search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Law"

    • பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.
    • அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்புக்கான உதவித்தொகை கிடைத்ததற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மற்றும் கலிபோர்னியா ஆகிய 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.

    பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கௌரவித்தார்.  பிறகு அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தங்களை அவருக்கு பரிசாக வழங்கினார்.

    பின்னர் பிரக்யாவிடம் அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    • ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது.
    • இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் பேசியதாவது:- ஏற்காடு மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. மேலும் கஞ்சா, கள்ள சாராயம், அரசு மது பாட்டில் விற்பனையாளர்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது தகவல் வருகிறது. எங்களது போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வழக்குகளும் செய்து வருகிறார்கள். கள்ளத்துப்பாக்கி வைத்துள்ள நபர்கள் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். கள்ளத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது. நாங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளது கண்டுபிடித்தால் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
    • வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது

    மதுரை

    அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருந்ததாக ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ், வன துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

    இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி கூறுகையில், இது போன்ற வழக்குகளில் கைதான வர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால், மனுதா ரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, அரிய உயிரினமான திமிங்கலத்தை வேட்டை யாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    மேலும் அதே நேரத்தில் திமிங்கலம் வாய் வழியாக உமிழும் அம்பர் கிரீஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டபடி குற்றமாகுமா? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்துஅரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் இவரது தம்பி ராஜகணபதி இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது.
    • ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார்.

    ேசலம்:

    சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது தம்பி ராஜகணபதி (45). இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது. கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார். அதில் ராஜகணபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சேலம் மத்திய ெஜயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    • வருகிற மே 31-ந்தேதியுடன் விண்ணப்பப்பதிவு நிறைவடைய உள்ளது.
    • பிளஸ்-2 முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப்படிப்பும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பும் படிக்க இயலும்.

    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையுடன் இணைப்பு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலையுடன் இணைந்த சீர்மிகு சட்டப் பள்ளியிலும் ஐந்தாண்டு சட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

    இதில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு சட்டப்பல்கலைக் கழகத்தின் இணையப் பக்கத்தில் (www.tndalu.ac.in) தொடங்கியுள்ளது. வருகிற மே 31-ந்தேதியுடன் விண்ணப்பப்பதிவு நிறைவடைய உள்ளது. சட்டப் படிப்பு, 5 ஆண்டு, மூன்று ஆண்டு என இரு நிலைகளில் தமிழகத்தில் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப்படிப்பும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பும் படிக்க இயலும்.

    மூன்றாண்டு படிப்புக்கு எல்.எல்.பி., எல்.எல்.பி. ஹானர்ஸ் என்னும் பெயரிலும், ஐந்தாண்டு படிப்புக்கு பி.ஏ, எல்.எல்.பி. மற்றும் பி.ஏ, எல்.எல்.பி. ஹானர்ஸ் என்னும் இருநிலைகளிலும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. மூன்று ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை திரும்ப பெற கோரி தஞ்சையில் சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.

    அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் கோதண்டபாணி, ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணை ப்பாளர் குருசாமி, சி.ஐ.டி.யூ விரைவு போக்குவரத்து சங்க மாநில துணை செயலாளர் வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் வடிவேலன் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.

    இதில் சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, சுமை பணி சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் சாய்சித்ரா, அரசு போக்குவரத்து சிஐடியு சங்க பொருளாளர் ராமசாமி, டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் மதியழகன்,
    டி .ஆர். இ .யூ. சங்க தலைவர் ரஜினி, தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • அடிதடி, திருட்டு உள்பட 10 வழக்குகள் உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை காரை அந்தோ ணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாகர் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை காரை லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் நரேஷ்குமாரை (36) தாக்கி, அவரி டம் நகை, பணம் பறித்த வழக்கு மற்றும் அடிதடி, திருட்டு உள்பட 10 வழக்குகள் உள்ளது.

    இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசாரால் கைது செய் யப்பட்ட சுபாகர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சுபாகரின் குற்ற செயல்களை கட்டுப்படுத் தும் விதமாக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் சுபாகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

    • தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.
    • 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வழிப்பறியில் ஈடுபடு–வோர், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.

    இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

    தமிழக சிறைகளில் 1000-க்கும் மேற்பட்டோர் குண்டாசில் கைதாகி சிறையில் உள்ளனர்.

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில் இந்த ஆண்டு 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 80 பேர் ரவுடிகள், 16 பேர் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள், 51 பேர் வழிப்பறி மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள்.

    கடந்த ஆண்டில் 129 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 46 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
    • மாணவர்களுக்கான அடிப்படை சட்ட உரிமைகள் மற்றும் பொதுமக்களுக்கான சட்ட பாதுகாப்புகளை எடுத்து கூறினர்.

