search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karunanidhi statue"

    • கருணாநிதி நூற்றாண்டு விழா, திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது.
    • சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் 8 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    கருணாநிதி நூற்றாண்டு விழா, திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76-வது நிகழ்ச்சியாக, கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்று உள்ளது.

    சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் 8 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    சிலையினை காணொலி காட்சி மூலமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன், துணை மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதியின் சிலையை நெல்லை மாநகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • நெல்லை மாநகராட்சியிலும் கருணாநிதி சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    நெல்லை:

    தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது சிலையை நெல்லை மாநகரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதோடு மட்டுமல்லாமல் நெல்லை மாநகராட்சியிலும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு கருணாநிதி சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில் மாநகராட்சி முன்பு அமைந்துள்ள அண்ணா சிலை அமைக்கப் பட்டு நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதனை அகற்றிவிட்டு புதிதாக முழு உருவ அண்ணா வெண்கல சிலையும், அதன் அருகிலேயே கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையும் அமைப்பதற்கு அனுமதி கோரி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு சென்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து மேயர் சரவணணிடமும் மனு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் மாலை ராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்தியானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், பேச்சிப் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மகளிரணி அனிதா, நெல்லை மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார், முன்னாள் நெல்லை மாவட்ட துணை செயலாளர் நவநீதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தமிழகத்தில் கற்க விடாமல் தி.மு.க. எதிர்த்து வருவதாக பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
    • பா.ஜ.க. அரசிற்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த பெரியபணிச்சேரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் கலைஞர் படிப்பகம் தொடக்க விழா நடைபெற்றது.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கருணாநிதியின் வெண்கல உருவ சிலை மற்றும் புதிய படிப்பகத்தை திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நான் திறந்து வைக்கும் கலைஞர் கருணாநிதியின் 2-வது சிலை இதுவாகும். ஏற்கனவே கடந்த ஜூலையில் திருவண்ணாமலையில் நான் முதல் சிலையை திறந்து வைத்தேன்.

    கடந்த 2018-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நாங்கள் ஒரு பேனாவையும், பேப்பரையும் அவரிடத்தில் கொடுத்து, உங்களுக்கு பிடித்தமான பெயர்களை எழுதுங்கள் என்று கூறினோம்.

    முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் சுற்றி நின்று தங்களது பெயர்களை கலைஞர் எழுத மாட்டாரா என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

    ஆனால், அந்த நேரத்தில் கூட அவர் எழுதியது "அண்ணா" என்ற பெயரை தான். இதிலிருந்து கருணாநிதி பேரறிஞர் அண்ணா மீது எந்த அளவிற்கு மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார் என்று நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

    கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் தலைமுறை தலைமுறையாக தமிழக மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

    கலைஞருடைய திட்டங்களில் பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை இருந்தது. கலைஞரின் திட்டங்கள் அனைத்தும் சமூக பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் திட்டங்களாக இருந்தது. 3 கிலோ மீட்டருக்கு ஒரு அரசு பள்ளியை நிறுவினார்.

    மாணவர்களுக்கு வாரந்தோறும் சத்துணவுடன் முட்டையும் வழங்கினார். உயர்கல்வி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.

    பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார். கலைஞர் வழியில் தற்போதைய நமது முதலமைச்சரும் மத்திய அரசாங்கமே திரும்பிப் பார்க்கும் வகையில், பல நல்ல திட்டங்களை மக்களுக்காக செயலாற்றி வருகிறார்.

    கலைஞர் நம்மிடம் இருந்தால் என்னென்ன நல்ல திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்திருப்பாரோ அதைத்தான் தற்போது தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார். குறிப்பாக இல்லந்தோறும் கல்வி, பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மேலும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்ட திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

    வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இந்த காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அத்துடன் பெண்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

    நமது திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்று இந்த நூலகம் திறக்கப்பட்டு உள்ளது. அதுதான் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் உள்ள வித்தியாசம். என்றுமே தி.மு.க. மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.

    கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் அதானி 2-ம் இடத்திற்கு முன்னேறி வந்துள்ளார். தற்போது இந்தியாவில் அதானி விமான நிலையம், அதானி ரெயில் நிலையம், அதானி ஹார்பர் ஆகியவை வந்து உள்ளது.

    இதற்கெல்லாம் காரணம் அவர் மோடியின் நெருங்கிய நண்பர் என்பதாலே. மோடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போதெல்லாம் விமானி இல்லாமல் கூட பயணம் செய்வார்.

