search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kids Care"

    • பச்சிளம் குழந்தைகளுக்கு திரவ உணவுகளையே கொடுக்க வேண்டும்.
    • பருவகாலநிலைக்கு ஏற்ப குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்.

    குழந்தைகளின் அழுகை பசியை மட்டுமல்ல, வேறு பல விஷயங்களையும் உணர்த்தும். எதற்காக அழுகின்றன என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே, அவைகளின் அழுகையை நிறுத்தமுடியும்! குழந்தைகளின் அழுகை பசியை மட்டுமல்ல, வேறு பல விஷயங்களையும் உணர்த்தும். எதற்காக அழுகின்றன என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே, அவைகளின் அழுகையை நிறுத்தமுடியும்!

    விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று அழுதால், அதற்கு தூக்கம் தேவையாக இருக்கும். தோளில்கிடத்தி தட்டிக்கொடுத்தால் சில நிமிடங்களிலேயே தூங்கிவிடும். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று அழுவதற்கு துணிகள் ஈரப்பதமாக இருப்பதும் காரணமாக இருக்கும். சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடைகள் ஈரமாகிவிடும்போது அதை தெரியப்படுத்துவதற்காக அழும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்றால் அதன் வாயில் விரலை வைத்தவுடன் சப்ப தொடங்கிவிடும். அதை வைத்தே கண்டு பிடித்துவிடலாம்.

    பச்சிளம் குழந்தைகளுக்கு திரவ உணவுகளையே கொடுக்க வேண்டும். திட உணவுகளை கொடுப்பதாக இருந்தால் அதனை நன்கு மசித்து தர வேண்டும். திட உணவுகள் கொடுக்கும்போது தண்ணீர் கொடுக்கவேண்டியது மிக அவசியம். அப்போதுதான் உணவு நன்றாக ஜீரணமாகும். வெளி இடங்களுக்கு குழந்தைகளை தூக்கி செல்லும்போது அந்த சூழல் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பீறிட்டு அழும். வழக்கத்தைவிட அதிகமான சத்தத்தையோ, இரைச்சலையோ கேட்டாலும் குழந்தை அழுதுவிடும்.

    குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக பால் அல்லது திட உணவுகளை கொடுத்தால் வயிறு உப்பி, அந்த அவஸ்தையாலும் அழும். சாப்பிடும்போது வயிற்றுக்குள் காற்று அதிகமாக உட்புகுந்துவிடுவதும் அழுகைக்கு காரணமாக இருக்கும். ஆதலால் திட, திரவ ஆகாரங்களை சாப்பிட்டதும் தோளில் போட்டு ஏப்பம் வெளியேறும் வரை முதுகை தட்டிக்கொடுக்க வேண்டும்.

    பருவகாலநிலைக்கு ஏற்ப குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்க வேண்டும். அழகாக இருக்கிறது என்பதற்காக அதிக எடைகொண்ட செயற்கை ஆடைகளை அணிவிக்கக்கூடாது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள் குழந்தைகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். கூடுமானவரை காட்டன் துணிகளையே உடுத்த வேண்டும். ஆடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வாக இருக்கவேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது குழந்தைகள் சரிவர பால் குடிக்காது. அடிக்கடி அழுதுகொண்டிருக்கும். வழக்கமான அழுகை சத்தத்தில் இருந்து அது வேறுபடும். குழந்தை அழுதுகொண்டிருக்கும் சமயத்தில் தொட்டிலில் போட்டு ஆட்டுவதை தவிர்க்கவேண்டும். அது குழந்தைக்கு களைப்பையும், சோர்வையும் உண்டாக்கும். அரவணைத்து தோளில் கிடத்தி தட்டிக் கொடுத்து தூங்கவைக்க வேண்டும்.

    குழந்தையின் சருமத்தில் அரிப்போ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் அதனை அழுது வெளிப்படுத்தும். பெரும்பாலும் குழந்தைகள் அழுகை மூலம்தான் தங்கள் தொந்தரவுகளை வெளிப்படுத்தும். அதனை புரிந்து கொண்டு பெற்றோர் செயல்பட வேண்டும். சளி, இருமல், வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் குழந்தையின் அழுகுரலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். வயிற்றுப்போக்கால் அவதிப்படும் குழந்தைகள் வலியால் அழுது துடிக்கும்.

    உடலில் நீர்ச்சத்து வெளியேறுவதால் நாக்கு வறண்டு தாகத்திற்காகவும் அழும். அப்போது குழந்தையை டாக்டரிடம் கொண்டுசென்றுவிடவேண்டும். சில மருந்துகள் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது. வாந்தியோ, குமட்டலோ வருவது போலிருக்கும். அதனாலும் குழந்தை மருந்து சாப்பிட மறுத்து அழுது அடம்பிடிக்கும். அந்த சமயங்களில் டாக்டர்களிடம் ஆலோசித்து மாற்று மருந்து கொடுக்கலாம். குழந்தைகள் எப்போதும் தாயின் அருகாமையையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கும். தங்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அழுகையின் மூலம் வெளிப்படுத்தும்.

    • குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.
    • வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். குழந்தைகளா...! நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்.

    பருப்பு உணவுகள் : இரண்டு வயது குழந்தைக்கு பருப்பு சம்பந்தப்பட்ட உணவை தினமும் சேர்க்கும்போது, உடலில் புரதத்தின் அளவு சரியாக தக்க வைக்கப்படும். பருப்பு வகைகளில் பல வகைகள் இருக்கிறது. இருப்பினும் பாசிப்பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.

    ஆரோக்கியமான எண்ணெய்கள்: ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், சோயா பீன்ஸ், பிற நட்ஸ் வகைகள் மற்றும் அவற்றின் எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றை இரண்டு வயது குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாம்.

