search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kabab"

    • சிக்கன், மட்டனில் கபாப் செய்து இருப்பீங்க.
    • இன்று காய்கறியில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - அரை கிலோ

    பச்சை பட்டாணி - 50 கிராம்

    கேரட் - 1,

    பீன்ஸ் - 10,

    காலிஃப்ளவர் - கொஞ்சம்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

    சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

    கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

    உப்பு, வெண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கேரட், பீன்ஸ், காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் போட்டு வதக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வெந்ததும் ஆறவைத்து அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    இத்துடன் மிளகாய் தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு கலந்து மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கிரில் கம்பியில் வெண்ணெய் தடவி கொலுக்கட்டை போல் மாவை கம்பியில் பிடித்து வைக்கவும். இதனை பார்பிக்யூ சார்க்கோல் கிரில் அடுப்பில் வைத்து 20 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.

    அவ்வப்போது உணவுகள் மீது வெண்ணெய் தடவி விட்டால் சட்டென கருகாது. வெந்ததும் மெதுவாக கம்பியில் இருந்து உருவி, சாஸ், உடன் பரிமாறவும். பார்பிக்பூ அடுப்பு இல்லாதவர்கள் தோசைக்கல்லில் போட்டும் எடுக்கலாம்.

    இப்போது சூப்பரான வெஜிடபிள் சீக் கபாப் ரெடி.

    இதில் எந்த காய்கறிகளை வேண்டுமானலும் சேர்த்து செய்யலாம்.

    • மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - அரை கிலோ

    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    வினிகர் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    வெங்காயத்தை தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

    மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும்.

    மீனில் உள்ள தோல், முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    அருமையான பிஷ் கபாப் ரெடி.

    • ஒரு முட்டையில் 72 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் இருக்கிறது.
    • முட்டையை வைத்து ஏராளமான உணவு வகைகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    வேக வைத்த முட்டை- 4

    சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்

    சீரகத் தூள்- 1/4 டீஸ்பூன்

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்

    மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

    சோள மாவு- ஒரு டீஸ்பூன்

    வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்

    மல்லித் தூள்- 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா- 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

    உப்பு- 1/4 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை- சிறிதளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    மசாலா செய்ய :

    வெங்காயம் - 1

    சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்

    தக்காளி - 1

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட்- ஒரு டீஸ்பூன்

    வெண்ணெய்- 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

    உப்பு- 1/4 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை- சிறிதளவு

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    வேக வைத்த முட்டையை துருவிக் கொள்ளவும்.

    துருவிய முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காய விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

    இப்போது இந்த கலவையில் சோள மாவு சேர்த்து உருண்டையாக பிடிக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    இதே தோசைக்கல்லில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.

    இதனோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

    ஒரு கொதி வந்தவுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடலாம்.

    கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவவும்.

    இந்த சமயத்தில் நாம் தயார் செய்து வைத்த முட்டை கபாபை சேர்த்து விடலாம்.

    அவ்வளவு தான்… ருசியான முட்டை கபாப் தயார்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கபாப் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து ருசிக்கலாம். பன்னீர் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் துருவல் - அரை கப்
    வாழைக்காய் - 1
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
    பொட்டுக்கடலை மாவு - கால் கப்
    உப்பு - தேவைக்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    வாழைக்காயை நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.

    இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மசித்த வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பன்னீர், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, பொட்டுக்கடலை மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த கலவையை விரும்பிய வடிவங்களில் பிடித்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    ருசியான பன்னீர் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கார்ன், பன்னீர் சேர்த்து கபாப் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சோளம் - 2
    உருளை கிழங்கு - 1 கப்
    பன்னீர் - 1/2 கப்
    நறுக்கிய முட்டைக்கோஸ் - 1/2 கப்
    இஞ்சி - சிறிது
    கொத்தமல்லி - தேவைகேற்ப
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    தனியா தூள் - 1/2 ஸ்பூன்
    சீரக தூள் - 1/2 ஸ்பூன்
    சோள மாவு - 2 ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப



    செய்முறை :

    சோளம், உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளை கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த சோளம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

    இந்தக் கலவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் (தேவைப்பட்டால் கேரட்டையும் துருவி சேர்த்துக்கொள்ளலாம்) பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராக தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும். கபாப் தட்டுவதற்கு ஏற்ற பதத்தில் இல்லையென்றால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.

    இந்த கலவையை கபாப்புகளாக தட்டி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கபாபை போட்டு பொரித்தெடுக்கவும். தோசைக்கல்லிலும் பொரித்துக் கொள்ளலாம்.

    சூப்பரான கார்ன் - பன்னீர் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மட்டனை வைத்து எளிய முறையில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரைக்க...

    மட்டன்கொத்துக்கறி - 150 கிராம்,
    இஞ்சி, பூண்டு விழுது- 3 தேக்கரண்டி,
    சோம்பு தூள் - அரை தேக்கரண்டி,
    மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி,
    உப்பு - சிறிது.



    செய்முறை :

    மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டன் கொத்துகறியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மட்டன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மட்டன் கலவையை ஒரு குச்சியில் நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள மட்டன் குச்சிகளை வைத்து நன்றாக திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான மட்டன் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×