search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kitchen"

    • பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலின் முன்பு வர்த்தகர் கழகம் சார்பில் அன்னதான சமையல் கூடம் அமைக்கப்பட்டது.
    • விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

    பொன்னமராவதி

    பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலின் முன்பு வர்த்தகர் கழகம் சார்பில் அன்னதான சமையல் கூடம் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது.

    அதையடுத்து நடைபெற்ற திகுக்கார்த்திகை விழாவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரணியர்க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச்சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

    விழாவில் வர்த்தகர் கழகத்தலைவர் எஸ்.கே.எஸ்.பழனியப்பன், தேய்பிறை அஷ்டமி மற்றும் கார்த்தகை வழிபாட்டு குழு நிர்வாகிகள் ராம சேதுபதி, பி.பாஸ்கர்,எம்.குமரன், மணிகண்டன், முருகேசன், சதீஸ்குமார், எஸ்.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் இடிந்து விழுந்தது.
    • நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆய்வு மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    மதிய உணவிற்காக சமையலர் கலா உணவு தயார் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார்.

    அப்போது தலைமை ஆசிரியை அழைத்ததால் கலா சமையலறையை விட்டு வெளியே வந்துள்ளார் அந்த நேரம் திடீரென சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் இடிந்து விழுந்தது.

    இவ்விபத்தில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையல் உபகரணங்கள் சேதம டைந்தன.

    சமையலர் கலா வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    47 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமையலறை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்,

    இந்நிலையில் சமையல் கட்டிடத்தை பார்வையிட்டு நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது துறையூர் நகராட்சி தொடக்கப்ப ள்ளிக்கு வகுப்பறைகள் கட்டடம் கட்டுவதற்கு ரூ.33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும், அது வரை தகர ஷெட் அமைத்து சமையலறை பயன்படுத்தப்படும் என ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் தெரிவித்தனர்.

    ஆய்வின் போது நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் , நகர்மன்ற உறுப்பினர் முழு மதி இமயவரம்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது.
    • சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மதிய உணவு 40 குழந்தைகள் சாப்பிடுகின்றனர். காலை உணவு 35 குழந்தைகள் சாப்பிடுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை ரவை சமைத்து குழந்தைகளுக்கு வழங்கி உள்ளனர். நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று காலையில் அப்பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண் இது தொடர்பாக கூறி சமையல் ஊழியர்கள் காமாட்சி, சுமதி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்து திடீரென சமையல் அறையை பூட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காலை உணவு சாப்பிட வந்த குழந்தைகள் தவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதானம் செய்து குழந்தைகளுக்கு உணவு வழங்கி அதிகாரிகளும் சாப்பிட்டனர்.

    இது பற்றி தாசில்தார் தமிழரசி கூறுகையில், கோமதி என்பவர் பெற்றோர் கழக ஆசிரியர் உறுப்பினராக உள்ளார். மேலும் அதே பள்ளியில் தூய்மை பணியாளராகவும் உள்ளார். சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

    • எலக்ட்ரானிக் பொருள்களை பொருத்தவரை சரியான பராமரிப்பு முறை அவசியம்.
    • பிரிட்ஜை தகுந்த பராமரிப்பு கொடுக்கும்பொழுது அதன் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும்.

    இன்றைய காலகட்டத்தில் ப்ரிட்ஜ் இல்லாத வீடுகளைப் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களின் வரிசையில் பிரிட்ஜ் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிகின்றது. ஒருமுறை வாங்கினால் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கும் மேல் நம்முடன் பயணிக்கக்கூடிய பிரிட்ஜை தகுந்த பராமரிப்பு கொடுக்கும்பொழுது அதன் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும். சரி பெண்களே பிரிட்ஜை எப்படிப் பாதுகாத்து பராமரிப்பது? உங்களுக்காகவே இதோ சில யோசனைகள்.

    ப்ரிட்ஜின் பின்புறம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இல்லாமல் சற்று தள்ளிவைக்க வேண்டும். அந்த கம்பி வலைகளில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். அந்தக் கம்பி வலை களில் படியும் ஒட்டடையை சிறிய ப்ரஷ்ஷின் மூலம் அகற்றலாம்.

    வெளியூர் செல்லும் பொழுது ப்ரிட்ஜ்ஜை ஆஃப் செய்துவிட்டு செல்வது நல்லது. ப்ரிட்ஜை ஆஃப் செய்த பிறகு அதை நன்கு துடைத்து காய வைத்து பின்பு அவற்றை மூடி வைத்து விட்டு செல்லலாம்.. ஈரம் காயாமல் மூடி வைக்கும் பொழுது ப்ரிட்ஜ்ஜிற்குள் பூஞ்சைக் காளான் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

    ப்ரீஸரில் நாள்பட வைத்திருக்கும் எந்த ஒரு பொருளையும் அவ்வளவு எளிதில் வெளியில் எடுத்து விட முடியாது. எனவே ஃப்ரீஸரில் சிறிது கல் உப்பைத் தூவி அவற்றின்மீது பாத்திரங்களை வைத்தோமானால் அவற்றை வெளியில் எடுப்பது எளிது..ஃப்ரீஸரில் இருக்கும் பொருட்களை வெளியில் எடுக்க முடியவில்லை என்றால் கத்தி, கரண்டி போன்ற கூரான ஆயுதங்களைக் கொண்டு குத்தக் கூடாது..மேற்கூறிய யோசனையைப் பின்பற்றினால் ஃப்ரீஸரிலிருந்து பொருட்களை வெளியில் எடுப்பதும் எளிது அதேபோல் ஃப்ரீஸரும் சேதமாவது தவிர்க்கப்படும்.

    ப்ரிட்ஜை மிகவும் குறுகிய இடத்தில் வைக்காமல் காற்றோட்டமுள்ள இடத்தில் வைப்பது சிறந்தது.

    ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் வினிகர், சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் சோடா உப்பு இவை அனைத்தையும் நன்றாக கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்பிரே செய்து ஐந்து நிமிடங்கள் ஊறிய பின்னர் ஒரு மென்மையான துணியைக் கொண்டு துடைத்து எடுத்தோம் என்றால் ஃப்ரிட்ஜில் படிந்திருக்கும் நாள்பட்ட அழுக்கும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.ப்ரிட்ஜ் சுகந்த மணத்துடன் இருக்கும்..

    மாதத்திற்கு ஒரு முறையாவது ஃப்ரிட்ஜிற்குள் இருக்கும் டிரே, பாக்ஸ் போன்றவற்றை வெளியில் எடுத்து நன்றாக கழுவி காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும்.

    ப்ரிட்ஜின் கதவுப் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ரப்பர் பீடிங்கை மென்மையான பிரஷ் கொண்டு மேலே கூறிய ஸ்பிரேயை உபயோகப்படுத்தி சுத்தப்படுத்தலாம்.

    ப்ரிட்ஜ்ஜிற்கு தரமான ஸ்டெபிலைசர்களை வாங்கிப் பொருத்துவதன் மூலம் மின்சாரம் அளவுக்கு அதிகமாக வரும் நேரங்களில் ஃப்ரிட்ஜ் பழுதடையாமல் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது..

    ப்ரிட்ஜை ஒரு தடவை ஆஃப்செய்து விட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது. இதனால், ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ப்ரிட்ஜ் இயங்குவதற்கு அதனுள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். எனவே, குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் 'ஆன்' செய்யவேண்டும். அப்போதுதான் ப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும்.

    இன்றளவும் சிறிய வகை பிரிட்ஜ்களில் ஃப்ரீஸரில் டீஃப்ராஸ்ட் பட்டன் கொடுக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கமுடியும்.. 15 நாட்களுக்கு ஒரு முறையாவது இந்த பட்டனை பிரஸ் செய்து ஃப்ரீஸரில் உறைந்திருக்கும் அதிகப்படியான ஐஸைக் கரைய வைக்க வேண்டும்.இவ்வாறு டீஃப்ராஸ்ட் செய்வதன்மூலம் . ப்ரிட்ஜ் குறுகிய காலத்தில் பழுதடையாமல் அதிக வருடங்கள் நீடித்து உழைக்கும்.

    6 மாதத்திற்கு ஒருமுறை பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து காயில், கம்ப்ரசரை சுத்தம் செய்யவேண்டும். இதனால் அதிக சூடு ஏற்பட்டு ப்ரிட்ஜ் கடினமாக வேலை செய்வது குறையும்.

    ப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிடும். இதனால் பாக்டீரீயாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும்.எனவே ப்ரிட்ஜ் கேஸ்கட் சரியாக பொருந்தி இருக்கிறதா என்பதை அடிக்கடி கவனியுங்கள்.. தளர்வாக இருந்தால் பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து அதை சரி செய்து கொள்ளுங்கள்..

    ப்ரிட்ஜ் வாங்கிப் பொருத்தும்போது அதற்கான 'எர்த்' சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரீஷியனை கொண்டு பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.இப்பொழுது வரும் ஃப்ரிட்ஜ்களில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கு என்று ஜெல் உள்ளே வைத்து செய்யப்பட்ட பில்டர் போன்ற அமைப்பானது கொடுக்கப்பட்டிருக்கின்றது..

    அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை தேர்ந்தெடுத்து வாங்கும் பொழுது, அவை மின்சாரத்தை அதிக அளவு மிச்சப் படுத்துவதற்கு உதவுகின்றது.

    பொதுவாக ப்ரிட்ஜ்ஜுக்குள் எல்லா பொருள்களையும் திணிக்காமல் அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வைத்து உபயோகித்தால் நமது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்..ப்ரிட்ஜ்ஜுக்குள் அதிக நாட்கள் வைத்து உபயோகப்படுத்தப்படும் எந்த ஒரு உணவுப் பொருளும் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    எலக்ட்ரானிக் பொருள்களை பொருத்தவரை சரியான பராமரிப்பு முறை அவசியம். இல்லையெனில் வாரண்டிக்கு முன்பாகவே அந்தப் பொருட்கள் பழுதாகி நமக்கு அதிகப்படியான செலவை உண்டாக்கிவிடும்.இல்லையென்றால் அவை அதிக மின் கட்டணத்தை உண்டாக்கும்.எனவே முறையான பாதுகாப்பும் பராமரிப்பும் எலக்ட்ரானிக் பொருட்களை அதிக ஆண்டுகள் நீடித்து உழைக்கச் செய்யும் என்பதை நினைவில் கொண்டு அவற்றை உரிய முறையில் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.

    • சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும்.
    • சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் கேஸ் வீணாவதைத் தடுக்கலாம்.

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் நிலையில் இல்லத்தரசிகள் எப்படி சிக்கமான பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    சமையலைத் தொடங்குவதற்கு முன்பே வெட்டப்பட்ட காய்கள் மற்றும் தேவையான பாத்திரங்களைத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவாகும்.

    ஃப்ரிட்ஜில் வைத்த உணவு மற்றும் குழம்பு பாத்திரத்தைச் சூடுபடுத்தும் முன், அதை வெப்பநிலையில் சிறிதுநேரம் வைக்கவும். ஃபிரிட்ஜில் இருந்து நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.

    சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும். காய்கறிகள் சமைப்பதாக இருந்தாலும் சரி, அரிசியாக இருந்தாலும் மூடி வைத்து சமைத்தால் சீக்கிரமாகவே வெந்துவிடும்.

    பிரஷர் குக்கர் மூலம் சமைப்பது நல்லது. அகலமான பாத்திரத்தில் சமைப்பது எரிபொருளைச் சேமிக்க உதவும்.

