search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamatchiamman temple"

    • 10.15 மணிக்கு காமாட்சியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • காலை 11 மணிக்கு தேச மங்கையர்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் பிரிவு, பழனிச்சாமி நகரில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு 4-ம் காலயாக பூஜையுடன் விழா தொடங்கியது. காலை 10 மணிக்கு விநாயகர், காமாட்சியம்மன், முத்துக்குமாரசாமி கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு காமாட்சியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.வடி வேல், செயலாளர் டி.என். ஈஸ்வரன்,பொருளாளர் ஆர். செந்தில்குமார் உள்பட கோவில்கமிட்டிநிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 11 மணிக்கு தேச மங்கையர்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு திரைப்பட இன்னிசை விருந்து நடக்கிறது. நாளை 27-ந்தேதி மாலை 6 மணிக்கு முனைவர் அரசு பரமேசுவரன் தலைமையில் பக்தியும் பண்பாட்டையும் வளர்ப்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.வடி வேல், செயலாளர் டி.என். ஈஸ்வரன்,பொருளாளர் ஆர். செந்தில்குமார் உள்பட கோவில்கமிட்டிநிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • அனுஷ பூஜை பக்த சபா குழு சார்பில், மாதம்தோறும், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஸ்ரீ சுயம்வர கலா பார்வதி யாகவேள்வி பெருவிழா நடந்தது.

    உடுமலை :

    உடுமலை ஸ்ரீ மகா பெரியவர் அனுஷ பூஜை பக்த சபா குழு சார்பில், மாதம்தோறும், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஸ்ரீ சுயம்வர கலா பார்வதி யாகவேள்வி பெருவிழா நடந்தது.விழாவையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது; பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  

    ×