search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Khelo India"

    • 97 பதக்கங்களை குவித்ததன் மூலம் தமிழக அணி புதிய சாதனை படைத்தது.
    • இதற்கு முன்பு கேலோ இந்தியா விளையாட்டில் இவ்வளவு அதிகமான பதக்கங்களை பெற்றது இல்லை.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 35 தங்கம், 20 வெள்ளி, 36 வெண்கலம், ஆகமொத்தம் 91 பதக்கங்களை பெற்று 3-வது இடத்தில் இருந்தது.

    91 பதக்கங்களை குவித்ததன் மூலம் தமிழக அணி புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு கேலோ இந்தியா விளையாட்டில் இவ்வளவு அதிகமான பதக்கங்களை பெற்றது இல்லை.

    புனேயில் 2019-ம் ஆண்டு நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது.

    தற்போது அதைவிட கூடுதலான பதக்கங்களை தமிழக வீரர், வீராங்கனைகள் குவித்து முத்திரை பதித்து உள்ளனர்.

    இன்று காலை நடந்த போட்டிகளில் தமிழகத்துக்கு 2 தங்கம், ஒரு வெண்கலம் கிடைத்தது. இன்று மதியம் நிலவரப்படி தமிழ்நாடு 37 தங்கம், 20 வெள்ளி, 37 வெண்கலம் ஆகமொத்தம் 94 பதக்கம் பெற்றுள்ளது. இதன்மூலம் தமிழக அணி பதக்க பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

    இன்று பிற்பகலில் நீச்சல் பந்தயத்தில் 1 தங்கப் பதக்கமும் 2 வெண்கல பதக்கம் வென்றது. இதன் மூலம் போட்டி முடிவில் தமிழக அணி 97 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தக்க வைத்தது.

    மராட்டியம் 55 தங்கம் உள்பட 156 பதக்கங்களை குவித்து முதல் இடத்தில் உள்ளது. அரியானா 35 தங்கம் உள்பட 103 பதக்கத்துடன் 3-வது இடத்தை பிடித்தது.

    • தமிழ்நாட்டின் ரேவதி, லட்சுமி இணை வென்றுள்ளது.
    • தமிழ்நாடு வீரர்களான பிரனவ், மகாலிங்கம் இணை வென்றுள்ளது.

    கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் 2 தங்கம் வென்று ஆடவர், மகளிர் இரட்டையர்கள் அசத்தியுள்ளனர்.

    தமிழ்நாட்டின் ரேவதி, லட்சுமி இணை 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் கர்நாடக இணையை வீழ்த்தி தங்கம் வென்று அபாரமாக வெற்றி பெற்றுள்ளனர்.

    இதேபோல், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியின் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு தங்கம் வென்றுள்ளது.

    தமிழ்நாடு வீரர்களான பிரனவ், மகாலிங்கம் இணை 6-3, 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் நேர் செட்டில் மகாராஷ்டிரா இணையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

    • முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாசில் தமிழகத்துக்கு மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.
    • தடகளத்தில் 3 தங்கம், 4 வெள்ளியும், ஸ்குவாசில் 2 தங்கமும் கிடைத்தன.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது.

    5-வது நாள் முடிவில் தமிழ்நாடு 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 31 பதக்கம் பெற்று இருந்தது. நேற்றைய 6-வது நாளில் தமிழக அணிக்கு 5 தங்கம் உள்பட மேலும் 17 பதக்கம் கிடைத்தது.

    தடகளத்தில் 3 தங்கம், 4 வெள்ளியும், ஸ்குவாசில் 2 தங்கமும் கிடைத்தன. மல்லர் கம்பம் போட்டியில் 1 வெள்ளி, 1 வெண்கலம், குத்துச்சண்டையில் 4 வெண்கலம், சைக்கிளிங் பந்தயம், வாள்வீச்சில் தலா 1 வெண்கலமும் தமிழக வீரர், வீராங்கனைகள் பெற்றனர்.

    தடகள போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் தருண் விகாஷ் 2.01 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

    பெண்களுக்கான டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் தமிழகத்துக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பவீனா ராஜேஷ் 12.10 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடத்தையும், பமிலா வர்ஷினி 11.84 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடத்தையும் பிடித்தனர்.

    பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அபிநயா (12.21 வினாடி), ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கோகுல் பாண்டியன் (10.89 வினாடி) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

    ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு 2 தங்கம் கிடைத்தது. ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழக அணி 2-0 என்ற கணக்கில் உத்திரபிரதேசத்தையும், பெண்கள் அணிகள் பிரிவில் 2-0 என்ற கணக்கில் மராட்டியத்தையும் தோற் கடித்தன.

    ஸ்குவாஷ் போட்டியில் ஏற்கனவே பெண்கள் தனி நபர் பிரிவில் பூஜா ஆர்த்தி தங்கம் வென்று இருந்தார். சந்தேஷ், அரிஹந்த், தீபிகா, ஷமினா வெண்கல பதக்கம் பெற்றார். முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாசில் தமிழகத்துக்கு மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.

