search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kodanad murder"

    • ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர்.
    • இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

    தேனி:

    கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

    எனது சொந்த ஊர் தஞ்சை என்றாலும், அரசியல் பயணம் தொடங்கியது தேனி மாவட்டம் தான். இங்குள்ள நிர்வாகிகள் அனைவரையும் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன். இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர். இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

    ஆனால் நம்மிடம் இருப்பவர்கள் உண்மையான தொண்டர் படை. தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடித்து தண்டனை பெற்றுத்தருவோம் என்று கூறினார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுவரை அதில் ஆர்வம் காட்டாமல் உள்ளார். இந்த வழக்கு விரைவு படுத்தப்பட்டால் பல உண்மை சம்பவங்கள் நாட்டிற்கு வெளிவரும். பலர் கம்பி எண்ண நேரிடும்.

    நாங்கள் பொழுது போகாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஜெயக்குமார் கூறுகிறார். அவர்தான் பொழுதை போக்க தினந்தோறும் பிரஸ்மீட் நடத்துகிறார். இந்த வழக்கை சிந்துபாத் கதைபோல முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டே செல்லக்கூடாது. விரைந்து விசாரித்து குற்றாவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது
    • தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

    தேனி:

    கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    தேனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கருத்துகளையும் தெரிவித்தனர்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி தினகரன் பேசினர். இதனால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை காலை 10மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன் முன்னிலை வகிக்கிறார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விசாரணை தொடங்கியது.

    பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார்? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தினார்.

    தி.மு.க. அரசு உரிய நடவடிக்கையை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் நாளை (1-ந் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை காலை 10-மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு அளித்தார். ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. வினர் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.

    இதையொட்டி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் அ.ம.மு.க. நிர்வாகிகளும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தனர்.

    அதன்படி ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன் முன்னிலை வகிக்கிறார். மகிழன்பன், வி.என்.பி.வெங்கட்ராமன், எம்.எம்.பாபு, ராயபுரம் பி.எஸ்.சிவா, வழக்கறிஞர் எம்.வி.சதீஷ், ரெட்சன் அம்பிகா பதி, என்.கே.அச்சுதன் ஆகியோர் ஏற்பாட்டில் நடக்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம்-டி.டி.வி.தினகரன் இருவரும் இணைப்புக்கு பிறகு நடக்கும் முதல் போராட்டம் என்பதால் இதனை சிறப்பாக நடத்த வேண்டும் என இரு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் வாளையார் மனோஜ் மட்டுமே ஆஜராகி இருந்தார்.
    • வழக்கு விசாரணைக்கு வந்த போது, சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் கோர்ட்டில் எந்தவித இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் கொள்ளை, கொலை சம்பவம் அரங்கேறியது.

    இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.

    தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே சி.பி.சி. ஐ.டி போலீசார் கொடநாடு பங்காளவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள், ஜெயலலிதா, சசிகலாவின் அறைகள் மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றின் சில பொருட்கள் என 9 பொருட்களை ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் சி.பி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர்.

    மேலும் கோர்ட்டில் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட 8 செல்போன்களையும் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் கேட்டிருந்தனர்.

    இன்று காலை கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி. முருகேவல் ஆஜராகி இருந்தார். அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் ஆஜராகி தனது வாதங்களை முன் வைத்தார்.

    வாதங்கள் அனைத்தும் முடிந்த பின்னர், நீதிபதி ஸ்ரீதரன் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை செப்டம்பர் மாதம் 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    இன்று நடந்த விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் வாளையார் மனோஜ் மட்டுமே ஆஜராகி இருந்தார்.

    சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று தாங்கள் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் இன்று நடைபெறும் விசாரணையானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்த போது, சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் கோர்ட்டில் எந்தவித இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை. மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் விடுமுறை என்பதால் இன்றைய வழக்கை குடும்ப நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் விசாரித்தார்.

    • கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கொடநாடு வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. ஷகில் அக்தர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

    கோவை, அக்.6-

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது பல்வேறு ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது.

    கொள்ளை சம்பவத்தின்போது, அதனை தடுக்க முயன்ற காவலாளி ஒம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், சதீசன், திபு உள்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துபோனார்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகரும் நேரடியாகவே விசாரணை மேற்கொண்டார்.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் பல நபர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதுவரை தனிப்படையினர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினர் விவேக், கொடநாடு மேலாளர் நடராஜன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு ஊட்டியில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    சி.பி.சி.ஐ. அதிகாரி நியமனம்

    தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபு பிறப்பித்தார்.

    கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கொடநாடு வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. ஷகில் அக்தர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

    கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு, விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டு விட்டதால், அவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று உடனடியாக விசாரணையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடநாடு விவகாரத்தியில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க தி.மு.க. நடத்திய சதி அம்பலமாகியுள்ளதாக வைகைசெல்வன் தெரிவித்துள்ளார். #EdappdiPalaniswami #KodanadEstate
    சென்னை:

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும், துணை முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். மீதும் களங்கம் சுமத்தும் நோக்கில், தி.மு.க.வின் அரசியல் பின்னணியோடு, கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில், தெகல்கா பத்திரிகை திட்டமிட்டு உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டது.

    தற்போது, அந்த கும்பல் வெட்கித் தலை குனியும் வகையில், கொடநாடு குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட இரு குற்றவாளிகளின் சதித்திட்டத்தோடு அரங்கேற்றிய உரையாடல்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்துள்ளன.



    நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வின் மீது களங்கம் சுமத்தும், தி.மு.க.வின் கபட நாடகங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

    கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட இரண்டு கிரிமினல் குற்றவாளிகளும், கேரளாவில் உள்ள ஒருவரை சந்தித்து தாங்கள் தப்பிப்பதற்கு வழி சொல்ல வேண்டும் என உதவி கேட்பதும், அதற்கு அந்த நபர், இருவரிடமும், தமிழக முதல்வருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறினால் மட்டுமே, உங்களை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க முடியும் என ஆலோசனை சொல்கிற விதமாக, வீடியோ பதிவுகள் வெளியாகி இருப்பது, தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க.வின் அதிகாரமும், வன்முறையும் எல்லை கடந்து போனதால்தானே நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் மக்கள் தூக்கியெறிந்து விட்ட நிலையில், எதிரிகளும், துரோகிகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, கழக அரசை கவிழ்த்தி விடத் துடிக்கும் தி.மு.க.வின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது.

    கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில், தெகல்கா பத்திரிகையாளரைப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு, தூத்துக்குடி, பொள்ளாச்சி சம்பவங்களுக்கும், ஆளுகின்ற அ.தி.மு.க அரசே காரணம் என பழி சுமத்தி, ஆட்சியை கவிழ்த்து விடத் துடிக்கிறார்கள்.

    ஆயிரம் பொய் சொல்லி, அ.தி.மு.க அரசை கவிழ்க்க முடியாது. உண்மைகள் ஒரு போதும் தூங்குவதுமில்லை, பொய்கள் ஒரு போதும் வாழ்ந்ததுமில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EdappdiPalaniswami #KodanadEstate #VaigaiChelvan
    முதல்-அமைச்சர் குறித்து செய்தி வெளியிட மேத்யூ சாமுவேலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MathewSamuel #MadrasHC #Kodanadissue
    சென்னை:

    கொடநாடு கொலை- கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ‘தமிழக முதல்-அமைச்சராக கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி பதவி ஏற்றேன். என்னுடைய கடினமான உழைப்பினால், அரசு எந்திரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு அரசியல்வாதியாக எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்றி வருகிறேன்.

    இந்த நிலையில், வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தலும், 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த அவதூறு தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பேட்டியை கடந்த 11-ந்தேதி ‘யூடியூப்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி அவர்கள் அளித்த பேட்டியை நாரதா நியூஸ் என்ற ஆன்லைன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.



    தேர்தல் நெருங்கும் நேரத்தில், அவதூறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எனக்கு எதிராக சுமத்தப்படுகிறது. எனவே, என்னை பற்றி அவதூறான செய்தி வெளியிடவும், பேட்டிக் கொடுக்கவும் நாரதா நியூஸ் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்பட 7 பேருக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை கடந்த 23-ந்தேதி விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், முதல்அமைச்சர் குறித்து அவதூறு செய்தி வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேத்யூ சாமுவேலுக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் நோட்டீசு மேத்யூ சாமுவேலுக்கு சென்றடையவில்லை என்று கூறப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை முதல்அமைச்சர் குறித்து செய்தி வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார். #MathewSamuel #MadrasHC #Kodanadissue
    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் தான் இதுவரை இந்த அரசு ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச மறுத்து வருவதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டினார். #TTVDhinakaran #KodanadIssue
    மாமல்லபுரம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு சுற்றுபயணமாக நேற்று இரவு கல்பாக்கம் வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் தான் இதுவரை இந்த அரசு ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச மறுத்து வருகிறது. இது அரசுக்கு ஆரோக்கியமானது அல்ல.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த அரசுக்கு முடிவு கட்டப்படும். தேர்தலில் கூட்டணி குறித்து எங்களிடம் சில கட்சிகள் பேசி வருகிறார்கள் விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #KodanadIssue
    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட ‌சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் இருவரும் இன்று ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். #Kodanadissue #Sayan #Manoj
    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட ‌சயான், மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

    அவர்களின் ஜாமீனை ரத்து செய்யகோரி அரசு சார்பில் கடந்த 16-ந்தேதி அரசு வக்கீல் நந்தகுமார் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி வடமலை விசாரித்து ‌சயான், மனோஜ் ஆகியோர் 24 -ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறி சம்மன் அனுப்பினார்.

