என் மலர்
நீங்கள் தேடியது "Mehbooba Mufti"
- தேசிய கொடியையோ, அரசியல் சட்டத்தையோ மாற்றும் திட்டம் இல்லை.
- தேசிய கொடியை தீய கண்ணுடன் பார்ப்பவர்களை கடுமையாக அணுகுவோம்.
ஸ்ரீநகர்
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, தற்போதைய தேசிய கொடிக்கு பதிலாக, காவி கொடியை தேசிய கொடியாக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இதற்கு காஷ்மீர் பா.ஜனதா மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் அல்டாப் தாக்கூர் கூறியதாவது:-
மெகபூபா முப்தி, பிரதமர் மோடிக்கு வளர்ந்து வரும் செல்வாக்கை கண்டு விரக்தியில் பேசி வருகிறார். பா.ஜனதாவை பொறுத்தவரை, 'முதலில் நாடு, இரண்டாவது கட்சி, மூன்றாவதுதான் தனிநபர்' என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. தேசிய கொடிக்காக எந்த தியாகமும் செய்ய பா.ஜனதா தொண்டர்கள் தயாராக உள்ளனர். எனவே, தேசிய கொடியையோ, அரசியல் சட்டத்தையோ மாற்றும் திட்டம் இல்லை. அப்படி சொல்வது அபத்தமானது. தேசிய கொடியை தீய கண்ணுடன் பார்ப்பவர்களை கடுமையாக அணுகுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும், அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
- தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர் :
ஒன்றுபட்ட காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக இருந்தவர், மெகபூபா முப்தி. மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான இவர்தான் காஷ்மீர் மாநிலத்தின் கடைசி முதல்-மந்திரியும் ஆவார்.
முதல்-மந்திரியாக இவர் பதவி வகித்தபோது அனந்த்நாக் மாவட்டத்தின் கனாபல்லில் உள்ள வீட்டுவசதி வாரியத்தில் இவருக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பிறகும் இன்னும் அவர் அந்த குடியிருப்பை காலி செய்யவில்லை.
எனவே அனந்த்நாக் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
24 மணி நேரத்தில் அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு அதில் உத்தரவிடப்பட்டு இருந்தது. தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. அனந்த்நாக் மாவட்ட துணை கமிஷனரின் உத்தரவின் பேரில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதைப்போல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும், அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களும் 24 மணி நேரத்துக்குள் காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
முன்னதாக தலைநகர் ஸ்ரீநகரில் அதிக பாதுகாப்பு நிறைந்த குப்கர் பகுதியில் மெகபூபா முப்திக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு வீட்டை (பேர்வியூ இல்லம்) காலி செய்யுமாறு கடந்த மாதம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அவரது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அந்த பங்களா 6 மாத கால பயன்பாட்டுக்காக 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி கொடுக்கப்பட்டது.
- அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் :
காஷ்மீரில் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி வரை, மக்கள் ஜனநாயகக்கட்சித் தலைவர் மெகபூபா முப்தி முதல்-மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர் வசிப்பதற்காக அரசு சார்பில் ஸ்ரீநகரில் குப்கார் சாலையில் அமைந்துள்ள 'பேர்வியூ' பங்களா ஒதுக்கப்பட்டது.
ஆனால் அவர் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பின்னரும் அந்த பங்களாவை காலி செய்யவில்லை.
இந்த நிலையில் அவர் அந்த பங்களாவை அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் காலி செய்தாக வேண்டும் என்று காஷ்மீர் அரசினர் எஸ்டேட் துறையினர் வெளியேற்ற உத்தரவு அனுப்பி உள்ளனர்.
அதில் மெகபூபா, உரிய அங்கீகாரம் இன்றி அந்த பங்களாவைத் தொடர்ந்து தன் வசம் வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"முதல்-மந்திரி என்ற அடிப்படையில்தான் அந்த பங்களா அவருக்கு 6 மாத கால பயன்பாட்டுக்காக 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி கொடுக்கப்பட்டது. அது 2018-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி நீட்டிக்கப்பட்டது. அடுத்து எந்த நீட்டிப்பும் வழங்கப்படவில்லை" எனவும் அந்த உத்தரவில் கோடிட்டுக்காட்டி உள்ளனர்.