    ஆனால் "அதானி" இல்லாமல் ஒரு நாள் கூட பயணம் செய்ததில்லை. இது குறித்த ஆதாரங்களை புகைப்படத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியபோது தான் அவர் மீது வழக்கு பதிவு செய்து, பாராளுமன்றத்திற்கு வர முடியாமல் செய்தார்கள்.

    ஆனால் உச்சநீதிமன்றம் அவர்களது தலையில் சரியான கொட்டு கொட்டி, ராகுல் காந்தி மீது விதித்த தடையை ரத்து செய்தது.

    இதுவே பல்வேறு கட்சிகளின் கூட்டணியான "இந்தியா" அமைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

    இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தமிழகத்தில் கற்க விடாமல் தி.மு.க. எதிர்த்து வருவதாக பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை கற்பதற்கு நாங்கள் என்றுமே தடையாக இருந்ததில்லை. மாறாக இந்தி திணிப்பை தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

    உங்களது பா.ஜ.க. அலுவலகம் சென்னை தியாகராஜ நகரில் தான் உள்ளது. அதன் அருகிலேயே இந்தி பிரச்சார சபா உள்ளது. நீங்கள் அங்கே சென்று தாராளமாக இந்தி கற்றுக்கொள்ள வேண்டியது தானே, உங்களை யார் தடுத்தார்கள். மணிப்பூரில் 5 மாதங்களுக்கும் மேலாக வன்முறை கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிகிறது.

    அதனை தடுக்க பா.ஜ.க. அரசிற்கு துப்பில்லை. பா.ஜ.க. அரசிற்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டணியால் இந்தியா என்ற வலுவான அமைப்பு உருவாகி உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை தெளிவாக முடிவெடுத்து சிந்தித்து நாம் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளரும் திருபெரும்புதூர் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ.வுமான க.சுந்தர், மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி, இ.கருணாநிதி எம்எல்ஏ, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை, மனோகரன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம், கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜிஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் தி.க.பாஸ்கரன், கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் பா.சுதாகர் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார்.
    • அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கி னார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

    அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் உதயசூரின் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், வடக்கு ஒன்றிய செயலாளர் அரவிந்தன், சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலக்குழு கூட்டம் மண்டலத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
    • உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க ஆணையிட்ட முதலமைச்சருக்கு நன்றி.

    சென்னை:

    தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலக்குழு கூட்டம் மண்டலத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    முன்னாள் முதலமைச்சரும் முத்தமிழ் அறிஞருமான டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதையொட்டி திராவிட இயக்க சிந்தனைகளை திரைப்பட வசனங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் விதைத்து சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர், தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்று தந்தவர், மாநில உரிமைகளுக்காக போராடிய மாபெரும் தலைவர், நவீன தமிழகத்தை மட்டுமல்ல நவீன இந்தியாவையும் உருவாக்கியவர் என புகழப்படும் கருணாநிதியை போற்றும் வகையில் மண்டலம் 1-ல் பம்மல் அலுவலகத்தில் முன்பு நுழைவு வாயலில் முழு அளவு கலைஞரின் வெண்கல சிலை அமைக்க ஏகமனதாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு மேயர் அனுப்பி வைக்க இக்கூட்டம் முடிவு செய்கிறது.

    உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க ஆணையிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சேலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
    • ஒரே நேரத்தில் 80 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.

    தனி விமானம் மூலம் சேலம் வந்த அவரை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆகியோர் வரவேற்றனர்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் 5 ரோடு அருகே உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் இரவு அஸ்தம்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்கினார்.

    சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலையை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் அவர் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வ.உ.சி. மார்க்கெட், பெரியார் பேரங்காடி ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு 50 ஆயிரத்து 202 பயனாளிகளுக்கு ரூ.170.32 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    விழாவில் மேட்டூர் மற்றும் எடப்பாடி நகராட்சிகளில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேட்டூரில் ரூ.6.7 கோடி செலவிலும், எடப்பாடியில் ரூ. 5 கோடி மதிப்பிலும் புதிய பஸ் நிலையங்கள் கட்டப்படுகின்றன.

    போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி புனரமைத்து அழகுப்படுத்தும் பணிகள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    மேலும் உத்தமசோழபுரம்-திருமணிமுத்தாற்றின் குறுக்கே மற்றும் தென்னங்குடிபாளையம்-வசிஷ்ட ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.235.82 கோடி யில் 331 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.653 கோடியில் இளம்பிள்ளை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கண சாலை ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் முதற்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் ரூ.102 கோடியில் கட்டப்பட்டுள்ள சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கான மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் உள்பட சேலம் மாவட்டத்தில் ரூ.1,367.47 கோடியில் முடிவுற்ற 390 பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார்.
    • சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் அண்ணா பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை (வெண்கலம்) அமைக்கப்படும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சேலம் மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அண்ணா பூங்கா வளாகத்தில் மண்டபம் கட்டுமான பணி மற்றும் கருணாநிதி சிலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.

    சுமார் 1,713 சதுரடி பரப்பில் மண்டபம் அமைக்கப்பட்டு, அங்கு 20 அடி உயரத்தில் பிரமாண்டமாக கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    தி.மு.க. தொண்டர்கள் புடைசூழ தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார். அப்போது கட்சியினர் மகிழ்ச்சி பொங்க, ஆரவாரத்துடன் கலைஞர் புகழ் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். பிரமாண்ட கருணாநிதி சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

    கருணாநிதியையும், சேலத்தையும் பிரித்து பார்க்க முடியாது. திரையுலகில் உச்சம் தொடவும், அரசியல் அஸ்திவாரத்திற்கும் கருணாநிதி வாழ்வில் சேலம் முக்கிய பங்காற்றி உள்ளது. கருணாநிதிக்கு திருவாரூரை தாய் வீடு என்றால், சேலத்தை அவரது புகுந்த வீடு என்று குறிப்பிடும் அளவுக்கு சேலத்துடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திருவாரூரில் வசித்தபோது நாடகத்துறையில் இருந்த அவர் திரைப்படத்துறைக்கு வந்தது சேலத்தில்தான்.

    சேலம் மாடர்ன் தியேட்டர்சில் இணைந்து அவர் மந்திரி குமாரி படத்துக்கு கதை வசனம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு அவர் கதை வசனம் எழுத தொடக்கமாக அமைந்தது சேலம். அந்த காலத்தில் தனது தாயார் அஞ்சுகம் அம்மாளுடன் சேலம் கோட்டை பகுதியில் ஹமீத் சாகிப் தெருவில் கருணாநிதி ரூ.50 வாடகைக்கு குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் சேலத்துக்கும் கருணாநிதிக்கும் உள்ல நெருங்கிய தொடர்பை அறியலாம். அவருக்கு சேலத்தில் பிரமாண்டமான சிலை அமைந்திருப்பது சேலத்துக்கு கிடைத்த பெருமை என்று தி.மு.க. தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக இருந்தவர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி.

    இந்திய அரசியல் தலைவர்களில் மிக மூத்த தலைவராக திகழ்ந்த அவர் மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல்வேறு புதுமைகளுக்கும், மாற்றங்களுக்கும் வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக அவர் பதவி வகித்து உள்ளார். 60 ஆண்டுகள் தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளார். இளம் வயதில் இருந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தடவைகளிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

    தி.மு.க. தலைவராகவும் அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்து சாதனை படைத்து உள்ளார். கட்சியிலும், ஆட்சியிலும், நிர்வாகத்தில் ஏராளமான சாதனைகள் செய்த நிகரற்ற சாதனையாளராக அவர் திகழ்ந்தார். 3 தடவை ஜனாதிபதி வேட்பாளர் தேர்விலும் முக்கிய பங்கு வகித்தார்.

    பன்முக திறமையாளராக விளங்கிய கருணாநிதி முதுமை காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி மரணமடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 3-ந் தேதி அவருக்கு நூற்றாண்டு பிறந்த தினம் தொடங்குகிறது.

    இதையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதோடு கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.

    அதன்படி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணாசாலை ஓரத்தில் கருணாநிதியின் சிலை நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 12 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டு உள்ளது. ரூ.1.7 கோடி மதிப்பில் அந்த முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.

    மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கருணாநிதி சிலை இதுவரை நிறுவப்பட்ட கருணாநிதி சிலைகளில் மிகப்பெரியதாகும். இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதற்காக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் சார்பில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து அருகில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார்.

    விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்புரையாற்றுகிறார். கருணாநிதியின் சிறப்புகளை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டுவார்.

    அரை நூற்றாண்டுகால தமிழக அரசின் மையமாக திகழ்ந்த கருணாநிதி அரசியல், சினிமா, இலக்கியம், நாடகம் என்று தொட்ட துறைகள் அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர் என்பதை வெங்கையா நாயுடு தனது பேச்சில் குறிப்பிட உள்ளார்.

