search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kichadi"

    • ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவும்.
    • ஓட்ஸில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1/2 கப்

    பாசி பருப்பு - 1/2 கப்

    வெங்காயம் - 1

    இஞ்சி - 1

    பச்சை மிளகாய் - 2

    கேரட் - 1

    பீன்ஸ் - 10

    பச்சை பட்டாணி - 1/4 கப்

    பெருங்காய தூள் - சிறிதளவு

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    உப்பு, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    நெய் - 2 தேக்கரண்டி

    பட்டை - 1துண்டு

    சீரகம் - 1 தேக்கரண்டி

    தண்ணீர் - 3 கப்

    செய்முறை

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசி பருப்பை அரை மணிநேரம் ஊறவைக்கவும்

    கடாயில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, சீரகம் போட்டு தாளித்த பின்னர், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கேரட், பீன்ஸ், பட்டாணி, பெருங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    காய்கறிகள் வதங்கியபின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் ஊறவைத்த பருப்பு, ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

    உப்பு சரிபார்த்து, மேலும் 10 நிமிடம் வேகவிடவும்.

    இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் கிச்சடி ரெடி.

    • ரவை கிச்சடிக்கு மாற்றாக இந்த கிச்சடி செய்யலாம்.
    • குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    பாஸ்மதி அரிசி - 1 கப்

    பாசி பருப்பு - 1 கப்

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

    எண்ணெய் - 2மேசைக்கரண்டி

    நெய் - 2 மேசைக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    பிரியாணி இலை - சிறிதளவு

    பட்டை - 1 சிறிய துண்டு

    இஞ்சி - 1 துண்டு

    பூண்டு - 10 பற்கள்

    பச்சை மிளகாய் - 3

    வெங்காயம் - 2

    தக்காளி - 2

    உப்பு - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

    தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

    பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

    நெய் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

    ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை குக்கரில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்.

    ஒரு பானில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் சீரகம், பிரியாணி இலை, பட்டை சேர்த்து வறுக்கவும்.

    அடுத்து நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து வேகவைத்த அரிசி பருப்பை சேர்த்து கலக்கவும்.

    இறுதியாக நெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பருப்பு கிச்சடி தயார்!

    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி சாப்பிடலாம்.
    • சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த சிற்றுண்டி இது.

    தேவையான பொருட்கள்

    கோதுமை சேமியா - 200 கிராம்,

    நறுக்கிய உருளை, பீன்ஸ், வேகவைத்த பட்டாணி - 1 கப்,

    வெங்காயம், தக்காளி - தலா 1,

    நறுக்கிய பச்சைமிளகாய் - 4,

    உப்பு - தேவைக்கு,

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,

    எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.

    தாளிக்க...

    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

    கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து - சிறிது,

    கறிவேப்பிலை - 10.

    செய்முறை

    சேமியாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துகொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகள், பட்டாணியை சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    காய்கறிகள் வெந்ததும் கோதுமை சேமியா சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி வெந்தவுடன் இறக்கவும்.

    பின் எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கோதுமை சேமியா கிச்சடி ரெடி.

    • இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • இந்த ரெசிபியில் விரும்பிய காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 கப்

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 1

    கேரட் - 1

    பீன்ஸ் - 4

    கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    பட்டை - 1 கிராம்பு - 5

    பிரியாணி இலை - 2

    கறிவேப்பிலை - 1 கொத்து

    கொத்தமல்லி - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நீரை கொதிக்க விடவும். அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து, கொதிக்கும் நீரில் அந்த சேமியாவைப் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, இறக்கி மூடி தனியாக வைத்து கொள்ளவும். (முக்கியமாக சேமியா குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.)

    பின் நீரை வடித்து, ஒரு தட்டில் அந்த சேமியாவை பரப்பி, குளிர வைக்கவும். பின் மற்றொரு வாணலியில் நீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு, வேக வைத்துக் கொள்ளவும்.

    பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின்னர் அதில் வேக வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மசாலா அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு கிளறவும்.

    மசாலா அனைத்து காய்கறிகளுடன் ஒன்று சேர்ந்ததும், அதில் வேக வைத்த சேமியாவைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டால் வாணலியை மூடி 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

    இப்போது சுவையான சேமியா வெஜிடேபிள் கிச்சடி ரெடி!!!

    இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, தயிருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    • குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.
    • இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.

    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - ஒரு கப்

    காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) - ஒரு கப்

    வெங்காயம் - ஒன்று

    தக்காளி - ஒன்று

    பச்சை மிளகாய் - 4

    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

    நெய் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவும்

    தாளிக்க:

    பட்டை, லவங்கம் - 2

    பிரியாணி இலை - 2

    மராத்தி மொக்கு - ஒன்று

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி, பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை போட்டு தாளித்த பின்னர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பிறகு தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அத்துடன் அரிசி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

    குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, கொத்தமல்லி, நெய்விட்டுக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான குதிரைவாலி கிச்சடி ரெடி.

    • காலையில் சத்தான உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று அவல் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கெட்டி சிவப்பு அவல் - அரை கப்,

    தேங்காய்ப்பால் - ஒரு கப்,

    பெரிய வெங்காயம் - 1,

    தக்காளி - 1,

    நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    உப்பு - சுவைக்கேற்ப,

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.

    வறுத்து பொடிக்க

    காய்ந்த மிளகாய் - 4.

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக கழுவி தேங்காய்ப் பாலில் ஊறவிடவும்.

    நிலக்கடலையை வறுத்துப் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அவலையும் (தேங்காய்ப் பால் முழுவதையும் அவல் இழுத்திருக்கும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

    தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட ருசியாக இருக்கும்.

    அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்
    வெங்காயம் - 1
    கேரட் - 1
    உருளைக்கிழங்கு - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பீன்ஸ் - 6
    பச்சை பட்டாணி - 1/4 கப்
    தக்காளி - 1
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு சேமியாவை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை அலசி, பின் இட்டி தட்டில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அதில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, உப்பை தூவி 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்னர் காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

    காய்கறிகள் வெந்ததும் அதில் வேக வைத்துள்ள கேழ்வரகு சேமியா, கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேழ்வரகு கிச்சடி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை மற்றும் மாலை நேரங்களில் சாப்பிட ரவா கிச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - ஒரு கப்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 2,
    பச்சைப் பட்டாணி - அரை கப்,
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
    தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்,
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
    பட்டை - சிறு துண்டு,
    கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று,
    நெய், எண்ணெய், உப்பு - சிறிதளவு.



    செய்முறை :

    ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும்.

    தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி, 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.

    சூப்பரான ஸ்பைசி ரவா கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடியை காலை, மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - ஒன்று
    பச்சை பட்டாணி - கைப்பிடியளவு,
    ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - கைப்பிடியளவு,
    கேரட் துண்டுகள் - கைப்பிடியளவு,
    உப்பு - தேவையான அளவு,
    பச்சை மிளகாய் - 3 (இரண்டாக கீறவும்),
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
    வறுத்த வேர்க்கடலை - 5 டீஸ்பூன்,
    மாதுளை முத்துக்கள் - சிறிதளவு,
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    நெய்யில் வறுத்த முந்திரி - 10.

    தாளிக்க :

    நெய் - 3 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்,
    மிளகு - கால் டீஸ்பூன்.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணி, ஸ்வீட் கார்னை வேகவைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும்.

    வாணலியில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், ஜவ்வரிசி சேர்த்து வதக்கவும்.

    பிறகு அதனுடன் உப்பு, காய்கறிகள் சேர்த்து கிளறி மூடி சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடம் வேக விடவும்.

    பிறகு மூடியை திறந்து எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

    கடைசியாக வறுத்த வேர்க்கடலை, மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சாபுதானா கிச்சடி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×