    பால் பொருட்கள் : பால் பொருட்களான பால், தயிர், பன்னீர் அனைத்தும் கால்சியம் நிறைந்தவை. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. உங்கள் குழந்தை லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால், கால்சியம் உட்கொள்ளும் இடைவெளியை ஈடுசெய்ய அவர் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    கேரட் : கேரட் 'வைட்டமின்-ஏ' நிறைந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கீரை, காலே மற்றும் பிற காய்கறிகளிலும் வைட்டமின்-ஏ அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.

    கோழி : கோழி மற்றும் பிற அசைவ உணவுகளில் எளிதில் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்து உள்ளது. இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு சக்தி அளிக்க உதவுகிறது. ரத்த சோகையைத் தடுக்கிறது.

    மீன் : அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டவைகளுள் (EFA) மீன் ஒரு நல்ல மூலமாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. இருதய அமைப்பை பலப்படுத்துகின்றன.

    சிட்ரஸ் பழங்கள் : எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவை வைட்டமின்-சி உள்ளடக்கத்திற்கு புகழ் பெற்றவை. வைட்டமின்-சி குறைபாடு ஸ்கர்வி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். வைட்டமின்-சி ஈறுகள் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் உதவுகிறது. மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றிலும் வைட்டமின்-சி உள்ளது.

    வாழைப்பழங்கள் : மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான கூறுகள் எனலாம். தசை வலிமைக்கு தேவையான சத்துக்கள் வாழைப்பழங்களில் காணப்படுகின்றன. இந்த நன்மை பயக்கும் பழத்தை தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் இணைத்து சாப்பிடலாம்.

    வைட்டமின்-டி : இது ஒரு உணவு அல்ல என்றாலும், இது உடல் உறிஞ்சும் ஒன்று. எனவே உடல் வளர்ச்சியில் வைட்டமின்-டி வகிக்கும் ஒருங்கிணைந்த பங்கைக் கருத்தில் கொண்டு இந்த பட்டியலில் சேர்த்திருக்கிறோம். சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.
    தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரத்தையொட்டி தஞ்சை ஆர்.கே. மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரு மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் உஷாநந்தினி பேசியபோது எடுத்த படம். டாக்டர்கள் ராஜராஜேஸ்வரி, ராஜேஸ்வரன், மணிராம்கிருஷ்ணா, எழிலன் ஆகியோர் அருகில் உள்ளனர்.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.

    ஆனால் தற்போது காலச்சக்கரத்தின் சுழல் வேகத்தில் மருத்துவத்துறை அபார வளர்ச்சியை பெற்று இருந்தாலும் குழந்தைகளை பாதிக்கும் நோயின் அளவும் அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. குழந்தை பிறந்த 7 நாட்களும், குழந்தைகளை தாய்மார்கள் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.

    இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் முதல் 21-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் பிழைத்து நோயற்ற வாழ்வு வாழ தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

    குழந்தை பிறந்த முதல் மாதம் தான் குழந்தையின் வாழ்க்கை முழுவதுக்குமான ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. அதிகமான குழந்தை பருவ இறப்பு விகிதம் கொண்ட காலகட்டமும் இதுவே ஆகும்.

    ஆரோக்கியமான குழந்தையே ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்து சமூகத்துக்கு பயன்பட முடியும். ஒரு நாட்டில் 1000 குழந்தைகள் பிறந்தால் அதில் 30 குழந்தைகளுக்கு குறைவான குழந்தை இறந்தால் மட்டுமே அந்த நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
    குழந்தைகளுக்கு மண்டை ஓடு மெலிதாக இருக்கும். செல்போனை குழந்தைகள் பார்க்கும் போது செல்போனின் கதிர்வீச்சு மூளையைதாக்கும் அபாய நிலை உள்ளது.
    தட்ப வெப்ப மாற்ற நிலை காரணமாக இந்தியா முழுவதும் தற்போது பலவித வைரஸ் கிருமிகள் பெருக்கம் ஏற்பட்டு ஒருவித காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பனிக்காலம் முடிந்தாலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதும் தற்போது பரவும் காய்ச்சலுக்கு ஒரு காரணம். இந்தக்காய்ச்சல் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் அதிகம் பாதித்து உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்கள் சிவப்பாக மாறி எரிச்சலை ஏற்படுத்துகிறது.

    குழந்தைகளுக்கு தொண்டைவலியும், உடல் வலியும் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கண் டாக்டரை சந்தித்து நோய் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக்காய்ச்சல் ஒரு வாரம் வரை இருக்கும். கண்ணுக்கு பாதிப்பு இருந்தாலும் பெரிய அளவில் இருக்காது. குழந்தைகளுக்கு கண்வலியுடன் இருமலும், சளியும் இருக்கும். இதனால் பெற்றோர்கள் தாமதிக்காமல் குழந்தைகள் டாக்டர் மற்றும் கண் டாக்டரை அணுகி மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பக்கூடாது. பள்ளி சென்று திரும்பியவுடன் குழந்தைகளை சுத்தப்படுத்தி தூய்மையான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

    இன்றைய காலக்கட்டத்தில் தொழிற்நுட்ப வளர்ச்சியில் செல்போன் சிறந்த கண்டுபிடிப்பாகும். இருப்பினும் இதில் சாதக பாதகங்களும் உள்ளன. செல்போனில் ’புளூலைட்’ உள்ளது. நீண்ட நேரம் செல்போனை பார்க்கும் போது புளுலைட் கண்களை பாதிக்கும். ஓய்வே இல்லாமல் செல்போனை பயன் படுத்துவதால் பார்வைக்கோளாறு, தலைவலி, மந்தமான பார்வை, ஒளியைக்காணும் போது கண்ணில் ஏற்படும் கூச்சம், கண்கள் சிகப்பு ஏற்படுதல் போன்றவை அடிக்கடி ஏற்படும்.