    வெந்நீர் வைக்க கேஸ் ஸ்டவ்வுக்குப் பதிலாக rod water heater பயன்படுத்தலாம்

    இண்டக்ஷன் ஸ்டவ்வில் செய்ய முடிகிற சமையலை அதிலேயே செய்யலாம். கேஸ் ரெகுலேட்டர், ட்யூப், பானர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவும்.

    சமையல் முடிந்தவுடன் ரெகுலேட்டர் சுவிட்சை அணைக்க மறக்க வேண்டாம். வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. இது உணவினைச் சூடு செய்வதை தவிர்க்கும்.

    சமைப்பதற்கு முன்னதாக அரிசி, பருப்பு, பயறு வகைகளை ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்து சமைத்தால் வெகு சீக்கிரமாகவே எல்லாமே வெந்துவிடும். இதன் மூலமாக சிலிண்டர் மிச்சமாகும்.

    கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் எப்போதும் அழுக்குகள் படியாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் பிசு பிசுப்பு மற்றும் அழுக்குகள் இருந்தால் அடைப்பு ஏற்பட்டு பிரச்னை ஏற்படும். இதனால் கேஸ் லீக் ஆகும் வாய்ப்பு கூட உண்டாகும். இதனால், சிலிண்டர் சீக்கிரமாக கூட தீர்ந்துவிடும். அதனால், பர்னர் எப்போதும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி தனியாக எடுத்து சுத்தம் செய்து வைப்பது நல்லது.

    காலையில் சமையலை முடிக்க வேண்டிய அவசரத்தில் ஈரமான பாத்திரங்களைக் கொண்டு சமையல் செய்வார்கள். முதல் நாள் இரவு கழுவாமல் பேட்ட பாத்திரத்தை மறுநாள் காலையில் அவசர அவசரமாக கழுவி, அதனை அப்படியே சமையலுக்கு பயன்படுத்த கூடாது. அந்த ஈரமான பாத்திரம் காய்வதற்கு 2 முதல் 4 நிமிடங்கள் வரை ஆகலாம். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் இது போன்று இருந்தால் சிலிண்டர் சீக்கிரமே காலியாகிவிடும்.

    இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி கேஸ் வீணாவதைத் தடுத்து, மிச்சப்படுத்துவதன் மூலம் மேலும் நான்கு நாட்கள் அல்லது ஒரு வாரம் சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

    • ஒவ்வொரு மாதமும் போடும் பட்ஜெட்டில் நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும்
    • மளிகைப் பொருட்களுக்காக ஒதுக்கும் பணத்தில் சிறு தொகையை நிச்சயம் சேமிக்க முடியும்.

    தற்போதைய பொருளாதாரச் சூழலில், எவற்றில் எல்லாம் சிக்கன நடவடிக்கையை கையாள முடியும் என்று திட்டமிடுவது அவசியமானது. ஒவ்வொரு மாதமும் போடும் பட்ஜெட்டில் நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும் விஷயங்களில், மளிகைப் பொருட்கள் வாங்குவதும் ஒன்று. திட்டமிட்டு சில விஷயங்களை செயல்படுத்தினால், மளிகைப் பொருட்களுக்காக ஒதுக்கும் பணத்தில் சிறு தொகையை நிச்சயம் சேமிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    * சத்துள்ள உணவுகளைத் தேர்வு செய்வது பணத்தை மிச்சப்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள் போன்றவை சத்துள்ள உணவுகளை விட விலை அதிகமாகவே இருக்கும்.

    * மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு சிறிது நேரம் செலவழித்து சரியான பட்டியல் தயார் செய்வது முக்கியமானது. இதன் மூலம் தேவையற்ற பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

    * செய்தித்தாள்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் இணையதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சலுகைகளை ஆராய்ந்து, அவற்றுக்கேற்ப பொருட்களை வாங்கலாம்.

    * சமைத்த மற்றும் உடனே சாப்பிட தயாராக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்குவதை விட, முழு தானியங்களை வாங்கி பயன்படுத்துவது பட்ஜெட்டுக்கு நல்லது.

    * வீட்டில் தயாரிக்க முடிந்த உணவுப் பொருட்களை, வெளியில் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

    * ஒவ்வொரு பொருளாக வாங்குவதை விட, தேவையானப் பொருட்களை மொத்தமாக வாங்குவதே சிறந்தது. பொருட்களை வாங்குவதற்கு அங்காடிக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும், கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளால் நம்மை அறியாமல் தேவையற்ற பொருட்களையும் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

    * வீட்டிலேயே வளர்த்து பயன்படுத்த முடிந்த காய்கறிகளை நாமே விளைவிப்பது, பணத்தை மிச்சப்படுத்துவதோடு, ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

    * வாரத்தில் இரண்டு முறை குளிர்சாதனப் பெட்டியை முழுவதுமாக பார்த்து அதில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை முதலில் உபயோகப்படுத்துங்கள். உங்களுக்கே தெரியாமல் சில பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வைத்து மறந்து விட்டிருக்கலாம்.

    * பசியாக இருக்கும் போது அங்காடிக்குச் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

    * இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு உணவு பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, நமது அருகில் கிடைக்கும் சத்தான உணவுகளை வாங்குவது சிறந்தது. குளிர்பானங்கள், சத்து பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை வாங்குவதையும் தவிர்க்க முயலுங்கள்.

    * அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அவற்றை அதிகமாக வாங்கி பயன்படுத்தலாம்.

    * மளிகைப் பொருட்கள் வாங்கும்போது, அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை கவனிக்க மறந்து விடாதீர்கள்.

    • உணவுப் பொருட்களின் விலை உயர்வு குடும்பத் தலைவிகளுக்கு பிரச்சினையாக இருப்பதுண்டு.
    • சமையல் முறைகளில் சிக்கனத்தை கடைப்பிடிப்பதை யோசிப்பது நல்லது.