    விழாவில் கருணாநிதி பற்றிய சிறப்பு காணொலி திரையிடப்பட உள்ளது. இறுதியில் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு நன்றி கூறுகிறார். விழாவில் காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட தி.மு.க.வின் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    விழாவை முன்னிட்டு கலைவாணர் அரங்கில்சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விழா நிகழ்ச்சிகளை சுமார் 2 ஆயிரம் பேர் நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரங்கத்தின் கீழ் தளத்தில் 1200 பேர் அமர வசதி செய்யப்பட்டு உள்ளது.

    அதுபோல அரங்கத்தின் முதல்மாடியில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக 500 இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. அங்கிருந்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு எல்.இ.டி. பெரிய திரை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் பங்கேற்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலைவாணர் அரங்கம் பகுதியில் குவிய தொடங்கி உள்ளனர். இதையடுத்து அண்ணாசாலை மற்றும் கலைவாணர் அரங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கருணாநிதி சிலையை இன்று திறந்து வைக்கிறார்
    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று   சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. 

    சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றது. சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்தார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. 

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 16 அடி உயரம் கொண்ட இந்த சிலையை நிறுவ 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை இன்று மாலை குடியரசு துணைத் தலைவா் வெங்கை யா நாயுடு திறந்து வைக்கிறாா்.

    இதைத் தொடர்ந்து கலைவாணா் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.  விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று உரையாற்றுகிறாா்.அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். 

    முன்னதாக கருணாநிதி சிலை  திறப்பு நிகழ்ச்சிச் ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அமைச்சர்கள்,  பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கலைஞரை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் நாளை (28-ந்தேதி) மாலை 5.30 மணியளவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, கலைவாணர் அரங்கில் நடைபெறும் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விழா பேருரையாற்றவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றவும் உள்ளனர்.

    அரை நூற்றாண்டு காலத் தமிழ்நாட்டு அரசியலின் மையமாகத் திகழ்ந்தவர், அறுபதாண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தமானவர், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகப் பணியாற்றியவர். அனல் பறக்கும் தம் வசனங்களால் திரையுலகில் தனித்துவம் பெற்றவர்.

    கதை, கவிதை, புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், நாடகம் என தான் தொட்ட அனைத்திலும் தனி முத்திரைப் பதித்தவர். அரசியலிலும், ஆட்சியின் ஆளுமையிலும் தன்னிகரற்ற தனிப் பெருந்தலைவராக வலம் வந்தவர் கலைஞர்.

    கலைஞர் தமது பொதுவாழ்வில் பெரியார், அண்ணா வளர்த்த உணர்வைப் போற்றி நின்று, அண்ணா வழியில் அயராது உழைத்து ஆற்றியுள்ள தொண்டுகள் ஏராளம். தமிழ் சமுதாயத்தின் உரிமைகளை நிலைநாட்ட அவர் கண்ட களங்கள் ஏராளம். தீண்டாமையின் விளைவாக சமுதாயத்தில் நீடிக்கும் கொடுமைகள் ஒழிக்கப்படவேண்டும் என்றும், சாதி பேத அடிப்படையால் வளரும் சமுதாயக் கேடுகளை களைந்தாக வேண்டும் என்றும், வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பாதிக்கப்படும் நாட்டு மக்கள் நல்வாழ்வு பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும், பெண்ணுரிமையும், அவர்கள் வாழ்க்கை நிலையும் உயரும் சூழலை உருவாக்க வேண்டுமென்றும் அயராது பாடுபட்டவர் கலைஞர்.

    வாழும் போது வரலாறாகவும், மறைந்தாலும் தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்துள்ள கலைஞரின் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய கருணாநிதிக்கு அரசு சார்பில் சிலை திறப்பதை எண்ணி மகிழ்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    எழுச்சிமிகு சிந்தனையால்-ஏற்றமிகு பேச்சாற்றலால்-புரட்சிகர எழுத்துகளால்-புதுமையான திட்டங்களால், இந்தியத் திருநாடு எண்ணி எண்ணிப் போற்றுகிற வகையில், தமிழ்நாட்டின் மூத்த தலைவராகவும், திராவிட இயக்கத்தின் நெடும்பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் ஓய்வின்றி உழைத்தவருமான நம் ஆருயிர்த் தலைவர் கலைஞருக்கு தமிழக அரசு சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படும் நாள் (மே 28), நம் அனைவருக்கும் தித்திப்பான நாள்! திசையெல்லாம் மகிழ்ச்சி பரவிடும் நாள்! ‘உடன்பிறப்பே..’ என்று தமது காந்தக் குரலால் அவர் நம்மை பாசத்துடன் அழைப்பது போன்ற உணர்வைப் பெறுகின்ற திருநாள்!