    கண்வலி, நிறங்கள் மங்கலாக தெரிதல். கண் உலர்ந்து காணப்படுதல், அதோடு கண் எரிச்சல் போன்றவை கண்களுக்குண்டான பிரச்சினைகளை உறுதிப்படுத்தும். நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளின் நிழலும் கண்ணின் பின்புறம் உள்ள விழித்திரையில் குவிகிறது. நீண்ட நேரம் செல்போனை பார்க்கும் போது கண்ணில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. செல்போனை இருளில் உபயோகிக்கக்கூடாது. வெளிச்சத்தில் தான் பயன்படுத்த வேண்டும். செல்போனை கண்களுக்கு அருகில் வைத்து பார்க்கக்கூடாது. தூரத்தில் வைத்து தான் பார்க்க வேண்டும். கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இதனால் கண்களில் கண்ணீர் வரும்.

    ஸ்மார்ட்போனை தூரத்தில் வைத்து தான் பார்க்க வேண்டும். இருளில் பார்த்தால் கண் அழுத்தம், தலைவலி ,கழுத்துவலி ஏற்படும். ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கேற்ப செல்போனை அதிகமாக பயன் படுத்தினால் அதனால் பல்வேறு பிரச்சினைகளை குறிப்பாக கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

    முன்பெல்லம் வீட்டில் குழந்தைகள் அழுதால் பெண்கள் தாலாட்டுப்பாடல்கள் பாடி சமாதானப்படுத்துவார்கள். தற்போதுள்ள கம்ப்யூட்டர் உலகில் குழந்தைகள் கையில் செல்போனில் தாலாட்டுப்பாடல். அல்லது கார்ட்டூன்களை போட்டு கொடுத்து விடுகிறோம். குழந்தைகளும் அழுகையை நிறுத்திவிட்டு செல்போனை கூர்ந்து கவனிக்கின்றன. இதில் இன்னொரு பிரச்சினையும் இருப்பதை மறந்து விடக்கூடாது.குழந்தைகளுக்கு மண்டை ஓடு மெலிதாக இருக்கும். செல்போனை குழந்தைகள் பார்க்கும் போது செல்போனின் கதிர்வீச்சு மூளையைதாக்கும் அபாய நிலை உள்ளது. சில சமயம் மூளையில் கட்டிக்கூட ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியம் கருதி அவர்களிடம் பெற்றோர்கள் செல்போனை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    டாக்டர் விஜய் சங்கர்
    திரவ உணவுகளை மட்டுமே உண்ணும் பச்சிளம் குழந்தைகளுக்கு, தூளி அளிக்கும் சீரான, மெல்லிய அழுத்தத்துடன் கூடிய கதகதப்பான உடல் சமநிலை, உணவு செரித்தலுக்கு ஏற்றதாக இருக்கும்.
    குழந்தையை 10 மாதங்கள் கருவில் சுமந்து பெற்ற அன்னைக்கும், குழந்தைக்கும் உள்ள தொடர்பு அறிவியலுக்கும் எட்டாதது. உணர்வுப்பூர்வமான அந்த தொடர்பு, அம்மா உபயோகப்படுத்திய பழைய பருத்தி சேலையில் கட்டப்பட்ட தூளியில் குழந்தை உறங்கும்போது உறுதிப்படுத்தப்படுகிறது.

    குழந்தையின் முதல் உறவான அம்மாவின் வாசனையுடன் அந்த குழந்தை தூளியில் உறங்குவதால், தனிமைப்படுத்தப்பட்ட உணர்வை அது அடைவதில்லை.

    தூளி, பிஞ்சு குழந்தையின் மென்மையான எலும்புகளுக்கு மெல்லிய அழுத்தத்தை அளிப்பதுடன், சீரான உடல் வளர்ச்சிக்கும் ஏற்றதாக அமைகிறது. அதனால் உடலில் வலி ஏற்படாமல் குழந்தை உறங்கும்.

    திரவ உணவுகளை மட்டுமே உண்ணும் பச்சிளம் குழந்தைகளுக்கு, தூளி அளிக்கும் சீரான, மெல்லிய அழுத்தத்துடன் கூடிய கதகதப்பான உடல் சமநிலை, உணவு செரித்தலுக்கு ஏற்றதாக இருக்கும். தூளியில் உறங்கும் குழந்தையின் முதுகெலும்பு நேர்கோட்டில் சீராக இருக்கும்.

    தூளியில் இடப்பட்ட குழந்தை முன்னும் பின்னுமாக ஆட்டப்பட்டு உறங்க வைக்கப்படும்போது அம்மாவின் பாட்டு சத்தம் அதன் செவித்திறனை வளர்க்க உதவுகிறது. மேலும் அன்னையின் பனிக்குட நீரில் நீந்திய அனுபவம் பெற்ற குழந்தை தூளியில் அம்மாவை பார்த்தபடியே முன்னும் பின்னுமாக ஆடி அதே அனுபவத்தை பெறுகிறது.

    அத்துடன் தனது முதல் உறவான அன்னையை பார்த்தபடியே தூங்கவும் முயற்சிக்கும். அது கண்களில் பார்வை திறன் நிலைத்தன்மையுடன் அமைவதற்கு ஏற்ற பயிற்சியாகவும் அமைகிறது.

    தூளியில் உறங்கும் குழந்தைகளுக்கு வெளிப்புற வெளிச்சம் காரணமாக கண்கள் கூசுவதில்லை. வெளியில் ஒளிரும் மின்விளக்கின் வெளிச்சம் தூளிக்குள் விழுவதில்லை. தூளிக்குள் உள்ள நிழல் குழந்தையின் அமைதியான உறக்கத்துக்கு ஏற்றதாக அமைகிறது.

    ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நடக்கும் அழகைக் காண உவகையோடு காத்திருப்பது இயல்பே ஆகும். குழந்தை நடக்க தொடங்கும் போது இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.
    ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நடக்கும் அழகைக் காண உவகையோடு காத்திருப்பது இயல்பே ஆகும். உங்கள் குழந்தை நடக்கக் கற்றுக் கொண்ட பின் அவனது துள்ளல் நடையும், ஓட்டமும் உங்களை மிகவும் பூரிப்பு அடையச் செய்யும்.

    1. முதல் முயற்சியாக உங்கள் குழந்தையை எந்த ஒரு பிடிமானமும் அல்லது சாய்மானமும் இல்லாமல் உட்காரச் செய்யுங்கள். அப்படிச் செய்வதால் உங்கள் குழந்தையின் முதுகுத் தண்டில் பலம் ஏற்படுவதோடு, குழந்தை நிலையாக இருக்க கற்றுக் கொள்ளும். உடல் சமநிலையைக் குறித்த புரிதல் அவன் மூளையில் மெல்லப் பதியத் தொடங்கும். மேலும் உடம்பில் உள்ள பல தசைகள் பலம் பெற்று,குழந்தை நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் கூடி வரும்.

    2. உங்கள் குழந்தையின் நடக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சற்று தூரத்தில் நின்றபடி ஏதாவது பொருட்களை அசைத்துக் காட்டுங்கள். இல்லாவிடில் அவன் மிகவும் விரும்பி நேசிக்கும் பொருளைச் சற்று தெலைவில் அவன் கவனத்தை ஈர்க்கும் விதமாக வைத்து விடுங்கள். அதை அவனுக்கு எடுத்துக் கொடுக்காமல் அவனே வந்து எடுத்தக் கொள்ள ஆர்வத்தைத் தூண்டுங்கள்.’எங்கே இதைப் பிடி!எங்கே அதை எடுத்து வா!’என்பது போன்ற உற்சாகமான வாசகங்களைக் கூறுங்கள். இவ்வாறு செய்யும் போது குழந்தைக்கு அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று எதையாவது பிடித்துக் கொண்டபடியே அந்தப் பொருளை நோக்கி நடக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகும்.

    3. உங்கள் குழந்தைக்குப் பிடிமானம் கொண்ட பாரம்பரிய நடை வண்டியை வாங்கிக் கொடுங்கள். அதை விடச் சிறந்த நடைப்பயிற்சி சாதனம் உலகில் வேறு இல்லை. அதைப் பிடித்துக் கொண்டு நடக்கும் ஆர்வத்தைக் குழந்தைக்கு ஏற்படச் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது அவனே யாருடைய உதவியும் இன்றி நடக்கத் தொடங்குவான்

    4. உங்கள் குழந்தை நடக்கத் தொடங்கும் போது அவனை வெறும் காலில் நடக்கத் தூண்டுங்கள். காலணிகள் போன்று எதுவும் அணியாமல் நடப்பது நல்லது. பாதங்களை மறைக்கும் காலணிகளை அணிவதால், குழந்தைக்கு தன் பாதங்களின் இயக்க நிலைகளைக் கவனிக்கும் வாய்ப்பு அற்றுப் போகும். குழந்தைகள் கண்களின் வழியே விசயங்களைக் கவனித்து கற்றுக் கொள்கிறார்கள். அதற்கு நாம் தடை விதிக்கக் கூடாது. மேலும் வெறும் கால்களோடு நடக்கும் போது, அவனது பாதங்களுக்கு பூமியோடு நல்ல பிடிமானம் ஏற்படுத்துவதோடு சிறப்பான முறையில் நடை பழகும் சூழல் அதிகரிக்கும். குழந்தையின் பாதங்கள் பூமியில் தொடர்பு கொள்ளும்போது உடலுக்குச் சரியான சமநிலை நூறு சதவீதம் கிட்டும். கூடுதலாகக் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் உடல் முழுவதும் இருக்கும் தசைகள் வேலை செய்யத் தொடங்கும்.



    5. முழுமையாக உங்கள் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடைப் பயிற்சி தராமல், அவன் பின் நின்று கொண்டு தேவைப் படும் போது மட்டுமே அவனுக்கு உதவி செய்யுங்கள். இப்படிச் செய்யும் போது அவன் சமநிலையைப் பெற முயற்சி செய்வான்.நீங்கள் அருகில் இருப்பது அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும்.தற்சார்பு நிலைக் குறித்த புரிதல் குழந்தைக்கு மேலோங்கும்.

    6. உங்கள் குழந்தைக்கு நடக்கக் கற்றுக் கொடுக்கும் போது வீட்டில் ஆங்காங்கே இருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் பொருட்களை கைகளுக்கு எட்டாத் தூரத்தில் வைப்பது நல்லது. கூர்மையான பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் போன்றவைகளை உயரமான இடத்தில் மாற்றி வைக்கலாம். பெற்றோர்கள் இந்த விசயத்தில் எச்சரிக்கையோடு இருப்பது பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தாமல் தவிர்க்கும்.