    பொருளாதார பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவை, குடும்பத்தின் பட்ஜெட்டையும், சேமிப்பையும் பாதிக்கக்கூடும். இதில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு தான் குடும்பத் தலைவிகளுக்கு பிரச்சினையாக இருப்பதுண்டு. பணத்தை திட்டமிட்டு கையாள்வது, வருமானத்தை அதிகரிப்பது என்று பல வழிகளை முயற்சித்தாலும், மற்றொரு பக்கம் சமையல் முறைகளில் சிக்கனத்தை கடைப்பிடிப்பதையும் யோசிப்பது நல்லது. அதேசமயத்தில் ஆரோக்கியமான உணவுகளையும் சமைக்க வேண்டும். அதுபற்றிய குறிப்புகள் இங்கே:

    * மூன்று வேளையும் வெவ்வேறு வகையான உணவுகள் தயார் செய்வதைத் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு காலையில் தயாரித்த சாம்பாரை இரவு உணவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மதிய உணவுக்கு தயாரித்த காய்கறி குழம்பை இரவு சப்பாத்திக்கு உபயோகிக்கலாம்.

    * மாலை வேளையில் பஜ்ஜி, போண்டா என்று எண்ணெய்யில் பொரித்த பண்டங்களை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கும்போதே கொண்டைக்கடலை, காராமணி, பட்டாணி போன்றவற்றையும் வாங்கினால், அவற்றில் சுண்டல் தயாரித்து சாப்பிடலாம். இதன் மூலம் செலவை கட்டுப்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும்.

    * குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நேரத்தில் தனித்தனியாக சாப்பிடாமல் சேர்ந்து சாப்பிடலாம். இதனால் ஒவ்வொரு முறையும் குழம்பு, பொரியல் போன்றவற்றை சூடுபடுத்தும் வேலை குறையும். சமையல் எரிவாயு மிச்சமாகும்.

    * நாகரிகம் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல், நமக்கு அருகிலேயே கிடைக்கும் காய்கறிகளை சமைக்கலாம். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    * ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கப் போகிறீர்கள் என்ற பட்டியலை, முன்னதாகவே ஒரு வார காலத்துக்கு தயார் செய்துகொள்வது நல்லது. இதன் மூலம் கடைசி நேரத்தில் திட்டமிடாமல் சமைத்து, உணவையும், உணவுப் பொருட்களையும் வீணடிப்பதை தவிர்க்கலாம்.

    * ஒவ்வொருவர் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், ஒரே நேரத்தில் பலவித உணவுகளை சமைப்பதற்கு பதிலாக, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்ற ஒரு சமையலை மட்டுமே செய்வது நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும்.

    * வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் அதிக பணத்தை சேமிக்கலாம்.

    * ஆரோக்கியமான, அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை சமைப்பதற்கு, எல்லா வகையான சமையல் பொருட்களையும் வாங்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள். மூலிகை தேநீர், பேக் செய்யப்பட்ட ஆரோக்கியமானப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதை இரண்டாம் நிலைத் தேர்வாக வைத்திருங்கள்.

    * உணவை வீணாக்காமல் தேவையான அளவு மட்டும் சமைப்பது அல்லது மீதமான உணவுகளை முறையாக பயன்படுத்துவது பணத்தை மிச்சப்படுத்துவதற்கு உதவும் சிறந்த வழியாகும்.

    • சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • நீங்கள் மட்டும் தனியாக ஈடுபடாமல், உங்கள் தோழிகளுடன் சேர்ந்து இதை சுயதொழிலாக செய்யலாம்.

    இன்றைய பெண்கள் குடும்பத்தைக் கவனிப்பதோடு மட்டுமில்லாமல், அலுவலக வேலை, தொழில் என்று தங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதில் வீட்டை சுத்தப்படுத்துவது, வீட்டு உபயோகப் பொருட்களை அவ்வப்போது பராமரிப்பது போன்ற வேலைகளை செய்வதற்கு, பலருக்கு போதுமான நேரம் கிடைப்பது இல்லை. 'வீடு' என்பது நம் ஆளுமையின் அடையாளம். லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வீட்டைக் கட்டுபவர்கள், அதைப் பராமரிக்க சில ஆயிரங்களை செலவழிக்கத் தயங்குவது இல்லை.

    சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டைச் சுத்தம் செய்வது, ஒழுங்குபடுத்துவது, மாதாந்திர பில்களைக் கட்டுவது போன்ற பலவிதமான பராமரிப்புப் பணிகளை நீங்கள் செய்து தரலாம். அதற்குரிய கட்டணத்தை வசூலிக்கலாம். சில நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளை வழங்குகின்றன. இருந்தாலும், வீட்டுக்குள் அறிமுகம் இல்லாதவர்களை அனுமதிக்க பலர் தயக்கம் காட்டுவார்கள். இதுவே, உங்கள் பகுதியில் நீங்கள் அனைவருக்கும் தெரிந்தவராக இருந்தால், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையோடு உங்களை அணுகுவார்கள்.

    நீங்கள் மட்டும் தனியாக ஈடுபடாமல், உங்கள் தோழிகளுடன் சேர்ந்து இதை சுயதொழிலாக செய்யலாம். இதில் வாடிக்கையாளரின் தேவைகளைப் பொறுத்து, நீங்கள் வழங்கும் சேவைகளை வகைப்படுத்திக்கொள்ளலாம். வீட்டை ஒழுங்குபடுத்துதல், பழுதுபார்த்தல், பிற வேலைகள் என்று பிரித்து செயல்படலாம். இதற்கென தனியாக முதலீடு, அலுவலகம் போன்றவை தேவை இல்லை. உங்களுடைய பேச்சுத் திறனும், நேர்மையும் தான் மூலதனம்.