    மல்லர்கம்பம் பந்தயத்தின் ஆண்கள் பிரிவில் ரோகித் சாய்ராம் 8.50 புள்ளிகள் பெற்று வெண்கலமும், மகளிர் பிரிவில் பூமிகா 8.25 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

    வாள்வீச்சு போட்டியில் ஆண்கள் சப்ரே பிரிவில் அர்லின், மவுரிஷ், ஷார்ஜின் ஆகியோர் அடங்கிய தமிழக அணி அரைஇறுதியில் 36-45 என்ற கணக்கில் ஜம்மு காஷ்மீரிடம் தோற்றது. இதனால் வெண்கலம் கிடைத்தது. சைக்கிளிங் பந்தயத்தில் தமிழரசி வெண்கலம் வென்றார்.

    குத்துச்சண்டை போட்டியின் ஆண்கள் பிரிவில் நவீன்குமார், கபிலன் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ஜீவா, துர்கா ஆகியோரும் வெண்கல பதக்கம் பெற்றனர்.

    தடகளம், ஸ்குவாஷ் போட்டிகளில் தமிழக பதக்கங்களை வேட்டையாடியது. தடகளத்தில் இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம், ஆகமொத்தம் 10 பதக்கம் கிடைத்துள்ளது. ஸ்குவாசில் 3 தங்கம், 4 வெண்கலம் கிடைத்துள்ளது.

    நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 17 தங்கம், 8 வெள்ளி, 23 வெண்கலத்துடன், 48 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    மராட்டியம், அரியானா முறையே முதல் 2 இடங்களில் உள்ளன. 

    • குத்துச்சண்டை அரை இறுதியில் தமிழகத்துக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
    • கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி லீக் ஆட்டத்தில் மராட்டியத்தை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

    கேலோ இந்தியா விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் தமிழகத்துக்கு ஒரு தங்கம், 4 வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்து இருந்தது.

    இந்த நிலையில் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு மேலும் 2 பதக்கம் உறுதியானது. ஆண்கள் அணிகள் பிரிவிலும், பெண்கள் அணிகள் பிரிவிலும் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    அரை இறுதியில் ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் அசாமையும், பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் ராஜஸ்தானையும் தோற்கடித்தன. இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி உத்தர பிரதேசத்தையும், பெண்கள் அணி மாராட்டியத்தையும் எதிர்கொள்கிறது. தமிழக அணிக்கு 2 தங்கம் அல்லது 2 வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    கோவையில் நடைபெற்று வரும் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி லீக் ஆட்டத்தில் மராட்டியத்தை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

    குத்துச்சண்டை அரை இறுதியில் தமிழகத்துக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. நவீன் குமார், கபிலன், துர்காஸ்ரீ, ஜீவா ஆகியோர் தோற்றனர். அரை இறுதியில் தோற்றதால் தமிழகத்துக்கு 4 வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.

    • 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஷரண் 48.42 வினாடியில் இலக்கை எட்டிப்பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
    • கேலோ இந்தியா போட்டியில் ஸ்குவாஷ் நடப்பு ஆண்டில் அறிமுக விளையாட்டாக இடம் பிடித்துள்ளது கவனிக்கத்தக்கது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடந்து வருகிறது. வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 26 வகையான போட்டிகளில் 5,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த நிலையில் 5-வது நாளான நேற்றும் தமிழகத்தின் பதக்க வேட்டை நீடித்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த தடகளத்தில் ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் விஷ்ணு 13.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மராட்டியத்தின் சந்தீப் கோன்ட் (13.89 வினாடி) வெள்ளிப்பதக்கமும், கேரளாவின் கிரண் (14.13 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

    400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஷரண் 48.42 வினாடியில் இலக்கை எட்டிப்பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கர்நாடக வீரர் துருவா பல்லால் (49.06 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தெலுங்கானாவின் ஷேக் அசாருதீன் (49.15 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர். போல்வால்ட் (கம்பூன்றி தாண்டுதல்) பந்தயத்தில் உத்தரபிரதேச வீரர் ஆர்ய தேவ் (4.40 மீட்டர்) தங்கப்பதக்கமும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த அமன் சிங் (4.40 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீரர் கவின் ராஜா (4.30 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.

    சென்னை நேரு பார்க்கில் நடக்கும் ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி 11-6, 7-11, 11-8, 9-11, 11-6 என்ற என்ற செட் கணக்கில் மராட்டியத்தின் நிருபமா துபேயை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மேலும் தமிழகத்தை சேர்ந்த ஷமினா ரியாஸ், தீபிகா, அரிஹந்த், சந்தேஷ் ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர். இரு அணிகள் பிரிவிலும் தமிழகம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. கேலோ இந்தியா போட்டியில் ஸ்குவாஷ் நடப்பு ஆண்டில் அறிமுக விளையாட்டாக இடம் பிடித்துள்ளது கவனிக்கத்தக்கது.

    சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடந்த சைக்கிளிங் பந்தயத்தில் தமிழகத்திற்கு மேலும் 4 பதக்கங்கள் கிட்டியது.