இந்த நிலையில், அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் அந்த பங்களாவை மெகபூபா காலி செய்யவில்லை என்றால், காஷ்மீர் பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம், 1988 இன் பிரிவு 5-ன் துணைப்பிரிவு (2) -ன் விதிகள் செயல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- ரிஷி சுனக் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருக்கு அடிக்கடி வருபவர்.
- இங்கிலாந்து எம்.பி.யானபோது பக்வத் கீதையை கொண்டு வந்து பதவியேற்றார்.
இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியினர். பெற்றோர் வழி தாத்தாக்கள் அப்போதைய ஒன்றிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள். ரிஷி சுனக் தந்தை யாஷ்வீர் சுனக், இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற மருத்துவர். தாய் உஷா சுனக் மருந்து கடை நடத்தி வந்தார். 1960 ஆம் ஆண்டு கென்யாவில் இருந்து இங்கிலாந்துக்கு ரிஷி சுனக் குடும்பம் குடி பெயர்ந்தது.
ரிஷி சுனக் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். கர்நாடகாவில் உள்ள இன்போசிஸ் ஐ.டி.நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தியை ரிஷி சுனக் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
ரிஷி சுனக் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருக்கு அடிக்கடி வருகை தந்துள்ளார். யார்க்ஷயர் தொகுதி எம்.பி.யாக அவர் பதவியேற்ற போது கையில் பகவத் கீதையை கொண்டு சென்றிருந்தார். போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக அவர் இருந்தார்.
இந்தியாவை பல ஆண்டுகள் தங்கள் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்தின் இளம் வயது பிரதமராக பொறுப்பேற்கும் ரிஷி சுனக்கிற்கு இந்தியாவின் பலவேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இது ஒரு நல்ல செய்தி, உலகம் முழுவதும் இந்தியர்கள் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்கும் ரிஷி சுனக், அந்நாட்டை வெற்றிகரமாக வழிநடத்த அவருக்கு ஞானமும் வலிமையும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அளித்துள்ள பேட்டியில், 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதாகவும், இந்தியர்களின் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இன்று பல நாடுகளில் இந்தியர்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது, பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்று ஐம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பிரிட்டன் பிரதமராக இங்கிலாந்து ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் இருக்கும் நிலையில் மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்:
மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்.
வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு முன்னாள் முதல்-மந்திரியின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது என்றால் சாதாரண மனிதர்களின் நிலையை நினைத்து பார்க்க முடியாது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் இருக்கும் நிலையில் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
- மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி.
- மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்டுகளின் அவலத்தை மறைக்க விரும்புகிறது.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் வசித்து வருகிறார். அவர், சமீபத்தில் சோபியானில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சுனில்குமார் பட் குடும்பத்தினரை சந்திக்க நேற்று திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அங்கு செல்ல விடாமல் தடுத்து தன்னை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தனது வீட்டு கேட்டுக்கு பூட்டு போட்டிருக்கும் படங்களையும், வீட்டுக்கு வெளியே சி.ஆர்.பி.எப். வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருக்கும் படங்களையம் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர், 'மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்டுகளின் அவலத்தை மறைக்க விரும்புகிறது. ஏனெனில் அரசின் கொடூரமான கொள்கைகள், காஷ்மீரை விட்டு வெளியேற விரும்பாதவர்களை இலக்கு வைத்து கொலை செய்ய வழிவகுத்தது. எங்களை பிரதான எதிரியாக முன்னிறுத்துவதற்காகத்தான் நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன்' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
காஷ்மீரில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அப்துல்லா குடும்பத்தையும், முப்தி குடும்பத்தையும் விமர்சித்தார். அதற்கு முப்தி முகமது சயீதின் மகளும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
நான் அனுதாபம் தேடி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, அரசியல் எதிரிகளை திட்டுவது இல்லை. ஆனால், பிரதமர் மோடியோ அனுதாபம் தேடும் நோக்கத்தில், தன்னை தேசத்துடன் சமப்படுத்தி பேசுகிறார்.
மோடிதான் இந்தியா அல்ல, இந்தியாதான் மோடியும் அல்ல. தேர்தலுக்கு முன்பு, குடும்பங்களை விமர்சிக்கும் மோடி, தேர்தலுக்கு பிறகு அதே கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தூது விடுவது ஏன்? பா.ஜனதாதான், சிறுபான்மையினரை ஒதுக்கிவிட்டு, இந்தியாவை பிளவுபடுத்த விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MehboobaMufti #PMModi
