search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kebab"

    • பலாக்கொட்டை, பச்சைமிளகாய், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
    • ஒரு பிளேட்டில் சோளமாவு, உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    தேவையான பொருட்கள்

    பலாக்கொட்டை- ஒரு கப்

    பலாச்சுளை- ஒரு கப்

    பூண்டு - 4 பல் (பொடிதாக நறுக்கியது)

    இஞ்சி 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

    பச்சை மிளகாய் - 2 (பொடிதாக நறுக்கியது)

    கரம் மசாலாத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்

    சீரகத்தூள் - 4 டீஸ்பூன்

    கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்

    சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய்த்தூள்- டீஸ்பூன்

    உலர் பழங்கள்- 2 டேபிள் ஸ்பூன்

    சோளமாவு-தேவைக்கு ஏற்ப

    உப்பு - தேவைக்கு ஏற்ப

    எண்ணெய் - பொறிப்பதற்கு

    சட்னி தயாரிக்க:

    பலாக்கொட்டை - கப் (வேகவைத்தது)

    பச்சைமிளகாய் - 1

    உப்பு- தேவைக்கு

    எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்

    சட்னி செய்முறை

    பலாக்கொட்டை, பச்சைமிளகாய், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும், அதைஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.

    பலாப்பழ கபாப் செய்முறை:

    ஒரு பிளேட்டில் சோளமாவு, உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் பலாச்சுளைகளை கட் செய்து போட்டு கலந்து சூடான எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டும்.

    பலாக்கொட்டைகளை வேகவைத்து அதன் மேல் தோலை நீக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும். இந்த கலவையுடன் வேகவைத்த பலாக்கொட்டைகளை மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    இந்த விழுதுடன் பொடியாக நறுக்கிய உலர் பழங்களை சேர்த்து நன்றாக பிசையவும். இந்த கலவையை விரும்பிய வடிவில் தயார் செய்து, தவாவில் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இதை சட்னியுடன் பரிமாறலாம்.

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பட்டாணி கபாப் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - அரை கப்
    கடலைப்பருப்பு - அரை கப்
    புதினா, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - தேவைக்கு
    மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    ரொட்டித்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, பச்சைப் பட்டாணி இரண்டையும் தனியாக வேக வைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இஞ்சி, புதினா, கொத்தமல்லி தழை, பூண்டு ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் பட்டாணி, கடலைப் பருப்பு விழுது, மைதா, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி தூளில் பிரட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று காளான் கபாபை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய காளான் - அரை கப்
    கடலைப் பருப்பு - அரை கப்
    ரொட்டித்தூள் - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 3
    ஸ்வீட் கார்ன் - கால் கப்
    சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகுத்தூள் - தேவைக்கு
    கசகசா, சீரகம் - தேவைக்கு
    ஏலக்காய், கிராம்பு - 4
    பெ.வெங்காயம் - 3
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லி தட்டில் ஸ்வீட் கார்னை வேக வைத்துக்கொள்ளவும்.

    கடலை பருப்பையும் குக்கரில் வேகவைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியை மிதமான சூட்டில் வைத்து சீரகம், கசகசாவை கொட்டி பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் ஏலக்காய், கிராம்பு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அதுபோல் கடலை பருப்பு, காளான், சுவீட் கார்ன் போன்றவற்றையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் காளானை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அரைத்த மசாலா கலவை, சோளமாவு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    பின்னர் இந்த கலவைகளை உருண்டைகளாக உருட்டி ரொட்டித்தூளில் புரட்டி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்தவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    ருசியான காளான் கபாப் ரெடி.

    அதன் மீது வெங்காயம், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் தூவி பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனை தயிர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஊறவைத்து தயார் செய்யப்படுகிறது கால்மி கபாப். இந்த கால்மி கபாப்பை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    தயிர் - 1/4 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு - 1/2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    முந்திரி பொடி - 4 தேக்கரண்டி
    ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1/4 தேக்கரண்டி
    ஃப்ரஷ் கிரீம் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிர் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.

    அத்துடன் ஏலக்காய் பொடி, மிளகு தூள், சீரகம், கிரீம் ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

    எலும்பு நீக்கப்பட்ட சிக்கனை இந்த மசாலா கலவையில் போட்டு நன்றாக கலந்து 24 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். மசாலா தடவி வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கால்மி கபாப் ரெடி.

    புதினா சட்னி, வெங்காயம் ஆகியவற்றை தொட்டு சூடாக சாப்பிட ருசியாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×