன்மைக்காக பெண்கள் குத்து விளக்கு பூஜை நடத்தி னர். தினசரி அன்னதானம் வழங்கப்பட்டது. 8-ம் நாள் அம்மனுக்கு பூ அலங்காரம் மற்றும் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை பூசாரி வீரசேகர் சக்தி கரகம் எடுத்து வந்தார். 9-வது நாள் காலை பால்குடம், அக்னிசட்டி பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். மாலை அம்மன் சிலை ஊர்வலத்துடன் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    10-ம் நாள் காலையில் முளைப்பாரி கரைத்தல், மாலையில் தெய்வீக வேடங்கள் அணிந்து வண்டி வேஷம் நடந்தது. தினசரி கலை நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ்.ஆறுமுகம், கணேசன், ஒன்றிய கவுன் சிலர் ரேகா வீரபாண்டி, நிர்வாகிகள் செந்தில்மயில் ஆனந்தகுமார், கண்ணன், ராஜபாண்டி, கார்த்திக்ரவி உட்பட ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டனர்.

    விழா கமிட்டினர், கிராம பொதுமக்கள், பாம்பலம்மன் கோவில் நண்பர்கள் ஆகி யோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணி செய்திருந்தனர்.

    • வழுதூர் மாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
    • அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலின் முளைக்கொட்டு உற்சவ விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கும்மி ஒயிலாட் டம் ஆகிய நிகழ்ச்சிகள் ஒரு வார காலமாக நடைபெற்றது. கோவி லில் இருந்து வழுதூர் பெரிய ஊரணி பகுதியில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குலவையிட்டு பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக வழுதூர் கிராமத்தை சுற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து முளைப்பாரி களையும் பெரிய ஊரணி கரையில் கரைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வழுதூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இதே போல வாலாந்தரவை, ஏந்தல், பட்டணம் காத்தான், பால்குளம், படவெட்டி வலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதே போன்ற முளைக்கொட்டு உற்சவ விழா நடை பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மதநல்லிணக்க முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகள் தேவேந்திரர்குல வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தேவேந்திரர் நகரில் அமைந்துள்ள வாழவந்தாள் மாரியம்மன் கோவில் 29-ம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழா கடந்த 25-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    தினமும் இரவு ஆண்கள் ஒயிலாட்டமும், பெண்கள் கும்மியடித்து முளைப்பாரி வளர்த்தனர். செவ்வாய்க் கிழமை இரவு கரகம், அக்னி சட்டி எடுத்தும், புதன் கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனையடுத்து ஆண்கள் ஒயிலாட்டமும், பெண்கள் கும்மியடித்து பின் தேவேந்திரர் நகர் அம்மன் சன்னதியில் தொடங்கி முஸ்லீம் தெரு வழியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

    ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்கா வினுள் நுாற்றுக்கணக்கான முளைப்பாரிகளை சுமந்து சென்ற பக்தர்களுக்கு, ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது.

    தர்காவின் முன்புறம் பாரிகள் இறக்கி வைக்கப் பட்டு, கும்மி அடிக்கப் பட்டது. 3 முளைப்பாரிகளை தர்காவின் உள்ளே மக்பரா அமைந்துள்ள இடத்தில் வைத்து உலக நன்மைக் காகவும், நல்ல மழை வளம் வேண்டியும் (பாத்தியா) சிறப்பு துஆ ஓதினர்.

    பின்னர் தர்காவை 3 முறை முளைப்பாரி சுமந்து வலம் வந்தனர். முடிவில் சின்ன ஏர்வாடி கடற்கரையில் முளைப்பாரிகளை கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவிற்கான ஏற்பாடு கள் தேவேந்திரர்குல வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • முளைப்பாரி வைகை ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சாமி வேடம் அணிந்து பக்தர்கள் வந்தனர்.

    சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் மகாசக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் 146-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு முதல் நாள் அம்மனுக்கு முத்து பரப்புதல் நடந்து அபிஷேகம் ஆராதனை காப்புக் கட்டுதல் நடைபெற்றது. மேலும் பூச்சொரிதல் விழா நடந்தது. பால்குடம், அக்னிசட்டி, காவடி எடுத்து வந்தனர்.

    ஒயிலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், வானவேடிக்கை, மேளதாளத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. காலை சக்திகரகம், விளையாட்டு கரகம் மற்றும் முளைப்பாரி வைகை ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சாமி வேடம் அணிந்து பக்தர்கள் வந்தனர். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.

