search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loan"

    • அகமது தான் காரை ஓட்டி பார்க்க விரும்புவதாக தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங் பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ். தொழிலதிபரான இவர் ரூ.4 கோடி மதிப்பிலான ஸ்போர்ட்ஸ் கார் வைத்துள்ளார்.

    இவர் அகமது என்பவரிடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நீரஜ் தனது ஸ்போர்ட்ஸ் காரை விற்பனை செய்ய முடிவு செய்தார். இது தொடர்பாக அவரது நண்பர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து நீரஜின் நண்பரான அமன் என்பவர் கார் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார்.

    இதனை கண்ட அகமது அது நீரஜ்ஜின் கார் என்பதை தெரிந்து கொண்டார். உடனடியாக அமனை தொடர்பு கொண்டு நான் காரை வாங்க விரும்புகிறேன்.

    மாமிட் பள்ளி கிராமத்தில் உள்ள என்னுடைய பண்ணை வீட்டிற்கு காரை கொண்டு வருமாறு கூறினார். அதன்படி அமன் காரை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றார்.

    அப்போது அகமது தான் காரை ஓட்டி பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். காரை அங்குள்ள சாலைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அகமது தனக்கு நீரஜ் 1 கோடி ரூபாய் கடன் தர வேண்டும். அவர் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்படி கேட்டார். இதனால் அமனுக்கும் அகமதுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அகமது காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் கார் முழுவதும் பற்றி எரிந்து நாசமானது. ஒரு கோடி ரூபாய் கடனுக்காக 4 கோடி ரூபாய் மதிப்பிலான கார் எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பஹடி ஷரீப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
    • சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில், லோன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அதன்பிறகு பணம் முழுவதையும் கட்டி முடித்தார். ஆனால் அதன்பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கடனுக்கான தொகையை வட்டியுடன் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்பிறகு அந்த வாலிபர், கூடுதல் பணத்தை கட்டவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமி ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தை அந்த வாலிபரின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதைப்பார்த்து அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ரோஷன்குமார் காமத் (வயது 22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை ஹரியானாவில் வைத்து கடந்த மாதம் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் தலைமையிலான தனிப்படையினர் பீகார் விரைந்தனர்.

    அங்கு பாட்னாவில் பதுங்கி இருந்த அர்ஜூன்குமார் (26) என்பவரை பிடித்தனர். அவர் சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார். அவர் கடன் வசூலிப்பு பிரிவில் குழு தலைவராக செயல்பட்டுள்ளார். ஆபாச படத்தை சித்தரித்து அனுப்பியது தொடர்பாக அர்ஜூன் குமாரை போலீசார் கைது செய்து பின்னர் திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 

    • பல பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது.
    • போலீசார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் மாயழகன். இவரது மனைவி நந்தினி தேவி. இவர் திண்டுக்கல் மதுரை-சாலை அண்ணாமலை மில்ஸ் ரோட்டில் எஸ்.ஆர். நகரில் உள்ள எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனத்தில் மகளிர் குழு லோனுக்காக கடந்த 8 வருடத்திற்கு முன்பு அணுகியுள்ளார்.

    அப்போது மகளிர் குழு லோன் மற்றும் வீடு கட்ட லோன் தருகிறோம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை முன்பணம் கட்ட வேண்டும் என டிரஸ்ட் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் சுமார் ரூ.40 லட்சம் வரை பொதுமக்களிடம் வசூல் செய்து அந்த நிறுவனத்தில் கட்டியுள்ளார். ஆனால் அவர்கள் 2 வருடமாக லோன் வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளனர். அவர்களுடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த நிறுவனத்திற்கு சென்ற போது நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு திண்டுக்கல்,தேனி ஆகிய பகுதிகளில் எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனம் நடத்தியதும், இதே போல் பல பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஏ.டி.ஜி.பி.பாலநாகதேவி, ஐ.ஜி.சத்திய பிரியா, போலீஸ் சூப்பிரண்டு பி.சி.கல்யாண் ஆகியோரின் உத்தரவு படியும், டி.எஸ்.பி. குப்புசாமி மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் செல்போன் டவரை வைத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சென்னை குரோம்பேட்டை அருகே செல்வராஜ் பதுங்கி உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி கூறுகையில்,

    திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் எர்த் ட்ரஸ்ட் என்ற நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்யலாம் என்றார்.

    • ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார்.
    • மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் சின்னையா (வயது 46). இவர் திருப்பூர் பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் கிரேஸ் ஹெல்ப் சென்டர் என்ற நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் வங்கி லோன் மற்றும் கறவை மாடுகள் வாங்க கடன் பெற்று தருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதையடுத்து பெருமாநல்லூர், அவிநாசி, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,பொது மக்கள் கடன் பெற்று தரும்படி சின்னையாவிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை லோன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தர வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி பொதுமக்கள் சிலர் பணம் கொடுத்துள்ளனர்.

    இதேபோல் வங்கியில் வேலை , மத்திய மாநில அரசு அலுவலக வேலை , ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறியும் ஏராளமானோரிடம் பணம் பெற்று ள்ளார்.ஆனால் பணத்தை பெற்று கொண்ட சின்னையா யாருக்கும் லோன் மற்றும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் சென்று கேட்டபோது அவர் முறையான பதில் கூறாமல் திடீரென தலை மறைவாகி விட்டார்.

    இந்நிலையில் லோன் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்து 50ஆயிரத்தை வாங்கி கொண்டு மோசடி செய்த சின்னையா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட 6 பேர் திருப்பூர் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த சின்னையாவை கைது செய்தனர்.

    விசாரணையில் இவர் இதேபோல் ஏராளமானவரிடம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.
    • இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) வழியாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503, 5வது தளம், மாவட்ட கலெக்டர் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் -641604 என்ற முகவரியையும், 94450 29552, 0421 -297112 என்ற செல்போன், தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 2022-23 ம் ஆண்டை காட்டிலும் ரூ.244.46 கோடி அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2023-24-ம் ஆண்டில் 88 ஆயிரத்து 898 பேருக்கு ரூ.900.17 கோடி கடன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா்சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், உரிய தவணை தேதியில் பயிா் கடன்களை திருப்பி செலுத்தும் விவசாயிகள் வட்டியை செலுத்த தேவையில்லை. அதன்படி, 2023-24- ம் ஆண்டில் நவம்பா் 2-ந்தேதி வரை 21 ஆயிரத்து 395 விவசாயிகளுக்கு பயிா் கடனாக ரூ.243.09 கோடியம், கால்நடை பராமரிப்பு கடனாக 3 ஆயிரத்து 554 பேருக்கு ரூ.26.25 கோடியும் என மொத்தம் 24 ஆயிரத்து 949 விவசாயிகளுக்கு ரூ.269.34 கோடி வட்டியில்லாத பயிா் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதேபோல 58 ஆயிரத்து 240 பேருக்கு நகை கடன்களாக ரூ.492 கோடியும், 375 பேருக்கு மத்திய கால கடன்களாக ரூ.3.78 கோடியும், 129 மாற்று திறனாளிகளுக்கு ரூ.84.95 லட்சமும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. டாப்செட்கோ மூலம் 377 பேருக்கு ரூ.2.72 கோடியும், டாம்கோ மூலம் 98 பேருக்கு ரூ.78 கோடியும், 848 சுய உதவி குழுக்களுக்கு ரூ.5.24 கோடியும், 155 பேருக்கு வீட்டு கடனாக ரூ.7.78 கோடியும், ஆயிரத்து 355 பேருக்கு சிறு கடன்களாக ரூ.4.44 கோடியும், 2 ஆயிரத்து 372 பேருக்கு இதர கடன்களாக ரூ.68.24 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் 88 ஆயிரத்து 898 பேருக்கு ரூ.900.17 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2022-23 ம் ஆண்டை காட்டிலும் ரூ.244.46 கோடி அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாழ்ந்து காட்டுவோம் திட்டம், இணை மானிய நிதித் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 2 பயனாளிகளுக்கு ரூ.14.50 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்வதுடன், குறைந்தது 10 நபர்களுக்காவது வேலைவாய்ப்பு அளித்து, அவர்களையும் ஊக்கப்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், இணை மானிய நிதித் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 2 பயனாளிகளுக்கு ரூ.14.50 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளை கலெக்டர் பூங்கொடி வழங்கி பேசியதாவது,

