search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karaikudi kaalai"

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் காரைக்குடி காளையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ். #TNPL2018 #LKKvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. கோவை கிங்ஸ் அணிக்கெதிராக காரைக்குடி காளை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    கோவை கிங்ஸ் அணியின் ஷாருக்கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷாருக்கான 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிநவ் முகுந்த் 51 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. காரைக்குடி காளை அணியின் ராஜ்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. கோவை கிங்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி திணறியது.

    அந்த அணியின் மான் பாவ்னா ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். கிஷன் குமார் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகி வெளியேறினர். இதனால் காரைக்குடி காளை 20 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    கோவை கிங்ஸ் அணி சார்பில் நடராஜன் 4 விக்கெட்டும், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. #TNPL2018 #LKKvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் காரைக்கு காளைக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ். #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்று திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. கோவை கிங்ஸ் அணிக்கெதிராக காரைக்குடி காளை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக்கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷாருக்கான 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிநவ் முகுந்த் 51 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. காரைக்குடி காளை அணியின் ராஜ்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    நெல்லையில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, காரைக்குடி அணிகள் மோதிய ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நெல்லையில் 2 ஆட்டங்கள் நடந்தன. இரவு நடந்த 2-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, காரைக்குடி அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. இந்த போட்டியின்போது, வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து இருந்தனர். அவர்கள், போட்டி நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர்களிடம் ரூ.100 கட்டணம் வசூலித்து கொண்டு, பவுண்டரி அடித்தால் ரூ.500 மற்றும் சிக்சர் அடித்தால் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறி, சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வடமாநில இளைஞர்கள், கிரிக்கெட் ரசிகர்களிடம் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நித்தியானந்த் (வயது 37), மகேஷ் சர்மா (26), சுனில் ஷெட்டர் (30), ஜெர்லால் (27), அபே (37), மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெயிந்த் (26), அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கோரத் (26), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மோகிந்த் (42), உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது அபின் (32) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.  #TNPL2018 #NammaOoruNammaGethu
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய போட்டியில் காரைக்குடி காளை அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டூட்டி பேட்ரியாட்ஸ். #TNPL2018 #KKvTP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 28-வது மற்றும் கடைசி லீக் திருநெல்வேலியில் நடைபெற்றது. காரைக்குடி காளைக்கு எதிராக டூட்டி பேட்ரியாட்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி காரைக்குடி காளை அணியின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா 31 பந்தில் 37 ரன்னும், அனிருதா 23 பந்தில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஷாஜஹான் 17 பந்தில் 20 ரன்களும், ராஜ்குமார் 10 ரன்களில் வெளியேறினாலும், ராஜாமணி ஸ்ரீனிவாசன் அவுட்டாகாமல் 29 பந்தில் 46 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.



    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் கவுஷிக் காந்தி மற்றும் தினேஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சுவாமிநாதன் வீசிய 4-வது ஓவரில் கவுஷிக் காந்தி பாஃப்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரி உள்பட 20 ரன்கள் அடித்திருந்தார்.

    அடுத்து, தினேஷ் 16 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்த நிலையில் சுவாமிநாதன் வீசிய பந்தில் பௌல்டு ஆகி வெளியேறினார். சுப்ரமணியம் ஆனந்த் 32, நிதிஷ் ராஜகோபால் 18 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ராஜகோபால் சதீஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    அதன்பின், அபிஷேக் 7, ரங்கராஜன் 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினாலும், சதீஷின் சிறப்பான ஆட்டத்தினால், 19.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்து டூட்டி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் ராஜகோபால் சதீஷ் 57 ரன்களுடனும், கனேஷ் மூர்த்தி ஒரு ரன்னுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    காரைக்குடி காளை அணியின் சுவாமிநாதன் 3 விக்கெட்டுக்களையும், யோ மகேஷ், பாஃப்னா, ராஜ்குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். ராஜகோபால் சதீஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