    வாடிக்கையாளரின் தேவைகளைப் புரிந்து கொண்டு, சரியான முறையில் பேசி கவர்வது முக்கியம். தகுந்த பணியாளர்களை நியமித்து வேலைகளைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, நண்பர்கள் என நெருங்கிய வட்டத்தில், முதலில் உங்கள் நிறுவனத்தின் சேவைகளைப் பற்றிய விவரக்குறிப்புகளை விநியோகம் செய்யுங்கள். நாளடைவில் உங்கள் வேலையில் திருப்தி அடைந்த வாடிக்கையாளர்களே, தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உங்கள் நிறுவனத்தை பரிந்துரை செய்வார்கள்.

    நிறுவனம் அடுத்த கட்டம் நோக்கி வளர்ச்சி அடையும்போது முகநூல், இன்ஸ்டாகிராம், கிளப் ஹவுஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் நிறுவனத்திற்கென தனிப் பக்கங்கள் தொடங்கிப் பகிருங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் நம்பிக்கையான பிளம்பர்கள் மற்றும் பிற சேவைகள் வழங்கும் நபர்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். திறமையுள்ள ஒழுக்கமான நபர்கள், நியாயமான கட்டணம், நேர்த்தியான வேலை என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

    • பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக்கூடாது.
    • சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொ ண்டு சமைக்கக் கூடாது.

    வீட்டில் பெண்கள் அதிகமாக நேரத்தை செலவிடும் இடம் சமையலறை. பரபரப்பாக சமையல் செய்வது, மற்ற வேலைகளை முடித்த களைப்போடு சமையல் வேலைகளில் ஈடுபடுவது என அவர்கள் மேற்கொள்ளும் வேலைக்கு ஏற்றவாறு, அந்த அறையின் அமைப்பு மற்றும் வசதிகள் இருக்கவேண்டும்.

    தண்ணீர், மின்சாரம், நெருப்பு இவை மூன்றையும் ஒன்றாக பயன்படுத்தும் இடம் என்பதால், சமையல் அறையில் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.:-

    பெரும்பாலான வீடுகளில் 'டை ல்ஸ்' பதிக்கப்பட்ட தரை உள்ளது. இதில், எந்த வகையான திரவங்கள் சிந்தினாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எதிர்பாராமல், அதில் கால் வைக்க நேர்ந்தால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே , கீழே சிந்தும் திரவங்களை அவ்வப்போ து துடைத்து, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டில்கள் ஏதேனும் உடைந்தால், அதைத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

    தீ அணைக்கும் கருவி:

    சமையல் அறையில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், பர்னர்கள் அல்லது பிளம்பீட் டெசர்ட் ஆகியவற்றில் இருந்து தீப்பிழம்புகள் வந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சமைக்கும் பாத்திரத்தில் திடீரென தீப்பற்ற நேர்ந்தால், அதில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இது தீயை மேலும் அதிகரிக்கக்கூடும்.

    பாத்திரத்தை ஒரு தட்டை போட்டு மூடி, அதன் மீது சிறிது பேக்கிங் சோடாவைப் போடலாம். இதனால், தீ உடனடியாக கட்டுக்குள் வரும். சமையல் அறையில், தீயணைக்கும் கருவியை வைத்திருப்பதும், அதைக்கையாளத்தெரிந்திருப்பதும் அவசியம்.

    சமையல் உபகரணங்கள்:

    கத்தி, அரிவாள், அரிவாள்மனை போன்ற கூர்மையான பொருட்களை சமையல் அறையின் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

    பாத்திரங்களில் திருகுகள் உள்ள கைப்பிடிகள் தளர்வாக இருப்பதைக் கவனித்து உடனே அவற்றை சரி செய்வதன் மூலம், விபத்துகளைத் தவிர்க்கலாம்.

    தினசரி கவனம்:

    தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலிய வற்றை நன்றாக சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியில் உள்ள சேப்டி வால்வையும் சரிபார்ப்பது அவசியம். அடுப்பை அணைப்பதோடு, எரிவாயு சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும். குழம்பு தாளிக்கும் போது, குமிழ் வைத்த மூடியால் மூடியபடி தாளித்தால், கடுகு போன்ற பொருட்கள் தெறித்து விழுந்து சூடுபடாமல் இருக்கும்.

    சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொ ண்டு சமைக்கக் கூடாது. இது எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது. மேலும், குழந்தைகள் அடுப்பிறகு அருகில் சென்று கேஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக்கூடாது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் மூடி உள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம். பாத்திர அலமாரிகளோ , மற்ற பொருட்களோ அடுப்பிற்கு மேல் பகுதியில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதை எடுக்க முயலும் போது, ஆடையில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. ஆடையில் நெருப்பு பற்றினால், உடனே உடலைச்சுற்றி கம்பளியை போர்த்தி, நெருப்பை அணைக்கலாம்.

    • வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க சிம்னியை சுத்தம் செய்வது எவ்வளவு அவசியம் என்பது புரியும்.
    • சமையலறை சுவர்களை அழகாக வைத்திருக்க உதவும் சிம்னியை சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

    வீட்டின் மற்ற அறைகளைக் காட்டிலும் சமையலறை சுவறில் வேகமாக கறை படிவதற்கு வாய்ப்பு அதிகம். காரணம், புகை மற்றும் நீராவி. சமைக்கும் போது உருவாகும் புகை மற்றும் நீராவியை சிறப்பாக வெளியேற்றி, சுவர்களின் வண்ணத்தை பாதுகாக்கும் கருவி சிம்னி. அதுமட்டும் அல்ல மிளகாய் நெடியால் வீட்டில் உள்ளவர்களுக்கு இருமல் தும்மல் ஏற்படாமல் காப்பாற்றுவதும் சிம்னி தான். மற்ற வீட்டு உபயோக கருவிகளை சுத்தம் செய்வது போல இதையும் சுத்தம் செய்வது அவசியம். சமையலறை சுவர்களை அழகாக வைத்திருக்க உதவும் சிம்னியை சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

    சமைக்கும் போது உருவாகும் புகை மற்றும் நீராவியை வெளிவேற்றுவது தான் சிம்னியின் வேலை. இவற்றை வெளியேற்றும் போது புகை மற்றும் நீராவியில் இருக்கும் நீர்த்துளிகள், கரி துகள்கள், எண்ணெய் பிசுபிசுப்பு இவை சிம்னியில் உள்ள நுண்ணிய துளைகள் கொண்ட பல அடுக்கு வலைகளில் வடிகட்டப்படும். இப்படி சேரும் இந்த அழுக்கினால் இரண்டு தீமைகள் நேரும். ஒன்று, நோய் கிருமி மற்றும் பூஞ்சை காளான் உருவாகும். இதனால் வீட்டில் உள்ள வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இரண்டு, சிம்னி வழியாக புகை வெளியேறுவது தடைபடும். வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க சிம்னியை சுத்தம் செய்வது எவ்வளவு அவசியம் என்பது புரியும்.