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவதற்காகவும், தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி மற்றும் தொழில் தொடங்க மானிய கடனுதவிகள் வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், இணை மானிய நிதித் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு விண்ணப்பித்த 2 பேருக்கு ரூ.14.50 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற கடனுதவிகள் பெற்று தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்கள் நல்ல முறையில் தொழில் செய்து, தொழிலை மேம்படுத்தி, தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக ்கொள்வதுடன், குறைந்தது 10 நபர்களுக்காவது வேலைவாய்ப்பு அளித்து, அவர்களையும் ஊக்கப்படுத்திட வேண்டும், என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கமலக்கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர்அருணாச்சலம், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மாவட்ட செயல் அலுவலர்சுதாதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திருப்பூர் மாவட்டம் காங்கயம் வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் வாடகை கட்டிடத்தில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இயங்கி வந்துள்ளது.
    • திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் உத்தரவின்படி தனிப்படை போலீசார் இந்த பணம் மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் வாடகை கட்டிடத்தில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இயங்கி வந்துள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் வேலை பார்த்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் போல குழு கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழிற்கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி விளம்பரம் செய்தது. அதன்படி இந்த நிதி நிறுவனத்தில் உறுப்பினராக பதிவு செய்தால் மட்டுமே கடன் உண்டு. தனிநபருக்கு பதிவு கட்டணமாக ரூ.1,341-ம், 10 பேர் கொண்ட குழு என்றால் ரூ.13 ஆயிரத்து 400-ம் செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை அந்த நிதி நிறுவனம் கூறியது.

    கடன் கிடைக்கும் என்ற ஆசையில் காங்கயம், வெள்ளகோவில், திருப்பூர் பகுதியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பெண்களும், குழுவினரும் பதிவுக்கட்டணம் செலுத்தினர். பதிவுக்கட்டணம் செலுத்தியவர்கள் கடன் கேட்டபோது அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சத்திற்கு ரூ.5 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஒரு சில பெண்கள் ரூ.5 லட்சம், ரூ.7 லட்சம் கடன் கேட்டு அதற்கான முன்பணமாக ரூ.25 ஆயிரமும், ரூ.35 ஆயிரமும், சிலர் ரூ.70 ஆயிரமும் செலுத்தினர்.

    ஆனால் இந்த பணம் செலுத்திய பின்னரும் அந்த நிறுவனம் கடன் கொடுக்கவில்லை. இதையடுத்து பணம் செலுத்திய பெண்கள் அந்த நிதி நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது அந்த நிதி நிறுவனம் சார்பில் தனியார் வங்கி காசோலை கொடுக்கப்பட்டது. அந்த காசோலையை வங்கிக்கு சென்று மாற்ற முயன்றபோது அந்த வங்கி கணக்கில் பணம் இல்லை என்று ெதரியவந்தது. இதையடுத்து அந்த பெண்கள் காங்கயத்தில் உள்ள அந்த நிதி நிறுவனத்திற்கு திரண்டு வந்தனர். ஆனால் அந்த நிதி நிறுவன அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. ஊழியர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. நிதி நிறுவன பெயர் பலகையை கூட காணவில்லை. நேரம் செல்ல செல்ல அங்கு ஏராளமானவர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் காங்கயம் போலீசில் புகார் கொடுத்தனர்.