    தனது கை உயர்த்தி, ஐந்து விரல்களைக் காட்டி மக்களின் செல்வாக்கைப் பெற்ற நம் உயிர்நிகர்த் தலைவரை, தமிழ்நாட்டு மக்கள் 5 முறை முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தனர். தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் முதல்-அமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்ற பெருமையும் நம் ஆருயிர்த் தலைவருக்கேயுரியது.

    5-வது முறை அவர் முதல்-அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, சென்னை அண்ணாசாலையில், எந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை எழிலுடனும் வலிவுடனும் அமைத்தாரோ, அந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலேயே அவருடைய திருவுருவச் சிலையை, முதல்-அமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமக்கும் உங்களில் ஒருவனான என் தலைமையில், கழகத்தின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வரவேற்புரையாற்றிட, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நம் உயிரனைய தலைவரின் திருவுருவச் சிலையினை நாளை (சனிக்கிழமை) அன்று மாலை 5.30 மணி அளவில் திறந்து வைத்திட இருக்கிறார். அதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

    அய்யன் வள்ளுவரையும் அவர் தந்த குறளின் பெருமையையும் அன்னைத் தமிழ்நாட்டவர் மட்டுமின்றி அயல்நாட்டவரும் வியக்கும் வகையில் அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், அரை நூற்றாண்டுக்கு முன்பே அண்ணா மேம்பாலம், புத்தாயிரம் ஆண்டின் போக்குவரத்தை சமாளிக்கும் வகையில் கத்திப்பாரா மேம்பாலம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டும் டைட்ல் பார்க், விரைவான பொதுப் போக்குவரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம், சர்வதேசத் தரத்தில் அறிவுக் கோபுரமாகத் திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவின் மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையம் என எத்திசை பயணித்தாலும் அவர் பெயரை உச்சரிக்கும் அடையாளங்களே தமிழ்நாட்டின் தலைநகரெங்கும் நிறைந்துள்ளன.

    தலைநகரம் மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் அவற்றின் கிராமம்-நகரங்களும் அவரது ஆட்சியில்தான் காலத்திற்கேற்ற கட்டமைப்பு வசதிகளுடன் வளர்ச்சி பெற்றன. தமிழ்நாட்டின் தெற்கு எல்லையான குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரின் சிலைபோல கலைஞரின் ஆட்சித்திறனும் அவர் புகழும் உயர்ந்து நிற்கின்றன. குமரிமுனை வள்ளுவர் சிலை போல, சுனாமிகளே வந்தாலும் எதிர்கொண்டு வெல்கின்ற ஆற்றலைக் கொண்டது நம் உயிர் நிகர்த் தலைவர் கலைஞரின் புகழ்.

    அண்ணா அறிவாலயத்தில் அவருக்குத் திருவுருவச் சிலை கண்டோம். திருச்சியில், ஈரோட்டில், தூத்துக்குடியில் இன்னும் பல நகரங்களில் கழகத்தின் சார்பில் சிலை அமைத்து மகிழ்ந்தோம். அதனை இன்னும் பல ஊர்களிலும் தொடர்கிறோம்.

    அவர் சிலையாக மட்டுமல்ல, நம் நெஞ்சில் நிலையாக வீற்றிருந்து கொள்கை முழக்கம் செய்து கொண்டே இருக்கிறார். இயற்கை அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டாலும், நம் இதயத்துடிப்பினில் அவரே நிறைந்திருக்கிறார். எந்நாளும் வழிநடத்துகிறார். மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு என்பது அவர் நமக்கு வகுத்துத் தந்த ஆட்சிக்கான இலக்கணம்.

    அந்த இலக்கணத்தின்படி, இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழக அரசின் சார்பில் திருவுருவச்சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்! முதல்-அமைச்சர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடைபெறுகிறது.
    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார்.

    அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றது. சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்தார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    16 அடி உயரம் கொண்ட இந்த சிலையை நிறுவ 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சிலை வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டது.

    கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சிலை திறப்புக்கான நிகழ்ச்சி அன்று மாலை 5.45 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    ×