    சரி, எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சிம்னி சுத்தம் செய்ய வேண்டும்?

    பொதுவாக 2 மாதத்திற்கு ஒரு முறை சிம்னியில் உள்ள வடிகட்டும் வலைகளை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு வேலை நீங்கள் அதிகம் எண்ணெய் மற்றும் கார சாரமான உணவு வகைகளை அடிக்கடி சமைப்பவராக இருந்தால், மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் சார்க்கோள் பில்டர் சிம்னி பயன்படுத்தினால் 6 மாத்திற்கு ஒரு முறை பில்டரை மாற்ற வேண்டும். இனி சிம்னியை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

    சிம்னியை சுத்தம் செய்ய அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சிம்னியில் உள்ள வடிகட்டிகள், வலைகள், தட்டைகள் மற்றும் அதன் மூடி இவற்றை சுத்தம் செய்தால் போதும். நீங்கள் எந்த பாகத்தை சுத்தம் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தேவைபடும் பொருட்கள் மாறுபடும். சிம்னியின் மூடியை சுத்தம் செய்கிறீர்கள் என்றால் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா தேவைப்படும். பில்டர் சுத்தம் செய்ய வேண்டுமானால், அதில் உள்ள கரையின் அளவை பொறுத்து சுத்தம் செய்யும் பொருட்கள் வேறுபடும். ஓரளவு கரை இருந்தால் பாத்திரம் துலக்க பயன்படும் லிக்விட் போதும். விடாப்பிடியான கரை இருந்தால் பெயிண்ட் தின்னெர் தேவைபடும். மூடியை சுத்தம் செய்வதை பார்ப்போம்.

    மூடியை சுத்தம் செய்ய வினிகர் பயன்படுத்தலாம். முதலில் டவல்/பேப்பரால் வினிகரில் நன்றாக நனைத்து மூடியின் மூளை முடுக்கெல்லாம் தடவுங்கள். இரண்டு நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு சுத்தமான நீரில் ஒரு துணியை நனைத்து நன்றாக அழுத்தி துடையுங்கள். மூடி மேல் படிந்த கறை அகன்று விடும். இன்னும் கறை போகாமல் இருந்தால் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா பவுடரில் தேவையான அளவு நீர்/வைட் வினிகர் சேர்த்து மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை மூடி மீது தடவி 5 நிமிடம் கழித்து ஈர துணியால் துடைத்து விடுங்கள். இப்போது மூடி நன்றாக சுத்தம் ஆகியிருக்கும்.

    பில்டர் மாறும் வலைகளை சுத்தம் செய்ய உங்களுலுக்கு ஒரு டப் தேவைப்படும். முதலில் 2 கப் வினிகர், 2-3 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிது உப்பு தூவுங்கள். டப்பில் சூடு நீர் ஊற்றி நிரப்புங்கள். பில்டர் மற்றும் வலைகளை அதில் முழ்கச் செய்யுங்கள். 2 மணி நேரம் அப்படியே விடுங்கள். பிறகு வெளியே எடுத்தது சுத்தமான நீரால் நன்றாக துடையுங்கள். இன்னும் கறை மற்றும் பிசுபிசுப்பு உள்ளதா? கவலை வேண்டாம். இப்பொது பில்டர் மற்றும் வலைகளை ஒரு பெரிய ஸ்டீல் பத்திரத்தில் போட்டு நீர் நிரப்பி , டிஷ் வாஷ் லிக்விட் ஊற்றி, 30 நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள்.

    எண்ணெணை பிசுபிசுப்பு கரை எல்லாம் அகன்று விடும். 30 நிமிடம் கழித்து குளிர்ந்த பின் ஒரு துணியால் நன்றா அழுத்தி துடையுங்கள். பில்டர் மற்றும் வலை சுத்தம் ஆகிவிடும். இந்த முறையில் வேகமாக கறைகளை நீக்கலாம். விடாப்பிடியான கறை மற்றும் எண்ணெணை பிசுக்கை விரைவாக நீக்க ஒரு வழி உள்ளது. அது தான் பெயிண்ட் தின்னெர் பயன்படுத்துவது. பில்டர் மற்றும் வலைகளின் கறை மீது பஞ்சு/துணியால் வினிகர் நனைத்து தடவுங்கள். கறை வலுவாக இருக்கும் இடங்களில் சில துளிகள் வினிகர் தெளியுங்கள். சில நிமிடத்தில் கத்தி அல்லது வேறு ஏதாவது கருவி கொண்டு சுரண்டி எடுத்து விடுங்கள். ஒரு முக்கிய தகவல். வினிகர் விரைவாக ஆவியாகிவிடும்; நெடி அதிகம் இருக்கும். அதனால் இதை செய்யும் போது காற்றோட்டமான இடத்தில் செய்யவும். இப்பொது விடாப்பிடி கறையும் நீங்கி விடும்.