    சைக்கிளிங்கில் பெண்களுக்கான தனிநபர் பர்சுயிட் பிரிவில் (2 கிலோ மீட்டர்) தமிழக வீராங்கனையான கோவையைச் சேர்ந்த தன்யதா 2 நிமிடம் 52.333 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டர். 10 கிலோமீட்டர் ஸ்கிராச் பிரிவில் கோவை வீராங்கனை தமிழரசி தங்கப்பதக்கமும் (10 நிமிடம் 10.625 வினாடி), தன்யதா வெண்கலமும் (10 நிமிடம் 10.758 வினாடி) வசப்படுத்தினர். இதன் ஸ்பிரின்ட் பிரிவில் தூத்துக்குடி வீராங்கனை ஸ்ரீமதி வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

    யோகாசனத்தில் ஆர்டிஸ்டிக் ஜோடி பிரிவில் உடலை வில்லாக வளைத்து சாகசம் காட்டிய தமிழக வீராங்கனைகள் மேனகா- பெட்ரா ஷிவானி 132.35 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கமங்கையாக உருவெடுத்தனர். மராட்டிய ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் மேனகா விருதுநகரையும், ஷிவானி மதுரையையும் சேர்ந்தவர்கள். இருவரும் பிளஸ்1 படிக்கிறார்கள்.

    நேற்றைய முடிவில் பதக்கப்பட்டியலில் தமிழகம் 2-வது இடத்திற்கு சரிந்தது. 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கத்துடன் 2-வது இடத்தில் இருக்கிறது. மராட்டியம் 14 தங்கம் உள்பட 45 பதக்கங்கள் குவித்து முதலிடத்துக்கு முன்னேறியது.

    • கேலோ இந்தியாவில் 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
    • மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நாடுகளில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

    இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.

    இந்நிலையில், இதுவரை நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 6 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன், பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு.
    • தொடக்க விழாவில் பங்கேற்பதாக பிரதமர் மோடி உறுதி.

    பிரதமர் மோடியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

    "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க சென்றிருந்தார்.

    அதன்படி, டெல்லியில் பிரதமர் இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், " கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்" என்றார். 

    இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜனவரி 19, 2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்காக இன்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்ததில் மகிழ்ச்சி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி, தமிழகத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரிவான நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசின் சார்பில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார். 

    மேலும், தமிழகத்தின் பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும், குறிப்பாக தமிழகத்தில் விளையாட்டுத்துறையின் பன்முக வளர்ச்சி குறித்து பிரதமருடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, 2023ம் ஆண்டுக்கான சிஎம் டிராபி விளையாட்டு மற்றும் தமிழ்நாடு நடத்திய ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பை வெற்றிகரமாக நடத்தியதைக் காட்டும் காபி டேபிள் புத்தகத்தையும் பிரதமரிடம் வழங்கினேன்.

    கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023, தமிழ்நாட்டின் பெறுமைமிக்க அமைப்புத் திறனையும், விளையாட்டுத் துறையில் புகழ்பெற்ற வரலாற்றையும் நிரூபிக்க மற்றொரு நம்பிக்கைக்குரிய வாய்ப்பாக இருக்கும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு.
    • போட்டிகள் சென்னை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெற உள்ளன.

    பிரதமர் மோடியுடன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

    "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க சென்றிருந்தார்.

     அதன்படி, டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்று வரும் சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார்.

    வரும் 19ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் சென்னை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி.
    • அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும், திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும் கேலோ இந்தியா போட்டிகள் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்படுகின்றன. கேலோ இந்தியா தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர்கள் வெளிப்படுத்தும் திறன் அடிப்படையில் வெளிப்படையான தேர்வு மூலம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    இது குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்த விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளதாவது: கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில், சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பல்வேறு பயிற்சி வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 21 விளையாட்டுப் பிரிவுகளில் 2,841 வீரர்கள் இந்திய வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியாவில் திறமைவாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை கண்டறிய கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்படுகின்றன.
    • தேசிய அளவில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 2 வெண்கலம் வென்றனர்.

    கோவை:

    இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும், திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை கண்டறியவும் கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    அதன்படி, 2021-ம் ஆண்டிற்கான போட்டிகள் ஹரியானாவில் உள்ள பஞ்சகுலாவில் இம்மாதம் நடத்தப்பட்டன. 25 வகையான விளையாட்டு போட்டிகளில் பாரம்பரிய தற்காப்பு கலையான களரிப் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 180 இளம் வீரர்கள் பங்கேற்றனர்.

    இதில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் இன்பதமிழன் சுவடுகள் பிரிவிலும், பத்மேஸ்ராஜ் மெய்பயட்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

    கோவையில் செயல்படும் ஈஷா சமஸ்கிரிதி பள்ளியில் களரிப் பயட்டு மட்டுமின்றி, யோகா, பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற பாரம்பரிய கலைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதில் பல ஆண்டுகள் கடும் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் 'ப்ராஜக்ட் சம்ஸ்கிரிதி' என்ற பெயரில் இக்கலைகளை உலகம் முழுவதும் பயிற்றுவித்து வருகின்றனர்.

    ×