    திருவையாறு:

    திருவையாறு சீனிவாசராவ் பள்ளியில் அரசியல் அமைப்பு தினவிழா பள்ளி தலைமையாசிரியர் அனந்தராமன் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் உதவி தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றார்.

    விழாவிற்கு தஞ்சாவூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.தொடர்ந்து, மாணவர்களுக்கான அடிப்படை சட்ட உரிமைகள் மற்றும் பொதுமக்களுக்கான சட்ட பாதுகாப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

    மேலும், அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு சம்மந்தமாக பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் வினாடி- வினா போட்டிகள் நடைபெற்றது.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    போட்டிகளில் திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆச்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, வானராங்குடி மற்றும் முகமது பந்தர் ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    திருவையாறு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியும், வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அரசியலமைப்பு சட்டப்படி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்தும், வட்ட சட்ட பணிகள் குழு மூலம் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.விழாவில் பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் அருணா, சாந்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், சுற்று வட்டார பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

    • பா.ஜ.க பிரமுகர்களின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • சமஸ்கிருத மொழியே இல்லாத போது, கண்டிப்பாக மனுதர்மத்தை பின்பற்றியே ஆக வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், இந்துக்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசாவை கண்டித்தும் முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    காந்தி ஜெயந்தியை ஒட்டி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் திமுக தலைமையிலான அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இந்த ஊர்வல அனுமதியை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன.

    மேலும் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஆ.ராசாவை வன்மையாக கண்டிக்கிறேன்.

    3000 ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுஸ்மிருதி நூலை குறிப்பிட்டு,

    இவ்வாறு மிக மோசமாக பேசி உள்ளார்.

    சமஸ்கிருத மொழியே இல்லாத போது, கண்டிப்பாக மனுதர்மத்தை பின்பற்றியே ஆக வேண்டும் என்று யாரும் நிர்பந்தம் செய்யாத போது எதற்காக இதை பேச வேண்டும்?

    மற்ற மதத்தினரின் நூல்களில் உள்ள குறைகளை பற்றி ஆ.ராசா பேசுவாரா?

    தொடர்ச்சியாக இந்து மதத்தை இழிவு படுத்துவோர், மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.

    • மாநில செயல் தலைவர் கோதண்டம், வக்கீல்களும் பார் கவுன்சிலும் என்ற தலைப்பில் பேசினார்.
    • பத்திரப்பதிவு செய்ய வக்கீல்கள் மட்டும் அனுமதிக்க சட்டம் இயற்ற வேண்டும்.

    திருப்பூர்:

    அகில இந்திய வக்கீல்கள் சங்க திருப்பூர் மாவட்ட நான்காவது மாநாடு திருப்பூரில் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மணவாளன் வரவேற்றார்.மாநாட்டை மாநில பொது செயலாளர் முத்து அமுதநாதன் துவக்கி வைத்தார். செயலாளர் பொன்ராம் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் வரதராஜ் வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர். மாநில செயல் தலைவர் கோதண்டம், வக்கீல்களும் பார் கவுன்சிலும் என்ற தலைப்பில் பேசினார்.

    மாநாட்டில் அகில இந்திய பார் கவுன்சில் வக்கீல்களுக்கான சேம நல நிதியை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மாநில அரசு, தமிழ்நாடு பார் கவுன்சில் வக்கீல்களுக்கு சேம நல நிதியை 10 லட்சமாக உயர்த்தியதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.5 லட்சம் ரூபாய் நிரந்தர மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். பத்திரப்பதிவு செய்ய வக்கீல்கள் மட்டும் அனுமதிக்க சட்டம் இயற்ற வேண்டும்.

    பிறப்பு இறப்பு சான்று தொடர்பான வழக்குகள், வாடகை ஒப்பந்தம் தொடர்பான வழக்குகள், குழந்தைகள் தத்து கொடுப்பது தொடர்பான வழக்குகள் போன்றவற்றை கோர்ட்டில் தாக்கல் செய்து நடத்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

    திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் வக்கீல்களுக்கு அறைகள் கட்ட இடம் ஒதுக்கி அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். அனைத்து வக்கீல்கள் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் நூலகம், தபால் அலுவலகம், வங்கி, கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும்.தமிழக வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்ட கோர்ட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் பெஞ்ச், பார் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. சங்க மாவட்ட தலைவராக சுப்பராயன், துணைத்தலைவர்களாக கண்ணன், சேகர், தமயந்தி, கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்களாக மோகன், துணை செயலாளர்களாக பொன்ராம், நவீன், வினோத்குமார், கவுரி மற்றும் 7 கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் . இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து மணிகண்டன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

    ×