    7. பாதுகாப்பான மற்றும் உங்கள் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பதாலும் உங்கள் குழந்தை வேகமாக நடக்கத் தொடங்குவான். குழந்தைகள் பொதுவாகவே நாய்க் குட்டி, ஆடு, கோழி போன்ற செல்லப் பிராணிகளிடம் அன்போடு பழகுவார்கள். நீங்கள் வீட்டில் எதையாவது ஒன்றை வளர்க்க முனையும் போது குழந்தை அதோடு ஆர்வத்தோடு பழகத் தொடங்கி, பின் விளையாடத் தொடங்குவான். இதனால் அவன் வேகமாகவும் நடக்கத் தொடங்குவான்

    8. இது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் குழந்தையின் எலும்புகள் மெல்லியதாகவும் பலம் குறைந்தும் இருக்கும். அவன் திடமாக நடக்க அதிக சக்தி தேவை. இதனால் நீங்கள் உங்கள் குழந்தைக்குப் போதிய சத்தான உணவைத் தர வேண்டும். அப்படி செய்வதால் அவன் அதிக சக்தி மற்றும் பலம் பெற்று சுறுசுறுப்பாகவும் திடமாகவும் அதிக நேரம் சோர்வடையாமலும் நடப்பான். ஒரு சில குழந்தைகள் நடைபழக தாமதம் ஏற்பட இதுவே மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.

    பெற்றோர்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து விசயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
    குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த இந்த வழிகளை பின்பற்றுங்கள்.
    கட்டை விரல், ஆள்காட்டி விரல் அல்லது மற்ற விரல்கள் இப்படி ஏதேனும் ஒரு விரலைக் குழந்தைகள் வாயில் வைத்து சூப்பத் (thumb sucking or Finger sucking) தொடங்குகின்றனர். குழந்தைகள் இப்படி செய்வதைப் பார்க்க ஆரம்பத்தில் அழகாக இருக்கும். ஆனால், பிறகு அதே பழக்கம் தொடர்ந்தால் குழந்தை வளர்ந்த பிறகு மிகவும் சிரமமாக தெரியும்.

    சூழலை எதிர்நோக்குவதற்கு குழந்தைகள் தடுமாறும். குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. 7 மாதத்திற்கும் பிறகும் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்தாவிட்டால், மேல் தாடையின் பற்கள் வெளியே நோக்கி வளரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் குழந்தைகளின் முக அழகையே கெடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே 8-10 மாதங்களுக்குள் குழந்தைகள் கை சூப்பும் பழக்கத்தை விடும்படி செய்ய வேண்டும்.

    குழந்தைகள் கை சூப்ப சில காரணங்கள்

    குழந்தைகள் விரல் சூப்புவது சாதாரணமான ஒரு நிகழ்வுதான். குழந்தைகள் பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க மார்பகங்களை சூப்பிதான் பால் அருந்துகின்றனர். இது அவர்களின் இயற்கையான செயல்பாடு. இப்படி கை சூப்பும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும், பாதுகாப்பாக உணர்வதாகவும், சௌகர்யமான ஒரு சூழல் இருப்பதாகவும் குழந்தைகள் நினைத்துக் கொள்கின்றனர்.

    சோர்வாக இருக்கும்போது
    பசி உணர்வு வந்தவுடன்
    போர் அடிக்கும் சூழலில் இருந்தால்
    யாரும் கவனிக்காத சூழலில் இருந்தால்
    உடல்நலம் சரியில்லை என்றாலோ
    மகிழ்ச்சியான மனநிலை இல்லை என்றாலோ
    சில குழந்தைகளுக்கு விரல் சூப்புவது ஸ்ட்ரெஸ் பஸ்டர் போல உணரலாம்.

    இது போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் விரல் சூப்பத் தொடங்குகின்றனர்.

    விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த வழிகள்

    * எதனால் உங்கள் கை சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறது எனக் கவனியுங்கள்.

    * பசி, போரடிக்கும் உணர்வு, கவனிக்காமல் இருப்பதாலா, சரியான நேரத்துக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதாலா, தூக்கம் வருகிறதா எனக் கவனியுங்கள். பிரச்னை எது எனக் கண்டறிந்தாலே சரி செய்து விடலாம்.



    * போரடிக்கும் உணர்வாலோ கவனிப்பு இல்லாத சூழலால் கை சூப்பும் பழக்கத்தை மேற்கொண்டால், விரல்கள் மூலம் செய்யும் விளையாட்டுகளைக் குழந்தைக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்து கை சூப்பும் பழக்கத்தை மறக்க வைக்கலாம்.

    * கை சூப்புவதை நீங்கள் பார்த்தால், மெதுவாக மென்மையாக கை சூப்ப கூடாது எனச் சொல்லுங்கள். சத்தம் போடவோ மிரட்டுவதோ அடிப்பதோ கூடாது.

    * கை சூப்பும் நேரத்தில் குழந்தையின் கவனத்தைத் திருப்ப விளையாடுவது, வேடிக்கை காண்பிப்பது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

    * தனியாக, பாதுகாப்பில்லாத உணர்வைப் போக்கி விட்டாலே குழந்தைக்கு கை சூப்பத் தோன்றாது.

    * கொஞ்சம் அதிகமாக விரல் சூப்பும் பழக்கம் கொண்ட குழந்தைகளை அடித்து மிரட்ட கூடாது. வீட்டில் மட்டும் கை சூப்ப அனுமதித்து, வெளி இடங்களில் கை சூப்பத் தவிர்ப்பதை அறிவுரையாக சொல்ல வேண்டும்.

    * விரல் சூப்புவதை குழந்தைகள் நிறுத்திவிட்டால் அவர்கள் கேட்கும் பொருளை வாங்கித் தருவதாக சொல்லி அதையும் நிறைவேற்ற வேண்டும்.

    * விரல் சூப்பும் குழந்தைகளின் வாயில் அடிப்பது, கேலி செய்வது, மற்றவர்களிடம் சொல்லி காண்பிப்பது இப்படியான செயல்களைத் தவிருங்கள்.

    * குழந்தைகள் வாயில் விரல் வைத்தால்… ‘வாயில் விரல் வைத்திருக்கிறாய்’ என ஞாபகப்படுத்தி விரலை எடுக்க சொல்ல வேண்டும்.