    திருவிழாவில் எம்.வி.எம். குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர் வள்ளிமயில், மதச்சார்பற்ற ஜனதா கட்சி மாநிலபொதுச்செயலாளர் செல்லப்பாண்டி, சமயநல்லூர் ஊராட்சி தலைவர் மலையாளம், விழா கமிட்டியினர் ரங்கராஜன், ரவி, அய்யப்பன், ராஜேந்திரன், நடராஜன், மூர்த்தி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு, காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.
    • ஆடி மாதம் மிக சிறப்பானது.

    பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது

    அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன

    வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிக சிறப்பானது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் கன்னி பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள்

    பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலி பெண்களும் இதில் பங்கேற்றனர். "முளைப்பாலிகை" என்ற சொல்லே திரிந்து முளைப்பாரி என்று மருவியதாக சொல்வர். சிறிய மண் சட்டியில் சிறு பயிறு, மொச்சை பயிறு போன்ற விதைகளை தூவி கோவிலுக்கு அருகிலேயே தனியாக குடில் அமைத்து அங்கு வைத்து வளர்ப்பார்கள்

    ஒவ்வொரு நாள் இரவும் அதனை தெய்வமாக கருதி கும்மியடித்தபடி வலம் வந்து பாடுவார்கள். அம்மன் கோவில் திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் அல்லது கிணற்றில் கரைப்பார்கள். அம்மன் அருளால் முளைப்பாரி செழிப்பாக வளர்வது போல நம் வாழ்வும் சிறப்படையும் என்பார்கள்

    முளைப்பாரி எடுப்பதால் கிராமத்திலுள்ள நீர்நிலைகள் நிறையும் என்பதும், நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் நம்பிக்கை

    மேலும் முளைப்பாரியில் வளர்ந்த பயிர்களின் வளர்ச்சியைக் கண்டு அந்த ஆண்டின் விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் சடங்காகவும் முளைப்பாரி எடுக்கும் வைபவம் கருதப்படுகிறது

    முளைப்பாரியில் பயிர்கள் செழித்து வளர்வதைப் போலவே, தங்கள் வம்சமும் செழித்து வளர வேண்டும் என்பதற்காகவும் முளைப்பாரி வைபவம் கொண்டாடப்படுகிறது.

    • விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
    • சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுக்கரையில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 29-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. 8-ம் நாள் காலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து 9-ம் நாளில் அம்மனுக்கு சந்தன காப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மன் வீதி உலா நடந்தது. 10-ம் நாள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று கிடாய் வெட்டி விழா நிறைவு பெற்றது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • காளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
    • 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் காப்புகட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடந்தன. முக்கிய நாளான நேற்று அதிகாலை அக்னிச்சட்டி திருவிழா நடந்தது. இதில் 300-க்கு மேற்பட்ட பத்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமானோர் மாவிளக்கு எடுத்தும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை கோவில் முன்பு முளைப்பாரியை வைத்து பெண்கள் பாட்டு பாடி, கும்மி அடித்தனர். பின்னர் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். கோவிலில் இருந்து தொடங்கிய முளைப்பாரி ஊர்வலம் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வானவேடிக்கை, மேள தாளங்களுடன் நகர் வலம் வந்து கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர்.

    • தினமும் செல்லியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • தேங்காய் உடைத்து பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் ஐப்பசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு மறவர் சங்கம் சார்பில் முளைப்பாரி விழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் செல்லியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் பல்வேறு வகையான போட்டியிலும் நடைபெற்றது.

    மேலும் செல்லியம்மன் கோவிலில் பொங்கல் வைத்தும் ஆயிரக்கணக்கில் தேங்காய் உடைத்தும் பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து கடலாடி ரோட்டில் உள்ள முலைக்கொட்டும் திண்ணையில் இருந்து காந்தி சிலை பஸ் நிலையம் வழியாக மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் செல்லியம்மன் கோவிலுக்கு முளைப்பாரியுடன் வந்தனர்.

    பின்பு செல்லி அம்மனுக்கு மஞ்சள், பால் பன்னீர் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முளைப்பாரியை சங்கரபாண்டி ஊருணியில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை கடலாடி ரோட்டில் உள்ள வசிக்கும் மறவர் சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    ×