search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Equipment"

    • ஆடுதுறை ரெயில் நிலையம் அருகில் அரசு கால் நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.
    • கால்நடை அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரெயில் நிலையம் அருகில் அரசு கால் நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரி கட்டிடம் பெரும் சேதம் அடைந்ததால் இந்த ஆஸ்பத்திரி அருகிலேயே சுமார் ரூ.40 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    பழுதடைந்துள்ள ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவ உபகரணங்கள் இந்த புதிய கட்டிடத்தில் வைத்துள்ளனர்.

    இந்நிலையில் மருந்து பொருட்கள் எடுப்பதற்காக கால்நடை உதவி மருத்துவர் ஜானகிப்பிரியா சென்ற போது புதிய கட்டிடத்தின் பின்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கால்நடை அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

    இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
    • செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம் .எல். ஏ. தலைமையிலும் திருவையாறு ஒன்றிய பெருந்தலைவர் அரசாபகரன், திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் கௌதமன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜ்மோகன், மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ், தஞ்சை தொகுதி அமைப்பாளர் டாக்டர் விக்னேஷ், தொகுதி துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், விஜயகுமார், பாட்ஷா, புவனேஸ்வரி, வெங்கடேசன், நிர்வாகிகள் டாக்டர் திருச்செ ல்வி, காயத்ரி, செந்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 150 கர்ப்பிணி தாய்மார்கள் பயனடைந்தனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம், பேராம்பட்டு ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. மருத்துவரணி சார்பில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே. எஸ்.ஏ.மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் தீபா, கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய மாவட்ட மருத்துவர் அணி தலைவர் ரவி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஏ. நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    இதில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சங்கர், மாவட்ட மருத்துவர் அணி துணை தலைவர் மலர்மன்னன், மாவட்டம் மருத்துவர் அணி துணை தலைவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணியினர் பல்வேறு மருத்துவ உபகரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
    • இதன் முதல் கட்டமாக கோவில்பட்டி, விளாத்திக்குளம், புதூர் பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு உபகரண பொருட்கள் கடந்த வாரம் வழங்கப்பட்டன.

    தூத்துக்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலை யங்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணியினர் பல்வேறு மருத்துவ உபகரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    உபகரண பொருட்கள்

    வடக்கு மாவட்ட தி.மு.க மருத்துவரணி சார்பில் முதல் கட்டமாக கோவில் பட்டி, விளாத்திக்குளம், புதூர் பகுதியில் உள்ள சுகா தார நிலையங்களுக்கு உப கரண பொருட்கள் கடந்த வாரம் வழங்கப் பட்டன.

    இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி கணேஷ் நகர் பகுதியில் உள்ள நகர்நல ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் எடை பரிசோதனை எந்திரம், போர்வைகள், நாற்காலிகள், ரத்தம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வைகள் பரிசோத னைக்கான உபகரண பொருட்களை ஆரம்ப சுகா தார மருத்துவ அலுவலர் ஆர்த்தியிடம் வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற் செல்வன், பகுதி செய லாளரும், கவுன்சிலருமான ராமகிருஷ்ணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, பொன்னப்பன், கண்ணன், வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி தலைவர் அருண்குமார், துணை தலைவர் ஜூடி ஜீவன்குமார், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் பெனில்டஸ், வட்ட செயலாளர்கள் சுப்பையா, மூக்கையா, சிங்கராஜ், மாநகர மருத்துவ அணி துணைத்தலைவர் மாரிமுத்து, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி பிரதிநிதி சாமுவேல் செல்வராஜ், தெற்கு மாவட்ட ம.தி.மு.க. இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள் மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவி மற்றும் ரத்த அளவு பார்க்கும் கருவிகள் பேரூராட்சி தலைவி சீதாலட்சுமி முத்து வழங்கினார்.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்காக கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர் வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவி மற்றும் ரத்த அளவு பார்க்கும் கருவிகளை தனது சொந்த செலவில் பேரூராட்சி தலைவி சீதாலட்சுமி முத்து வழங்கினார்.

    அவர் கூறும் போது, முதல்-அமைச்சரின் மகத்தான திட்டங்களில் ஒன்றான மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வயதான முதியவர்கள் மற்றும் நீரழிவு நோயாளிகள் பயன்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்களின் தேவையற்ற அலைச்சலை குறைக்கும் பொருட்டு சாம்பவர் வடகரை பேரூராட்சி பொதுமக்களின் கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தப் பரிசோதனை நிலையம் அமைக்கவும், கர்ப்பிணிப் பெண்களுக்காக கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியின் போது சாம்பவர் வடகரை பேரூர் செயலாளர் முத்து மற்றும் மருத்துவர் முத்து பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன் காலிக்குடத்துடன் கலந்து கொண்டார்.
    • தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியம் பேசும் போது, வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.

    மருத்துவ உபகரணங்கள்

    துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் வெங்கட்ராமன், மாநகர பொறியாளர் அசோகன் மற்றும் செயற்பொறியாளர்கள், 4 மண்டல உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், 55 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ரூ.9.92 கோடி மதிப்பில் மாநகராட்சி பகுதியில் உள்ள 9 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    காலி குடத்துடன்...

    மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்கள், சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை செய்வதற்கு சுயஉதவிக்குழுக்கள் மூலம் 645 நபர்களை நியமிக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பங்கேற்ற 32-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன் காலிக்குடத்துடன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது கடந்த ஒருவாரத்திற்கு மேலாக எங்களது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியம் பேசும் போது, வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    பாலபாக்யா நகரில் விடுபட்ட இடங்களில் சாலை கள் அமைக்க வேண்டும். விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். தார்சாலைக்கு பதிலாக பேவர் பிளாக் சாலைகள் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    26-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பிரபா சங்கரி, 30-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன்நாதன் என்ற கணேசன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 10 மணிக்கு வந்தனர். ஆனால் 10.25 மணி வரை கூட்டம் நடைபெறாததால் அவர்கள் கையெழுத்திட்டு சென்றனர்.

    ×