search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KN.Nehru"

    • தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணிகள், மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • நீர் ஆதாரங்களை கண்டறிந்து அவற்றின் மூலம் குடிநீர் தேவைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தென் மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    ஆய்வுக்கூட்டம்

    இதற்காக நேற்றிரவு மதுரையில் இருந்து கார் மூலம் அவர் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார். அங்கு மறவன்மடம் பகுதியில் இரவு தங்கிய அவர் இன்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தலைமை தாங்கி பங்கேற்றார்.

    இதில் கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் நகராட்சிதுறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா, கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிதுறை சார்ந்த அதிகாரிகள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணிகள், மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    அமைச்சர் கே.என். நேரு

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைத்திட குடிநீர் திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து பணிகளையும் அலுவலர்கள் துரிதமாக நிறைவேற்றிட வேண்டும்.

    நீர் ஆதாரங்களை கண்டறிந்து அவற்றின் மூலம் குடிநீர் தேவைகளை நிறைவேற்றிடவும் உரிய நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் லாரி மூலமாவது சப்ளை செய்ய வேண்டும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

    முடிவுற்ற திட்டப்பணிகள்

    தொடர்ந்து கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள உழவர்சந்தை பகுதியில் மாநகராட்சியில் ரூ. 71 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை கனிமொழி எம்.பி. முன்னிலையில் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அவர் காரில் நெல்லை மாவட்டத்திற்கு புறப்பட்டார்.

    • முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
    • பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிா்வாகத் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப்பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை வகித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:-

    முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் அபிவிருத்தித் திட்டம், ஒருங்கிணைந்த மேலண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புதிய குடிநீா்த் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், தினசரி மற்றும் வாரசந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை அமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

    இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகள் 17 பேருக்கு தொழில் தொடங்க ரூ.24 லட்சம் மதிப்பிலானவங்கிக் கடனுதவி, ஒரு குரல் புரட்சி திட்டத்தின்கீழ் பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

    கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் (நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்) சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், நகராட்சி நிா்வாக இயக்குநா் பி.பொன்னையா, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • கட்டணம் இல்லா தொலைபேசி சேவை எண் 155304 திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • புகார் தெரிவித்ததும் அது தொடர்பான குறுஞ்செய்தி அவர்களின் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் 'ஒரு குரல் புரட்சி' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் குறித்த 300-க்கும் மேற்பட்ட பிரிவு புகார்களை தெரிவித்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் கட்டணம் இல்லா தொலைபேசி சேவை எண் 155304 திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பல்துறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவித்ததும் அது தொடர்பான குறுஞ்செய்தி அவர்களின் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு அந்த குறைகள் நிவர்த்தி செய்து அது தொடர்பாகவும் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் அந்தப் புகார் நிவர்த்தி செய்யாத பட்சத்தில் மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வை வரை அந்த புகார் சென்று விரைந்து நடவடிக்கை எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் இந்த சேவை தொடங்கி உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம், நகர் பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என். நேரு பங்கேற்று ஆய்வு செய்தார்.திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ×