search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kills"

    • கரூரில் சேலையில் தீப்பற்றி மூதாட்டி பலியானார்
    • இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் ராயனூர் அண்ணா நகரை சேர்ந்தவர் தெய்வமணி (வயது 56). இவர் தனது வீட்டில், மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது சேலையில் தீப்பற்றி படுக யமடைந்தார். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத் துவமனையில், சேர்க்கப்பட்ட தெய்வமணி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாடிப்பட்டி அருகே லாரி மீது கார் மோதியதில் தனியார் நிறுவன மேலாளர் உடல் நசுங்கி பலியானார்.
    • இந்த விபத்தால் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாடிப்பட்டிவாடிப்பட்டி அருகே லாரி மீது கார் மோதியதில் தனியார் நிறுவன மேலாளர் உடல் நசுங்கி பலியானார்.

    மதுரை பைக்காரா புது குளத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது35) கார் வாங்கி விற்கும் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வந்தார். இவருக்கு அமீனாபானு என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் திண்டுக்கல் சென்றுவிட்டு நேற்று மாலை காரில் மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வாடிப்பட்டி அருகே தனிச்சியம் மயானம் முன்பு கார் வந்தபோது எதிர்பாராத விதமாக கார் டயர் பஞ்சரானது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பை தாண்டி எதிர்புற சாலைக்கு சென்றது.

    அப்ேபாது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற லாரி

    மீது மோதி கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காருக்குள்ளேயே சிக்கிய சந்தோஷ்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வாடிப்பட்டி போலீசார் மற்றும் வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி காருக்குள் சிக்கியிருந்த சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    • பைக் மோதி ஒருவர் பலியானார்

    கரூர்:

    கரூர் நொய்யல் அருகே நாடார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 36). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது முத்தனூர் வெள்ளக்கல்மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ஊட்டி உமர் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய நாதன்(45) சாலையின் குறுக்கே திடீரென வந்ததால் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குமார் மற்றும் குறுக்கே வந்தவருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமார் மற்றும் விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஆரோக்கிய நாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பா ளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.




    • வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலியானார்.
    • தேவகோட்டை தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தளக்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமுத்து (38), தனியார் மில்லில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அமுதா (32), இவர்களுக்கு யோகேஸ்வரி (13), புவனேஸ்வரி (12) என 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று இரவு மணிமுத்து வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மணிமுத்துவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டி கிணத்து மேட்டிற்கு மோட்டார் போட சென்ற விவசாயியை பாம்பு கடித்தது.
    • இந்த சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த காமராஜ் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (47). விவசாயி. சண்முகசுந்தரம் சம்பவத்தன்று சிறுவன்காட்டுவலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டி கிணத்து மேட்டிற்கு மோட்டார் போட சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.

    இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோகனூர் தாலுகா லத்துவாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி பலி.
    • நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையை கடக்க முயன்றவர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா லத்துவாடி ஊராட்சி நல்லையகவுண்டன்புதூர் காலனியை சேர்ந்தவர் ராஜ் (வயது 55) . இவரது மனைவி பாவாயி (வயது 50) . நேற்று முன்தினம் இரவு பாவாயி மாரியம்மன் கோவில் அருகில் கழிப்பிடம் சென்றுவிட்டு நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது நாமக்கல்லில் இருந்து மோகனூர் நோக்கி சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திகுளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த சுரேஷ் குமார் (வயது 26) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பாவாயி மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள், மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே பாவாயி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சுரேஷ்குமார் காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாவாயி கணவர் ராஜ் மோகனூர் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனம் மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் பலியானார்.
    • மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை

    மதுரை கே.புதூர், டி.ஆர்.ஓ காலனியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கிருபாகரன் (வயது 22), ஆம்புலன்ஸ் டிரைவர்.

    கிருபாகரனுக்கு திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகில் உள்ள செவந்த ப்பட்டி சொந்த ஊர் ஆகும். இந்த நிலையில் அங்கு வசிக்கும் பாட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே பாட்டி யிடம் நலம் விசாரிப்ப தற்காக, கிருபாகரன் நேற்று காலை மோட்டார் சைக்கி ளில் துவரங்குறிச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.

    அங்கு பாட்டியை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி உள்ளார். பின்னர் கிருபாகரன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டார். மேலூர் அடுத்த வெள்ளரிப்பட்டி பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் கிருபாகரன் படுகாய மடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாலை விபத்தில் இறந்த கிருபாகரன் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து உள்ளார். இருந்தபோதிலும் தலைக்கவசம் உடைந்து பரிதாபமாக இறந்து உள்ளார்.

    சாலை விபத்தில் உயிரி ழந்த கிருபாகரனின் பெற் றோர் கண் பார்வை அற்ற வர்கள். தந்தை பொன்னு சாமி அரசு அச்சகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடைக்கு சென்ற கஜேந்திரன் அங்கு இருந்த‌ மின்சார எர்த் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்து‌ள்ளார்.
    • கஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள நாகப்ப‌உடையான்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் என்பவரின் மகன் கஜேந்திரன் (வயது 13). இவர் மருங்குளம் அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கஜேந்திரனின் வீட்டின் அருகே அவருடைய உறவினர் பால் கடை வைத்துள்ளார். அந்த கடைக்கு சென்ற கஜேந்திரன் அங்கு இருந்த‌ மின்சார எர்த் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்து‌ள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து கஜேந்திரன் மயங்கி விழுந்தார்.

    தகவலின்பேரில் வந்த 108 ஆம்புலன்ஸில் வந்த‌ மருத்துவ பணியாளர்கள் மயங்கி கிடந்த கஜேந்திரனை சோதனை செய்தனர். பின்னர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ‌ இடத்திற்கு வந்து மாணவர் கஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் ேபரில் வல்லம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மின்சாரம் தாக்கி பலியான ஊழியருக்கு நிதி உதவி-அரசு வேலை வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டனர்.

    சிவகங்கை

    தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியை சேர்ந்த வர் வினோத்குமார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கேங் மேனாக கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வந்தார். வினோத்குமாருக்கு திருமணமாகி மனைவியும், 34 நாட்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளது.

    நேற்று காலை வினோத்குமார் சிலை யான் ஊரணி கிராமத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்து வக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் வினோத்குமார் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடம் வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்த வினோத்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் செங்குளத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மனைவி மூக்கம்மாள் (வயது75). இவர் கடந்த 9-ந்தேதி சின்னசெங்குளத்தில் உள்ள மகன் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    மதுரை-விருதுநகர் நான்குவழிச்சாலையை மூக்கம்மாள் கடக்க முயன்றபோது அடையாளம்தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மூக்கம்மாள் நேற்று இறந்தார். இதுபற்றி மகன் கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் குரங்கு சாவடியில் சைக்கிளில் சென்றவர் கிரேன் மோதி பலியானார்.
    சேலம்:

    சேலம் சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 62).  இவர் இன்று காலை சேலம் குரங்குசாவடி தனியார் ஓட்டல் முன்பு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார் .

    தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். 
    சேலம் சன்னியாசிகுண்டு அருகே என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலியானார்.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை ராமநாதபுரம் ரஷிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெய்விஷ்வா (வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சீலநாயக்கன்பட்டி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சன்னியாசி குண்டு பிரிவு ரோடு அருகே  ெசன்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய ேமாட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது. 

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே அங்கு வந்த உறவினர்கள் ஜெய்விஷ்வாவின் உடலை பார்த்து கதறி அழுதனர் இந்த சம்பவம் அந்த பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×