    ஆனால் கடந்த 24-ந்தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வரவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார். அதில் ‌சயான், மனோஜ் ஆகியோர் ஆஜராக போதிய அவகாசம் கிடைக்காததால் ஆஜராக முடியவில்லை.

    எனவே அவகாசம் நீடித்து தர வேண்டும் என்று கூறினார். அதன் படி அவர்களின் கால அவசாகத்தை இன்று (29-ந்தேதி) வரை நீதிபதி வடமலை நீடித்தார்.

    இதற்கிடையே இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ‌சயான்,மனோஜ் ஆகியோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏற்கனவே 20 முறைக்கு மேல் இந்த வழக்கிற்காக நேரில் ஆஜராகி உள்ளதால் ஊட்டி கோர்ட்டு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதனை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த வேங்கடேசன் விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் ஆஜராவதாக கூறி ஜாமீன் பெற்றதை சுட்டிக்காட்டி கோரிக்கையை விசாரணை நீதிமன்றத்தின் முன் வைக்குமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதனை தொடர்ந்து மனுவை நேற்று திரும்ப பெற்றுக் கொண்டு ‌சயான், மனோஜ் இருவரும் இன்று ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

    அவர்களை வருகிற 2-ந்தேதி ஆஜராகும் படி நீதிபதி வடமலை உத்தரவிட்டார். அன்று கொடநாடு கொலை , கொள்ளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. #Kodanadissue #Sayan #Manoj
    கொடநாடு கொலை, கொள்ளை குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்ட மேத்யூ சாமுவேல் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MathewSamuel #MadrasHC #Kodanadissue
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த காவலாளி கொலை, அதில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரணம் ஆகியவை குறித்து நாரதா நியூஸ் என்ற ஆன்-லைன் செய்தி நிறுவனம், கடந்த 11-ந்தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.

    இதையடுத்து அந்த செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதில், இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ) (மதம், மொழி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இருபிரிவினரிடையே பகையை, மோதலை ஏற்படுத்துதல்), 505(1), (2) (ஆவணங்களை வெளியிட்டு, அரசுக்கு எதிராக பொதுமக்களை கலவரத்தில் ஈடுபடச் செய்தல்) 120(பி) (கூட்டுச்சதி) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.


    இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில், மேத்யூ சாமுவேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் ஏ.நடராஜன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்து தீர்ப்பு அளிப்பதாக கூறி நீதிபதி வழக்கை தள்ளிவைத்தார். இந்த நிலையில், இந்த தீர்ப்பை இன்று காலையில் நீதிபதி ஏ.ஆனந்தவெங்கடேஷ் பிறப்பித்தார்.

    அதில், ‘தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன். மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கிற்கு ஒரு வாரத்துக்குள் சென்னை போலீஸ் கமி‌ஷனர் பதில் அளிக்க வேண்டும். அதுவரை, மேத்யூ மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார். #MathewSamuel #MadrasHC #Kodanadissue
    ஜனவரி 29-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உதகை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சயான், மனோஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். #KodanadEsate #MadrasHC
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் காவலாளியை கொலை செய்து விட்டு கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ‌சயான், மனோஜ் உள்பட பலரை கைது செய்தனர்.

    தற்போது ‌சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவர்கள் 2 பேரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வக்கீல் பால நந்தகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, ‌சயான் தரப்பு நேற்று ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து ‌சயான், மனோஜ் தரப்பில் ஆஜரான வக்கீல் செந்தில் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார்.


    இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை வருகிற 29-ந்தேதி ‌சயான், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்நிலையில் ஜனவரி 29-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உதகை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சயான், மனோஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அப்போது நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் வரும் 28-ந்தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர். #KodanadEsate
    கொடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #SC #KodanadEstate #CBI
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். பின்னர் 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து பல முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து, ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.

    இவர்கள் விபத்தில் இறந்ததாக சொன்னாலும், அது சந்தேகத்துக்கு இடமான ஒன்றாகவே இருந்தது. மேலும் சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் தெகல்கா இணைய தள முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.


    அதில் மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். இதே போல் வழக்கில் 2-வது குற்றவாளியான சயான் மற்றும் மனோஜ் ஆகியோரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அனைத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் நடந்தது என தெரிவித்துள்ளனர்.

    எனவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் எதுவும் இல்லை. அவர் பத்திரிகை மற்றும் டி.வி.சேனல்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று முடிவு செய்கிறோம். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். #SC #KodanadEstate #CBI
    ×