    * எந்தக் காரணத்துக்காகவும் குழந்தைகளின் கையில் நாற்றமடிக்கும் மருந்துகளையோ எண்ணெய்களையோ பூசவே கூடாது.

    * குழந்தைக்குப் பொறுமையாக, மென்மையாக, அன்பாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். வாயில் கை வைக்க கூடாது. கிருமிகள் உள்ளே சென்று உடலைப் பாதிக்கும். மற்றவர்கள் கேலி செய்ய கூடும் என நிதானமாக எடுத்துச் சொல்லுங்கள்.

    * எவ்வளவு அன்பாக சொல்லியும் குழந்தைகள் கை சூப்ப நிறுத்தவில்லை என்றால் குழந்தைகள் நல மருந்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது நல்லது. 
    குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கான விளக்கங்களை அளிக்கும் பதிவுதான் இது.
    குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கான விளக்கங்களை அளிக்கும் பதிவுதான் இது.

    தாய்ப்பாலிலே 85% நீர்ச்சத்து இருப்பதால், தனியாகக் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 6 மாத குழந்தைக்கு மினரல் வாட்டர், நிலத்தடி நீர் - குடிநீர் போன்ற எதுவும் தேவையில்லை.

    6 மாதம் முடியாத குழந்தைகளுக்கு, தண்ணீர் கொடுத்தால், தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளும் ஃபார்முலா மில்கில் உள்ள ஊட்டச்சத்துகளும் உறிஞ்சப்படும். உடலில் ஊட்டச்சத்துகள் சேராமல் தடுக்கப்படும். வயிறு விரைவில் நிறைந்துவிடும். இந்த உணர்வால் குழந்தைகள் தாய்ப்பாலை சரியாகக் குடிக்க மாட்டார்கள்.

    உடலில் உள்ள சோடியத்தை அதிக தண்ணீர் கரைத்து விடலாம். உடலில் எலக்ட்ரோலைட் சீரற்ற அளவில் இல்லாமல் போகலாம். திசுக்கள் வீக்கமடையும் பிரச்சனைகளும் வரலாம்.

    குழந்தையின் சிறுநீரகங்கள் அந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது. அதிகபடியானத் தண்ணீர் குழந்தையின் முகத்தை வீக்கமடைய செய்யும். கண்களை சுற்றி பஃபினெஸ் பிரச்னை வரலாம்.

    வெப்ப காலமாக இருந்தாலும், பனிக்காலமாக இருந்தாலும் குழந்தைக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தாய்ப்பாலிலே நீர்ச்சத்துகளே போதும். அதுவே தண்ணீர் தாகத்தை தணிக்கும்.

    ஃபார்முலா மில்க் குடிக்கும் குழந்தையாக இருந்தாலும், 6 மாதம் வரை தண்ணீர் தனியாகக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சில குழந்தைகள் அதிகமாகத் தண்ணீர் குடித்தால், வாட்டர் இன்டாக்ஸிஃபிகேஷன் (Water intoxification) எனும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

    6 மாதம் ஆன குழந்தைக்கு, தண்ணீர் கொடுக்கலாம். குழந்தைக்கு தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் கொடுப்பது நல்லது.6-12 மாதங்கள் வரை, குழந்தை கேட்கும் போதெல்லாம் தண்ணீர் கொடுக்கலாம்.

    ஒரு வயது ஆன பிறகு, தண்ணீர் நன்றாகவே குடிக்க வைக்கலாம். குழந்தையை தண்ணீர் குடிக்க சொல்லி நீங்களும் நினைவுப்படுத்தலாம். குழந்தையின் 3 வயது வரை, வெந்நீரை கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொடுப்பது நல்லது. அதன் பிறகு பெரியவர்கள் குடிக்கும் தண்ணீரே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
    தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.
    குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.

    குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனியுங்கள். அந்த தூக்க நேரத்தில் அதிகமாக குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் தான் இருக்க வேண்டும். தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டினால் குழந்தைகள் தூங்காமல் சுறுசுறுப்பாகி விடுகின்றனர். பின்னர் தூக்கம் கலைந்துவிடும். தூங்கும் நேரத்திலும் அதற்கும் முன்னும் குழந்தையிடம் விளையாட கூடாது.

    சிறு குழந்தைகள் நன்கு பால் குடித்தால் தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும். பால் குடித்து கொண்டே தூங்கிவிடும் குழந்தையை லேசாக கால் கட்டைவிரலை ஆட்டிவிட்டாலோ சுண்டிவிட்டாலோ குழந்தை மீண்டும் பால் குடிக்கும். பால், குழந்தைக்கு போதுமானதா எனத் தாய் கண்டறிந்த பின் குழந்தையை தூங்க விடலாம். சரியாக பால் குடிக்காத குழந்தைகள் பின் சீக்கிரமே பசிக்காக அழத் தொடங்கிவிடும்.

    * இரவில் வயிறு நிறைய பால் கொடுப்பது நல்லது. இதனால் குழந்தைகள் நன்கு தூங்கும்.

    * தாய்ப்பால் கொடுப்பவர்கள், புட்டிப்பால் தருபவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம். அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள லைட்களைப் பொருத்திய ரூமில் பால் தரலாம்.

    * வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் குழந்தையை தூங்க வைக்க கூடாது.

    * குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றகூடாது. ஒரே இடத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    * லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம்.

    * சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும்.

    * மெதுவாக குழந்தையை வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும்.

    * குழந்தையை தூங்க வைக்க முதுகில் லேசாக தட்டி கொடுக்கலாம்.

