search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meal Maker Recipes"

    • இந்த கிரேவி கறி குழம்பையே மிஞ்சிவிடும் சுவையில் அசத்தலாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மீல் மேக்கர் - 50 கிராம்

    பெரிய வெங்காயம் - 2,

    தக்காளி - 4,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    பச்சை பட்டாணி - 1/4 கப்,

    சோம்பு - 1/4 டீஸ்பூன்,

    பட்டை - 1 துண்டு,

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    சமையல் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு

    அரைக்க :

    தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    இஞ்சி - ஒரு துண்டு,

    சோம்பு - அரை டீஸ்பூன்,

    மிளகாய்த் தூள் - இரண்டரை டீஸ்பூன்,

    தனியாத் தூள் - ஒரு டீஸ்பூன்,

    முந்திரிப் பருப்பு - 10,

    பூண்டு - 6 பல்.

    செய்முறை :

    தக்காளி, கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரை போட்டு அதில் சூடான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற விடவும். நன்றாக ஊறியதும் சாதாரணமான தண்ணீரில் இரண்டு முறை நன்கு அலசி தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் இறுக்கமாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    மீல் மேக்கரை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் சிறிதளவு வதங்கியதும், உதிர்த்து வைத்துள்ள மீல் மேக்கரை போட்டு வதக்குங்கள்.

    அடுத்து தக்காளி, பட்டாணியை சேர்த்து வதக்குங்கள்.

    இப்போது பட்டாணி சேர்த்து வதக்கிய பின்பு, தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் கலந்து நிமிடங்கள் வைக்கவும்.

    தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லி தழை, நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கி விடலாம்.

    இந்த கிரேவி சாதத்துடன் மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், பூரி என்று எல்லா வகை உணவுகளுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சோயாவில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சோயா லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மீல்மேக்கர் - கால் கப்

    உருளைக்கிழங்கு - 1

    ப.பட்டாணி - ஒரு கைப்பிடி

    பெ.வெங்காயம் - 1

    கேரட் - 1

    குடை மிளகாய் - 1

    உப்பு - தேவைக்கு

    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    ஐஸ் குச்சிகள் - 5

    செய்முறை :

    வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட் துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து அதில் சோயாவை போட்டு கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் தண்ணீரை அப்புறப்படுத்திவிட்டு மிக்சியில் லேசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய், கேரட், பட்டாணியை கொட்டி வதக்கவும்.

    அவை நன்கு வதங்கியதும் சோயாவை போட்டு கிளறி இறக்கவும்.

    நன்கு ஆறியதும் சோயா கலவையுடன் மசித்த உருளைக்கிழங்கு, மிளகு தூள் கலந்து உருண்டைகளாக தயார் செய்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொரித் தெடுக்கவும்.

    பின்னர் உருண்டைகளின் நடுவில் ஐஸ் குச்சிகளை சொருகினால் சோயா லாலிபாப் ரெடி.

    • முட்டையில் பொடிமாஸ் செய்து இருப்பீங்க.. இன்று மீல் மேக்கரில் பொடிமாஸ் செய்யலாம்.
    • இது தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மீல் மேக்கர் - 20

    பச்சை மிளகாய் - 2

    காய்ந்த மிளகாய் - 2

    பூண்டு - 3

    வெங்காயம் - ஒன்று

    குழம்பு மசாலா பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்

    கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து வறுத்து பின்னர் மிக்ஸிஜாரில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    ஊறவைத்த மீல் மேக்கரை நன்றாகப் பிழிந்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்..

    ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக ஆனதும், குழம்பு மசாலா, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..

    பிறகு, அரைத்து வைத்த மீல் மேக்கர், உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

    இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி கிளறி 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.

    அவ்ளோதாங்க.. சுவையான மீல் மேக்கர் பொடிமாஸ் ரெடி..!.

    சப்பாத்தி, நாண், தோசை, பூரி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீல் மேக்கர் - 1 கப்
    பெ.வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு
    மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்
    தேங்காய் பால் - கால் கப்
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீல் மேக்கரை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் நீரை வடிகட்டி மீல் மேக்கரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.

    ஓரளவு வெந்ததும் மீல் மேக்கர், தேங்காய் பால், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    ருசியான மீல் மேக்கர் குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டி சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மீல்மேக்கர் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    பாஸ்மதி அரிசி - 1 கப்,
    மீல்மேக்கர் - 1 கப்,
    உப்பு - தேவைக்கு,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2,
    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
    பட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
    பிரிஞ்சி இலை - சிறிது,
    புதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
    நெய் + எண்ணெய் - 2 டேபிஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு, மீல்மேக்கர், அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி.

    வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் ஏதாவது வித்தியாசமாக சாப்பிட தோன்றினால் மீல்மேக்கர் உப்புமா செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 2
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    சாட் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு.



    செய்முறை :

    மீல்மேக்கரை நன்றாக கழுவி வேக வைத்து, தண்ணீரை வடித்து விட்டு உதிர்த்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் உப்பு, மிளகுத்தூள், உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கவும்.

    உருளைக்கிழங்கு வெந்ததும், வேகவைத்த உதிர்த்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்துக் கிளறவும்.

    பரிமாறும் முன் சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

    சூப்பரான மீல்மேக்கர் உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×