    இந்த மோசடி குறித்து போலீசார் கூறுகையில்,

    இந்த நிதி நிறுவனத்தின் கிளைகள் தமிழகத்தில் காங்கயம், அவினாசி, சோமனூர், பொன்னமராவதி, அன்னூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை என 7 இடங்களில் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகமானது தர்மபுரியில் உள்ளது. இந்த நிதி நிறுவனம் கடன் வழங்குவதாக கூறி எத்தனை பேரிடம் மோசடி செய்தது என்று தெரியவில்லை. காங்கயம் அலுவலகத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்து இருக்கலாம். இதனால் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஜாமீன் இல்லாமல் பல லட்சம் கடன் கிடைக்கும் என்ற ஆசையில் ஏராளமானவர்கள் பணம் கட்டி ஏமாந்து இருக்கலாம். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் உத்தரவின்படி தனிப்படை போலீசார் இந்த பணம் மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • உழவர் கடன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையால் சிறப்பு முகாம் நாடு முழுவதும் 01-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை உழவர் கடன் அட்டை பெறாத விவசா யிகள் இம்முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.உழவர் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளிடம் 7% வட்டி வசூலிக்கப்படும். மேலும், இக்கடன் பெற்ற விவசாயி கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாகத் தவணை மாறாமல் திரும்பச் செலுத்தினால் 3% வரை வட்டி மானியம் பெறலாம். உழவர் கடன் அட்டைத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 இலட்சம் வரை எவ்விதப் பிணையமும் இன்றிக் கடன் வழங்கப்படும்.உழவர் கடன் அட்டை மூலம் கடன் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் நில ஆவணங்கள் (பட்டா/சிட்டா, அடங்கல்) ஆதார் அட்டை (கட்டாயம்), பான் அட்டை இவற்றுடன் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கிக் கிளைகளிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

    • அரியலூரில் 612 பயனாளிகளுக்கு ரூ.46.14 கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் வசதியாக்கல் முகாம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், தாட்கோ திட்டம் , மகளிர் திட்டம் மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை அரசு அலுவலகங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டு வங்கி கிளையில் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை வங்கி மேலாளர்களின் மூலம் பரிசீலினைச் செய்யப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு கடன் ஆணையும், பட்டுவாடா ஆணையும் வழங்கப்பட்டது. இம்முகாமில் பயிர்கடன், தனிநபர் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், கால்நடை பராமரிப்பு கடன், கல்விக்கடன், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உள்ளிட்ட 612 பயனாளிகளுக்கு ரூ.46.14 கோடி கடன் உதவிக்கான ஆணையினை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். மேலும், 2023-24ஆம் ஆண்டில் மாவட்ட தொழில் மையம், அரியலூர் மூலம், செயல்படுத்தப்படும் திட்டங்களின்கீழ் சிறப்பாக கடனுதவி வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி போன்ற வங்கி கிளை மேலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் லட்சுமி, முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் லாயனல் பேனிடிக்ட், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பதற்கு கல்வி கடன்கள் வழங்கப்பட உள்ளது
    • இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டையில் கைக்குறிச்சியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது ,

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரிய அளவில் கல்வி கடன் வழங்கும் முகாம் தற்போது நடைபெற்று வருகிறது .இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பதற்கு கல்வி கடன்கள் வழங்கப்பட உள்ளது .தற்பொழுது வித்யா லட்சுமி போர்ட்டல் என்ற முறையில் மாணவர்களுக்கு கல்வி கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கிக்கு நேரடியாக அனுப்பி வங்கி மூலம் மாணவ,மாணவிகளை அழைத்து உரிய ஆவணங்களை சரிபார்த்து கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவிகளுக்கு தேவையான ஆவணங்கள் கிடைக்க இ- சேவை மூலமாக ஆவணங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கல்வி கடன் வழங்க அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளோம். இது சில வங்கி மேலாளருக்கு புரிதல் இல்லாமல் உள்ளது .எனவே அவர்களுக்கும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளோம். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த முறை மாணவ ,மாணவிகள் முழுமையாக கல்வி கடன் பெறுவது உறுதி என்றார் பேட்டியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மற்றும் பலர் இருந்தனர்.

    • நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.
    • வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

    மும்பை:

    கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று 'சாக்லேட்' அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-

    கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் கடந்த பிறகும், அதற்கான தொகையைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

    அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏற்காமல் இருப்பது, அவர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

    அதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தவணையை வசூலிப்பதற்கு, அவர்களது இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ முன்னறிவிப்பின்றி நேரில் செல்வதே சிறந்த வழியாகும். அதற்காக, சாக்லேட்டுகளுடன் வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் சில்லரை கடன் அளிப்பு ரூ.12,04,279 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.46 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது வங்கியின் சில்லரைக் கடன் அளிப்பு ரூ.10,34,111 கோடியாக இருந்தது.

    ×