    * ஈரத்துணி, ஈர நாப்கினை மாற்றி உலர்ந்த துணி, நாப்கின்னை அணிந்து தூங்க வைத்தால் குழந்தை உடனே தூங்கும்.
    குழந்தைகளுக்கு சரும பிரச்னைகள் எதுவும் வராமல் இருக்க குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க வேண்டியதும் முக்கியம். அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
    குழந்தையின் சருமத்தில் நேரடியாக படும் துணியை மிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். கிருமிகள் இல்லாத துணியாக இருப்பின், குழந்தைக்கு கிருமி தாக்குதல், சரும பிரச்னைகள் போன்றவை பெரிதும் தாக்காமல் தடுக்கலாம்.

    புதிய ஆடைகளை குழந்தைக்கு அணிவிப்பதற்கு முன் கட்டாயம் துவைத்துவிட்டு குழந்தைகளுக்கு அணிவிப்பதுதான் சரி. துவைக்காத புத்தம் புதிய ஆடையோ துவைக்காத ஆடையோ குழந்தைக்கு அணிவித்தால் பிரச்னை ஆரம்பிக்கும். சரும பிரச்னைகள் வரலாம். துணியில் உள்ள தூசு, ஸ்டார்ச், கெமிக்கல்கள், துணியை தயாரிக்க பயன்படுத்தும் நிறங்கள் ஆகியவற்றால் பாதிப்பு வரும்.

    குழந்தை துணிகளுக்கு என பிரத்யேக டிடர்ஜென்ட் பவுடர்கள் எதுவும் தேவையில்லை. குடும்பத்தில் அனைவருக்கும் பயன்படுத்த கூடிய அதே டிடர்ஜென்ட் பயன்படுத்தினாலே போதும்.

    குழந்தைகளின் துணியில் நீங்காத கறை படிந்துவிட்டால், அதை துவைப்பதற்கு முன் அந்த கறையை நீக்கி விட்டு குழந்தையின் துணியை துவைப்பது நல்லது. இதனால் துணியும் புதிதாகவே இருக்கும்.

    குழந்தையின் துணிகளை துவைக்கும்போது மற்றவர்களின் துணியுடன் சேர்த்து ஊறவைத்து துவைக்க கூடாது. அதுபோல் மெஷினில் மற்றவர்களது துணியுடன் குழந்தைகளுடைய துணியையும் போட வேண்டாம்.

    பெரியவர்களது துணியில் உள்ள கிருமிகள், குழந்தைகளின் துணியில் பரவும் என்பதால் குழந்தைகளின் துணியை தனியாக துவைப்பதே சரி.

    1 - 2 துளிகள் கிருமி நீக்கும் திரவங்களை துவைக்கையில் பயன்படுத்தலாம்.



    குழந்தையின் துணியை கட்டாயமாக வெயிலில் காயவைத்து உலர்த்த வேண்டும். வீட்டுக்குள்ளே குழந்தையின் உலர்த்த கூடாது. இதனால் கிருமிகள் நீங்காது.

    சூரிய வெளிச்சம் மற்றும் சுத்தமான காற்றும் குழந்தைகளின் துணியில் பட வேண்டும் என்பதால் வெயில் வரும் இடங்களில் துணியை உலர்த்த வேண்டியது அவசியம்.

    குழந்தையின் துணியை துவைப்பதற்கு முன் இளஞ்சூடான தண்ணீரில் துணிகளை ஊறவைக்க வேண்டியது அவசியம். இதனால் தூசு, கிருமிகள் ஆகியவை எளிதில் நீங்க உதவும்.

    தனியாக துவைத்த குழந்தைகளின் துணிகளை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டியதும் முக்கியம்.

    மழை காலத்தில் குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க, கிருமிகளை நீக்க அயன் செய்வது சிறந்த வழி.

    முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளை மட்டுமே அணிவிப்பது நல்லது.

    குழந்தையின் துணியை துவைத்து முடித்த பின் இறுதியாக கிருமி நீக்கும் திரவங்களை தெளித்த நீரில் அலசுவது நல்லது.
    உண்மையில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பல்வேறு நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொண்டால், நீங்களும் ஒரு மிகச்சிறந்த பெற்றோர்தான்!
    பொதுவாக எல்லா பெற்றோர்களும் தத்தம் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். அவர்களில் ஒரு தரப்பினர், தங்களால் விதவிதமான விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் வாங்கித் தர முடியும் என்பதால் அதை வாடிக்கையாகவும் கொண்டு உள்ளனர்.

    மேலும், இவர்கள் தங்களுடைய குழந்தைகள், அவரவர் விருப்பமானவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி தந்து, முக்கியமான தருணங்களில், அவர்களாகவே, தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.

    மற்றொரு தரப்பு பெற்றோரோ, தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.

    இதற்காக, இவ்வகை பெற்றோர் தங்களுடைய வாரிசுகளிடம், கண்டிப்பு மிக்கவராக நடந்து கொள்கின்றனர். இரண்டு தரப்பு பெற்றோரும்/குடும்பத்தினரும் தத்தம் குழந்தைகளை வளர்த்தெடுப்பதன் பின்னணியில், தனித்தனி பாணிகளைக் கையாண்டாலும் ஒருவிதத்தில் இணைந்துப் போகத்தான் செய்கின்றனர்.

    அவர்களை அறியாமல் செய்திடும் ‘தவறுகள்’ தான் அந்த இணைப்புத் தளம். அந்த தவறுகள் என்னென்ன என்பதையும், அவற்றால், எந்தெந்த மாதிரியான வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்பதையும் சற்று காண்போம்நேரம் செலவிடுவதை விரும்பாத மனப்பான்மைஎந்தவொரு பெற்றோரும் குழந்தைகளுடன் விளையாடியும், கதைகள் சொல்லியும் பொழுதைப் போக்கவே விரும்புகின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக, பெற்றோர் இருவருக்கும் வீட்டில் குறைவான ஓய்வு நேரமே கிடைக்கிறது.

