search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mega"

    • 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • மதுரை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது-

    நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 33-வது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்த தீர்மா னிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை போடாத வர்களுக்கும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    மதுரை ஊரக பகுதிகளில் 909 மையங்களில் 909 தடுப்பூசி செலுத்தும் பணி யாளர்களை கொண்டும், நகர் பகுதிகளில் 550 மைய ங்களில் 550 தடுப்பூசி செலுத்தும் பணி யாளர்களை கொண்டும் மொத்தம் 1,459 மையங்களில் 1,459 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டு சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி ேபாடப்படுகிறது.

    அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் உத்தரவிற்கு இணங்க மாதம் ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • 12 வயதுக்கு மேற்பட்ட 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 81 சதவீதம் பேருக்கு 2-ம்தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 28 லட்சத்து 84 ஆயிரத்து 643 பேருக்கு முதல் தவணையும், 24 லட்சத்து 46 ஆயிரத்து 11 பேருக்கு 2-ம் தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 95 சத வீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 81 சதவீதம் பேருக்கு 2-ம்தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

    தமிழக அரசின் உத்தர விற்கு இணங்க மாதம் ஒரு மெகா தடுப்பூசி முகாம்

    நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 30 தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்க ப்பட்டுள்ளன. இதன்மூலம் 8 லட்சத்து 2 ஆயிரத்து 820 பேருக்கு முதல் தவணை, 11 லட்சத்து 64 ஆயிரத்து 655 பேருக்கு 2-ம் தவணை என மொத்தம் 19 லட்சத்து 83 ஆயிரத்து 836 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளன.

    மாவட்டத்தில் இதுவரை 52 ஆயிரத்து 871 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்ப ட்டுள்ளது. முன்னெச்செரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி 9 மாதத்தில் இருந்து 6 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    நாளை (ஞாயிற்றுக்கி ழமை) 31-வது சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கென ஊரகப் பகுதியில் 4,610, மாநகராட்சிப் பகுதியில் 630 என மொத்தம் 5,240 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்துபவர்கள், கணினியில் பதிவு மேற்கொ ள்பவர்கள் தகுதிவாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவர்கள் என 19,500-க்கு மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    முகாமுக்காக கோவி ஷீல்டு தடுப்பூசி மருந்து 1 லட்சத்து 83 ஆயிரத்து 380 டோஸ்களும், கோவே க்ஸின் 88 ஆயிரத்து 900 டோஸ்களும், கோ ர்பெவாக்ஸ் 32 ஆயிரத்து 340 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. இந்த முகாமில் 1 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 15 முதல் 17 வயது வரையிலானபள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு இதுவரை 1லட்சத்து35 ஆயிரத்து 763 பேருக்கு முதல் தவணை தடுப்பூ சியும், 1லட்சத்து 8 ஆயிர த்து 212பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.12 முதல் 14 வயது வரையிலான பள்ளி செல்லும் மற்றும்பள்ளி செல்லா குழந்தைகளுக்கு இதுவரை 88ஆயிரத்து 184 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 5 ஆயிரத்து 277 பேருக்கு 2-ம்தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    12 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 62ஆயிரத்து 665 பேர் முதல்தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாகவும், தகுதியுள்ள 4லட்சத்து 32 ஆயிரத்து 621 பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வர்களாகவும் கண்டறியப் பட்டுள்ளனர். எனவே 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லா அனைத்து குழந்தைகளும் உரிய முதல் தவணை, 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • ஈரோட்டில் நடந்த மெகா முகாமில் 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக மாவட்டம் முழுவதும் 4260 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு மக்களை தேடி மருத்துவம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3, 194 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதுபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இரண்டாம் தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக மாவட்டம் முழுவதும் 4260 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக 66 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. இருந்தாலும் ஒரு சில மையங்கள் தவிர அனைத்து மையங்களில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக இரண்டாம் தடுப்பூசி போடவேண்டியவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

    இதேபோல் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே ஆர்வத்துடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் வரும் 19 ஆயிரத்து 59 பேர் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

    ×