search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meghalaya Governor"

    • அக்னிபாத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது.
    • இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    பாக்பத் :

    முப்படைகளில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக்கும் அக்னிபாத் திட்டம் தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எதிர்கால போர் வீரர்களான இளைஞர்களுக்கு அக்னிபாத் திட்டத்தில் 6 மாதம் பயிற்சியும், 6 மாதம் விடுப்பும் கிடைக்கிறது. மீதமுள்ள 3 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வூதியமும் இன்றி வீடு திரும்பும் அவர்களுக்கு திருமண வரன்கள் எதுவும் அமையாது. அந்தவகையில் அக்னிபாத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது. அவர்களின் நம்பிக்கை மீதான மோசடி இது' என சாடினார்.

    எனவே ஒப்பந்த அடிப்படையில் ஆள்தேர்வு செய்யும் இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    முன்னதாக, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கவர்னர் சத்யபால் மாலிக் போர்க்கொடி உயர்த்தி அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    காஷ்மீர் மக்களையும், பொருட்களையும் புறக்கணியுங்கள் என மேகாலயா கவர்னர் ததாகத ராய் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MeghalayaGovernor #TathagathaRoy #PulwamaAttack
    ஷில்லாங்:

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து மேகாலயா கவர்னர் ததாகத ராய் சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார். இந்து, சமூக அரசியல் சிந்தனையாளர், எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் முன்னாள் ராணுவ அதிகாரியான அவர் அதில், “2 ஆண்டுகளுக்கு காஷ்மீருக்கு யாரும் செல்லாதீர்கள், அமர்நாத் செல்ல வேண்டாம், கம்பளம் உள்ளிட்ட காஷ்மீர் பொருட்களை வாங்க வேண்டாம், குளிர்காலத்தில் காஷ்மீர் வியாபாரிகள் விற்கும் எந்த பொருட்களையும் வாங்க வேண்டாம். நான் இதை ஒப்புக்கொள்வதில் விருப்பம் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி, மத்திய அரசு மேகாலயா கவர்னரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா கூறும்போது, “இதுபோன்ற மதவெறி தான் காஷ்மீரை பள்ளத்தில் தள்ளியுள்ளது. ததாகத ராயின் கருத்தை நீங்கள் ஏற்பதாக இருந்தால், நீங்கள் ஏன் எங்கள் நதிகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதையும் நிறுத்தக்கூடாது? அவரைப் போன்ற மக்களுக்கு காஷ்மீர் வேண்டும், ஆனால் காஷ்மீர் மக்கள் இருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.
    ×