    இத்தகைய சூழலில், குழந்தை விளையாடுகிற நேரங்களில் பெற்றோர் தங்களது பணிகளைச் செய்து கொள்வது வாடிக்கை ஆகிவிட்டால் ஏற்கனவே, வளரத் தொடங்கிய குழந்தை தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க ஆரம்பிக்கிறது. கடந்துபோன மணித்துளிகளை மீட்டெடுக்க எந்தவொரு வழியும் கிடையாது.



    எனவே, மென்மையான அரவணைப்பு, தலையை வருடிக் கொடுத்தல் என உடலளவில் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யாமல், மனதளவிலும் நெருங்கி இருங்கள். அப்போதுதான் நீங்கள் சேர்ந்து இருக்கும் பொழுதுகளை ரசித்து அனுபவிக்க முடியும்.

    மழலை போன்ற நெருக்கமான உறவுகளைக் கட்டித்தழுவி கொஞ்சுதல் நல்ல அனுபவம் என்றாலும், ஒருசில பெற்றோர் சில நேரங்களில் இதைச் செய்ய விரும்புவது இல்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பழமைவாதம் அல்லது வழக்கத்தில் இருந்து மறைந்தவை காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன.

    நீங்கள் மகள்-மகன் இருவருடன் படைப்பாற்றலை உருவாக்கும் கேம்ஸ்களை விளையாடுவதால், ‘அவர்கள் தலைசிறந்த கலைஞனாகவோ, இசை மேதையாகவோ வருவார்கள்’ என நாங்கள் சொல்லவில்லை. அதே வேளையில், அவ்வதிசயம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு பெற்றோராக, தாங்கள் ஓடுதல், கால்பந்தாட்டம், சிலம்பம், நீச்சல், ஆடல்-பாடல் என பல்வேறு செயல்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்; இவ்வாறு செய்வதால், அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது? எந்தெந்த விளையாட்டுக்களில் அவர்கள் தன்னிகரற்று உள்ளார்கள் என்பதை நீங்கள் கண்டறிய முடியும். மேலும், எதிர்காலங்களில் குழந்தைகளுடைய ஆற்றலை வளர்த்தெடுக்கும் விதமாகவும் உங்களால் செயல்பட முடியும்.

    இரண்டாவதாக, எந்தவொரு தனித்திறனைத் தூண்டும் விளையாட்டாக இருந்தாலும், உதாரணத்துக்கு, அவர்களுடன் சேர்ந்து உரக்கப் படித்தல், பொம்மைகள் வைத்து விளையாடுதல் போன்ற எதுவாக இருந்தாலும், குழந்தைகளுடைய அறிவாற்றல், கற்பனைத்திறன் மற்றும் மொழியறிவை வளரச் செய்யும். இறுதியாக, குழந்தைகளின் ஆற்றலுடன் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும். மேலும், நீங்கள் இருவரும் சேர்ந்து சிலவற்றை செய்ய இது போதுமானதாக இருக்கும்.

    குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெற்றோர், தத்தம் வாரிசுகளின் திறமைகளை கவனிக்காமல் இருந்ததற்கு வருத்தம் கொள்வார்கள். இருப்பினும், ஒரு சில திறமைகள் மிகச்சிறு வயதிலேயே கண்காணிக்கப்படும்போது, குழந்தைகள் புதுப்புது விளையாட்டுக்களில் ஈடுபடுவதை முயற்சி செய்வார்கள்; மேலும், குறுகிய காலத்துக்குள் வாசிக்கவும் செய்வார்கள்.
    பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இனி ஜூன் மாதம் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படும். இந்த கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட மாணவ- மாணவிகள் தயாராகி விட்டனர். இந்த விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். நெருக்கடியான மனநிலையில் இருந்து விடுபட்டு உற்றார், உறவினர்களிடம் நெருங்கி பழக ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    செல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்துக்கொண்டு மாணவ-மாணவிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அது அவர்களிடம் மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? என்பதையும் அறிந்து வைத்திருப்பது உத்தமம். ஏனெனில் அதில் நிறைய பிரச்சினைகள், ஆபத்துகளும் உள்ளன.

    இதில் இருந்து விடுபட நண்பர்களுடன் கூடி விளையாடி மகிழ வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும் அதிலும் உற்சாகம் கிடைக்கும். பொழுது போக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விடுத்து மாணவ-மாணவிகளை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது.

    அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசைவார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசுப்பொருட்கள், உணவுப்பொருட்கள் என எந்த பொருட்களை அறிமுகம் இல்லாத நபர்கள் வாங்கிக்கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

    வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? என்பது உள்ளிட்ட தகவல்களை வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்களிடம் தவறாமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் சென்றிருக்கும் போது சுவையான, சுவாரசியமான சம்பவங்கள், சோக சம்பவங்கள் என எது நடந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது. பெற்றோர்கள், உறவினர்களின் ஆதரவுடன் தான் மாணவ-மாணவிகள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை தெரிவித்தால் தான், அதற்கு பெரியவர்களால் தீர்வு காண முடியும். தவறுகளை மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

    மாணவ-மாணவிகள் விடுமுறையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு ஏதாவது நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்டக்கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    விடுமுறை காலம் என்பது மாணவ-மாணவிகளுக்கு பிடித்தமான, குதூகலமான காலம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவ-மாணவிகள் கற்றுக்கொள்ளலாம். தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உறவினர்களுடன் பழகி அன்பை பெறலாம். கோடை விடுமுறை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
    ×