    மேலே கூறிய வழிகளை பின்பற்றி உங்கள் சிம்னியை சுத்தம் செய்து குடும்ப உறுப்பினர்கள் உடல் நலத்தை பேணி பாதுகாக்கவும். சமையலறை சுவற்றின் அழகையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

    • இந்தியாவில் ஏராளமான வகைகளில் வாஷிங் மெஷின் கடைகளில் கிடைக்கின்றன.
    • ஆடையில் உள்ள அழுக்கை நீக்க வாஷிங் மெஷின் முழுவதுமாக குறைத்து விட்டன.

    ஆள் பாதை ஆடை பாதி என்பார்கள். நாம் உடுத்தும் ஆடை பொறுத்து நமக்கு சிறப்பு உண்டு. ஆடையின் சிறப்பு என்ன என்பதை நம் அனுபவத்தில் அறிந்திருப்போம். ஆடையில் உள்ள அழுக்கை நீக்க நாம் செலவு செய்யும் காலத்தை இன்று வாஷிங் மெஷின் முழுவதுமாக குறைத்து விட்டன. இந்தியாவில் ஏராளமான வகைகளில் வாஷிங் மெஷின் கடைகளில் கிடைக்கின்றன. பலவகையான சேவைகளை தருகின்றன. இதில் எதை வாங்குவது? நம் தேவைக்கு எது பொருந்தும்? போன்றதகவல்களை காண்போம்.

    பொதுவாக வாஷிங் மெஷின் எத்தனை கிலோ துணிகளை துவைக்கின்றதோ அதை பொறுத்து அதன் அளவு தீர்மானிக்கப்படுகிறது. உதாரணம் 6 கிலோ, 8கிலோ என்ற வகையில் உங்கள் தேவைக்கு ஏற்ப ஒன்றை தேர்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தது வாஷிங் மெஷினில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று ஆட்டோமேட்டிக் மற்றொன்று மேனுவல். ஆட்டோமேட்டிக் மெஷின் என்பது துணிகளை போட்டதும் அதுவே துவைத்து நன்றாக பிழிந்து உலர்த்தி வெளியில் தள்ளிவிடும். மேனுவல் வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்து ஈரத்ததோடு கொடுக்கும் நீங்கள் அவற்றை கைகளில் எடுத்து பிழிந்து, உலர்த்தும் மற்றொரு தொட்டியில் போடா வேண்டும். இது தான் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் இரண்டுக்கும் உள்ள வித்யாசம்.

    இந்த இரண்டு பிரிவுகளில் பல வகைகளில் உள்ளன. அவை ஃபிரண்ட் லோடிங், டாப் லோடிங் ட்வின்-டப் அல்லது புல் ஆட்டோமேட்டிக் ஆகும். இவற்றின் நன்மை தீமைகளை அதாவது செலவாகும் தண்ணீர், மின்சாரம் மற்றும் துவைக்க எடுத்துக் கொள்ளும் நேரம் பற்றி தெரிந்து கொண்டால் எதை வாங்குவது என்பதில் தெளிவாக இருக்கலாம்.

    பிரண்ட் லோடிங் மற்றும் டாப் லோடிங் வாஷிங் மெஷின் - நன்மைகள் மற்றும் தீமைகள்.

    பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் என்பது துணிகளை மெஷினின் முன் பாகத்தின் வழியாக மெஷினுக்குள் அனுப்புவது. டாப் லோடிங் வாஷிங் மெஷின் என்பது துணிகளை மெஷினின் மேல் பக்கத்தின் வழியாக மெஷினுக்குள் அனுப்புவது. பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் மிக சிறப்பாக கைகளில் துவைப்பது போன்று துவைக்கும். இதில் துணிகளை மேலும் கீழுமாக புரட்டுவது கைகளில் துவைப்பது போன்றே இருக்கும். துணிகள் சிக்கிக் கொள்ளாது. துணிகள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கும். ஆனால் டாப் லோடிங் மெஷினில் உள்ள சென்ட்ரல் டர்பின் பிளேடுகள் தொடர்ந்து திசைகளை மாற்றி சுழன்று துணிகளை தேய்ப்பதால், துணிகள் விரைவில் பாழாகிவிடும். மேலும் துணிகள் சிக்கிக் கொள்ளும்.

    பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினில் துணிகளை உலர வைப்பதற்கு உள்ள ஸ்பின் பிளேடுகள் மிக அதிக வேகத்தில் சுழன்று துணிகளை உலர வைப்பதால் துணிகள் ஈரம் இல்லாமல் இருக்கும் விரைவாக காய்ந்துவிடும். மேலும் இதற்கு குறைந்த அளவு தண்ணீர் மற்றும் சோப் தூள் செலவாகும். இறுதியாக இது இயங்கும் போது ஓசை உண்டாக்காது அமைதியாக இருக்கும். ஆனால் டாப் லோடிங் வாஷிங் மெஷின் மிகுந்த ஓசையை உண்டாக்கும். டாப் லோடிங் வாஷிங் மெஷன் நிறைய தண்ணீர் செலவழிக்கும். பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினில் உள்ள ஒரே குறைபாடு டாப் லோடிங் வாஷிங் மெஷினை விட இதன் விலை அதிகம்.

    ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் இவற்றின் நன்மை தீமைகள். பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் ஆட்டோமேட்டிக் மெஷினாக தான் கிடைக்கும். இதில் பல அம்சங்கள் உண்டு. உதாரணம் ஸ்பின் வேகம், டெம்பரேச்சர் செட்டிங். இதன் விலையும் ஸ்பின் வேகத்தை பொறுத்து வேறுபடும்.

    மேனுவல் வாஷிங் மெஷின் டாப் லோடிங் மெஷினாகத் தான் கிடைக்கும். மேனுவல் வாஷிங் மெஷின் இரண்டு டப்புகளை கொண்டது. ஒரு டப்பில் துணிகளை துவைக்க வேண்டும், துவைத்த துணிகளை கைகளில் எடுத்து மற்றோரு டப்பில் போட்டு உலர்த்த வேண்டும். இதில் உள்ள ஸ்பின் பிளேடுகள் மெல்லியதாக இருப்பதால் எவ்வளவு வேகமாக சுழன்றாலும் துணிகளில் உள்ள ஈரத்தை முழுவதும் நீக்காது.