    இன்றைய போட்டியில் 18.4 ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 165 ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த டூட்டி பேட்ரியாட்ஸ் 19.2 ஓவரில் வெற்றியை வசப்படுத்தியதால் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் நூலிழையில் தொடரை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. #TNPL2018 #KKvTP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது காரைக்குடி காளை அணி. #TNPL2018 #DDvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 21-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. காரைக்குடி காளை அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹரி நிஷாந்த் 16 ரன்னிலும், ஜெகதீசன் 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த பால்சந்தர் அனிருத் சிறப்பாக ஆடி 53 ரன் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஆர்.விவேக் அதிரடியாக ஆடி 13 பந்தில் 5 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 42 ரன்கள் குவித்தார். இறுதியில், 
    கடைநிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    காரைக்கு காளை அணியின் அஷ்வத் முகுந்தன் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதித்யா மற்றும் ஸ்ரீகாந்த் அனிருதா இறங்கினர். இருவரும் திண்டுக்கல் அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். ஆதித்யா 49 ரன்னிலும், ஸ்ரீகாந்த் அனிருதா 43 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய ராஜ்குமார் இறுதி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ராஜ்குமார் 41 ரன்களும், ராஜாமணி ஸ்ரீனிவாசன் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில், காரைக்குடி காளை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. #TNPL2018 #DDvKK
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய் ஆட்டத்தில் திண்டுக்கல்-காரைக்குடி அணிகள் மோதுகின்றனர். இதில் வெற்றி பெரும் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக இருக்கும். #TNPL2018 #NammaOoruNammagethu
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் “பிளேஆப்” சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 20 “லீக்“ ஆட்டங்கள் முடிந்து விட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் 4 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 8 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன.

    காரைக்குடி காளை 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகளும், முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகளும், கோவை கிங்ஸ் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகளும் பெற்றுள்ளன.

    திருச்சி வாரியர்ஸ் 4 புள்ளியுடன் (2 வெற்றி, 3 தோல்வி) இருக்கிறது. காஞ்சி வீரன்ஸ் 2 புள்ளியுடனும் (1 வெற்றி, 4 தோல்வி), நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் புள்ளி எதுவும் பெறாமலும் (5 தோல்வி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.

    டி.என்.பி.எல். போட்டியின் 21-வது லீக் ஆட்டம் நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக இருக்கும். இதனால் இரு அணிகளும் 5-வது வெற்றியை பெற்று ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்துடன் உள்ளன.

    திண்டுக்கல் அணி தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்று ஆதிக்கம் செலுத்தியது. மதுரை பாந்தர்ஸ் ( 9 விக்கெட்), கோவை கிங்ஸ் ( 8 விக்கெட்), காஞ்சி வீரன்ஸ் (7 விக்கெட்), டூட்டி பேட்ரியாட்ஸ் (4 விக்கெட்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.

    காரைக்குடி காளை அணி கோவை கிங்சை சூப்பர் ஓவரிலும், சேப்பாக் சூப்பர் கில்லீசை 47 ரன்னிலும், காஞ்சி வாரியர்சை 1 விக்கெட்டிலும் தோற்கடித்தது. டூட்டி பேட்ரியாட்சிடம் 11 ரன்னில் தோற்று இருந்தது.

    இரு அணிகளும் சமபலத்துடன் மோதுகிறது. இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammagethu
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது காரைக்குடி காளை. #TNPL2018 #RTWvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 17-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருச்சி வாரியர்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதின.

    டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. காரைக்குடி அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் திருச்சி வாரியர்ஸ் சிக்கியது.

    அந்த அணியினரின் சஞ்சய் 28 ரன்களும், சுரேஷ்குமார், மணிபாரதி ஆகியோர் 22 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 19.5 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    காரைக்குடி காளை சார்பில் மோகன் பிரசாத் 3 விக்கெட்டும், யோ மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. ஆதித்யாவும் அனிருதாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    இந்த ஜோடி 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆதித்யா 17 ரன்களில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அனிருதா வெளியேறினார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில் யோ மகேஷ் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதனால் காரைக்குடி அணி 19.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

    திருச்சி வாரியர்ஸ் அணியின் சுரேஷ்குமார் 4 ஓவரில் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #RTWvKK
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காரைக்குடி காளையுடன் மோதுகிறது. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
    சென்னை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

    கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியிடமும், 2-வது ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியிடமும் தோல்வி கண்டது. இன்றைய ஆட்டம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

    அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணி முதலாவது லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் கோவை கிங்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. 2-வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றி உத்வேகத்தை தொடர காரைக்குடி காளை அணி தீவிரம் காட்டும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இந்த ஆட்டம் குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி சென்னையில் நேற்று அளித்த பேட்டியில், ‘முந்தைய இரண்டு ஆட்டங்களும் வித்தியாசமானவையாகும். சென்னையில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. நெல்லை ஆடுகளம் மெதுவாக இருந்தது. எங்களது முழு திறமைக்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். வரும் ஆட்டங்களில் வெற்றியை எதிர்நோக்குகிறோம். நாங்கள் திறமையை வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். அடுத்த ஆட்டத்தில் (இன்றைய ஆட்டம்) விஜய் சங்கர் விளையாட வாய்ப்பில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் இங்கிலாந்து தொடரில் இருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. தரமான சுழற்பந்து வீச்சாளரான எம்.அஸ்வின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பது எனது எண்ணமாகும். பவர்பிளேயில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதேநேரத்தில் மற்ற அணிகள் பவர்பிளேயில் குறைந்தபட்சம் 45 முதல் 50 ரன்கள் எடுத்தனர். அந்த பகுதியில் கவனம் செலுத்தி அதிக ரன்களை எடுக்க முயற்சிப்போம்’ என்று தெரிவித்தார்.

    இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கோபிநாத் (கேப்டன்), கங்கா ஸ்ரீதர் ராஜூ, கார்த்திக், சசிதேவ், ராகுல், எம்.அஸ்வின், சன்னிகுமார் சிங், சிவகுமார், விஷால், சித்தார்த், அலெக்சாண்டர்.

    காரைக்குடி காளை: ஆதித்யா, அனிருதா (கேப்டன்), பாப்னா, சீனிவாசன், கவின், யோமகேஷ், ஷாஜகான், மோகன் பிரசாத், லட்சுமண், சுவாமிநாதன், ராஜ்குமார். #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018

    திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் லைகா கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. #TNPL2018 #LycaKovaiKings #KaraikudiKaalai
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடைபெற்ற லீக் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை லைகா கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற காரைக்குடி காளை பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் மான் மாப்னா 22 பந்தில் 44 ரன்கள் அடித்தார். அவருக்கு ஆதித்யா ஒத்துழைப்பு தந்தார். அவர் 36 ரன்களில் அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடாததால் காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.



    கோவை கிங்ஸ் சார்பில் பிரசாந்த் ராஜேஷ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். ஷாருக் கான் 32 ரன்களும், அஷ்வின் வெங்கட்ராமன் 34 ரன்களும் எடுத்தனர்.

    மற்றவர்கள் நிலைத்து நிற்காததால் கோவை அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.

    சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய கோவை கிங்ஸ் ஒரு ஓவரில் 1 விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய காரைக்குடி காளை 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கோவை கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் எஸ் பத்ரிநாத் காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். #TNPL #KaraikudiKaalai
    தமிழ்நாடு பிரீமியர் லீக் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு 3-வது சீசனுக்கு தயாராகியுள்ளது. 3-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராக எஸ் பத்ரிநாத் செயல்பட இருக்கிறார்.

    பத்ரிநாத் இந்திய அணிக்காகவும், நீண்ட காலம் தமிழ்நாடு அணிக்காகவும் விளையாடியவர். காரைக்குரை காளை அணியின் தலைமை பயிற்சியாளராக தமிழ்நாட்டின் முன்னாள் வீரரான பிசி பிரகாஷ் உள்ளார். அவருக்கு உதவியாளராக செயல்பட இருக்கிறார்.



    பத்ரிநாத் இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் ஒரெயொரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். 145 முதல்தர போட்டிகளில் விளையாடி 32 சதம், 45 அரைசதங்களுடன் 10245 ரன்கள் அடித்துள்ளார்.
    ×