    நாம் முன்பே பார்த்தோம் வாஷிங் மெஷின் அளவு 6 கிலோ, 8 கிலோ என துணியின் எடை பொறுத்து தீர்மானிக்கப் படுகிறது. 6 கிலோ எடை உள்ள பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினில் 2 துணிகளை போட்டு துவைத்தால், துணியை உலர்த்தும் பொது ஸ்பின் ப்ளேடு அதி வேகத்தில் சுழல்வதால் மெஷின் அதிர ஆரம்பிக்கும். பெரும்பாலான நவீன பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினில் அதிர்வை கண்காணிக்கும் சென்சார் பொருத்தப் பட்டிருக்கும்.

    வாஷிங் மெஷினின் செலவுகள்

    6 கிலோ எடை உள்ள வாஷிங் மெஷினுக்கு 25 - 35 லிட்டர் தண்ணீர் செலவாகும். அடுத்தது மின்சாரம். வாஷிங் மெஷினில் உள்ள நீரை சூடாக்க மின்சாரம் தேவைப்படும். துணி துவைக்க செட் செய்யும் டேம்பேர்ச்சர் பொறுத்து மின்சாரத்தின் தேவை இருக்கும். நீங்கள் மின்சாரத்தை சேமிக்க நினைத்தால் 40 டிகிரி c யில் வைத்து துணி துவையுங்கள். பொதுவாக பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினுக்கு மற்ற எல்லா வாஷிங் மெஷின்களுக்கு தேவைப் படும் மின்சாரத்தை விட குறைவாக தேவைப்படும்.

    வாஷிங் மெஷினுடன் ட்ரயர் - நன்மை தீமை

    வாஷிங் மெஷினுடன் ட்ரயர் என்பது துவைப்பது மற்றும் உணர்த்துவது என இரண்டும் ஒன்றாக கொண்ட முழுமையான ஆட்டோமேட்டிக் மெஷின் ஆகும். இதற்கு பெரிய இடம் தேவைப் படாது. வாஷிங் மெஷினுடன் ட்ரயர் கொண்ட மெஷினில் துணிகளை போட்டு, தேவையான சோப் தூள் சேர்த்து ஆன் செய்தல் போதும் சில மணி நேரத்தில் உங்கள் துணி தூய்மையாக வெளியே வரும். நீங்கள் துணி துவைத்த பின் அந்த ஈரத்துணியை உலர்த்த வேறொரு டப்புக்கு மாற்ற வேண்டிய தேவை இல்லை.

    மேலே சொன்ன கருத்துக்களை மனதில் வைத்து, உங்களுக்கு பொருத்தமான வாஷிங் மெஷினை தேர்வு செய்யலாம்.

    வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். இதற்கு முக்கியமான காரணம் சமையல் அறையை வடிவமைப்பதில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான்.
    30 வயதைக் கடந்த பெண்கள் பலரும் முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலியால் அடிக்கடி சிரமப்படுவார்கள். வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். கழுத்தைத் திருப்பவே முடியாத அளவுக்கு வலி இருக்கும். அந்த வலி, மற்ற பாகங்களுக்கும் பரவும். இதற்கு முக்கியமான காரணம் சமையல் அறையை வடிவமைப்பதில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்க்கலாம்.

    பல வீடுகளில் சமையல் அறை மிகவும் சிறியதாக இருக்கும். இத்தகைய சமையலறை அமைப்பு, உணவுப் பொருட்கள் கீழே தவறி விழுவது, சூடான பாத்திரங்களில் கைகளை சுட்டுக் கொள்வது போன்ற விபத்துகள் ஏற்பட காரணமாகிறது. எனவே சமையல் அறையை போதிய இட வசதியோடு அமைப்பது நல்லது.

    கிருமி நாசினியான சூரிய ஒளி, சமையல் அறையில் நன்றாக படும்படி ஜன்னல்களை அமைக்க வேண்டும். சமையல் அறையை வண்ணங்கள் நிறைந்ததாக அமைத்துக் கொள்ளுங்கள். இதனால் அங்கு சமைப்பவர்களின் சிந்தனை மேம்படும். இதற்காக பார்வையை ஈர்க்கும் அழகான இயற்கைக் காட்சி நிறைந்த படங்களை ஒட்டலாம்.

    சமையல் அறையில் அமைக்கப்படும் ‘சிங்க்’, பாத்திரங்களைப் போட்டு சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தும் இடம் என்பதால் அகலமான, ஆழம் குறைந்த, பராமரிக்க எளிதாக இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். மின்சாதனங்களை இணைப்பதற்கான வசதிகளை சமையல் அறையில் திட்டமிட்டு ஏற்படுத்த வேண்டும். பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், மைக்ரோவேவ் அவன் போன்ற சாதனங்களுக்கு தனியாக சுவிட்ச் அமைப்பது அவற்றின் பயன்பாட்டை எளிதாக்கும்.

    சமையல் அறையில் போதுமான எண்ணிக்கையில் அலமாரிகள் இருப்பது அவசியம். சமையலறை ‘சிங்க்’ பகுதியில் இருந்து வெளிப்புறம் செல்லும் குழாயை கொசு வலை கொண்டு மூடுவதன் மூலம் எலி, கரப்பான் பூச்சி போன்றவை கிச்சனில் நுழைவதை தடுக்க முடியும்.

    சமையலறை வடிவமைப்பில் தரை பகுதிக்கு அடர் நிறங்களில் டைல்ஸ், மாடுலர் கிச்சனுக்கு வெளிர் நிறங்களில் மைக்கா அமைத்தால் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். சமையலறை அமைப்பில் சிங்க், அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றை சுலபமாக அணுகி பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். சமையல் மேடையின் உயரம், நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
    ×